என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி
    X

    கிணற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி

    • தீயணைப்பு நிலையத்திற்கு தகவல்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், மகன் சூரிய பிரகாஷ் (23) இவர் சென்னையில் வேலை செய்து வந்தவர்.

    விடுமுறையில் ஊருக்கு வந்த சூரிய பிரகாஷ் நேற்று மதியம் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், குமரன் ஆகியோருடன் கிணற்றில் குளிப்பதற்காக அருகே உள்ள தெங்கால் கிராமத்திற்கு சென்று அங்கு தனியார் கிணற்றில் குளித்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக சூரிய பிரகாஷ் நீரில் மூழ்கியுள்ளார் இதை பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியாததால் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் அங்கு விரைந்து சென்று வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய சூரிய பிரகாஷை பிணமாக மீட்டனர்.

    இதை தொடர்ந்து சிப்காட் போலீசார் சூரிய பிரகாஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×