என் மலர்
நீங்கள் தேடியது "மகாபாரதம் சொற்பொழிவு மற்றும் தெருக்கூத்து நாடகம்"
- 135 வது ஆண்டு அக்னி வசந்த விழா
- பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்
ராணிப்பேட்டை:
வாலாஜாவில் உள்ள பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவிலின் 135 வது ஆண்டு அக்னி வசந்த விழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.
விழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும், மகாபாரதம் சொற்பொழிவு மற்றும் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.
விழாவில் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.பின்னர் மாலையில் தீ மிதி விழாவும் நடைபெற்றது. இதில் காப்புகட்டி விரதமிருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






