என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி மாதம் தாய் வீட்டுக்கு வந்த இளம்பெண் தற்கொலை
    X

    ஆடி மாதம் தாய் வீட்டுக்கு வந்த இளம்பெண் தற்கொலை

    • திருமணம் ஆகி 7 மாதங்களே ஆன நிலையில் விபரீதம்
    • சப்- கலெக்டர் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ரமணன் மகள் ஈஸ்வரி (வயது 33). இவருக்கும் சென்னையை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. தம்பதிகள் சென்னையில் வசித்து வந்தனர்.

    ஆடி மாதத்தையொட்டி அவரது பெற்றோர் ஈஸ்வரியை வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஈஸ்வரி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் காணப்பட்ட ஈஸ்வரி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று ஈஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 7 மாதங்களே ஆவதால் ஈஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ளதால் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×