என் மலர்
ராணிப்பேட்டை
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் தலைமை காவலர் நித்தியானந்தம் முதல்நிலைக் காவலர் மணிகண்டன் ஆகியோர் தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் ரோந்து மற்றும் கடைகளில் ரெய்டில் ஈடுபட்டனர். அப்போது வாலாஜா நரோசிஜி ராவ் தெருவில் இயங்கி வரும் ஒரு மளிகை கடையில் ஆய்வு செய்த போது சட்டத்திற்குப் புறம்பாக மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 27 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து ஜீவாராம் (21) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் தெரிவித்ததாவது ராணிப்பேட்டை மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனை தொழிலில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அரக்கோணம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் முதலில் கொரோனா உறுதியானது. அதன் பிறகுதான் ஒமைக்ரான் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த சிறுவன் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் அவன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
அரக்கோணத்தில் உள்ள கடற்படை, தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் அரக்கோணம் பகுதியை சேர்ந்த போலீசார் என 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்களுக்கு ஒமைக்ரான் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவர்களுடன் தொடர்பில் உள்ள நபர்கள் மற்றும் குடும்பத்தினர் என 100-க்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும்.
சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். கிருமி நாசினிகளை கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அருள். இவரது மகன் விக்னேஷ் (வயது10). அங்குள்ள தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
வீட்டில் இருந்து சைக்கிளில் சென்ற விக்னேஷ் புளியமங்கலம் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த தண்டவாளங்களில் ஜல்லி கற்களை பேக்கிங் செய்யும் ரெயில் சிறுவன் மீது மோதியது. இதில் விக்னேஷ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தான்.
அரக்கோணம் ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






