என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
காவேரிப்பாக்கத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு சுகாதார பணியாளர்கள் அபராதம் விதித்தனர்.
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் பேரூராட்சி சார்பில் பஸ் நிலையம், திருப்பாற்கடல் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் முககவசம் அணிவதன் அவசியம் குறித்து மற்றும் சுகாதார பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது போலீஸ் நிலையம் அருகே முககவசம் அணியாமல் பைக்கில் வேகமாக சென்ற 10 பேரை மடக்கி ரூ.200 வீதம் 2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டார்களா என கேட்டறிந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு அந்த இடத்திலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொரோனாவின் புதிய வடிவமான ஒமைக்ரான் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.நம்மை பாதுகாத்து கொள்ள சமூக இடைவெளி, முககவசம் அணிதல், சோப்பு போட்டு கைகளை கழுவுதல் உள்ளிட்ட செயல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
2 டோஸ் தடுப்பூசி அனைவரும் கட்டாயம் எந்தவித பயமின்றி செலுத்தி கொள்ள வேண்டும் என்று ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்தனர்.
Next Story






