என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    அரக்கோணம் அருகே ரெயிலில் சிக்கி மாணவன் பலி

    அரக்கோணம் அருகே தண்டவாளங்களில் ஜல்லி கற்களை பேக்கிங் செய்யும் ரெயில் மோதியதில் மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அருள். இவரது மகன் விக்னேஷ் (வயது10). அங்குள்ள தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    வீட்டில் இருந்து சைக்கிளில் சென்ற விக்னேஷ் புளியமங்கலம் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த தண்டவாளங்களில் ஜல்லி கற்களை பேக்கிங் செய்யும் ரெயில் சிறுவன் மீது மோதியது. இதில் விக்னேஷ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தான்.

    அரக்கோணம் ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×