என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் முத்து மாரியம்மன்கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி கோவில் முன் உள்ள கீழ ரதவீதியில் மின்விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேர் நிறுத்தப்பட்டிருந்தது.
பின்னர் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தியை சிவாச்சாரியார்களும், ஊர் முக்கியஸ்தர்களும் சேர்ந்து தோளில் தூக்கி வந்து தேரில் வைத்தனர். அதனைத்தொடர்ந்து உற்சவருக்கு மாலைகள் அணிவித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது செங்கவளநாட்டு கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொது மக்கள் தேர்வடத்தை பிடித்து இழுத்தனர்.
தெற்கு ரத வீதி மற்றும் வடக்கு ரத வீதி வழியாக சென்றபோது ஆங்காங்கே பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மேல ரத வீதி வழியாக வான வேடிக்கைகளுடன் தேர் இழுத்து வரப்பட்டது
தேரோட்டம் காண சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் கள்ளி யடிப்பட்டிகிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் சித்ரா ( வயது 26). கறம்பக்குடியில் உள்ள தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வரும் இவர்,
வேலைக்கு செல்வதற்காக ரெகுநாதபுரத்தில் இரு ந்து தனியார் பஸ்சில் கறம்பக்குடிக்கு சென்று கொண்டிருந்தார்.
மைலன் கோன்பட்டி அருகே வந்தபோது திடீ ரென பஸ்சின் பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
அப்போது டயர் அமைந்துள்ள பகுதியின் மேற்பரப்பின் தகரம் பெயர்ந்து இருக்கையில் அமர்ந்திருந்த சித்ரா மீது விழுந்தது. இதில், அவர் படு காயம் அடைந்தார்.
சக பயணிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சித்ரா அளித்த புகாரின்பேரில், கறம்பக்குடிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கந்தர்வகோட்டை வட்டார வளமையம், அக்கட்சிபட்டி, காட்டு நாவல், நடுநிலைப்பள்ளிகள் மற்றும் வெள்ளாளவிடுதி உயர்நிலை பள்ளிகளில் துளிர் திறனறித்தேர்வு நடை பெற்றது.
இந்த தேர்வில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவி கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். புதுக்கோட்டை அறிவியல் இயக்க மாவட்ட செயலா ளர் முத்துகுமார், கந்தர்வகோட்டை வட்டாரதலைவர் ரகமதுல்லா, செயலாளர் சின்னராஜா, தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.
தேர்வு குறித்து மாணவர்கள் கூறியபோது, சிந்திக்கும் வகை வினாக்கள் அதிகம் இடம் பெற்றுள்ளது என்றும், பொது அறிவு, கணிதம், அறிவியல் தொழில் நுட்ப கேள்வி எளிமையாக இருந்த தாகவும், நீண்ட நாட்களுக்கு பிறகு தேர்வு எழுதுவதால் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள மதயானைபட்டியை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் செம்மறி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் விராலிமலை அருகே புதுவயல் கிராமத்தில் கிடை அமைத்து சுமார் 60&க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு பின்னர் அடைத்து வைத்து இருந்தார்.
இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு தெரு நாய்கள் கிடையின் உள்ளே புகுந்து ஆடுகளை கடித்து குதறி உள்ளது.
ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு அருகே விவசாய பணியில் ஈடுபட்டிருந்த ஜெயராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஓடிவந்து கிடைக்குள் பார்த்தபோது 2 நாய்கள் ஆடுகளை கடித்து கொண்டு இருந்துள்ளது.
நாய்களை துரத்தி விட்டு கிடையின் உள்ளே சென்று பார்த்தபோது 17 செம்மறி ஆடுகளை நாய்கள் கடித்து குதறியதில் ஆடுகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது.
நாய்கள் ஆடுகளை கடித்து குதறிய சம்பவம் ஆட்டின் உரிமையாளர் குடும்பத்தின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி கள ஆய்வின்போது அழியாநிலை கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் மனநல காப்பகம் கண்டறியப்பட்டது. பின்னர் அங்கிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள் மீட்கப்பட்டு, புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் சரவணன் என்பவரும் ஒருவர். புதுக்கோட்டை அரசு மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தில் அவருக்கு ஒருங்கிணைந்த மனநல மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சேவைகள் அளிக்கபட்டதன் பயனாக குணமடைந்த சரவணன் தனது அண்ணனின் அலைபேசி எண்ணை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சரவணன் திருப்பூர் மாவட்டம் அங்கயர்பாளையத்தை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது.
உடனே அவர்களை புதுக்கோட்டைக்கு வரவழைத்தனர். இதனை அடுத்து கலெக்டர் கவிதா ராமு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் சரவணனுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கி, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையை தொடர அறிவுறுத்தி, அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபுரத்தில் 64 ஆ ம் ஆண்டு முனீஸ்வரர் கோவில் ஆலய மாசிமக விழாவையொட்டி ஜல்லி க்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்தாண்டு இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கிவைத்தனர்.
இதில் திருச்சி, இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை தஞ் சாவூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுமார் 700 காளைகளை 300 மாடு பிடி வீரர்கள் சந்தித்தனர்.
மாவட்ட வருவாய்த்துறை செல்வி, வருவாய் கோட்டாட்சியர் கருணாகரன், ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி ஆலங்குடி டிஎஸ்பி வடிவேல் மற்றும் காவல் ஆய்வாளர் அழகம்மை, சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் ம ற்றும் மருத்துவ குழுவினர் தீயணைப்புத்துறையினர் விழா கமிட்டியினர் செல் வம், கார்த்திக், வடிவேல் மேற்பார்வையில் மாபெரும் ஜல்லிக்கட்டு விழா இன்று நடைபெற்றது.
தமிழகத்தில் பரவலாக கால்நடைகளுக்கு கோமாரி உள்ளிட்ட வைரஸ் நோய் பரவி வருகின்றது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் பாதுகாப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற்க் கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காராவயல் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்கான தடுப்பூசி, செய ற்கை கருவூட்டல், எதிர்ப்பு மருந்துகள் ஆகியன வழங்கப்பட்டன.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கால்நடைகளுக்கு மருத்துவ வசதி பெற்று பயனடைந்தனர். மேலும் மருத்துவ வசதி பெற்ற கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு மருத்துவ நிர்வாகம் சார்பில் தாம்பூலம் கொடுத்து ஊக்கு விக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு ஒன்றியச் செயலாளர் பொன்கணேசன், கூட்ட மைப்பு தலைவர் மணிமொ ழியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நல்ல தம்பி, சுமதிமுத்து, ஊராட்சி மன்றத் தலைவர் மலர்விழி காளிதாஸ், தி.மு.க. கிளைச் செயலாளர் சக்திராஜன் மற்றும் கால்நடை மருத்து வர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கால்நடை மருத் துவர் உதயபெருமாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தி ருந்தார்.
கடந்த 1902-ம் ஆண்டு முதல் காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி, பட்டுக்கோட்டை வழியாக திருவாரூர் வரை மீட்டர் கேஜ் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. பின்னர் சென்னை வரை ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியிலுள்ள வணிகர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ் ரெயில் சேவை நிறுத்தப்பட்டு, அகல ரெயில் பாதை அமைப்பதற்க்கான பணிகள் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த அகல ரெயில் பாதை பணிகள் கடந்த 2017-ம் ஆண்டு முடிக்கப்பட்டு ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்பட்ட ரெயில் சேவையானது கொரோனா காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் திருவாரூர், காரைக்குடி அதிவிரைவு ரெயில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தனி ரெயில் மூலம் அறந்தாங்கி ரெயில் நிலையத்திற்கு வந்த, திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் மணிஸ்அகர்வால் இருப்புபாதைகள் குறித்தும், ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்க்கொண்டார்.
அப்போது ரெயில் உபயோகிப்பாளர்கள் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவில் பழைய முறைப்படி அறந்தாங்கி வழியாக சென்னைக்கு நேரடியாக ரெயில் வசதிகள் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கோட்ட மேலாளர், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும், அதுவரை சென்னைக்கு செல்லும் ரெயிலை தொடரும் வகையில், அறந்தாங்கி மார்க்கமாக வரும் ரெயிலின் நேரம் மாற்றி அமைக்கப்படும் என மனு அளித்தவர்களிடம் தெரிவித்தார்.






