என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு தாம்பூலம் பரிசு காட்சி
    X
    கால்நடை மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு தாம்பூலம் பரிசு காட்சி

    கால்நடை மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு தாம்பூலம் பரிசு

    கால்நடை மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு தாம்பூலம் பரிசு வழங்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் பரவலாக கால்நடைகளுக்கு கோமாரி உள்ளிட்ட வைரஸ் நோய் பரவி வருகின்றது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் பாதுகாப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற்க் கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காராவயல் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்கான தடுப்பூசி, செய ற்கை கருவூட்டல், எதிர்ப்பு மருந்துகள் ஆகியன வழங்கப்பட்டன.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கால்நடைகளுக்கு மருத்துவ வசதி பெற்று பயனடைந்தனர். மேலும் மருத்துவ வசதி பெற்ற கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு மருத்துவ நிர்வாகம் சார்பில் தாம்பூலம் கொடுத்து ஊக்கு விக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு ஒன்றியச் செயலாளர் பொன்கணேசன், கூட்ட மைப்பு தலைவர் மணிமொ ழியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நல்ல தம்பி, சுமதிமுத்து, ஊராட்சி மன்றத் தலைவர் மலர்விழி காளிதாஸ், தி.மு.க. கிளைச் செயலாளர் சக்திராஜன்  மற்றும் கால்நடை மருத்து வர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கால்நடை மருத் துவர் உதயபெருமாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தி ருந்தார்.
    Next Story
    ×