என் மலர்
புதுக்கோட்டை
நகர் மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகராட்சியில் நகர்மன்ற அவசர கூட்டம் தலைவர் திலகவதிசெந்தில் தலைமையில் நடைப்பெற்றது.
கூட்டத்தில் துணைத்தலைவர் லியாகத்அலி, ஆணையர் நாகராஜன் உட்பட அதிகாரிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். தவிர்க்க முடியாத காரணத்தினால் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என தலைவர் மற்றும் துணைத்தலைவர் தெரிவித்தனர்.
இதற்கு அ.தி.மு.க நகர்-மன்ற உறுப்பினர்கள் சேட் என்கிற அப்துல்ரகுமான் தலைமையில் 100 சதவீதம் சொத்துவரி உயர்வை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். அதே போல் அ.ம.மு.க. உறுப்பினரும் சொத்து வரி உயர்வை கண்டித்து வெளிநடப்பு செய்தார்.
பின்னர் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசுகையில் பெரும்பான்மையான உறுப்பினர் தண்ணீர் பிரச்சினை பற்றி பேசினார்கள். இதற்கு துணைதலைவர் பதில் அளிக்கையில் தற்போது உள்ள பிரச்சினையில் 5நாள் அல்லது 10 நாட்களுக்குதான் தண்ணீர் தரம் நிலை உள்ளது.
விரைவில் இப்பிரச்சினை முடிக்கபட்டு இரண்டு தினங்களுக்கு ஒருமுறை தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கும் ஒரு ஆறு மாதமோ, ஒரு வருடமோ ஆகும் என்றார்.
2வது வார்டு உறுப்பினர் மதியழகன் பேசுகையில் வார்டில் எந்த பகுதிக்கு எந்த தண்ணீர் வாழ்வு என தெரியாத காரணத்தினால் மக்களுக்கு சரியாக பதில் கூறமுடியவில்லை. எனவே எந்த பகுதிக்கு எந்த தண்ணீர் வாழ்வு என்பதை உறுப்பினர்களிடம் காண்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
42வது வார்டு உறுப்பினர் கவிவேந்தன் பேசுகையில் தண்ணீர் பம்ப் ஆப்ரேட்டர்கள் அ.தி.மு.க.வினர் கட்டுபாட்டில் உள்ளனர். இதனால் நான் தி.மு.க உறுப்பினராக இருந்தும் ஆளும் கட்சியில் எந்த செயலையும் செய்யமுடியவில்லை. எனவே பம்ப் ஆப்ரேட்டர்களை மாற்றம் செய்யவேண்டும்.
மேலும் பழைய அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்திற்கு சட்டவிரோதமாக தண்ணீர் குழாய் இணைப்பு வழங்கப்-பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதே போல் 1வது வார்டு, 19வது வார்டு 34வது வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர்.
புதிய கல்குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள காட்டுபாவா பள்ளிவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட மெய்யபுரத்தில் புதியதாக கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுபாவா பள்ளிவாசல், மெய்யபுரம், பழந்தினாம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் குவாரிக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து அறிந்த தமிழ்ப் பேரரசுக் கட்சியின் பொதுச் செயலரும், திரைப்பட இயக்குநருமான வ. கௌதமன் மெய்யபுரத்துக்கு வந்து கல்குவாரியைப் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மலைகளை அழித்து விட்டால் மழை பெய்யாமல் பூமி வடு விடும். கனிமவளக் கொள்ளை அரசாங்கத்தின் ஆதரவுடன் தாண்டவமாடுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதுமே ஆயிரக்கணக்கான மரணப் பள்ளத்தாக்குகள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டமும் கனிம வளக் கொள்ளையில் முதன்மை மாவட்டமாகத் திகழ்கிறது. மக்கள் போராட்டங்களையும் மீறி இங்கு கல்குவாரி செயல்பட அனுமதித்தால் மக்களை காப்பாற்றப் போராடுவேன் என்றார்.
பெண் தூக்கிட்டு இறந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் செங்கமேடு ஊராட்சி கண்ணுதோப்பு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 30). இவரது மனைவி அழகுராணி(26). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அழகு ராணி தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுபற்றி அவரின் தாயார் ரகுநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அதில் எனது மகள் சாவில் மர்மம் உள்ளது. மகளின் சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், பரம்பகுடி இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அழகுராணிக்கு வரதட்சணை கொடுமை ஏதும் இழைக்கப்பட்டதா? என உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் செங்கமேடு ஊராட்சி கண்ணுதோப்பு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 30). இவரது மனைவி அழகுராணி(26). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அழகு ராணி தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுபற்றி அவரின் தாயார் ரகுநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அதில் எனது மகள் சாவில் மர்மம் உள்ளது. மகளின் சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், பரம்பகுடி இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அழகுராணிக்கு வரதட்சணை கொடுமை ஏதும் இழைக்கப்பட்டதா? என உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
மின் ஊழியர் பலியான சம்பவத்தில் அதிகாரிகள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே சிப்காட் பகுதியில் மின்வாரிய லைன்--மேனாக பணிபுரிந்து வந்தவர் ஜெய்சங்கர் (வயது55). மூன்று தினங்களுக்கு முன்னர் மின்பழுது காரணமாக பணியிலிருந்த-போது மின்-சாரம் தாக்கி தீப்-பிடித்ததில் பலத்த காயமடைந்த
ஜெய்சங்கர் புதுக்-கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ-மனையில் சிகிக்சைக்காக சேர்க்கபட்டு சிகிச்சை பலனின்றி பரிதா-பமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் ஜெய்சங்கர் மனைவி பார்வதி (42) கொடுத்த புகாரின்பேரில் கவன-குறைவாக பணி-யாற்றிய மீட்டர் மற்றும் ரிளே டெஸ்ட் உதவி பொறியாளர் வேலாயுதம், சிப்காட் துணை மின்-நிலையம் பரா-மரிப்பாளர் உதவி பொறியாளர் ரகுநாதன் மீது வெள்ளனூர் காவல் நிலைய போலீசார் 304&ஏ பிரிவின்-கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
ஊழியர் இறந்ததற்கு அதிகாரிகள் மீது வழக்கு-பதிவு செய்வது இதுவே முதன்-முறையாக உள்ளது என மின்வாரியம் வட்டாரத்தில் தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் பர-பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்கானிக் மர்மச்சாவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அசூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகவன் (வயது 40). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஆலங்குடி சந்தைபேட்டை அருகில் உள்ள சித்தி வினாயகர் கோவில் தென்குளக்கரையில் அவர் பிணமாக கிடந்தார். அவரது சாவிலும் சந்தேகம் உள்ளதாக கூறப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாகவும் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கல்லூரி மாணவ, மாண-வியர்களுக்கான இலவச திறன்வளர் பயிற்சி முகாம் நடைபெற்றது
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருநாவலூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாண-வியர்களுக்கான இலவச திறன்வளர் பயிற்சி முகாம் நடைபெற்றது.முகாமை கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
முகாமில் வலைத்தள வடி-வமைப்பு, பெண்களுக்கான அழகுக்கலை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திறன் வளர் பயிற்சிகள் வழங்கப்-பட்டது.
இம்முகாம் மூலம் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
திட்ட வளர்ச்சி அலுவலர் கருப்பையா, பயிற்சி முகாமை வழிநடத்தினார். முன்னதாகக் கல்லூரி வேலைவாய்ப்பு மைய திட்ட அலுவலர் அனிதா அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.
நிறைவில் திட்ட வளர்ச்சி அலுவலர் அஜித் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்-பாடுகளை அலுவலகப் பணியாளர்கள், இருபால் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் செய்திருந்தனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சுகாதார தினம் மற்றும் மரம் நடும் விழா நடைப்பெற்றது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சுகாதார தினம் மற்றும் மரம் நடும் விழா நடைப்பெற்றது. விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். பொன்.சரவணன் தலைமை வகித்தார்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1&ந்தேதி முதல் 30&ந்தேதி வரை தமிழக அரசின் மருத்துவமனை தூய்மை இயக்கம் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்று பெரும் முன்னெடுப்பாக தங்கள் அனைவருடைய ஒத்துழைப்புடன் நமது ஆதனக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல் படுத்தப்படுகிறது.
முன்னதாக ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கதிர்வேலு மற்றும் மற்றும் தனியார் தொண்டு நிறுவன ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் டாக்டர்கள் நிவின்பிரகாஷ், குணசீலி மற்றும் வேலுசாமி வாழ்த்தி பேசினார்கள்.
விழாவில் டாக்டர்ஸ் காலேஜ் ஆப் நர்சிங் கல்லூரி மாணவிகள், ஆதனக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னதாக கதிரேசன் அனைவரையும் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர் கோபால் நன்றி கூறினார்.
வாலிபரிடம் செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி :
திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் காளிதாஸ் (21). இவர் சம்பவத்தன்று காய்கறி வாங்குவதற்காக காந்தி மார்க்கெட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளார். பின்னர் காளிதாஸ் அருகிலிருந்த காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த குமார் (46) என்பவர் வாலிபர் காளிதாசின் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. பின்னர் காந்தி மார்க்கெட் போலீசார் செல்போன் திருடிய குமாரை கைது செய்தனர்.
மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்றுவந்த மின்ஊழியர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஜெய்சங்கர். மின் வாரிய ஊழியரான இவர் சிப்காட் துணை மின் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்குள்ள மின் கம்பத்தில் ஏறி பராமரிப்பு பணி பார்த்துக் கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமான அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார்.
உடனடியாக மீட்கப்பட்ட ஜெய்சங்கர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே பணியில் கவனக்குறைவாக இருந்ததாக மின்வாரிய செயற்பொறியாளர்கள் ரகுநாதன், ஜெகநாதன் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த மின்வாரிய ஊழியர் ஜெய்சங்கர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சஸ்பெண்டு செய்யப்பட்ட செயற்பொறியாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கந்தர்வகோட்டை அருகே லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கும்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தைசாமி (50).இவர் ஆலங்குடி உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு மன்னார்குடியிலிருந்து ஆலங்குடிக்கு லாரியில் ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு வந்தார்.
பின்னர் நள்ளிரவு ஒரு மணியளவில் கந்த்வகோட்டை கல்லாகோட்டை பேருந்து நிலையம் அருகே லாரியை நிறுத்தி விட்டு படுத்து தூங்கினார்.
இன்று காலை மற்ற லாரிகளில் வந்த டிரைவர்கள் சென்று பார்த்தபோது குழந்தை சாமி படுத்த நிலையில் இறந்து கிடந்தார்.
இதுதொடர்பாக கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பழைய நீதிமன்றம் அருகே ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. அந்தப் பகுதியில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய செயலாளர்கள், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சொர்ணகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடிவேல், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் புதிய கடை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆலங்குடி போலீசார் சமாதானம் செய்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு, ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் செந்தில்நாயகி முன்னிலையில் பேச்சுவார்த்¬தையில் ஈடுபட்டனர். அப்போது புதிய கடை உரிய பாதுகாப்போடு திறந்து செயல்படும் என அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போராட்டக்குழுவினர் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளியேறினர். மேலும் புதிய கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே மற்றும் பழைய நீதிமன்றம் அருகே இயங்கும் 2 டாஸ்மாக் கடைகளுக்கு நாளை (9-ந் தேதி) பூட்டுபோடும் போராட்டம் நடத்தப்படும் என கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.
அரசு கல்லூரி அமைய உள்ள இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என சட்டசபையில் கடந்த 2021ம் ஆண்டு ஆக. 26&ந் தேதி சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அ றிவித்தார்.
அதனை தொடர்ந்து ஆலங்குடி அருகே உள்ள, கீழாத்தூர் பகுதியில் கல் லூரி அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் மெய்யநாதன் உட்பட அதிகா ரிகள் தேர்வு செய்தனர். அப்பகுதியில் இதுவரை கட்டுமா னப்பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில், இந்தாண்டு கலை அறிவி யல் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில், நேற்று கல்லூரிகளுக்கான அறிக்கை கோப்புகளை ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி மாவட்ட வருவாய் அலுவலர் செல்வியிடம் சமர்ப்பித்தார்.
இதைபெற்றுக்கொண்டு மாவட்ட வருவாய் அலு வலர் செல்வி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கான இடத்தை நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது தாசில் தார் கிராம நிர்வாக அலுவ லர் வருவாய் அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.






