search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆயுர்வேத சிகிச்சைக்கு செல்கிறார்- சசிகலாவை சந்திப்பது தள்ளிபோகிறது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆயுர்வேத சிகிச்சைக்கு செல்கிறார்- சசிகலாவை சந்திப்பது தள்ளிபோகிறது

    • வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட எல்லோரிடமும் கலந்து பேசிய பின்னர்தான் டி.டி.வி.தினகரனை சென்று சந்தித்தனர்.
    • சென்னை வந்ததும் சசிகலாவை ஓ.பன்னீர்செல்வமும், பண்ருட்டி ராமச்சந்திரனும் சந்தித்து பேசுவார்கள்.

    சென்னை:

    பிளவுப்பட்டிருந்த அ.தி.மு.க.வில் இரட்டை இலையும், தலைமை கழகமும் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்று விட்டதால் பெரும்பாலான அ.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் இ.பி.எஸ். பக்கம் உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அதிகம் பேர் அவரிடம் உள்ளனர்.

    ஓ.பன்னீர்செல்வம் பக்கம் குறிப்பிட்ட சிலர் தான் உள்ளனர். ஆனாலும் அ.தி.மு.க.வை தங்கள் பக்கம் கொண்டு வர கோர்ட்டு தீர்ப்பை எதிர்நோக்கி ஓ.பன்னீர்செல்வம் காத்திருக்கிறார்.

    அதுமட்டுமின்றி பிரிந்து கிடக்கிற அ.தி.மு.க.வை ஒன்று சேர்க்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டு உள்ளார்.

    அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் சென்று சந்தித்து பேசினார்கள்.

    இந்த சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி. பிரபாகர், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் செல்லவில்லை.

    இதுபற்றி ஜே.சி.டி. பிரபாகர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் பிரிந்து கிடக்கிற அனைவரையும் ஒன்று சேர்க்கும் விதமாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை, ஓ.பன்னீர்செல்வமும், பண்ருட்டி ராமச்சந்திரனும் சந்தித்து பேசி உள்ளனர்.

    வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட எல்லோரிடமும் கலந்து பேசிய பின்னர்தான் டி.டி.வி.தினகரனை சென்று சந்தித்தனர்.

    அடுத்தகட்டமாக சசிகலாவையும் சந்தித்து பேசுவார்கள். ஓ.பன்னீர்செல்வம் ஆயுர்வேத சிகிச்சை முடிந்து நேற்று பெரியகுளம் வந்தார். மீண்டும் கேரளா சென்று 4 நாள் சிகிச்சை எடுத்துக்கொள்ள இருப்பதாக தெரிகிறது.

    அதன்பிறகு சென்னை வந்ததும் சசிகலாவை ஓ.பன்னீர்செல்வமும், பண்ருட்டி ராமச்சந்திரனும் சந்தித்து பேசுவார்கள். விரைவில் இந்த சந்திப்பு நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×