என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பணம் இல்லாததால் வடமாநில வாலபரின் கழுத்தை கொள்ளையர்கள் அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓசூர்,
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர் பபூன் (வயது 45). ஓசூர் வசந்த நகர் பகுதியில் தங்கியிருந்து பெயிண்டராக வேலைபார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மது அருந்துவதற்காக கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளிக்கு சென்று மது அருந்தி விட்டு திரும்பி கொண்டிருந்தார். ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் அவரிடம் பணம் பறிக்க வழிப்பறி கொள்ளையர்கள் முயன்றனர். அப்போது பபூனிடம் பணம் எதுவும் இல்லாததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், அவரது கழுத்தை கத்தியால் அறுத்தனர். இதில் பலத்த காயம் அடைந்து அலறினார். உடனே கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
பபூனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள அந்தேரிப்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மாந்தோப்பில் பணம் வைத்து சூதாடியவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணை நடத்தியதில் அவர்கள் சோனார அள்ளியை சேர்ந்த தேவன் (வயது51), சாமல்பட்டி அடுத்துள்ள பரசனூரை சேர்ந்த வீரசேகரன் (29), சாலமரத்துபட்டியை சேர்ந்த இளங்கோவன் (48) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது.
இதனால் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து 25 ஆயிரம் பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே பாலம் அடியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாலத்தின் அடியில் இருந்து இளைஞர்களுக்கு கஞ்சா விற்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் கவுண்டப்பனூர் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ் மகன் தமிழ்செல்வன் (வயது21) என்பது தெரியவந்தது. அவர் திருப்பத்தூரில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் வாங்கி மத்தூர் பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனால் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை போலீ சார் பறிமுதல் செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
மது குடிக்க பணம் கேட்டு தாயிடம் ஏற்பட்ட தகராறில் சண்டையை விளக்க வந்த முதியவரை கட்டையால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்துள்ள ஆவத்தவாடி பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் விக்னேஷ். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று விக்னேஷ் தனது பாட்டி மற்றும் தாய் ஆகியோரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்ய வந்தனர்.
அப்போது அங்கு வந்த மாணிக்கம் (வயது60) என்ற முதியவரை விக்னேஷ் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் அந்த முதியவரின் கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து நாகரசம்பட்டி போலீசில் புகார் கொடுக்கப் பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விக்னேசை கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பஸ் நிலையத்தில் பல ஆண்டுகள் மூடி இருந்த கடைகளை பேரூராட்சித் தலைவர் அம்சவேணி பார்வையிட்டார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பஸ் நிலையத்தில் உள்ள நான்கு கடைகள் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பது குறித்து பொதுமக்கள் பேரூராட்சி தலைவர் கவனத்திற்கு கொண்டு வந்து மனு அளித்தனர்.
இதனடிப்படையில் கடைகளை பேரூராட்சித் தலைவர் அம்சவேணி செந்தில் குமார், துணைத்தலைவர் மாலினி மாதையன், செயல் அலுவலர் முருகன், பொறியாளர் அருணகிரி, கடைகளை பார்வையிட்டனர்.
அப்போது கடைகளை மீண்டும் புதுப்பித்து அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் அம்சவேணி செந்தில்குமார் கூறினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் ராஜன், பேரூராட்சி அவைத்தலைவர் சென்ன கேசவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கீதா ஞானசேகரன், கோகுல்ராஜ், நித்யா முத்துக்குமார், தமிழ்செல்வி சோபன் பாபு , அமுதா பழனி, பாரதிராஜா, தினேஷ் உள்பட பலர் உள்ளனர்.
ஓசூர் அருகே உள்ள பாகலூரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஓசூர்,
ஒசூர் அருகேயுள்ள பாகலூரில். மிகவும் பழமையான கிராம தேவதை கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவில் திருவிழா, வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
பாகலூர் பகுதியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த மன்னர் காலத்தில், ஒசூரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் வழிபட்டு வந்ததாகவும், பின்னர், பாகலூர் கிராமத்திலேயே வழிபட கோட்டை மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேர்திருவிழாவை நடத்தி வருவதாகவும், 450 ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெற்று வருவதாக, பெரியவர்கள் கூறுகிறார்கள்.
பாகலூர் கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம், கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த, 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தாண்டு தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், சுற்றுவட்டார கிராம மக்கள் மிகவும் ஆவலுடன் குவிந்திருந்தனர்.
விழா நிகழ்ச்சிகள், கடந்த 2-&ந் தேதி தொடங்கியது. பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும்சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மனை வைத்து பக்தர்கள் தேரோட்டத்தை வடம்பிடித்து, பக்தி கோஷங்களை முழக்கியவாறு தேரை இழுத்துச் சென்றனர்.
விழாவில், பாகலூர், பேரிகை, ஓசூர் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்தும், அருகில் உள்ள கர்நாடக எல்லைப்பகுதிகளான மாலூர், மாஸ்தி, சம்பங்கிரி உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தேர் இழுத்து சாமி வழிபாடு நடத்தினார்கள்.
விழாவையொட்டி, பாகலூரில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு, குடிநீர், பானகம், நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தை தொடர்ந்து பல்லக்கு உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், வருகிற 7-&ந்தேதி வரை நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வனப்பகுதியில் மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் தருமபுரி வனப்பாதுகாவலர் பெரியசாமி மற்றும் ஓசூர் வனக்கோட்டை வன உயிரின காப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு அஞ்செட்டி வனச்சரக அலுவலர் சீதாராமன் தலைமையில் வன ஊழியர்கள் உப்ராணி காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வழியாக நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அந்த நபர் வனத்துறையினரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். உடனே வனத்துறையினர் அந்தப் நபரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர்.
அவர் அஞ்செட்டி அருகே உள்ள எருமுத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மாஸ்தப்பா (வயது40) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கத்தில் கர்நாடக மாநிலத்திலிருந்து கள்ளத்துப்பாக்கி வாங்கிக்கொண்டுவந்து உப்பு ராணி வனப்பகுதியில் நுழைந்தது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்து கள்ள நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்த வனத்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் சிறைச்சாலையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை பகுதியில் கஞ்சாசெடிகள் பயிரிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் மலையோர பகுதி யில் சிலர் கஞ்சா செடிகள் பயிரிட்டு வளர்த்து விற்பனை செய்து வரு கிறார்கள். இதனால் இளை ஞர்கள் போதைக்கு அடிமை யாகியுள்ளனர். மேலும் மாவட்ட எல்லை வழியாக வும் கஞ்சா பொட்டலங்களை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் மாவட் டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை மேற் கொண் டனர்.
இந்த நிலையில் காவேரிப் பட்டணம் போலீஸ் இன்ஸ் பெக்டர் முரளி மற்றும் போலீசார் குட்டப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த வேலயன் (வயது60), காளியப்பன் கொட்டாயை சேர்ந்த மாரிமுத்து என்கிற ஜம்பு ஆகிய 2 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய் தனர். அங்கு அவர்கள் நிலத்தில் பயிரிட்டுள்ள கஞ்சா செடிகளை போலீசார் அழித் தனர்.
இதே போல் ராயக் கோட்டை பகுதியில் கஞ்சா செடிகள் வளர்த்து விற்பனை செய்து வருவதாக புகார் வந்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தொட்லாம் பட்டி பகுதியில் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்து வந்ததாக மணிகண்டன் (28), பெருமாள் (60) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 30 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரியில் கண், உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் கண் தானம், ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி நகர அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சுரேஷ் கலந்து கொண்டார்.
விழிப்புணர்வு ஊர்வலத்தில் கிருஷ்ணகிரி ரவுண்டானா 5 ரோடு பகுதியில் தொடங்கி காந்திசாலையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரை சென்று நிறைவடைந்தது. விழிப்புணர்வு பேரணியில் கண் தானம், ரத்த தானம், உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய் யப்பட்டது.
முடிவில் 6 பேர் தங்களது முழு உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை & மகள் பலியானார்கள். 4 பேர் காயம் அடைந்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கலுகொண்டபள்ளி-தளி செல்லும் சாலை யில் உள்ள தனியார் கம்பெனி அருகே, ஒரு கார் நேற்று இரவு தாறுமாறாக சென்றது. இதனை ஓட்டிச்சென்ற ஹரீஷ் ரெட்டி என்பவர், குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அந்த கார், எதிரே வந்த ஒரு ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில், ஸ்கூட்டரில் வந்த ஓசூர் சின்ன எலசகிரியை சேர்ந்த மஞ்சுநாத் (வயது 35, அவரது மகன் மகேஷ் (7), மற்றும் மகள் பிரீத்தா (8) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதில், மஞ்சுநாத் மற்றும் சிறுமி பிரீத்தா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தனர். மேலும் சிறுவன் மகேஷ் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த பேள கொண்டபள்ளியை சேர்ந்த சச்சின் (21) மற்றும் ராஜேஷ்(24) ஆகியோரும் காரை ஓட்டி சென்ற மற்றும் ஹரீஷ் ரெட்டியும் படுகாயமடைந்தனர். அவர்கள் சிசிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காலிகுடங்களுடன் பெண்கள் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த ஊனாம்பாளையம் கிரா மத்தில் சுமார் 200 குடும் பத்தினர் வசித்து வரு கின்றனர்.
இந்த பகுதி மக்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் கோடை காலத்தில் தண் ணீருக்காக அப்பகுதி பெண்கள் மிகவும் சிரமப் பட்டனர். இதுபற்றி கிராம மக்கள், ஊராட்சி நிர்வா கத்திடம் முறையிட்டனர். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக் கையும் எடுக்கப் பட வில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த சுமார் 50&க்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் திரண்டு வந்து நேற்று திடீரென சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். மேலும் கட்டைகளை வைத்து சாலையில் தடுப்பை ஏற்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்குமரன், இன்ஸ் பெக்டர் லட்சுமி, சப்& இன்ஸ்பெக்டர்கள் ஜெய காந்தன், குட்டியப்பன் ஆகி யோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மறியல் போராட் டத்தில் ஈடுபட் டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இது பற்றி அதிகாரிகளிடம் தெரிவித்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் , மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கிராம மக்களின் திடீர் மறியல் போராட்டத்தில் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
டாக்டர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க சட்டம் வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஓசூர்,
இந்திய மருத்துவ சங்கத்தின் ஓசூர் கிளை தலைவரும், குணம் மருத்துவமனையின் இயக்குனராக,டாக்டர் பிரதீப்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
ராஜஸ்தான் மாநிலத்தில், அர்ச்சனா சர்மா என்ற மூத்த மகப்பேறு டாக்டர், பணியின்போது, ஒருபெண்ணுக்கு சரியாக சிகிச்சை யளிக்கவில்லை என்றும், அதனால், அந்த பெண் இறந்து விட்டதாகவும், சிலரால் தவறாக சித்தரிக் கப்பட்டு டாக்டர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக டாக்டர் அர்ச்சனா சர்மா தற்கொலை செய்துகொண்டார். டாக்டர்களுக்கு பாதுகாப்பில்லாத இந்த சூழ்நிலையை கண்டித்து, நேற்று இந்திய மருத்துவ சங்கம் சார்பில், நாடு முழுவதும் ஒரு நாள் அடையாளவேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் போது காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோய் பிரிவு மற்றும் வழக்கமான பணிகள் செயல் படவில்லை. இந்திய மருத்துவ சங்கத்தின் ஓசூர் கிளையை சேர்ந்த 150 டாக்டர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அர்ச்சனா சர்மா மீது தவறான வழக்கு பதிவு செய்த போலீ சார் மீது உடனடியாக வழக்குபதிவு செய்து கைது செய்ய வேண்டும், அவரது குடும்பத்திற்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுதழுவிய போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, டாக் டர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. டாக் டர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க மத்திய அரசு, சட்டம் இயற்றுவது மிகவும் அவசியமாகும். மேலும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் அதிக இழப்புக் கேட்கும் வழக்குகளில் இருந்து மருத்துவ துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
அப்போது, சங்கத்தின் துணைத்தலைவர் செந்தில், செய லாளர் பூபேஷ் கார்த்திக், பொருளாளர் நவீன்குமார், மற்றும் சங்க நிர்வாகிகள், மூத்த டாக்டர்கள் உடன் இருந்தனர்.






