என் மலர்
கள்ளக்குறிச்சி
யூரியா மூட்டை ரூ.266 மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள பயிர்களுக்கு உரங்களை போட்டு வருகின்றனர். இந்நிலையில் தியாகதுருகம் பகுதியில் உள்ள ஒரு சில உரக்கடைகளில் விவசாயிகள் உரம் வாங்க சென்றபோது யூரியா முட்டை ரூ. 266 க்கு விற்பனை செய்ய வேண்டியதை ரூ.400 என வியாபாரிகள் கூறியதாக தெரிகிறது.
எனவே அதிர்ச்சியடைந்த விவசாயிகள் யூரியா கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக வேளாண்மை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி நேற்று வேளாண்மை உதவி இயக்குனர் தங்கராஜ், வேளாண்மை அலுவலர் வனிதா ஆகியோர் அடங்கிய குழுவினர் தியாகதுருகம் பகுதியில் உள்ள 5 உரக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது உரக்கடைகளில் உரங்கள் இருப்பு எவ்வளவு உள்ளது. டி.ஏ.பி. பொட்டாஷ், யூரியா உள்ளிட்ட அனைத்து உரங்களும் சரியான விலைக்கு விற்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து யூரியா மூட்டை ரூ.266 மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
மேலும் உரக்கடையின் முன்பகுதியில் உரங்களின் விலைப்பட்டியல் எழுதி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் தீமைகளும், மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்து கூறி சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு செய்தனர்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் தீபிகா மேற்பார்வையில் அத்தியூர் சந்தை மேட்டில் சுகாதார துறை சார்பில் பொது இடங்களில் புகைப்பிடித்தல், பான்மசாலா, பான்பரான், ஹான்ஸ் மற்றும் உடம்புக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய புகையிலை போடுபவர்களை சுகாதாரத்துறையினர் நேரில் எச்சரிக்கை செய்து, அபாராதம் விதித்தனர்.
மேலும் புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் தீமைகளும், மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்து கூறி விழிப்புணர்வு செய்தனர்.
நிகழ்ச்சியில் சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) தெய்வீகன், ஆய்வாளர்கள் குமாராசாமி, பிரசாந்த், வேல், ஜெகதீஷ், மற்றும் அரியலூர் பன்னீர், மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் தீபிகா மேற்பார்வையில் அத்தியூர் சந்தை மேட்டில் சுகாதார துறை சார்பில் பொது இடங்களில் புகைப்பிடித்தல், பான்மசாலா, பான்பரான், ஹான்ஸ் மற்றும் உடம்புக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய புகையிலை போடுபவர்களை சுகாதாரத்துறையினர் நேரில் எச்சரிக்கை செய்து, அபாராதம் விதித்தனர்.
மேலும் புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் தீமைகளும், மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்து கூறி விழிப்புணர்வு செய்தனர்.
நிகழ்ச்சியில் சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) தெய்வீகன், ஆய்வாளர்கள் குமாராசாமி, பிரசாந்த், வேல், ஜெகதீஷ், மற்றும் அரியலூர் பன்னீர், மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நம்பிகுளம் தெருவில் வசித்து வருபவர் பி.கெங்கமுத்து (35) கூலித்தொழிலாளி.
இவர் கடந்த 4 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து சென்றவர் அதன் பிறகு காணவில்லை. உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
நேற்று காளிகோவில் அருகே உள்ள ஒரு கிணற்றில் கெங்கமுத்து அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து இந்த வழியாக சென்றவர்கள் பார்த்து விட்டு எலவனாசூர் கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்சபெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் தீயணைப்புகுழுவினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிணற்றின்மேல் பகுதியில் படுத்து தூங்கிய வாலிபர் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து கெங்கமுத்து மனைவி சரிதா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நம்பிகுளம் தெருவில் வசித்து வருபவர் பி.கெங்கமுத்து (35) கூலித்தொழிலாளி.
இவர் கடந்த 4 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து சென்றவர் அதன் பிறகு காணவில்லை. உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
நேற்று காளிகோவில் அருகே உள்ள ஒரு கிணற்றில் கெங்கமுத்து அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து இந்த வழியாக சென்றவர்கள் பார்த்து விட்டு எலவனாசூர் கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்சபெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் தீயணைப்புகுழுவினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிணற்றின்மேல் பகுதியில் படுத்து தூங்கிய வாலிபர் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து கெங்கமுத்து மனைவி சரிதா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காணாமல் போன வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை சிவன் கோவில் பகுதியில் பயன்படுத்தாத கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் மிதப்பதாக அந்த பகுதி மக்கள் பார்த்து எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் மிதந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியில் 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன கெங்கமுத்து என்பது தெரியவந்தது.
மேலும் இவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை சிவன் கோவில் பகுதியில் பயன்படுத்தாத கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் மிதப்பதாக அந்த பகுதி மக்கள் பார்த்து எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் மிதந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியில் 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன கெங்கமுத்து என்பது தெரியவந்தது.
மேலும் இவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம் அருகே டிராக்டர் திருட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே நெடுமானுரைச் சேர்ந்தவர் கருணாகரன். விவசாயி. இவருக்கு சொந்தமான டிராக்டரை நெடுமானுார் பால் ஸ்டோர் முன் இரவு நிறுத்தி வைத்திருந்தார். காலை பார்த்தபோது டிராக்டரை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 703 மி.மீட்டராகவும், சராசரி 33.48 மி.மீட்டர் அளவாகவும் உள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்று வீசியது.
இதனை தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் ஓரளவு கோடை வெப்பம் தணிந்து உள்ளது.
மழையின் அளவு மி.மீட்டரில் பின்வருமாறு:-
கள்ளக்குறிச்சியில் 24, தியாகதுருகம் 16, விருகாவூர் 22, சின்னசேலம் 28, அரியலூர் 35, கடுவனூர் 75, கலையநல்லூர் 29, கீழ்பாடி 41, மூரார்பாளையம் 32, மூங்கில்துறைப்பட்டு 52, ரிஷிவந்தியம் 44, சூளாங்குறிச்சி 32, வடசிறுவலூர் 39, மாடாம்பூணடி 21, மணலூரபேடடை 10, திருக்கோவிலூர் 47, திருப்பாலபந்தல் 14, வேங்கூர் 73, ஆத்தூர் 5, எறையூர் 15, ஊ.கீரனூர் 49, என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக கடுவனூரில் 75 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக ஆத்தூரில் 5 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 703 மி.மீட்டராகவும், சராசரி 33.48 மி.மீட்டர் அளவாகவும் உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்று வீசியது.
இதனை தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் ஓரளவு கோடை வெப்பம் தணிந்து உள்ளது.
மழையின் அளவு மி.மீட்டரில் பின்வருமாறு:-
கள்ளக்குறிச்சியில் 24, தியாகதுருகம் 16, விருகாவூர் 22, சின்னசேலம் 28, அரியலூர் 35, கடுவனூர் 75, கலையநல்லூர் 29, கீழ்பாடி 41, மூரார்பாளையம் 32, மூங்கில்துறைப்பட்டு 52, ரிஷிவந்தியம் 44, சூளாங்குறிச்சி 32, வடசிறுவலூர் 39, மாடாம்பூணடி 21, மணலூரபேடடை 10, திருக்கோவிலூர் 47, திருப்பாலபந்தல் 14, வேங்கூர் 73, ஆத்தூர் 5, எறையூர் 15, ஊ.கீரனூர் 49, என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக கடுவனூரில் 75 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக ஆத்தூரில் 5 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 703 மி.மீட்டராகவும், சராசரி 33.48 மி.மீட்டர் அளவாகவும் உள்ளது.






