search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    காட்பாடியில் பேனர்களை அகற்றக்கோரி போராட்டம் செய்த அ.தி.மு.க.வினர் 50 பேர் மீது வழக்கு பதிவு

    காட்பாடியில் பேனர்களை அகற்றக்கோரி போராட்டம் செய்த அ.தி.மு.க.வினர் 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் மற்றும் ஆக்சிலியம் கல்லூரி சாலையில் பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த டிஜிட்டல் பேனர்கள் போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். இதையடுத்து அ.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் அ.தி.மு.கவினர் பேனர்களை அகற்றக்கோரி ஆக்சிலியம் கல்லூரி சாலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர்கள் நாராயணன், ஜனார்த்தனன், குப்புசாமி, பேரவை ரவி, அணி செயலாளர்கள் ராக்கேஷ், அமர்நாத், சரவணன், தனசேகரன் பி.எஸ். பழனி மற்றும் வட்ட செயலாளர்கள் உட்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    இதுதொடர்பாக விருதம்பட்டு போலீசார் அனுமதி இன்றியும் கொரோனா விதிகளை மீறி கூடியதாக அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு உள்பட அ.தி.மு.க.வினர் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    Next Story
    ×