search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு புகைப்படம்
    X
    கோப்பு புகைப்படம்

    நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள்- தமிழக அரசு அறிவிப்பு

    பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
    சென்னை:

    தமிழகத்தில் வரும் 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

    இதையடுத்து நாளை முதல் சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

    இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 13-ம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

    கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

    சென்னையிலிருந்து 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும்.

    இதற்காக கோயம்பேடு, தாம்பரம் என மொத்தம் 11 முன்பதிவு மையங்கள் செயல்படவுள்ளன.

    கோப்பு புகைப்படம்

    பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

    ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 1800 425 6151, 044-2474 9002 என்ற கட்டணமில்லா எண்களில் புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×