search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்
    X
    போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

    தமிழகம் முழுவதும் தடையை மீறி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
    சென்னை:

    தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெட்ரோல்-டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்டும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும், பொங்கல் கொண்டாட அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அறிவிக்க வேண்டும்.

    அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தேர்தல் நேரத்தில் தி.மு.க. அறிவித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றாததை கண்டித்தும் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.

    இந்த போராட்டம் முதலில் 9-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு 11-ந்தேதிக்கு மாற்றப்பட்டது.

    அதன்பிறகு 17-ந்தேதிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

    சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரான இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். தி.மு.க. அரசை கண்டித்து ஆவேசமாக முழக்கமிட்டனர்.

    இதேபோல் தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதிலும் அந்த மாவட்டத்தில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    சென்னையில் 2 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அளவில் உள்ளதால் 4 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே 5 மாவட்டச் செயலாளர்களான பாலகங்கா, ராஜேஷ், தி.நகர் சத்யா, விருகை வி.என்.ரவி, வெங்கடேஷ்பாபு ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபுமுருகவேல், கட்சியின் அமைப்பு ரீதியான நிர்வாகிகள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர். இதில் கொளத்தூர் மேற்கு பகுதி செயலாளர் கொளத்தூர் கே.கணேசன், வில்லிவாக்கம் பகுதி செயலாளர் திருமங்கலம் மோகன், செந்தில்குமார், அயன்புரம் சுரேஷ், நாகராஜன், ராமு, மகேஷ், அப்பாஸ், சிக்மா, வேணு, சத்யநாராயணன், தங்கராஜ், வள்ளல், பீட்டர், நாகராஜ் கலந்து கொண்டனர்.

    சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

    சென்னை அடையார் டெலிபோன் எக்ச்சேஞ்ச் அருகில் தென்சென்னை தெற்கு, கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் வேளச்சேரி அசோக் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், முன்னாள் எம்.பி.க்கள் மைத்ரேயன், ஜெயவர்த்தன், முன்னாள் எம்.எல்.ஏ. நட்ராஜ், தேவேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

    தென்சென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆதிராஜாராம் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 117-வது வட்ட கழக செயலாளர் முன்னாள் கவுன்சிலர் பி.சின்னையன் (எ) ஆறுமுகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி பங்கேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்


    இதில் செங்கல்பட்டு மேற்கு, கிழக்கு, சென்னை புறநகர் கழக செயலாளர்களான சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், கே.பி.கந்தன், சென்னை புறநகர் மாவட்ட கழக பொருளாளர் முன்னாள் மண்டலக்குழு தலைவர் காரப்பாக்கம் லியோ என்.சுந்தரம், அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ஏ.ராஜசேகர், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, காரப்பாக்கம் கார்த்திக், நாகராஜ் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்தார்.

    இதில் மாவட்டச் செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி, நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம் கேயூ எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், தும்பவனம் ஜீவானந்தம், மாலினி பாலாஜி, ஜெயராஜ், திலக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் மூர்த்தி, மேற்கு மாவட்ட செயலாளர் பி.வி. ரமணா, வடக்கு மாவட்டச் செயலாளர் பி.பலராமன், தெற்கு மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர், மத்திய மாவட்ட செயலாளர் பா.பெஞ்சமின் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் முன்னாள் எம்.பி.க்கள் வேணுகோபால், கோ.ஹரி, முன்னாள் அமைச்சர்கள் மா.பா.பாண்டியராஜன், அப்துல் ரஹீம், துணைச் செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ராம்குமார், நொளம்பூர் மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர் இமானுவேல், அம்மா பேரவை மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன், நகர எம்.ஜி.ஆர். அணி இளைஞர் அணி செயலாளர் வேல்முருகன், திருவள்ளூர் நகர கழக செயலாளர் கந்தசாமி, மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் நேசன் உள்பட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பத்மஸ்ரீ பாபி, லோகேஸ்வரி, ஆண்டனி ஸ்டாலின், ஜோசப் செல்வராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 60 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

    இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆனாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


    Next Story
    ×