என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேவகோட்டை அருகே வாலிபர் கொலையில் 2 பேர் கைது
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சலுகை கிராமத்தை சேர்ந்தவர் தென்னரசு (வயது29). சிவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (40). இவர்கள் 2 பேரும் ஜே.சி.பி. எந்திரம் மற்றும் டிப்பர் லாரிகளை வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தனர்.
இதில் இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சலுகையில் கிராமத்தில் தென்னரசு, அவரது அண்ணன் காளிதாஸ் மற்றும் நண்பர்கள் இளங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் குருப்புலி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோர் பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக மணிகண்டன் வந்தார். திடீரென மணிகண்டன், தென்னரசு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் கத்தியால் சரமாரியாக தென்னரசை குத்தினார்.இதனை சற்றும் எதிர்பாராத அவரது அண்ணன் மற்றும் நண்பர்கள் தடுத்தனர். இதனால் அவர்களுக்கும் கத்தி குத்து விழுந்தது.
பின்னர் அங்கிருந்து மணிகண்டன் தப்பி ஓடி விட்டார். ரத்த காயங்களுடன் 4 பேரும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த தேவகோட்டை துணை போலீஸ் கண்காணிப்பாளர் ரமேஷ், தாலுகா ஆய்வாளர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ரத்த காயங்களுடன் கிடந்த தென்னரசு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிய வந்தது. மேலும் மற்ற 3 பேருக்கும் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு தேவகோட்டை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த தென்னரசுவின் உடல் பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தென்னரசுவின் உறவுக்காரரான கார்த்திக் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சில மணி நேரத்தில் தலைமறைவாக இருந்த மணிகண்டன், பெத்து ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்