என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்பே இல்லை- டி.டி.வி.தினகரன்
    X

    அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்பே இல்லை- டி.டி.வி.தினகரன்

    அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #ADMK #DMK
    மதுராந்தகம்:

    செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அ.ம.மு.க. துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார்.

    அவர் அச்சிறுப்பாக்கத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆறுமுகசாமி நீதி விசாரணையில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விசாரணையை தள்ளி போட்டு வருகிறார். அவர் எங்கள் வழக்கறிஞர் குழுவின் விசாரணைக்கு பயந்து வழக்கை தள்ளி போடுகிறார். இதில் இருந்தே யார் குற்றவாளி என்பது தெரிய வரும்.

    ஆளும் கட்சியில் உள்ளவர்கள் பதவிக்கும் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்படுபவர்கள். அனைவரும் எங்களுக்கு துரோகிகளே.

    தி.மு.க.ஆட்சி பல முறை இருந்துள்ளது. அப்போதெல்லாம் தீர்க்கப்படாத அரசு ஊழியர்கள் பிரச்சனைகளை இனி வரும் தேர்தலுக்கு பின் ஆட்சி அமைத்து தீர்க்கப் போகிறாரா? .

    தேசியக் கட்சிகளோடு ஒரு போதும் கூட்டணி இல்லை. 20 தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றால் இந்த ஆட்சிக்கு ஒரு முடிவு தெரியும்.

    மீண்டும் அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை.

    பாராளுமன்றத் தேர்தலுக்கு சில கட்சிகளுடன் கூட்டணி பேசி வருகிறோம். கூட்டணியை உறுதி செய்தால் அறிவிப்போம்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #ADMK #DMK
    Next Story
    ×