search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியபாளையம் அருகே விபத்து- வாலிபர் பலி
    X

    பெரியபாளையம் அருகே விபத்து- வாலிபர் பலி

    பெரியபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    பெரியபாளையம்:

    ஆந்திர மாநிலம் மதனச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 20). கடந்த வாரம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கினார்.

    இதையடுத்து அவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான கார்த்திக் (20), தினேஷ் (25) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு செங்குன்றத்தில் உள்ள உறவினரை பார்க்க வந்தார்.

    பெரியபாளையம் அருகே சென்னை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் கன்னிகைபேரில் உள்ள மின்வாரியம் அலுவலகம் அருகே வந்த போது எதிரே குஜராத்தில் இருந்து சரக்கு ஏற்றி வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சிலம்பரசன் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். அவர்களை கிராம மக்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சிலம்பரசன் பரிதாபமாக இறந்து போனார். அவர் நண்பர்கள் கார்த்திக், தினேஷ் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இது குறித்து பெரிய பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×