என் மலர்
செய்திகள்

மனைவியின் கள்ளக்காதலன் வெட்டி கொலை: கூலி தொழிலாளி-தந்தை கைது
சீர்காழி:
நாகை மாவட்டம் கீழ அகனி தெற்கு தெருவில் வசிக்கும் கார்த்திகேயன் மகன் கலையரசன் (வயது 35) கூலி தொழிலாளி. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கவிதாவுக்கும் அதே தெருவில் வசிக்கும் கார் டிரைவர் கண்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் நெருங்கி பழகியதில் அவர்களுக்கிடையே கள்ள தொடர்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கண்ணன் கவிதாவை சென்னைக்கு அழைத்து சென்று அவருடன் குடும்பம் நடத்தி வந்தார். கலையரசன் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கண்ணன் தனது பெற்றோரை பார்ப்பதற்காக நேற்று முன் தினம் சொந்த ஊருக்கு வந்தார். அவர் நேற்று காலை சென்னைக்கு புறப்பட்டார். இதனை அறிந்த கலையரசன், கண்ணனை கொலை செய்ய திட்டமிட்டார். அவர் அரிவாளுடன் கண்ணன் வீட்டுக்கு சென்று பதுங்கி இருந்தார். அவர் வெளியே வந்ததும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த கண்ணன் சம்பவ இடத்திலயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து கலையரசனையும, அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது தந்தை கார்த்திகேயனையும் கைது செய்தனர்.






