என் மலர்
செய்திகள்

மானாமதுரையில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை: கணவர் உள்பட 5 பேர் மீது புகார்
மானாமதுரையில் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக கணவர் மற்றும் உறவினர்கள் மீது பெண் புகார் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:
மானாமதுரை பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சியாமளா (வயது 27) இவர், சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.
அதில், எனக்கும் ஜெயக்குமார் என்பவருக்கும் 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அப்போது 40 பவுன் நகை, ரூ. 5 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டு எங்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் ஜெயக்குமார் மற்றும் உறவினர்கள் சித்ரவதை செய்தனர்.
மேலும் என்னை, பெற்றோர் வீட்டிற்கும் அனுப்பி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி விசாரணை நடத்தி ஜெயக்குமார், அவரது தந்தை காசிநாதன், உறவினர்கள் பானுமதி, ராமகிருஷ்ணன், ராமலிங்கம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மானாமதுரை பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சியாமளா (வயது 27) இவர், சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.
அதில், எனக்கும் ஜெயக்குமார் என்பவருக்கும் 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அப்போது 40 பவுன் நகை, ரூ. 5 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டு எங்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் ஜெயக்குமார் மற்றும் உறவினர்கள் சித்ரவதை செய்தனர்.
மேலும் என்னை, பெற்றோர் வீட்டிற்கும் அனுப்பி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி விசாரணை நடத்தி ஜெயக்குமார், அவரது தந்தை காசிநாதன், உறவினர்கள் பானுமதி, ராமகிருஷ்ணன், ராமலிங்கம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Next Story






