என் மலர்
செய்திகள்

திருக்கழுக்குன்றத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை
திருக்கழுக்குன்றத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் தணிகாசலம். இவர் வீட்டை பூட்டி விட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் தத்தளூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். திரும்பி வந்த போது வீட்டின் பின் வாசல் கதவு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பீரோவை பார்த்தபோது லாக்கரை உடைத்து அதில் இருந்த 15 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் தணிகாசலம். இவர் வீட்டை பூட்டி விட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் தத்தளூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். திரும்பி வந்த போது வீட்டின் பின் வாசல் கதவு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பீரோவை பார்த்தபோது லாக்கரை உடைத்து அதில் இருந்த 15 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
Next Story