என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் பயிற்சி வக்கீல் தூக்கு போட்டு தற்கொலை
Byமாலை மலர்1 July 2017 11:19 AM GMT (Updated: 1 July 2017 11:19 AM GMT)
கோவையில் மன உளைச்சலில் பயிற்சி வக்கீல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அவல பள்ளி பகுதியை சேர்ந்தவர் அமரேஷ்(வயது 27).
இவர் கோவையில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் படித்து முடித்து வக்கீலாக பயிற்சி பெற்று வந்தார். இதற்காக புலியகுளம் பெரியார் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து நண்பர்களுடன் தங்கி இருந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அமரேஷ் தூக்கில் தொங்கினார். முன்னதாக அவர் தனது நண்பர் ஒருவருக்கு போன் செய்து என்னை கடைசியாக பார்க்க வேண்டுமென்றால் உடனடியாக வா என கூறி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நண்பர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு விரைந்து சென்றார். அதற்குள் அமரேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். கயிற்றை இறக்கி அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு இறந்தார்.
இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அமரேசின் அறையில் சோதனை செய்த போது ஒரு கடிதம் இருந்தது.
அமரேஷ் எழுதியிருந்த அந்த கடிதத்தில் எனக்கு வாழ பிடிக்காததால் நான் சாகப் போகிறேன் என எழுதி இருந்தார். அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அவல பள்ளி பகுதியை சேர்ந்தவர் அமரேஷ்(வயது 27).
இவர் கோவையில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் படித்து முடித்து வக்கீலாக பயிற்சி பெற்று வந்தார். இதற்காக புலியகுளம் பெரியார் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து நண்பர்களுடன் தங்கி இருந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அமரேஷ் தூக்கில் தொங்கினார். முன்னதாக அவர் தனது நண்பர் ஒருவருக்கு போன் செய்து என்னை கடைசியாக பார்க்க வேண்டுமென்றால் உடனடியாக வா என கூறி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நண்பர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு விரைந்து சென்றார். அதற்குள் அமரேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். கயிற்றை இறக்கி அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு இறந்தார்.
இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அமரேசின் அறையில் சோதனை செய்த போது ஒரு கடிதம் இருந்தது.
அமரேஷ் எழுதியிருந்த அந்த கடிதத்தில் எனக்கு வாழ பிடிக்காததால் நான் சாகப் போகிறேன் என எழுதி இருந்தார். அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X