என் மலர்
செய்திகள்

பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
பவானியை அடுத்த சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது55). தொழிலாளி.
முத்துசாமி சம்பவத்தன்று வேலை விசயமாக தனது மோட்டார்சைக்கிளில் சித்தோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சமத்துவபுரம் தாண்டி சென்ற போது முத்துசாமிக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத வகையில் முத்துசாமி மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முத்துசாமி பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடினார். அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு முத்துசாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானியை அடுத்த சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது55). தொழிலாளி.
முத்துசாமி சம்பவத்தன்று வேலை விசயமாக தனது மோட்டார்சைக்கிளில் சித்தோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சமத்துவபுரம் தாண்டி சென்ற போது முத்துசாமிக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத வகையில் முத்துசாமி மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முத்துசாமி பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடினார். அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு முத்துசாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






