என் மலர்
செய்திகள்

கேளம்பாக்கம் அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை
கேளம்பாக்கம் அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:
கேளம்பாக்கத்தை அடுத்த கழிப்பட்டூர், சமத்துவ நகர் 5-வது தெருவில் வசித்து வருபவர் லோகநாதன். இவரது மகன்கள் சீனிவாசன், கோபால். லோகநாதனின் மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த மேகநாதன் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது.
இதனை அறிந்த லோகநாதனின் மகன்கள் 2 பேரும் நேற்று இரவு மேநாதனின் தம்பியான வீரசிங்கத்தை (36) அழைத்து கண்டித்தனர்.
இதில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சீனிவாசன், கோபால் மற்றும் அவர்களது நண்பர் நவீன்குமார் ஆகியோர் வீரசிங்கத்தை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சீனிவாசன் உள்பட 3 பேரை தேடி வருகிறார்கள்.
Next Story






