என் மலர்
ஒடிசா
- நாட்டையே உலுக்கிய கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார்.
- விபத்துக்குள்ளான ரெயிலின் முன்பதிவு பெட்டியில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து ஏற்பட்டது. அதிவேகத்தில் சென்ற போது நடந்த இந்த விபத்தால் ரெயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்தது.
ரெயில் விபத்து நடந்து 36 மணிநேரம் ஆனநிலையில் விபத்து நடந்த இடத்தில் உள்ள ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள், சரக்கு ரெயில் பெட்டிகள் என அனைத்து ரெயில் பெட்டிகளும் அகற்றப்பட்டது.
நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த இடத்தில் 2-வது நாளாக நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்னவ் கூறியதாவது:-
ரெயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து உடல்களும் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பாதையில் ரெயில்கள் ஓடத் தொடங்கும் வகையில் புதன்கிழமை காலைக்குள் சீரமைப்புப் பணிகளை முடிக்கும் வகையில் நடைபெறுவதாக கூறினார்.
இதனிடையே விபத்துக்குள்ளான ரெயிலின் முன்பதிவு பெட்டியில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் நிலை என்ன என்பதை அறிய ஒடிசா அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு குழு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உலகையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் 288 பேர் பலியாகி உள்ளனர்.
- சுமார் 900 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாலசோர் :
மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்துசென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு விபத்துக்குள்ளாகின. உலகையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் 288 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 900 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து நடந்த பகுதியை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நேரில் பார்வையிட்டார். மேலும் விபத்துக்கான காரணங்கள் குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
முன்னாள் ரெயில்வே மந்திரியான மம்தா பானர்ஜி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ரெயில்வேயின் செயல் திறனை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
விபத்து நடந்த வழித்தடத்தில் மோதல் தடுப்பு கருவி இல்லை. அது இருந்திருந்தால் இந்த பேரழிவு தடுக்கப்பட்டிருக்கும். ஒரு முன்னாள் ரெயில்வே மந்திரி என்ற முறையில் இந்த துறையின் உள் செயல்பாடுகள் எனக்கு தெரியும். அப்பாவி மக்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தும் இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்கு சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம். ரெயில்வேயின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசர தேவை ஆகும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
முன்னதாக டாக்டர்கள், நர்சுகள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய 50 பேர் கொண்ட மேற்கு வங்காள குழு விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேலும் 110 ஆம்புலன்ஸ்கள் மற்றும் உபகரணங்களும் விபத்து நடந்த இடத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
விபத்தில் சிக்கிய ரெயிலில் இருந்த 60 சதவீத பயணிகள் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் எனக்கூறிய அவர், இந்த விபத்தில் உயிரிழந்த மேற்கு வங்காளத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
- ஒடிசாவில் கோர விபத்தில் 17 ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன.
- விபத்து நடந்த இடத்தில் ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. இந்த கோர விபத்தில் 17 ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒடிசா ரெயில் விபத்து நடந்து 36 மணிநேரம் ஆனநிலையில் விபத்து நடந்த இடத்தில் உள்ள ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன.
தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள், சரக்கு ரெயில் பெட்டிகள் என அனைத்து ரெயில் பெட்டிகளும் அகற்றப்பட்டது.
தண்டவாளங்கள் மற்றும் மின் இணைப்புகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது வருகிறது. விரைவில் சீரமைப்பு பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
- விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது.
இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒடிசாவில் விபத்து நடைபெற்ற இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
விபத்து நடந்த இடத்தில், தடம் புரண்ட ரயில்களின் இடிபாடுகள் மற்றும் சிதைந்த பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து நகர்த்தப்படுவதால், மறுசீரமைப்பு பணிகள் இரவு வரை தொடர்ந்து வருகின்றன.
இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், ஒடிசாவின் பாலசோரில் ரெயில் விபத்து நடந்த இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனித சக்தியுடன் அயராது உழைத்து சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது ஏழுக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள், 2 விபத்து நிவாரண ரெயில்கள், 3-4 ரெயில்வே மற்றும் சாலை கிரேன்கள் முன்கூட்டியே சீரமைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்புப் பணிகளை ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.
- இந்த நிகழ்வு அரசுக்கு மிக அபாயமானது
- அனைத்து வகையான விசாரணைக்கும் உத்தரவு
ஒடிசாவில் நடைபெற்ற கோர ரெயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்ததும் பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, நிவாரணம் அறிவித்தார். ஒடிசா அரசுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என அறிவித்தார்.
இன்று காலை உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதன்பின் டெல்லியில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு விமானம் மூலம் விரைந்தார். அங்கிருந்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றடைந்தார். அங்கு விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
அதன்பின் கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
ரெயில் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள். இது ஒரு வலியை ஏற்படுத்தக் கூடிய சம்பவம். உயிரிழந்தவர்களை அரசு மீண்டும் கொண்டு வர முடியாது. ஆனால், அவர்கள் குடும்பத்தினரின் துக்கத்துடன் இருக்கும். இந்த விபத்து அரசுக்கு மிகவும் சீரியஸ் ஆனது. காயம் அடைந்து சிகிச்சை மேற்கொண்டு வரும் நபர்களை அரசு கை விட்டுவிடாது. ஒவ்வொரு வகையிலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்டால் யாராக இருந்தாலும் தப்பிடவிட முடியாது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- சரக்கு ரெயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதி பெட்டிகள் தடம் புரண்டது
- விபத்தில் இதுவரை 260 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று மூன்று ரெயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதுவரை 261 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 900 பேர் காயமடைந்துள்ளனர். ஒரே இடத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளானது பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இருந்தாலும் எதிர்க்கட்சிகள், அரசியல் கட்சிகள் தற்போது இதுகுறித்து விமர்சனம் செய்யவில்லை.
மீட்பு பணி நிறைவடைந்து ரெயில் தண்டவாளங்கள் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. ரெயில் விபத்து குறித்து உயர்மட்ட குழு விசாரிக்கும் என இந்திய ரெயில்வே துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
தற்போது தொடக்க கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட விசாரணையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் லைன் மாறி சென்றதுதான் இந்த கோர விபத்துக்கு முக்கிய காரணம் என தகவல் தெரிவிப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பஹனாகா பஜார் ரெயில் நிலையம் அருகே நான்கு ரெயில் தண்டவாளங்கள் உள்ளன. அதில் ஒன்று லூப் லைன். லூப் லைன் ரெயில் நிலையம் அருகே மற்ற ரெயில்களுக்கு வழி விடவும், ரெயில்கள் எளிதாக சென்று வருவதற்காகவும் அமைக்கப்படும். அந்த லூப் லைன் சுமார் 750 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும்.
அந்த லூப் லைனில்தான் சரக்கு ரெயில் நின்று கொண்டிருந்துள்ளது. மெயின் லைனில் வரக்கூடிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் திடீரென லூப் லைன் வழியாக சென்றுள்ளது. கோரமண்டல் ரெயில் 128 கி.மீட்டர் வேகத்தில் எதிர்பாராத விதமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் மேல் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் தடம் புரண்ட பெட்டிகள் மற்றொரு தண்டவாளத்தில் சரிந்து விழுந்ததால் அந்த வழியாக 116 கி.மீட்டர் வேகத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட கோரமண்டல் ரெயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால்தான் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து ரெயில்வே துறையில் உள்ள அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. முழுமையான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நாசவேலைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதுவரை அதிகாரிகள் யாரும் பேசவில்லை.
முழு விசாரணை முடிந்த பின்னர்தான் இதுகுறித்து தகவல் வெளிப்படையாக தெரியவரும்.
கவாச் என்ற ரெயில் மோதல் தவிர்ப்பு சிஸ்டம் அந்த வழிப்பாதையில் இல்லை என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
- நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்ததால் மருத்துவமனையில் கூட்டம் அலைமோதல்
- 2000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த பயணிகளுக்கு உதவி முன்வந்தனர்
ஒடிசாவில் நடைபெற்ற ரெயில் விபத்து பாலசோர் மாவட்டத்திற்கு உட்பட்ட பஹனாகா பகுதியில் நடைபெற்றது. இதனால் காயம் அடைந்த 900-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குறிப்பாக பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து அறிந்ததும் மருத்துவமனை நிர்வாகிகள் படுக்கை எண்ணிக்கைகளை அதிரிகத்தனர். இருந்தாலும் ஒரே நேரத்தில் ரத்தம் சொட்ட சொட்ட, கை கால்கள் இழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதால் மருத்துவமனை போர்க்கள பகுதி போன்று காட்சியளித்தது.
மேலும், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலத்தை சேர்ந்தவர்கள் பயணம் செய்ததால் மொழி தெரியாத காரணத்தினால் மருத்துவ உதவி செய்வதில் கம்யூனிகேசன் பிரச்சினை ஏற்பட்டது.
இந்த அனுபவம் குறித்து மருத்துவமனையின் கூடுதல் மாவட்ட மருத்துவ அதிகாரி மிருதுன்ஜாய் மிஷ்ரா கூறியதாவது ''நான் பல ஆண்டுகளாக வேலை பார்த்திருக்கிறேன். எனது வாழ்நாளில் இதுபோன்ற பரபரப்பான, அலறல் சத்தத்துடன் கூடிய நிகழ்வை பார்த்தது கிடையாது.
திடீரென 251 பேர் காயத்துடன் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டனர். போதுமான படுக்கைகள் இல்லை. மருத்துவ ஊழியரகள் இரவு பகலாக முதலுதவி அளித்தனர். ஐந்தாறு பயணிகளை பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்தோம். தற்போது 60 பயணிகள் படுக்கையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிறு காயம் அடைந்தவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உதவி செய்த அனைவருக்கும் நன்றி. இது வாழ்நாள் அனுபவமாக இருக்கும். தற்போது எல்லாம் சகஜ நிலைக்கு வந்துள்ளது.
பாலசோர் மருத்துவமனைக்கு முன்பு சுமார் 2000 பேர் கூடினர். அவர்கள் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்ததுடன், ரத்த தானமும் வழங்கினர்.
- ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய மந்திரிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து விபத்து நடைபெற்ற பகுதிக்கு ஹெலிகாப்டரில் வந்தடைந்தார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. இந்த கோர விபத்தில் 17 பெட்டிகள் தடம்புரண்டன. விபத்தில் 261 பேர் பலியாகியுள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய மந்திரிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கோர விபத்து எப்படி நடந்தது? மீட்பு மற்றும் மீட்கப்பட்டவர்களின் நிலை, மீட்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நிவாரண விவரங்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் ஆலோசனையில் கலந்து கொண்டனர். ரெயில் விபத்து குறித்து பெண் அதிகாரி ஒருவர் மோடியிடம் விளக்கினார்.
இந்த நிலையில் ரெயில் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து விபத்து நடைபெற்ற பகுதிக்கு ஹெலிகாப்டரில் வந்தடைந்தார்.
விபத்து நடந்த பஹானாகா பஜார் ரெயில் நிலைய பகுதியை பிரதமர் மோடி பார்வையிட்டார். பிரதமர் மோடியுடன் ரெயில்வே அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கிருந்து கட்டாக் மருத்துவமனைக்கு செல்லும் பிரதமர் அங்கு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
- முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்தவர்களின் பெயர் விபரம் ரெயில்வேயில் இருக்கும்.
- ஒடிசா ரெயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இருந்தவர்கள் தான் அதிகமாக இறந்துள்ளார்கள்.
ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் பெயர் விபரம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பது பற்றி ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்தவர்களின் பெயர் விபரம் ரெயில்வேயில் இருக்கும். எனவே எளிதில் கண்டு பிடித்து விடலாம்.
ஆனால் ஒடிசா ரெயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இருந்தவர்கள் தான் அதிகமாக இறந்துள்ளார்கள். அவர்கள் பெயர் விபரம் ரெயில்வேயில் இருக்காது. எனவே தான் விபரம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பலரது உடல்கள் உறவினர்கள் அடையாளம் காட்டினால் தான் தெரிய வரும் என்றனர்.
- ஒடிசாவில் கட்டாக் மருத்துவமனையில் தமிழக அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தினர்.
- ஒடிசா ரெயில் விபத்தில் இறந்த 237 பேரில் 70 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. இந்த கோர விபத்தில் 17 பெட்டிகள் தடம்புரண்டன.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒடிசாவில் கட்டாக் மருத்துவமனையில் தமிழக அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தினர்.
ஒடிசா ரெயில் விபத்தில் இறந்த 237 பேரில் 70 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட 70 பேரில் யாரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இன்னும் 167 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என தெரிய வந்துள்ளது.
பாலசூரில் சிகிச்சை பெறுபவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.
- விபத்து குறித்து தகவலறிந்ததும் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளூர் மக்கள் துணையுடன் மீட்புப் பணியை தொடங்கினர்.
- சுமார் 900 பயணிகள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு கோர மண்டல் மற்றும் பெங்களூரு ரெயில்களின் பெட்டிகள் அருகில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயிலுடன் மோதி நொறுங்கின. இவ்வாறு 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதியதால் அந்த பகுதி முழுவதுமே அதிர்ந்தது. சில நிமிடங்களுக்குள் அரங்கேறிய இந்த விபத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவலறிந்ததும் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளூர் மக்கள் துணையுடன் மீட்புப் பணியை தொடங்கினர்.
மீட்கப்பட்ட பயணிகள் பாலசோர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சோரோ கோபால்பூர் மற்றும் காந்தா படா பகுதிகளில் அமைந்து உள்ள மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேரம் செல்ல செல்ல காயம் அடைந்து வந்த பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.
இந்த நிலையில் இன்று காலை ரெயில்கள் விபத்தில் 238 பயணிகள் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இன்று மதியம் 12 மணியளவில் தென்கிழக்கு ரெயில்வே அதிகாரிகள் நிருபர்களிடம் கூறுகையில், '3 ரெயில்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 261 ஆக உயர்ந்துள்ளது' என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே சுமார் 900 பயணிகள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 650 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தென்கிழக்கு ரெயில்வே செய்தி தொடர்பாளர் ஆதித்ய சவுத்ரி தெரிவித்தார்.
2-வது நாளாக இன்று காலை மீட்பு பணி தீவிரமாக நடந்தது. 11 மணிக்கு அது நிறைவு பெற்றது. அதன்பிறகு அங்கு சீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இன்று காலையில் தான் கடைசி ரெயில் பெட்டி துண்டிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடந்தன. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
- மீட்பு பணியில் ஒடிசா அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என ஏற்கனவே மம்தா அறிவிப்பு
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்
மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளான பகுதிக்குச் சென்று பார்வையிட்டார் மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. அதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
இந்த நூற்றாண்டின் இந்தியாவில் மிகப்பெரிய ரெயில் விபத்து இது. பலியானோர் எண்ணிக்கை உயரலாம். ரெயில்வே துறை உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவாக அறிவித்துள்ளது.
நாங்கள் மேற்கு வங்காள மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க இருக்கிறோம். வேலை முடியும் வரை மேற்கு வங்காள மக்கள் ரெயில்வே மற்றும் ஒடிசா அரசுடன் இணைந்து வேலை செய்வார்கள்'' எனத் தெரிவித்தார்.
இந்த விபத்தில் இரண்டு ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டன. இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
மீட்பு பணி நிறைவடைந்த நிலையில், தற்போது தண்டவாளம் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.






