என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    ஒன்பதாம் மாதம் குழந்தை கீழ்நோக்கி இறங்கி வருவதை அடிக்கடி தாயால் உணரமுடியும். குழந்தை தூங்கும்போது கண்களை மூடிக்கொள்ளவும், விழித்திருக்கும்போது கண்களை திறந்துகொள்ளவும் பழகிக்கொள்ளும்.
    ஒன்பதாம் மாதம் குழந்தை கீழ்நோக்கி இறங்கி வருவதை அடிக்கடி தாயால் உணரமுடியும். குழந்தை தூங்கும்போது கண்களை மூடிக்கொள்ளவும், விழித்திருக்கும்போது கண்களை திறந்துகொள்ளவும் பழகிக்கொள்ளும். இந்த தருணத்தில் குழந்தையிடம் தாய் பேசத்தொடங்கவேண்டும்.

    குழந்தையின் தலை கீழே இடுப்பு பகுதிக்கு இறங்கிவருவதால் வயிற்றில் பாரம் குறைந்ததுபோல் தோன்றும்.

    கர்ப்பப்பையில் அழுத்தம் தோன்றுவதால் அடிக்கடி முதுகுவலி ஏற்படும். அவ்வப்போது சிறுநீர் கழிக்கும் எண்ணமும் உருவாகும்.

    குழந்தையின் அசைவுகள் கடந்த மாதத்தைவிட குறைந்ததுபோல் தோன்றும்.

    காலில் வீக்கம் ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம்தேவை.

    பிரசவகாலம் நெருங்குவதால் தூக்கத்தில் கால்களில் தசை இழுத்துப் பிடித்து தொந் தரவு தரும்.

    34-வது வாரத்தை கடக்கும்போது குழந்தையின் சுவாச கட்டமைப்புகள் மேம்பட்டு, முழுவளர்ச்சி பெற்று செயல்படத் தொடங்கும்.

    குழந்தையை சுற்றியிருக்கும் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதால், குழந்தை சிவப்பில் இருந்து ரோஸ் நிறத்திற்கு மாறும்.

    குழந்தை தூக்கத்தில் கண்களை மூடியபடியும், விழிப்பில் கண்களை திறந்தபடியும் காட்சிதரும்.

    குழந்தையின் நீளம் 47 செ.மீ. ஆகவும், எடை 2.7 கிலோவாகவும் இருக்கும்.

    ஒன்பதாம் மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்துவிட்டால் அதற்கு சுவாச தடை ஏற்படும். முகம் மற்றும் கை கால்களில் நீல நிறம் காணப்படும். சிசுக்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து இத்தகைய குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கவேண்டியதிருக்கும்.

    ஒன்பதாம் மாதத்தில் பிரசவத்தை பற்றிய விஞ்ஞானபூர்வமான அறிவு தாய்மார்களுக்கு தேவை. பிரசவ வலி எப்படி இருக்கும்- பிரசவம் எப்படி நடக்கும்- குழந்தை வெளியேவரும்போது தாய்க்கு ஏற்படும் காயங்கள் பற்றி எல்லாம் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும். மகப்பேறு டாக்டரிடம் விளக்கம் கேட்டு அனைத்து சந்தேகங்களுக்கும் விடை தேடிக்கொள்ளவேண்டும். இது பற்றி சில மருத்துவமனைகளில் வகுப்புகள் நடத்தி, கணவன்- மனைவிக்கு புரியவைப்பார்கள்.

    பிரசவத்தை பற்றி அச்சமூட்டக்கூடிய விஷயங்களை யாராவது சொன்னால் அதை காதுகொடுத்து கேட்கவேண்டாம். அனுபவம் கலந்த ஆலோசனை என்ற பெயரில் இந்த மாதிரி பேச வருபவர்களை தவிர்த்துவிடுங்கள். பயம், கவலை போன்ற எதுவும் இன்றி மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள்.

    குழந்தையை வரவேற்க தேவையான ஏற்பாடுகளை இந்த மாதத்தில் இருந்தே செய்யத் தொடங்கவேண்டும்.

    பிரசவ நேரத்தில் கைகொடுக்கும் சுவாச பயிற்சிகளை இந்த மாதத்தில் பெற்றுக்கொள்வது நல்லது.

    இடுப்பு பகுதியில் அதிக வலி ஏற்படும். பிரசவத்திற்காக உடல் தயாராகுவதுதான் அந்த வலிக்கான காரணமாகும்.

    குழந்தைக்கு பால் புகட்ட மார்பகத்தை தயார்ப்படுத்தவேண்டும். ‘நிப்பிள் மசாஜ்’ செய்து மார்பக காம்புகளை வெளியே கொண்டுவர முயற்சிக்கவேண்டும்.

    தினமும் குழந்தையோடு சில நிமிடங்கள் பேசவேண்டும். குழந்தைக்காகவும், உங்களுக்காகவும் நல்ல பாடல்களையும் கேட்கவேண்டும்.

    பிரசவ நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான பொருட்களை வகைப்படுத்தி ஒரு பெட்டியில் பாதுகாத்திடுங்கள். அது தாய்க்கும், குழந்தைக்கும் அத்தியாவசியமானதாக இருக்கவேண்டும்.

    பிரவசத்திற்கு முந் தைய மாதம் என்பதால் அவ்வப்போது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடக்கும்போதோ, உடற்பயிற்சி செய்யும்போதோ சுவாச தடை, நெஞ்சு வலி, தசைப்பிடித்தம், உறுப்பில் இருந்து திரவம் வெளியேறுதல் போன்றவை இருந்தால் உடனே செயல்பாட்டை நிறுத்திவிடவேண்டும். மருத்துவ உதவியும் பெறவேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பும்- பின்பும் எளிதாக ஜீரணமாகும் உணவை சிறிதளவு உண்ணவேண்டும்.

    இரண்டு வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது டாக்டர் பரிந்துரைக்கும் நாட்களிலோ வழக்கமான பரிசோதனைக்காக செல்வது அவசியம். குழந்தையின் தலை எங்கே இருக்கிறது என்பதை டாக்டரால் தொட்டுப்பார்த்து தெரிந்துகொள்ள முடியும். ரத்த அழுத்தம், உடல் எடை போன்றவைகளையும் பரிசோதிப்பது அவசியம்.

    பிரசவத்திற்கு உடல் தயாராகும் இந்த காலகட்டத்தில் உடலுக்கு முழுமையான சத்துணவு அவசியம். தயாமின் நிறைந்த உணவுகள் உடலுக்கு அதிக சக்தியை தரும். வெள்ளை இறைச்சி, பிராக்கோலி, காய்கறிகள், கீரைகள், தானியங்கள் போன்றவைகள் உணவில் சேர்க்கப்படவேண்டும். இரும்புசத்தும் அவசியம்.
    எட்டாவது மாதத்தில் கர்ப்பப்பை பெரிதாகிவிடுவதால் வயிற்றுப் பகுதியில் சொறி உணர்வு தோன்றும். மலச்சிக்கலும், அஜீரணமும் அதிக தொந்தரவு தரும்.
    எட்டாவது மாதத்தில் கர்ப்பப்பை பெரிதாகிவிடுவதால் வயிற்றுப் பகுதியில் சொறி உணர்வு தோன்றும். மலச்சிக்கலும், அஜீரணமும் அதிக தொந்தரவு தரும். ரத்தப்போக்கு ஏற்படுதல் மற்றும் குறைப்பிரவசத்தில் குழந்தை பிறப்பது போன்ற சூழல்கள் இருப்பதால் மிகுந்த கவனம் அவசியம். குழந்தை கண் இமைகளை அடிக்கடி மூடித்திறக்கும். சிறுநீர் கழிக்கவும் செய்யும்.

    * அடிக்கடி வயிறு இழுத்துச் சுருங்குவதுபோல் தோன்றும். இந்த அவஸ் தைக்கு ‘பிராக்ஸ்டன் ஹிக்ஸ் கண்ட்ராக்‌ஷன்’ என்று பெயர்.

    * கர்ப்பப்பை வளர்ந்து தொப்புளுக்கு மேல் பெரிதாகிவிடுவதால் சில நேரங் களில் மூச்சுவிட சிரமம் ஏற்படுவதுபோல் தோன்றும். அவ்வப்போது நெஞ்செரிச்சலும் ஏற்படும்.

    * குழந்தை கண் இமைகளை மூடித் திறப்பதோடு, தலையையும் அங்கும் இங்குமாக அசைக்கும்.

    * மூளையில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி ஏற்படும்.

    * 29-ம் வாரத்தில் இருந்து குழந்தை தினமும் கிட்டத்தட்ட அரை லிட்டர் அளவுக்கு சிறுநீரை வெளியேற்றும்.

    * இந்த காலகட்டத்தில் 44 செ.மீ. நீளத்துடன், இரண்டு கிலோ எடையை எட்டிப்பிடித்திருக்கும்.

    * எட்டாவது மாதத்தில் அடிக்கடி குழந்தை அசையும். அவ்வப்போது தூங்கவும் செய்யும்.

    * குழந்தை வேகமாக வளருவதால் கர்ப்பப்பையில் இட நெருக்கடி தோன்றும். தலை கீழ்நோக்கி பெல்விஸ் பகுதிக்கு திரும்பும். இந்த தருணத்தில் நான்கு சதவீத குழந்தைகள் தலையை மேல்நோக்கி வைத்துக்கொண்டோ, குறுக்காக படுத்தது போன்ற நிலையிலோ காணப்படும்.

    * ஒருசிலருக்கு ரத்தப்போக்கு, நிறைமாதம் ஆகும் முன்பே பிரசவ வலி தோன்றுதல் போன்றவை ஏற்படலாம். பிறப்பு உறுப்பு வழியாக நீர் வெளியேறுவதும் உண்டு. இவை அனைத்தும் மிக நெருக்கடியான விஷயம் என்பதால் உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்த்துவிடவேண்டும்.

    * கர்ப்பப்பையின் எடை அதிகரித்துவிடுவதால் மிக கவனமாக, நிதானமாக நடக்கவேண்டும்.

    * உடலில் பல்வேறு விதமான அவஸ்தைகள் ஏற்படுவதால் கர்ப்பிணி மனதளவில் தளர்ந்த நிலைக்கு செல்லக்கூடும். இந்த நெருக்கடி அனைத்தும் தற்காலிகமானது என்றும், விரை வில் குழந்தையை பெற்றெடுக்கப்போகிறோம் என்றும் நினைத்து தாய் தனது மனதில் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் உருவாக்கிக்கொள்வது அவசியம்.

    * சத்துணவு உண்ணுதல், எளிய உடற்பயிற்சி, போதுமான ஓய்வு போன்றவை மனதுக்கு இதமளிக்கும்.

    * வழக்கம் போல் இடது பக்கம் ஒருக்களித்து படுப்பது நன்றாக தூங்க வழிவகை செய்யும்.

    * நெஞ்செரிச்சல் அதிகமாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று தலையணைகளை வைத்து தலையை நன்றாக உயர்த்திவைத்த நிலையில் ஓய்வெடுக்கவேண்டும்.

    * வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக சிரமத்தை உணர்ந்தால் லீவு எடுத்துக்கொண்டு ஓய்வில் இருப்பது நல்லது.

    * வயிறு பெரிதாகிவிடுவதால் உடற்பயிற்சியில் மிகுந்த கவனம் தேவை. மூச்சை அடக்கும் விதத்திலான பயிற்சிகளை செய்யக்கூடாது. உடலுக்கு சோர்வை ஏற்படுத்தாத பயிற்சிகளையே செய்யவேண்டும். காலையும், மாலையும் சிறிது நேரம் நடப்பது நல்லது.

    * எட்டாவது மாதத்திற்கு பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை டாக்டரை சந்திக்கவேண்டும். தேவைப்பட்டால் அவரது பரிந்துரையின்படி ரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.

    * மலச்சிக்கல் ஏற்படும் சூழ்நிலை அதிகம் இருப்பதால் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். பழங்கள், காய்கறி, கீரை வகைகளில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. நிறைய தண்ணீரும் பருகவேண்டும். தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவைகளை சாப்பிடுவதும் நல்லது.
    26-வது வாரம் குழந்தையின் முக்கியமான வளர்ச்சிக்கட்டம். அப்போது குழந்தையின் நீளம் 37 செ.மீட்டராக அதிகரித்து, எடை ஒன்று முதல் ஒன்றரை கிலோ ஆகிவிடும்.
    இந்த மாதத்தில் சோர்வு, முதுகுவலி, படுத்து தூங்குவதில் நெருக்கடி போன்றவை தோன்றும்.

    உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் மூன்று தடவை குழந்தையின் அசைவை உணர முடியும். அடிவயிறு இப்போது கால்பந்து அளவில் காணப்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு உருவாகும்.

    26-வது வாரம் குழந்தையின் முக்கியமான வளர்ச்சிக்கட்டம். அப்போது குழந்தையின் நீளம் 37 செ.மீட்டராக அதிகரித்து, எடை ஒன்று முதல் ஒன்றரை கிலோ ஆகிவிடும்.

    தூக்கமின்மை தோன்றும். அதனால் கால்களுக்கு இடையில் தலையணையை வைத்துக்கொண்டு படுக்க முயற்சிக்க வேண்டும்.

    ஏழாம் மாதத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும். நஞ்சுக்கொடி கர்ப்பப் பைக்கு கீழ் வந்தாலும் பிளடிங் தோன்றும். பிரசவ வலி தோன்றவும், குறைப்பிரசவம் உருவாகவும் அது காரணமாகிவிடும். அதனால் மிகுந்த கவனம் தேவை.

    இந்த மாதத்தில் இருந்து கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தை பற்றிய பயம், கவலை, சந்தேகங்கள் நிறைய எழும். கவலை, பயத்தை போக்கி மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

    கர்ப்பிணியை சுற்றி இருப்பவர்கள் சரியான தகவல்களையும், நம்பிக்கையையும் கொடுத்து, மனஉளைச்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

    தும்மும்போதும், இருமும் போதும் சிறுநீர் கசியும் சூழ்நிலை ஏற்படலாம்.

    முதுகுவலியும், கால் மரத்துப்போகும் நிலை யும் அவ்வப்போது ஏற்பட்டு கர்ப்பிணியை கவலைப்படுத்தும்.

    உடலில் தண்ணீரின் அளவு அதிகரிக்கும். அதனால் உடலில் அதிகமாக வியர்க்கும். அதை பற்றி கவலைப்படவேண்டியதில்லை.

    இந்த மாதத்தில் குழந்தையின் சலனம் அதிகரித்து அவ்வப்போது தாயின் தூக்கத்தைக்கெடுக்கும்.

    இந்த காலகட்டத்தில் பெண்கள் பிரசவத்தை எளிதாக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். பிரசவத்தை எளிமையாக்கவும், பிரசவத்திற்கு பிறகு உறுப்பை இறுக்கமாக்கும் நிலையை ஏற்படுத்தவும் ‘கீகல்ஸ்’ பயிற்சி சிறந்தது. உறுப்பு பகுதி இயக்கத்தை கட்டுப்படுத்துவதும், இயல்பாக்குவதும் இந்த பயிற்சி நிலையாகும். தினமும் 25 தடவை, 8 வினாடிகள் வரை உறுப்பை இறுக்கமாக்கி பின்பு தளர்த்தவேண்டும். இந்த பயிற்சியை பற்றி மகப்பேறு நிபுணரிடம் கேட்டு, முறைப்படி பின்பற்றுவது நல்லது.

    தேவைப்பட்டால் மட்டும் இந்த மாதம் ஸ்கேனிங் செய்தால் போதுமானது. மாதாந்திர பரிசோதனையை முறைப்படி தொடரவேண்டும். நெகட்டிவ் ரத்த வகையை கொண்ட கர்ப்பிணிகள் 7-ம் மாதத்திற்கும், 8-ம் மாதத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் டாக்டரின் ஆலோசனைப்படி அதற்குரிய ஊசி மருந்துகளை போட்டுக்கொள்ள வேண்டும்.

    முந்தைய மாதங்களை போன்று இப்போதும் சமச்சீரான சத்துணவுகளை உட்கொள்வது அவசியம். வைட்டமின் சி நிறைந்த உணவுகள் நல்லது. அது குழந்தையின் வளர்ச்சிக்கும், தாயின் இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் தேவை. பிராக்கோலி, ஆரஞ்சு, குடைமிளகாய், முட்டைக்கோஸ், ஸ்ட்ராபெர்ரி போன்றவைகளை சாப்பிடுவது நல்லது.

    கர்ப்பப்பை பெரிதாகிவிடுவதால் தாய்க்கு சுவாசிப்பதில் நெருக்கடியும், நெஞ்சு எரிச்சலும் தோன்றும். மார்பகங்களில் இருந்து கொலஸ்ட்ரம் என்ற பால் வெளிப்படலாம். குழந்தையின் வளர்ச்சி வேகமெடுக்கும் மாதம் இது. அதன் சுவாச கட்டமைப்புகளும், ஈரலும் நன்றாக செயல்படத் தொடங்கும். தாயின் குரலை குழந்தையால் அடையாளங்கண்டுவிட முடியும். சில தருணங்களில் தாயின் குரலுக்கு கட்டுப்படவும் செய்யும்.
    ஆறாம் மாதத்தில் கர்ப்பிணித் தாயின் உடல்எடை அதிகரிக்கும். தசைகள் இறுகி முறுக்கிக்கொள்வதால் அவ்வப்போது உடல் வலி ஏற்படும். தாயின் கால் மற்றும் முகத்தில் வீக்கம் தோன்றும்.
    ஆறாம் மாதத்தில் கர்ப்பிணித் தாயின் உடல்எடை அதிகரிக்கும். தசைகள் இறுகி முறுக்கிக்கொள்வதால் அவ்வப்போது உடல் வலி ஏற்படும். தாயின் கால் மற்றும் முகத்தில் வீக்கம் தோன்றும். குழந்தையின் உடலில் கொழுப்பு சேரும். குழந்தை அதிக நேரம் தூங்கும். அது வெளிப்புற சத்தத்தையும் கிரகிக்கத் தொடங்கும்.

    தாய்க்கு இந்த காலகட்டத்தில் அதிகமாக பசிக்கும். சத்துணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.

    மனநிலையில் மகிழ்ச்சிகரமான மாற்றங்கள் உருவாகும். கவலை, குழப்பமான மனநிலை மாறி, தெளிவு பிறக்கும்.

    வயிற்றின் அடிப்பாகத்தில் லேசான வலி ஏற்படும். கர்ப்பப்பையின் தசைகளின் இணைப்புகள் விரிவாக்கம் பெறுவதால் இந்த வலி தோன்றுகிறது. சிறிது நேரம் ஓய்வெடுத்தால் இந்த வலி நீங்கிவிடும்.

    உடல் எடை கூடுவதால் முதுகுவலி ஏற்படும். நடக்கும்போது குதிகால் செருப்புகளை அணிந்தால் வலி அதிகரிக்கும். அதனால் அவைகளை தவிர்ப்பது நல்லது.

    24-வது வாரத்தில் குழந்தையின் கண் இமைகள் திறக்கும். அப்போது குழந்தை 35 செ.மீ. வளர்ச்சி பெற் றிருக்கும். எடை 660 கிராம் இருக்கும்.

    ஆறாவது மாதத்தில் கர்ப்பிணிகள் படுக்கும்போது கால்களுக்கும் தலையணை வைத்துக்கொள்வது நல்லது.

    அம்மாவின் சத்தத்தையும், வெளியே எழும் குரல்களையும் குழந்தை கிரகிக்கும். பாட்டுகளை நோக்கி கவனம் திசைதிரும்பும். அதனால் இப்போது தாய்மார்கள் வயிற்றுக் குழந்தையோடு பேசத்தொடங்கவேண்டும். குழந்தை, தாயின் குரலுக்கு செவிமடுக்கும்.

    தாயின் தொப்புள் வெளியே துருத்திக்கொள்ள ஆரம்பிக்கும். அது இயற்கையானதுதான். பிரசவத்திற்கு பின்பு தொப்புள் வடிவம் இயல்புநிலையை அடைந்துவிடும்.

    மாலை நேரங்களில் கால்களில் நீர்கோர்க்கும். அதிக நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்தே வேலைபார்க்க வேண்டியிருப்பவர்கள் கால்களை சற்று மேல் நோக்கி தூக்கிவைத்துக்கொள்ளவேண்டும்.

    ஒரு மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் உட்காரக்கூடாது. அவ்வப்போது எழுந்து சில நிமிடங்கள் நடந்துவிட்டு மீண்டும் உட்காரவேண்டும்.

    பாதுகாப்பான தாம்பத்ய உறவு சுகமான அனுபவமாக தோன்றலாம். இந்த தருணத்தில் உறுப்பில் அதிக அளவில் லூப்ரிகேஷன் திரவம் சுரப்பது அதற்கான காரணமாகும்.

    கால்களுக்கு கர்ப்பிணிகள் போது மான அளவு ஓய்வுகொடுக்கவேண்டும். சிலருக்கு ‘வெரிகோஸ்வெய்ன்’ போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

    கர்ப்பிணியின் வயிற்றில் கை வைத்து பார்த்தால் குழந்தையின் சலனம் தெரியும்.

    சர்க்கரை நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளவேண்டியது அவசியம். சர்க்கரை நோய் இருப்பதாக அறிந்தால், அதற்கான சிகிச்சையை கவனமாக தொடரவேண்டும்.

    பயிற்சியாளரின் உதவியோடு உடற்பயிற்சி, யோகா சனம் போன்றவைகளை மிதமாக செய்யலாம்.

    நன்றாக பசி எடுப்பதால் அளவுக்கு அதிகமாக எதையும் சாப்பிட்டுவிடக்கூடாது. சமச்சீரான சத்துணவை மட்டுமே அளவோடு சாப்பிடவேண்டும். மாக்னீஷியம் சத்து நிறைந்த உணவு கர்ப்பிணிக்கு மிக அவசியம். உணவினை சக்தியாக மாற்றுவதற்கும், உடல் சீதோஷ்ணநிலையை சீராக வைத் திருக்கவும் இந்த சத்து அவசியம். பச்சை பட்டாணி, பயறு வகைகளில் மாக்னீஷியம் சத்து இருக்கிறது.
    கர்ப்பத்தின் நான்காம் மாதத்தில் கர்ப்பிணிக்கு புதிய நம்பிக்கை பிறக்கும். அபார்ஷன் ஆகிவிடுமோ என்ற பயம் இந்த மாதத்தில் நீங்கிவிடுவதுதான் அதற்கான காரணம்.
    கர்ப்பத்தின் நான்காம் மாதத்தில் கர்ப்பிணிக்கு புதிய நம்பிக்கை பிறக்கும். அபார்ஷன் ஆகிவிடுமோ என்ற பயம் இந்த மாதத்தில் நீங்கிவிடுவதுதான் அதற்கான காரணம். குமட்டலும், வாந்தியும் குறைந்துபோகும். கர்ப்பிணியின் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். இந்த மாதத்தில் குழந்தையின் உருவம் முழுவடிவம் பெற்றுவிடும். குழந்தை விரல் சப்பவும் தொடங்கும். பெரும்பாலான உடல் உபாதைகள் குறைந்துவிடுவதால் கர்ப்பிணிகள் முகத்தில் மகிழ்ச்சி பூக்கும்.

    * அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வும் நான்காம் மாதத்தில் குறையும்.

    * குறிப்பிட்ட உணவுகள் மீதுள்ள வெறுப்பு நீங்கும். அடிவயிறு பெரிதாகிக்கொண்டிருப்பதை கர்ப்பிணிகளால் உணரமுடியும்.

    * 14-வது வாரம் ஆகும்போது சிசு சற்று பெரிய கொய்யா பழம் அளவுக்கு வளர்ந்திருக்கும்.

    * கர்ப்பிணிகளின் மார்பகங்களும் பெரிதாகியிருக்கும்.

    * தொப்புளில் இருந்து கீழ்நோக்கி தெரியும் கோடு கறுப்பாகத் தோன்றத் தொடங்கும்.

    * சிசுவின் உடல் உறுப்புகள் முழு வடிவம் பெற்றுவிடுவதால், சிசுவின் முக பாவங்களை ஸ்கேனில் காணமுடியும்.

    * சிசு 11 செ.மீ. நீளமும், 140 கிராம் எடையும் கொண்டிருக்கும்.

    * 15 முதல் 18-வது வாரங்களில் ஸ்கேனிங் பரிசோதனையில் டவுன் சின்ட்ரோம், நியூரல் டியூப் பாதிப்புகள் இருந்தால் கண்டறியலாம்.

    * நெகட்டிவ் குரூப் ரத்த பிரிவைக்கொண்ட கர்ப்பிணிகளுக்கு இந்த 4-வது மாதத்தில்கூட அபார்ஷன் ஆகும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவைப்படும்.

    * சிசுவை சுற்றியிருக்கும் நீரை எடுத்து மரபணுரீதியான பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

    * இரும்பு மற்றும் கால்சிய சத்து மாத்திரைகளை டாக்டரின் ஆலோசனைபடி உட்கொள்ளவேண்டும்.

    * இடுப்பு எலும்பின் இணைப்புகளில் நெகிழ்வுகள் ஏற்படுவதால் சில நேரங்களில் அடிவயிற்று வலியும், அவஸ்தையும் ஏற்படலாம்.

    * டாக்டரின் ஆலோசனைபடி உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    * நான்காவது மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு நன்றாக வியர்க்கும். அதனால் தினமும் இருமுறை குளிப்பது நல்லது. உடலை சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ளவேண்டும்.

    * இந்த காலகட்டத்தில் அடிக்கடி பதற்றமும், மனஅழுத்தமும் ஏற்படும். அவைகளை கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்த பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு யோகா செய்யலாம். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மனஅழுத்த பாதிப்புகள் சிசுவையும் தாக்கும்.

    * கர்ப்பிணிக்கு அதிக ரத்தம் தேவைப்படுவதால், உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். அதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும். இதயத் துடிப்பும் அதிகரிக்கலாம்.

    * இந்த மாதத்திலிருந்து தாம்பத்ய உறவு மேற்கொண்டால், கர்ப்பிணி கீழே படுக்கும் நிலையில் உறவை அமைத்துக்கொள்ளக்கூடாது.

    * வீட்டு வேலைகளை செய்துகொண்டிருக்கவேண்டும். உடற்பயிற்சிகளும் மேற்கொண்டால் கர்ப்பிணிகளுக்கு கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும். தரையில் படுத்த நிலையில் செய்யும் உடற்பயிற்சிகளை இந்த மாதத்தில் தவிர்த்துவிடவேண்டும். தினமும் அரை மணி நேரம் சாதாரண நிலையில் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    * வழக்கமான உடல் பரிசோதனையில் எடை, ரத்த அழுத்தம் போன்றவைகளை கண்காணிக்கவேண்டும். டெட்டனஸ் தடுப்பூசியின் முதல் ‘டோஸ்’ எடுத்துக்கொள்ளவேண்டும்.

    * மாமிச உணவுகளை உட்கொள்ளலாம். முட்டை, பால், பாலாடைக்கட்டி, மீன், பயறுவகைகள், பீன்ஸ் போன்றவைகளை போதுமான அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
    கர்ப்பிணிகளுக்கு இரண்டாம் மாதத்தில் இருந்தது போன்று இப்போதும் சோர்வு, தலைச்சுற்றல் போன்றவை தோன்றும். முகம் பூசி மெழுகினாற் போன்று அழகாக ஜொலிக்கத் தொடங்கும்.
    கர்ப்பிணிகளுக்கு இரண்டாம் மாதத்தில் இருந்தது போன்று இப்போதும் சோர்வு, தலைச்சுற்றல் போன்றவை தோன்றும். முகம் பூசி மெழுகினாற் போன்று அழகாக ஜொலிக்கத் தொடங்கும். முகத்திலும், உடல்பகுதிகளிலும் சின்னச்சின்ன பருக்கள் சிலருக்கு உருவாகும்.

    * இடுப்பு பெரிதாகும். மார்பக அளவும் அதிகரிக்கும். அடிக்கடி பசி உணர்வு தோன்றும். அவ்வப்போது சிறுநீர் கழிக்கும் நிலை உருவாகும். எப்போதாவது தலைவலியும் வந்துபோகும்.

    * சிசு இந்த 9 முதல் 12-வது வாரத்தில் (அதாவது மூன்றாவது மாதத்தில்) உருவம்கொள்ளத் தொடங்குகிறது. நரம்புகட்டமைப்புகளுக்கு ரத்த ஓட்டம் முழுமையாக நடைபெற ஆரம்பிக்கும்.

    * மூன்றாம் மாதத்தில் உள் இனப்பெருக்க உறுப்புகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையும். இந்த காலகட்டத்தில் சிசு 6.7 செ.மீ. நீளமும் 23 கிராம் எடையும் கொண்டிருக்கும்.

    * மூன்றாவது மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு புரோஜஸ்ட்ரான் ஹார்மோன் அதிகம் சுரக்கும். அதனால் மலச்சிக்கல் ஏற்படலாம். அந்த சிக்கலைத் தவிர்க்க நார்ச்சத்து அடங்கிய உணவினை போதுமான அளவு சாப்பிடவேண்டும். இந்த மாதத்திலும் போலிக் ஆசிட் மாத்திரை தினமும் உட்கொள்வது அவசியம்.

    * ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறை வாக இருந்தால் டாக்டரின் ஆலோசனையின்படி இரும்பு சத்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * 10-வது வாரம் ஆன பின்பு ஸ்கேன் செய்து பார்த்தால் வயிற்றில் இரட்டைக் குழந்தை இருந்தால் தெரிந்துவிடும். கர்ப்பப்பையின் அளவும் அதிகரித்திருக்கும்.

    * மூன்றாவது மாதத்திலும் வாந்தி இருந்துகொண்டிருந்தால், காலையில் விழித்ததும் ரஸ்க், பிஸ்கெட் போன்ற உலர்ந்த வகை உணவுகளை உட்கொள்வது நல்லது. இவைகளை சாப்பிட்டால் குமட்டல் நீங்கும். உடலுக்கு தேவையான கலோரியும் கிடைக்கும். வாந்தி உணர்வு ஏற்படும்போது கட்டாயத்திற்காக எதையும் சாப்பிட முயற்சிக்கக்கூடாது. உடலில் எதுவும் தங்காத அளவுக்கு தொடர்ந்து வாந்தி ஏற்பட்டுக் கொண்டிருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறவேண்டும்.

    * மூன்றாவது மாதத்தில் போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டும். கேரட், மாங்காய், வெண்ணெய், முட்டை, இனிப்புக்கிழங்கு, பழ வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். வைட்டமின்கள் ஆரோக்கியமான சருமம் மற்றும் பார்வைத்திறனுக்கு தேவை. சிசுவின் எலும்பு வளர்ச்சியையும் துரிதமாக்கும். சிசுவின் ஈறு மற்றும் பல் வளர்ச்சிக்கும் துணைபுரியும்.

    * கர்ப்பிணி இந்த தருணத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. அதனால் முதுகுவலி, தசைப்பிடித்தல், உடலில் நீர்போடுதல், மலச்சிக்கல் போன்றவை நீங்கும். முதல் மூன்று மாதங்களில் தரையில் படுத்து செய்யக்கூடிய பயிற்சிகளையும் தொடரலாம்.

    * இந்த காலகட்டத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, எய்ட்ஸ், மஞ்சள்காமாலை, சிபிலிஸ் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும். உடல் எடையை பரிசோதிப்பதும் அவசியம்.
    இரண்டாவது மாதத்தில் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு ‘மார்னிங் சிக்னெஸ்’ எனப்படும் காலைநேர சோர்வு ஏற்படும். வாந்தி, வயிற்றுவலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு போன்றவை தோன்றும்.
    இரண்டாவது மாதத்தில் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு ‘மார்னிங் சிக்னெஸ்’ எனப்படும் காலைநேர சோர்வு ஏற்படும். வாந்தி, வயிற்றுவலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு போன்றவை தோன்றும்.

    இந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட சில உணவுகளின் மீது வெறுப்பும், சில உணவுகளின் மீது ஈர்ப்பும் ஏற்படும். வாந்தியால் சிலருக்கு உடல் எடை குறையும். உடல்எடை சிலருக்கு அதிகரிக்கவும் செய்யும்.

    தலைவலி அவ்வப்போது தோன்றும்.

    மார்பகங்களின் எடை அதிகரிக்கத் தொடங்கும்.

    கர்ப்பிணிகளில் சிலரது சருமம் நன்றாக ஜொலிக்கும். சிலருக்கு முகத்தில் பருக்கள் தோன்றலாம்.

    ஆறாவது வாரம் ஆகும்போது சிசுவின் இதயத் துடிப்பை கண்டறியலாம். அப்போது 140-150 என்ற கணக்கில் இதயத்துடிப்பு இருந்துகொண்டிருக்கும். சிசுவில் ரத்த ஓட்டம் தொடங்கும். நரம்புகள் வளரும்.

    எட்டு வாரங்கள் ஆகும்போது சிசு ஆரஞ்சு பழ அளவில் வளர்ந்திருக்கும். சிசுவின் மூளை, நரம்பு மண்டலம், இதய தசைகள், எலும்புகள் உருவாகத் தொடங்கும்.

    இரண்டு மாதம் கொண்ட சிசு 2.5 செ.மீ. நீளமாக இருக்கும்.

    இந்த இரண்டாம் மாதத்தில்தான் பெரும்பாலானவர்கள் தாங்கள் கர்ப்பமாகியிருப்பதை உணர்கிறார்கள். இந்த காலகட்டத்தில் ‘எக்டோபிக் பிரெக்னன்சி’ என்பது குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. கருப் பைக்கு வெளியே கரு வளருவதே இந்த பாதிப்பு. இதில் 50 சதவீதம் அளவுக்கு ‘டியூபல் பிரெக்னன்சி’ உருவாகிறது. அதாவது கருக்குழாயிலே கரு தங்கி வளர்ந்துவிடும்.

    அப்போது கரு வளர்ச்சியால் கருக்குழாய் வெடித்துவிட்டால் ரத்தப்போக்கு, அதிக வயிற்று வலி, ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து நினைவிழப்பு உருவாகுதல் போன்றவை ஏற்படும். கர்ப்பிணியை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உள்ளாக்காவிட்டால் இறப்புகூட ஏற்படலாம்.

    இரண்டாவது மாதத்தில் கர்ப்பிணிகள் மிக கவனமாக இருக்கவேண்டும். அலட்சியத்தால் ஒருவேளை கரு கலையும் சூழல் உருவாகும். இரண்டாம் மாதத்தில்தான் பெரும்பாலானவர்கள் அபார்ஷனால் பாதிக்கப்படுகிறார்கள்.

    இரண்டாவது மாதத்தில் கர்ப்பிணிகள் பயணம் மேற்கொள்ளலாம்தான். ஆனால் சோர்வுதரக்கூடிய, உடலை குலுக்கக்கூடிய பயணம் மேற்கொள்ளக்கூடாது. இருசக்கர வாகன பயணம், ஆட்டோ பயணங்களை தவிர்த்துவிடலாம். பாதுகாப்பான முறையில் நீண்ட தூர பயணம் மேற்கொண்டாலும் இடைஇடையே ஓய்வு மிக அவசியம்.

    ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள், அதனை நிறுத்தவேண்டியதில்லை. ஆனால் ஜிம் பயிற்சியாளரிடம் தான் கர்ப்பிணி என்பதை கூறிவிடவேண்டும். ஏற்கனவே அபார்ஷன் ஆகியிருந்தால் ஜிம் பயிற்சிக்கு செல்லாமல் தினமும் சிறிது நேரம் நடந்தால்போதும்.

    கர்ப்பத்தின் இரண்டாவது மாதத்தில் இடைவெளிவிட்டு அவ்வப்போது குறைந்த அளவில் சாப்பிடவேண்டும். தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் பருகவேண்டும். உடலுக்கு தினமும் 5 மி.கி. போலிக் ஆசிட் தேவை. மார்னிங் சிக்னெஸ், வாந்தி போன்றவை இருந்தால் இஞ்சியை பயன்படுத்தலாம்.
    கர்ப்ப காலத்தின் முதல் காலகட்டத்தில் பெரிய அளவில் கர்ப்பிணியின் உடலில் மாற்றங்கள் உருவாகாது என்றாலும், சிசு நான்கு வாரத்தை அடைந்துவிடும்போது குமட்டல், வாந்தி, சோர்வு போன்றவை ஏற்படலாம்.
    கர்ப்ப காலத்தின் முதல் மாதம் மிகவும் கவனிக்கத்தகுந்தது. வழக்கமான மாதவிலக்கு நின்றுபோகும் இந்த காலகட்டத்தில் பெரிய அளவில் கர்ப்பிணியின் உடலில் மாற்றங்கள் உருவாகாது என்றாலும், சிசு நான்கு வாரத்தை அடைந்துவிடும்போது குமட்டல், வாந்தி, சோர்வு போன்றவை ஏற்படலாம்.

    மாதவிலக்கின் முதல் நாள் முதல் கர்ப்பகாலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. முதல் மாதம் என்பது, மாத விலக்கு சுழற்சியின் முதல் நாளில் இருந்து 28-வது நாள் வரையிலான காலகட்டமாகும். சிசு வளர்ச்சி நான்கு வாரங்களை எட்டும்போது கர்ப்பிணியின் மார்பகங்கள் அதிக அளவில் மென்மையாகும்.

    மார்பு காம்புகளை சுற்றி கறுப்பு நிறம் தோன்றும். கருப்பை வளரத் தொடங்குவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வுதோன்றும். எச்.சி.ஜி. ஹார்மோன் சுரக்கும் அளவு அதிகரிப்பதால் குமட்டல், வாந்தி, சோர்வு, தலைச்சுற்றல், மார்பகங் களில் வலி போன்றவை சிலருக்கு ஏற்படலாம்.

    கருவாக்கம் முதலில் கருக்குழாய்களில் நடக்கும். கரு, ஆறு நாட்கள் ஆன பின்பு கருப்பையை அடைந்து, கருப்பை சுவர்களில் பற்றிப்பிடித்துக்கொள்ளும்.

    சிசு கருப்பையை பற்றி பிடிக்கும்போது சிறிதளவு ரத்தப்போக்கு ஏற்படும். இதை பெரும்பாலான கர்ப்பிணிகள் மாதவிலக்கு என்று தவறாக புரிந்துகொள்வார்கள்.

    இந்த காலகட்டத்தில் சிசுவின் திசுக்கள் பல்கி பெருகிக்கொண்டிருக்கும். வெளிப்பகுதி திசுக்கள் நஞ்சுக்கொடியாக உருவாகும். அதில் இருந்து எச்.சி.ஜி. ஹார்மோன் உருவாகி ரத்தத்தில் கலக்கும். பிரசவம் முடிந்து இரண்டு வாரங்கள் ஆனதும் அதன் சுரப்பு அடியோடு நின்றுபோகும்.

    முதல் மாதத்தில் வயிற்று வலி, தலைசுற்றல், அதிக வாந்தி, ரத்தப்போக்கு போன்றவை இருந்தால் உடனடியாக அவசர நிலைகருதி டாக்டரின் ஆலோசனையை பெறவேண்டும்.

    கருத்தரித்து 10-12 நாட்கள் ஆகிவிட்டால், சிறுநீரில் எச்.சி.ஜி. ஹார்மோன் அளவை கணக்கிட்டு கர்ப்பத்தை உறுதி செய்யலாம். மாதவிலக்கு கோளாறு இருப்பவர்கள் அல்டரா சவுண்ட் ஸ்கேனிங் மூலம் சிசுவின் சரியான வளர்ச்சியை கண்டறிய முடியும்.

    கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களும், கர்ப்பத்தின் இறுதி மூன்று மாதங்களும் தாம்பத்ய உறவை தவிர்ப்பது நல்லது.

    இந்த காலகட்டத்தில் உடற்பயிற்சி செய்ய விரும்பினால் டாக்டரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளவேண்டும். எடையை தூக்குவது போன்ற கடினமான வேலைகளையும், அதுபோன்ற கடினமான உடற்பயிற்சிகளையும் செய்யக்கூடாது. எளிதான உடற்பயிற்சிகளை பாதுகாப்பான முறைகளில் செய்துவரவேண்டும்.

    ஒன்றாம் மாதம் பாலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிட டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். அந்த சத்துக்கள் அடங்கிய உணவுகளை சாப்பிடுவது அதிக பலன்தரும். கீரைகள், முளைவிட்ட பயறு வகைகளில் பாலிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. தவிடு நீக்காத ரொட்டி, சிட்ரஸ் சத்து அடங்கிய பழங்கள், வாழைப்பழம் போன்றவைகளையும் சாப்பிட்டு வரலாம்.

    நான்காவது வாரத்தின் இறுதியில் சிசுவின் முகத்திற்கு வடிவம் கிடைக்கத் தொடங்கும். கண்கள் உருவாகத் தோன்றும். கழுத்து வடிவங்கொள்ளும். ரத்த தமனிகளும் தோன்றும்.

    கணவருக்கு, மனைவி கன்னத்தில் முத்தம் கொடுத்தால் அது சாதாரணமானது. காதுகளில் கடித்து முத்தம் கொடுத்தால், அடுத்து தொடர வேண்டியதற்கான அழைப்பு அது. தாம்பத்தியத்தில் முத்தம் இளங்காற்று போல் வீசுகிறது. நல்ல தாம்பத்தியத்தின் தொடக்கமாகவும் அது அமைகிறது.
    முத்தம் அன்பின் வெளிப்பாடு. தாய் கொடுக்கும் அன்பு முத்தத்தில்தான், ஒரு குழந்தையின் வாழ்க்கை தொடங்குகிறது. அன்பான மனைவி கொடுக்கும் கண்ணீர் கலந்த கடைசி முத்தத்தில், ஒரு ஆணின் வாழ்க்கை நிறைவடைகிறது. இந்த இரண்டு முத்தத்திற்கும் இடைப்பட்டதே மனிதன் வாழும் காலம். இதில் வேடிக்கை என்ன வென்றால், முதல் முத்தம் பெறும்போது, குழந்தைக்கு முத்தம் என்றால் என்னவென்று தெரியாது. அந்த முத்தத்தின் சுவையை தாய்தான் அனுபவிக் கிறாள். கடைசி முத்தம் பெறும்போதும், உயிரற்ற உடல் அந்த முத்தத்தின் சுவையை உணர நியாயம் இல்லை. பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் இருக்கும் சத்தற்ற முத்தங்கள்தான் பெரும்பாலும் சத்தங்களை எழுப்புகின்றன.

    ‘அன்பு, நம்பிக்கை ஆகிய இரண்டையும், உதடுகள் மூலமாக இன்னொருவரிடம் கொண்டுபோய் சேர்ப்பதே முத்தம்’ என்கிறது முத்த தத்துவம்.

    ‘‘நீங்கள் ஆன்மாவை பார்க்கவேண்டும் என்றால், காதலியின் உதடுகளை பார்த்தால் போதும்” என்று முத்தத்திற்கு முகவரி கொடுத்திருக்கிறார், ஆங்கிலேய கவிஞர் ஷெல்லி.

    ‘வானத்தை மலைகள் முத்தமிடுகின்றன. அலைகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து, எந்நேரமும் முத்தமிட்டபடியே ஓடிவிளையாடுகின்றன. சூரியன் பூமியை முத்தமிடுகிறது.. இப்படி இயற்கை முத்தத்தோடு இணைந் திருக்கிறது. மனிதர்களில் ஒரு ஆணும், பெண்ணும் முத்தமிடும்போது, உடலுக்கு ஏற்படும் ரசாயன மாற்றம் விவரிக்க இயலாதது. விருப்பத்தோடு முத்தமிடும்போது இருவர் உடலும் பூப்போல் மலர்கிறது. அதனால்தான் உடலில் இருக்கும் அன்பு சுரப்பிகள், முத்தங்களுக்காக ஏங்குகின்றன.

    உதடுகளின் செயல்பாடு மட்டுமே முத்தம் அல்ல. உடல் முழுவதும் ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் முத்தம் முழுமையடைகிறது. முத்தத்திற்கு பல முகங்கள் இருக்கின்றன. கணவனாக இருந்து கசப்பை மறக்கவைக்கும். காதலாக இருந்து இனிக்கவைக்கும். வேதனைப்படும்போது ‘நான் இருக்கிறேன். கவலைப்படாதே’ என்று ஆறுதல் தரும். ‘விட்டுத்தொலை. அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்’ என்ற தேறுதலைத் தரும். வலியை, விரக்தியை போக்கடிக்கும். உயிரை விடும் எண்ணத்தில் இருப்பவர்களைக்கூட ஒரு முத்தம் காப்பாற்றி விடக்கூடும். அதனால்தான் முத்தத்திற்கு எல்லோரும் முன்னுரிமை கொடுக்கிறார்கள். அதையும் வகைப்படுத்தி ‘எக்ஸ்கிமோ கிஸ்’, ‘ஸ்பைடர் மேன் கிஸ்’, ‘ஏஞ்சல் கிஸ்’, ‘பிளையிங் கிஸ்’ என்று அழகழகான பெயர்களும் சூட்டியிருக்கிறார்கள்.

    கணவருக்கு, மனைவி கன்னத்தில் முத்தம் கொடுத்தால் அது சாதாரணமானது. காதுகளில் கடித்து முத்தம் கொடுத்தால், அடுத்து தொடர வேண்டியதற்கான அழைப்பு அது. கைகளில் முத்தம் கொடுப்பது, ‘ஒருபோதும் உன்னை கைவிடமாட்டேன்’ என்று நம்பிக்கை கொடுப்பதாகும். தாம்பத்தியத்தில் முத்தம் இளங்காற்று போல் வீசுகிறது. நல்ல தாம்பத்தியத்தின் தொடக்கமாகவும் அது அமைகிறது. போகப்போக அது சூறாவளியாக வீசத் தொடங்குகிறது. வங்கியில் பணம் போடும்போது வட்டியோடு சேர்த்து கிடைக்கும் என்பதுபோல் முத்தத்திற்கும் வட்டி உண்டு. கொடுக்கும் முத்தம் வட்டியோடு சேர்ந்து வளமாக திரும்ப கிடைக்கும். அன்பு மனது நிறைய இருந்து என்ன பயன்? அதை முத்தமாக கொடுக்கும்போதுதான், அன்பு நிரூபணமாகும். முத்தம் அன்பை அதி கரிப்பதோடு வலியை குறைக்கும். மனஅழுத்தத்தை மாற்றும். உயர் இஇரத்த  அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும். இன்னும் பல வேடிக்கை வினோதங்களைச் செய்யும்.

    டெல்லியைச் சேர்ந்த பாட்டி ஒருவருக்கு, 100 வயது. தாத்தா அதையும் தாண்டிவிட்டார். அவர்களை வாழ்த்த சென்ற டாக்டர் ஒருவர், “உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன?” என்று கேட்டார். பாட்டி “முத்தம்” என்று சத்தமாக பதிலளித்தார்.

    டாக்டர் சுதாரித்துக்கொள்ள முடியாமல் தடுமாற, பாட்டியே தொடர்ந்தார். “எங்களுக்குள் இருக்கும் அன்பை, இருவரும் முத்தத்தின் மூலம் பங்குவைத்துக்கொள்வோம். அது வீட்டையே அன்பு மயமாக்கும். அன்புள்ள வீட்டில் அமைதி தவழ்ந்து விளையாடும். அமைதி இருந்தால் ஆரோக்கியம் கிடைக்கும். ஆரோக்கியம் கிடைத்தால் ஆயுள் அதிகரிக்கும்” என்று விளக்கம் அளித்தார்.

    அந்த டாக்டருக்கு புது மருந்து கிடைத்தது. உங்களுக்கு?
    கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த விஷயங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் அவை தாயையும் வயிற்றில் இருக்கும் சேயையும் பாதிக்கும்.
    கருவுற்ற 10 - 16 வாரங்களில் கரு சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம். எனவே பயம், பதற்றம், கோபம், வஞ்சம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மசக்கையை தடுக்க மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்க்கலாம்.

    அடிக்கடி தாம்பத்திய உறவு, அலைச்சல், அதிக எடை, சற்று இறுக்கமான ஆடைகள் அணிவது நீண்டநேரம் கண் விழிப்பது, பிளாஸ்டிக் சேர் மற்றும் நைலான் சேரில் உட்கார்வது, மலம், சிறுநீரை அடக்குவது, பட்டினியாக இருப்பது போன்றவற்றை செய்யக் கூடாது.

    தூங்கிக்கொண்டிருக்கும் கர்ப்பிணிகளை சத்தம்போட்டு பயமுறுத்தியோ எழுப்பக்கூடாது. சிறுநீரை அடக்கக் கூடாது, அடக்குவதால் சிறுநீரகக் கற்கள் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும். எண்ணெய் குளியல், எண்ணெய் மசாஜ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

    கர்ப்பிணி பெண்கள் நல்ல நார்சத்து நிறைந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நார்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய் வகைகள், மேலும் குறிப்பாக கீரை வகைகளை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஆட்டிறைச்சி, பன்றி, மாட்டிறைச்சி போன்ற சிவப்பு மாமிச வகைகளை தவிர்ப்பது நல்லது. மேலும் சீஸ் அதிகம் கலந்த உணவையும் தவிர்க்க வேண்டும். இவை ஜீரணம் ஆக அதிக நேரம் எடுப்பதோடு, சில உபாதைகளையும் உண்டாக்கக் கூடும்.

    பகலில் தூங்குதல் கூடாது. இதனால் இரவில் தூக்கம் வராமல் மன உளைச்சல் ஏற்படும். உயரமான கட்டிடங்களுக்கு செல்லுதல், படியில் அடிக்கடி ஏறுதல், காலடி சத்தம் கேட்கும்படி பலமாக நடப்பது, வாகனங்களில் பயணம் செய்வது, தலைக்கு மேல் எடை தூக்குவது போன்றவற்றை செய்யக் கூடாது.

    காபி மற்றும் தேநீர் போன்றவற்றை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. இவை உடலில் சோகை மற்றும் வேறு சில உபாதைகளை உண்டாக்கக் கூடும்.
    மருத்துவமனைக்கு போகும் வழியில் கார் அல்லது பிற வாகனங்களில் குழந்தை பிரசவமாவது பற்றி அவ்வப்போது கேள்விப்படுவது உண்டு.
    பயணம் செய்யும் காரில் ஒரு குழந்தையை பெற்றெடுப்பது நிறைய சிக்கல்களைக் கொண்டது. காரின் தூய்மையற்ற சூழல் தாய்க்கும் சேய்க்கும் தொற்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பிரசவத்திற்கு பிறகு நடக்க வேண்டிய அத்தியாவசிய காரியங்களை காரில் செய்ய முடியாது.

    உலகின் எல்லாப் பகுதிகளிலுமே கர்ப்பிணிகளின் மீது வாகன ஓட்டுனர்கள் கனிவுடனேயே இருக்கின்றனர். இந்தியாவிலும் வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் கர்ப்பிணிகளை அழைத்துச் செல்லும்போது மிதமாகவே வண்டிகளை ஓட்டுகின்றனர். பிரசவத்துக்கு இலவசம் என்று சலுகை கொடுக்கும் ஓட்டுனர்களும் நம்மிடம் உண்டு.

    மேற்கு நாடுகளில் இதுபோன்ற அசாதாரணமான விஷயங்கள் கொண்டாடப்படுகின்றன. அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்கள் செய்திகளாக ஆகும் போது, நம்மூரில் நடக்கும் சம்பவங்கள் பெரிதாகப் பதிவாவதில்லை. ஏனெனில் இந்த விஷயங்கள் இங்கே வழக்கமானவை. கிராமங்களில் மிகவும் சகஜமாக இந்த நிகழ்வுகள் உள்ளன. அத்துடன் இதுபோன்ற அசாதாரணமான பிரசவங்கள் பற்றி பெற்றோர் அதிகம் பேசவும் இங்கு விரும்புவதில்லை.
    கர்ப்பகாலத்தில் பெண்கள் அழகு சாதனப்பொருட்களை அதிகம் பயன்படுத்தினால் கருவில் வளரும் குழந்தை உடல் பருமன் பிரச்சினைக்கு ஆளாக வாய்ப்பு இருப்பதாக புதிய ஆய்வு குறிப்பிடுகிறது.
    கர்ப்பகாலத்தில் பெண்கள் அழகு சாதனப்பொருட்களை அதிகம் பயன்படுத்தினால் கருவில் வளரும் குழந்தை உடல் பருமன் பிரச்சினைக்கு ஆளாக வாய்ப்பு இருப்பதாக புதிய ஆய்வு குறிப்பிடுகிறது. பெரும்பாலான அழகு சாதனப்பொருட்களில் பாராபென்ஸ் எனும் ரசாயனப்பொருட்கள் இடம்பெறுகின்றன. கர்ப்ப காலத்தில் அத்தகைய அழகு சாதனப் பொருட்களை அதிகம் பயன்படுத்தினால் அது குழந்தையின் எடை வளர்ச்சியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதுகுறித்து பெர்லினில் உள்ள சாரிட் பல்கலைக்கழக மருத்துவமனை, பெர்லின் சுகாதார நிறுவனம், லீப்ஜிக் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ஆய்வை மேற்கொண்டிருக்கின்றன.

    “அழகு சாதனப்பொருட்களில் மெத்தில் பாராபென், புரோபில் பாராபென், ப்யூட்டில் பாராபென் உள்ளிட்டவை பாராபென் ரசாயனங்களில் குறிப்பிடத்தக்கவை. கிரீம்களிலும், லோஷன்களிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் இத்தகைய பொருட்கள் விரும்பத்தகாத பக்கவிளைவுகளை ஏற் படுத்தக்கூடும். கர்ப்பிணி பெண்களின் சருமத்தின் வழியாக பாராபென்கள் உள் இழுக்கப்பட்டால் அது குழந்தையின் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். ஆய்வுக்கு உட்படுத்தப்பட கர்ப்பிணிகளின் சிறுநீரில் பாராபென்கள் அதிக அளவில் இருந்தன.

    அவர்கள் பயன்படுத்திய அழகு சாதனப்பொருட்களில் இருந்துதான் அந்த பாராபென்கள் கலந்திருப்பது தெரியவந்தது. கிரீம்கள், லோஷன்களை தொடர்ந்து பயன்படுத்தும்போது அவை நீண்டகாலமாக சருமத்தில் படிந்திருக்கின்றன. அவை கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியோடும் தொடர்பு கொண்டிருக்கின்றன. தாய்மார்களின் சிறுநீரில் உள்ள பியூட்டில்பராபனின் செறிவுகளுக்கும், அவர்கள் பெற்றெடுத்த மகள்கள் வளர்ந்ததும் வயதுக்கு பொருத்தமில்லாத உடல் பருமன் கொண்டிருப்பதற்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தோம்” என்கிறார்.
    ×