என் மலர்
அழகுக் குறிப்புகள்
ஷாம்புவை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தவேண்டும்? எந்த அளவில் பயன்படுத்தவேண்டும்? என்பது அனேகமானவர்களுக்கு தெரிவதில்லை. அது தொடர்பான சந்தேகங்களுக்கான விடை இதோ...
பாட்டில் பாட்டிலாக நிறைய பேர் ஷாம்பு வகைகளை வாங்கிவைத்திருக்கிறார்கள். ஆனால் அதனை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தவேண்டும்? எந்த அளவில் பயன்படுத்தவேண்டும்? என்பது அனேகமானவர்களுக்கு தெரிவதில்லை. அது தொடர்பான சந்தேகங்களுக்கான விடை!
உணவு: கூந்தல் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு ஷாம்பு பயன்படுத்தினால் மட்டும் போதாது. சமச்சீரான சத்துணவுகளையும் சாப்பிடவேண்டும். முட்டை, ஈரல், காளான், காலிபிளவர், சோயா பீன்ஸ், நேந்திரம் பழம், கோதுமை ரொட்டி, பயறு, பருப்புவகைகளை உணவில் தினமும் சேர்க்கவேண்டும். நிறைய தண்ணீர் பருகவேண்டும். மனஅமைதியோடு தினமும் 8 மணிநேரம் தூங்குவதும் அவசியம்.
தினமும்: எண்ணெய்தன்மையுள்ள கூந்தலை கொண்டவர்கள், தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்கள், தூசு நிறைந்த பகுதிகளில் வேலைபார்ப்பவர்கள் போன்றோர் தினமும் ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை சுத்தம் செய்யலாம். ஹேர் ஸ்பிரே, ஹேர் ஜெல் பயன்படுத்துகிறவர்களும் தினமும் ஷாம்பு பயன்படுத்தலாம்.
பாதிப்பு எதுவுமற்ற இயல்பான கூந்தலை கொண்டவர்களும், முடி துண்டுதுண்டாக உடையும் தொந்தரவு கொண்டவர்களும், தினமும் ஷாம்பு போடவேண்டியதில்லை. முடியில் கலரிங் செய்திருப்பவர்களும், முடியை சுருட்டி விட்டிருப்பவர்களும் தினமும் ஷாம்பு போடவேண்டாம்.
சரியான தேர்வு: ஒவ்வொருவரும் தங்கள் முடியின் தன்மையை உணர்ந்து அதற்கு தகுந்த ஷாம்புவை தேர்ந்தெடுக்கவேண்டும். கெட்டியான முடியை கொண்டவர்கள் மோய்ஸ்ச ரைசர் சேர்த்த ஷாம்புவை பயன்படுத்தலாம்.
எண்ணெய்தன்மை உள்ள கூந்தல் என்றால் கிரீம் அடங்கிய ஷாம்புவை பயன்படுத்தக்கூடாது. வீரியம் குறைந்த ஸ்பிரே கண்டிஷனர் அவர்களுக்கு சிறந்தது. வறண்ட ஆரோக்கியமான கூந்தலை கொண்டவர்கள் அல்ட்ரா மோய்ஸ்சரைசர் அடங்கிய ஷாம்புவை பயன்படுத்தவேண்டும். இவர்கள் இடைவெளிவிட்டு கண்டிஷனர் பயன்படுத்தினால் கூந்தல் ஜொலிக்கும்.
பயன்படுத்தும் முறை : முடியை தண்ணீரில் நனைத்த பின்பே ஷாம்புவை பயன்படுத்தவேண்டும். எவ்வளவு ஷாம்பு பயன்படுத்த வேண்டும் என்பது அவரவர் கூந்தலின் நீளம் மற்றும் அடர்த்திக்கு தகுந்தபடி மாறும். ஷாம்புவை தலையில் தேய்ப்பதற்கு உள்ளங்கை மற்றும் நகத்தை பயன்படுத்தக்கூடாது. விரல் நுனியால் மென்மையாக மசாஜ் செய்து கூந்தலோடு பற்றிப்பிடிக்கச் செய்யவேண்டும். தலையின் குறிப்பிட்ட பகுதியிலே எப்போதும் ஷாம்புவை வைத்து தேய்த்தால் அந்த பகுதி முடி விரைவாக வறண்டுவிடும். அந்த இடத்தில் முடி அதிகமாக உதிரவும் செய்யும். கழுத்தின் பின்பகுதியில் இருந்து மேல் நோக்கி ஷாம்புவை தேய்ப்பது சரியான முறையாகும்.
நேரம்: பொதுவாக ஒன்றரை நிமிடம் ஷாம்பு தலையில் இருந்தால் போதுமானது. அழகு சிகிச்சை அளிப்பவர்கள் குறிப்பிட்டு சொன்னால் மட்டுமே ஷாம்பு பயன்பாட்டு நேரத்தை அதிகரிக்கவேண்டும். ஒருமுறை குளிக்கும்போது ஒன்றுக்கு மேற்பட்ட தடவை ஷாம்பு போடக்கூடாது. குளிக்கும்போது நன்றாக முடியை அலசி, ஷாம்புவின் தன்மையை முழுமையாக நீக்கிவிடவேண்டும். ஷாம்பு போடுவதால் வறண்டு போகும் கூந்தலுக்கு ஈரத்தன்மை மற்றும் ஜொலிஜொலிப்பை கண்டிஷனர் தருகிறது. பொடுகு தொந்தரவு இருப்பவர்கள் பேபி ஷாம்பு அல்லது மெடிகேட்டட் ஷாம்பு பயன்படுத்தலாம்.
உணவு: கூந்தல் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு ஷாம்பு பயன்படுத்தினால் மட்டும் போதாது. சமச்சீரான சத்துணவுகளையும் சாப்பிடவேண்டும். முட்டை, ஈரல், காளான், காலிபிளவர், சோயா பீன்ஸ், நேந்திரம் பழம், கோதுமை ரொட்டி, பயறு, பருப்புவகைகளை உணவில் தினமும் சேர்க்கவேண்டும். நிறைய தண்ணீர் பருகவேண்டும். மனஅமைதியோடு தினமும் 8 மணிநேரம் தூங்குவதும் அவசியம்.
தினமும்: எண்ணெய்தன்மையுள்ள கூந்தலை கொண்டவர்கள், தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்கள், தூசு நிறைந்த பகுதிகளில் வேலைபார்ப்பவர்கள் போன்றோர் தினமும் ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை சுத்தம் செய்யலாம். ஹேர் ஸ்பிரே, ஹேர் ஜெல் பயன்படுத்துகிறவர்களும் தினமும் ஷாம்பு பயன்படுத்தலாம்.
பாதிப்பு எதுவுமற்ற இயல்பான கூந்தலை கொண்டவர்களும், முடி துண்டுதுண்டாக உடையும் தொந்தரவு கொண்டவர்களும், தினமும் ஷாம்பு போடவேண்டியதில்லை. முடியில் கலரிங் செய்திருப்பவர்களும், முடியை சுருட்டி விட்டிருப்பவர்களும் தினமும் ஷாம்பு போடவேண்டாம்.
சரியான தேர்வு: ஒவ்வொருவரும் தங்கள் முடியின் தன்மையை உணர்ந்து அதற்கு தகுந்த ஷாம்புவை தேர்ந்தெடுக்கவேண்டும். கெட்டியான முடியை கொண்டவர்கள் மோய்ஸ்ச ரைசர் சேர்த்த ஷாம்புவை பயன்படுத்தலாம்.
எண்ணெய்தன்மை உள்ள கூந்தல் என்றால் கிரீம் அடங்கிய ஷாம்புவை பயன்படுத்தக்கூடாது. வீரியம் குறைந்த ஸ்பிரே கண்டிஷனர் அவர்களுக்கு சிறந்தது. வறண்ட ஆரோக்கியமான கூந்தலை கொண்டவர்கள் அல்ட்ரா மோய்ஸ்சரைசர் அடங்கிய ஷாம்புவை பயன்படுத்தவேண்டும். இவர்கள் இடைவெளிவிட்டு கண்டிஷனர் பயன்படுத்தினால் கூந்தல் ஜொலிக்கும்.
பயன்படுத்தும் முறை : முடியை தண்ணீரில் நனைத்த பின்பே ஷாம்புவை பயன்படுத்தவேண்டும். எவ்வளவு ஷாம்பு பயன்படுத்த வேண்டும் என்பது அவரவர் கூந்தலின் நீளம் மற்றும் அடர்த்திக்கு தகுந்தபடி மாறும். ஷாம்புவை தலையில் தேய்ப்பதற்கு உள்ளங்கை மற்றும் நகத்தை பயன்படுத்தக்கூடாது. விரல் நுனியால் மென்மையாக மசாஜ் செய்து கூந்தலோடு பற்றிப்பிடிக்கச் செய்யவேண்டும். தலையின் குறிப்பிட்ட பகுதியிலே எப்போதும் ஷாம்புவை வைத்து தேய்த்தால் அந்த பகுதி முடி விரைவாக வறண்டுவிடும். அந்த இடத்தில் முடி அதிகமாக உதிரவும் செய்யும். கழுத்தின் பின்பகுதியில் இருந்து மேல் நோக்கி ஷாம்புவை தேய்ப்பது சரியான முறையாகும்.
நேரம்: பொதுவாக ஒன்றரை நிமிடம் ஷாம்பு தலையில் இருந்தால் போதுமானது. அழகு சிகிச்சை அளிப்பவர்கள் குறிப்பிட்டு சொன்னால் மட்டுமே ஷாம்பு பயன்பாட்டு நேரத்தை அதிகரிக்கவேண்டும். ஒருமுறை குளிக்கும்போது ஒன்றுக்கு மேற்பட்ட தடவை ஷாம்பு போடக்கூடாது. குளிக்கும்போது நன்றாக முடியை அலசி, ஷாம்புவின் தன்மையை முழுமையாக நீக்கிவிடவேண்டும். ஷாம்பு போடுவதால் வறண்டு போகும் கூந்தலுக்கு ஈரத்தன்மை மற்றும் ஜொலிஜொலிப்பை கண்டிஷனர் தருகிறது. பொடுகு தொந்தரவு இருப்பவர்கள் பேபி ஷாம்பு அல்லது மெடிகேட்டட் ஷாம்பு பயன்படுத்தலாம்.
முகத்தை முறையாக, மென்மையாக கழுவவில்லை என்றால் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் தான் அதிகமாகும். முகத்தை கழுவும் போது இந்த விஷயங்களை கண்டிப்பாக மறக்கக்கூடாது.
முகமானது அழகாக இருக்க, அடிக்கடி முகத்தை கழுவுவோம். ஆனால் அவ்வாறு முகத்தை கழுவும் போது எத்தனை பேர் சரியாக கழுவுகிறோம்? மேலும் சிலர் முகத்தில் இருக்கும் அழுக்குகள் போக வேண்டும் என்பதற்காக தேய்த்து கழுவுவார்கள்.
அவ்வாறு செய்து, முகத்தை முறையாக, மென்மையாக கழுவவில்லை என்றால் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் தான் அதிகமாகும். ஆகவே அத்தகையது வராமல், மென்மையாக இருக்க முகத்தில் இருக்கும் இறந்த செல்களை, அழுக்குகளை, கிருமிகளை நன்கு கழுவ, ஒரு சில வழிகள் இருக்கிறது. அதைப் பின்பற்றினால் முகத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
கிளின்சர் :
முகத்தை கழுவுவதற்கு முன்னால், கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு சிறிது காட்டனை எடுத்து, கிளின்சரில் நனைத்துக் கொண்டு, முகத்தை நன்கு துடைத்து விட வேண்டும். ஆனால் அப்படி கிளின்சர் பயன்படுத்தும் போது, சருமத்திற்கு ஏற்றதாக பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, வறண்ட சருமம் உள்ளவர்கள் கிரீம் போன்று இருக்கும் கிளின்சரைப் பயன்படுத்த வேண்டும்.
அதுவே எண்ணெய் சருமம் உள்ளவர்கள், வழுவழுப்பாக இருக்கும் கிளின்சரை பயன்படுத்த வேண்டும். அத்தகைய கிளின்சரை தினத்திற்கு 1 அல்லது 2 முறை பயன்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு மேல் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அது முகத்தில் இயற்கையாக இருக்கும் எண்ணெயையும் அகற்றிவிடும்.
தண்ணீர் :.
எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். அதனால் முகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் குழிகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கிவிடும். பின் கழுவியதும் சுத்தமான துணியால் முகத்தை துடைத்துவிட வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் எளிதில் போய்விடும்.
ஃபேஸ் வாஷ் :
இதுவும் முகத்தை கழுவ பயன்படுத்தப்படும் பொருட்களுள் ஒன்று. மேலும் குளிக்கும் போது பயன்படுத்தியப் பின், அடிக்கடி முகத்தை கழுவும் போது முகத்திற்கு சோப்புகளை பயன்படுத்தக் கூடாது. அப்போது முகத்தை தண்ணீரால் நனைத்து, பின் அந்த ஃபேஸ் வாஷ் கிரீம்களை பயன் படுத்தி முகத்திற்கு தடவி, மசாஜ் போல் செய்து முகத்தை கழுவ வேண்டும். பின் முகத்தை சுத்தமாக துடைத்து விட வேண்டும். முக்கியமாக மசாஜ் செய்யும் போது 1-2 நிமிடம் வரை செய்யக்கூடாது.
ஃபேசியல் ஸ்கரப் :
முகத்திற்கு ஸ்கரப் செய்யும் போது அனைவரும் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்க வேண்டும் என்பதற் காக மிகவும் கடினமாக, நீண்ட நேரம் செய்வர். ஆனால் அது மிகவும் தவறான செயல். அவ்வாறு செய்தால் முகத்தில் இருக்கும் திசுக்கள் பாதிக்கப்படும். ஆகவே அவ்வாறு முகத்திற்கு ஸ்கரப் செய்யும் போது, மிகவும் மென்மை யாக 3-4 நிமிடங் களே செய்ய வேண்டும். அதுவும் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையே செய்ய வேண்டும். பின் கழுவி விட வேண்டும். இவ்வாறெல்லாம் முகத்தை கழுவினால் முகமானது அழகாக, பொலிவோடு இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.
அவ்வாறு செய்து, முகத்தை முறையாக, மென்மையாக கழுவவில்லை என்றால் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் தான் அதிகமாகும். ஆகவே அத்தகையது வராமல், மென்மையாக இருக்க முகத்தில் இருக்கும் இறந்த செல்களை, அழுக்குகளை, கிருமிகளை நன்கு கழுவ, ஒரு சில வழிகள் இருக்கிறது. அதைப் பின்பற்றினால் முகத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
கிளின்சர் :
முகத்தை கழுவுவதற்கு முன்னால், கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு சிறிது காட்டனை எடுத்து, கிளின்சரில் நனைத்துக் கொண்டு, முகத்தை நன்கு துடைத்து விட வேண்டும். ஆனால் அப்படி கிளின்சர் பயன்படுத்தும் போது, சருமத்திற்கு ஏற்றதாக பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, வறண்ட சருமம் உள்ளவர்கள் கிரீம் போன்று இருக்கும் கிளின்சரைப் பயன்படுத்த வேண்டும்.
அதுவே எண்ணெய் சருமம் உள்ளவர்கள், வழுவழுப்பாக இருக்கும் கிளின்சரை பயன்படுத்த வேண்டும். அத்தகைய கிளின்சரை தினத்திற்கு 1 அல்லது 2 முறை பயன்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு மேல் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அது முகத்தில் இயற்கையாக இருக்கும் எண்ணெயையும் அகற்றிவிடும்.
தண்ணீர் :.
எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். அதனால் முகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் குழிகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கிவிடும். பின் கழுவியதும் சுத்தமான துணியால் முகத்தை துடைத்துவிட வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் எளிதில் போய்விடும்.
ஃபேஸ் வாஷ் :
இதுவும் முகத்தை கழுவ பயன்படுத்தப்படும் பொருட்களுள் ஒன்று. மேலும் குளிக்கும் போது பயன்படுத்தியப் பின், அடிக்கடி முகத்தை கழுவும் போது முகத்திற்கு சோப்புகளை பயன்படுத்தக் கூடாது. அப்போது முகத்தை தண்ணீரால் நனைத்து, பின் அந்த ஃபேஸ் வாஷ் கிரீம்களை பயன் படுத்தி முகத்திற்கு தடவி, மசாஜ் போல் செய்து முகத்தை கழுவ வேண்டும். பின் முகத்தை சுத்தமாக துடைத்து விட வேண்டும். முக்கியமாக மசாஜ் செய்யும் போது 1-2 நிமிடம் வரை செய்யக்கூடாது.
ஃபேசியல் ஸ்கரப் :
முகத்திற்கு ஸ்கரப் செய்யும் போது அனைவரும் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்க வேண்டும் என்பதற் காக மிகவும் கடினமாக, நீண்ட நேரம் செய்வர். ஆனால் அது மிகவும் தவறான செயல். அவ்வாறு செய்தால் முகத்தில் இருக்கும் திசுக்கள் பாதிக்கப்படும். ஆகவே அவ்வாறு முகத்திற்கு ஸ்கரப் செய்யும் போது, மிகவும் மென்மை யாக 3-4 நிமிடங் களே செய்ய வேண்டும். அதுவும் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையே செய்ய வேண்டும். பின் கழுவி விட வேண்டும். இவ்வாறெல்லாம் முகத்தை கழுவினால் முகமானது அழகாக, பொலிவோடு இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.
பொடுகு மற்றும் முடி உதிர்தல் என்பது ஒவ்வொரு பருவகாலத்திலும் பின் தொடரும் பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கருப்பு மிளகையும் பயன்படுத்தலாம்.
கருப்பு மிளகு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளது. இருமல், சளி, செரிமானம், இரைப்பை, குடல் பிரச்சினைகளை போக்க உதவும். உயர் ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு உடல் நலப்பிரச்சினைகளுக்கும் நிவாரணியாக விளங்குகிறது. பொடுகு மற்றும் முடி உதிர்தல் என்பது ஒவ்வொரு பருவகாலத்திலும் பின் தொடரும் பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கருப்பு மிளகையும் பயன்படுத்தலாம்.
சிலருக்கு இளம் வயதிலேயே வெள்ளை நிற முடி எட்டிப்பார்க்கும். சாம்பல் நிறத்திலும் காட்சியளிக்கும். கருப்பு மிளகுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு மசாஜ் செய்துவிடலாம். கருப்பு மிளகில் செம்பு நிறைந்திருப்பதால் கூந்தல் முடி முன்கூட்டியே வெள்ளை நிறமாக மாறுவதை தடுக்கும்.
தயிர் தலைமுடியை ஈரப்பதமாக்கும். மேலும் வைட்டமின் சி குறைபாட்டை போக்கும். ஒரு கப் தயிருடன் 2 டீஸ்பூன் கருப்பு மிளகு தூள் கலந்து கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை உச்சந்தலையில் அழுத்தி தடவவும். பிறகு கூந்தல் முழுவதும் தடவி மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்து கூந்தலை கழுவிவிடலாம்.
பொடுகு தொல்லையில் இருந்து விடுபட கருப்பு மிளகுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து உபயோகிக்கலாம். ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு தூளுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் கலந்துகொள்ளவும். அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும். அதனை உச்சந் தலையில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து கழுவிவிடலாம். வாரம் இருமுறை செய்துவந்தால் பொடுகு தொல்லையில் இருந்து தப்பித்துவிடலாம். மிளகில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. தலையை சுத்தமாக வைத்திருக்க உதவும். மீண்டும் பொடுகு உருவாகாமல் தடுக்கும்.
நீண்ட அடர்த்தியான கூந்தல் முடியை பெறுவதற்கும் மிளகை உபயோகிக்கலாம். அது மயிர்க்கால்களின் வளர்ச்சியை தூண்ட உதவும். கருப்பு மிளகுடன் ஆலிவ் எண்ணெய்யை கலந்து காற்று புகாத பாட்டிலில் மூடி வைத்துக்கொள்ளவும். இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த எண்ணெய்யை தலை முடியில் தடவிவிட்டு 30 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். இது முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம். அது தலைமுடியை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
சிலருக்கு இளம் வயதிலேயே வெள்ளை நிற முடி எட்டிப்பார்க்கும். சாம்பல் நிறத்திலும் காட்சியளிக்கும். கருப்பு மிளகுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு மசாஜ் செய்துவிடலாம். கருப்பு மிளகில் செம்பு நிறைந்திருப்பதால் கூந்தல் முடி முன்கூட்டியே வெள்ளை நிறமாக மாறுவதை தடுக்கும்.
தயிர் தலைமுடியை ஈரப்பதமாக்கும். மேலும் வைட்டமின் சி குறைபாட்டை போக்கும். ஒரு கப் தயிருடன் 2 டீஸ்பூன் கருப்பு மிளகு தூள் கலந்து கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை உச்சந்தலையில் அழுத்தி தடவவும். பிறகு கூந்தல் முழுவதும் தடவி மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்து கூந்தலை கழுவிவிடலாம்.
பொடுகு தொல்லையில் இருந்து விடுபட கருப்பு மிளகுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து உபயோகிக்கலாம். ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு தூளுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் கலந்துகொள்ளவும். அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும். அதனை உச்சந் தலையில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து கழுவிவிடலாம். வாரம் இருமுறை செய்துவந்தால் பொடுகு தொல்லையில் இருந்து தப்பித்துவிடலாம். மிளகில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. தலையை சுத்தமாக வைத்திருக்க உதவும். மீண்டும் பொடுகு உருவாகாமல் தடுக்கும்.
நீண்ட அடர்த்தியான கூந்தல் முடியை பெறுவதற்கும் மிளகை உபயோகிக்கலாம். அது மயிர்க்கால்களின் வளர்ச்சியை தூண்ட உதவும். கருப்பு மிளகுடன் ஆலிவ் எண்ணெய்யை கலந்து காற்று புகாத பாட்டிலில் மூடி வைத்துக்கொள்ளவும். இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த எண்ணெய்யை தலை முடியில் தடவிவிட்டு 30 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். இது முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம். அது தலைமுடியை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
நாள் முழுவதும் வெளியில் வெயிலில் அலைந்து திரிந்து கொண்டிருப்பவர்கள் உடனடியாக முகத்தை பொலிவாக காட்ட வேண்டுமென்றால் ஐஸ் க்யூப் பயன்படுத்தலாம்.
நாள் முழுவதும் வெளியில் வெயிலில் அலைந்து திரிந்து கொண்டிருப்பவர்கள் உடனடியாக முகத்தை பொலிவாக காட்ட வேண்டுமென்றால் ஐஸ் க்யூப் பயன்படுத்தலாம்.
* ஐஸ் க்யூப்பை கையில் எடுத்து முகத்தில் வட்டவடிவமாக தேய்த்திடுங்கள். பெரிய வட்டத்திலிருந்து ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாக வர வேண்டும். இவை சருமத்துளைகளில் உள்ள அழுக்களை நீங்கச் செய்யும்.
* சிலருக்கு மேக்கப் போட்டால் சிறிது நேரத்துலேயே வியர்த்து மேக்கப் கலைந்திடும். இவற்றை தவிர்க்க மேக்கப் போடுவதற்கு முன்னதாக ஐஸ் க்யூபைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்திடுங்கள். இப்படிச் செய்வதால் மேக்கப் நீண்ட நேரம் இருக்கும்.
* அதிக எண்ணெய்ப் பசையுள்ள சருமம் உள்ளவர்கள் ஐஸ் க்யூபை கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வர எண்ணெய் சுரப்பது கட்டுப்படுத்தப்படும். இதனால் சருமத்தில் வேறு எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் நாம் பாதுக்காக்க முடியும்.
* சூரிய ஒளியினால் சருமம் கருப்பாகும். சில நேரங்களில் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்திடும். உடனடி தீர்வு வேண்டுமென்றால் மெல்லிய காட்டன் துணியில் மூன்று ஐஸ் க்யூபினை சேர்த்து கட்டி அவற்றைக் கொண்டு எரிச்சல் உள்ள இடங்களில் தேய்த்திடுங்கள்.
* கழுத்துப் பகுதியில், கண்களின் ஓரத்தில், நெற்றியில் என முகத்தில் பல இடங்களில் சுருக்கங்கள் தோன்றும். இவை ஏற்படாமல் இருக்க ஐஸ் க்யூப் மசாஜ் செய்யலாம். தினமும் இப்படிச் செய்து வருவதால் சருமம் பொலிவாவதுடன் சருமம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
* கண்கள் மிகவும் சோர்வாகவோ அல்லது தூக்கமின்றி, அதிக தூக்கம் போன்ற காரணத்தால் கண்கள் வீங்கியிருந்தால் இதனை முயற்சிக்கலாம். க்ரீன் டீ பேக் கியூப் ட்ரேயில் வைத்து தண்ணீர் ஊற்றிடுங்கள். அவை கட்டியானதும் க்ரீன் டீ க்யூப் எடுத்து கண்களுக்கு ஒத்தடம் கொடுத்தால் உடனடி பலன் கிடைக்கும்.
* ஐஸ் க்யூப்பை கையில் எடுத்து முகத்தில் வட்டவடிவமாக தேய்த்திடுங்கள். பெரிய வட்டத்திலிருந்து ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாக வர வேண்டும். இவை சருமத்துளைகளில் உள்ள அழுக்களை நீங்கச் செய்யும்.
* சிலருக்கு மேக்கப் போட்டால் சிறிது நேரத்துலேயே வியர்த்து மேக்கப் கலைந்திடும். இவற்றை தவிர்க்க மேக்கப் போடுவதற்கு முன்னதாக ஐஸ் க்யூபைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்திடுங்கள். இப்படிச் செய்வதால் மேக்கப் நீண்ட நேரம் இருக்கும்.
* அதிக எண்ணெய்ப் பசையுள்ள சருமம் உள்ளவர்கள் ஐஸ் க்யூபை கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வர எண்ணெய் சுரப்பது கட்டுப்படுத்தப்படும். இதனால் சருமத்தில் வேறு எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் நாம் பாதுக்காக்க முடியும்.
* சூரிய ஒளியினால் சருமம் கருப்பாகும். சில நேரங்களில் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்திடும். உடனடி தீர்வு வேண்டுமென்றால் மெல்லிய காட்டன் துணியில் மூன்று ஐஸ் க்யூபினை சேர்த்து கட்டி அவற்றைக் கொண்டு எரிச்சல் உள்ள இடங்களில் தேய்த்திடுங்கள்.
* கழுத்துப் பகுதியில், கண்களின் ஓரத்தில், நெற்றியில் என முகத்தில் பல இடங்களில் சுருக்கங்கள் தோன்றும். இவை ஏற்படாமல் இருக்க ஐஸ் க்யூப் மசாஜ் செய்யலாம். தினமும் இப்படிச் செய்து வருவதால் சருமம் பொலிவாவதுடன் சருமம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
* கண்கள் மிகவும் சோர்வாகவோ அல்லது தூக்கமின்றி, அதிக தூக்கம் போன்ற காரணத்தால் கண்கள் வீங்கியிருந்தால் இதனை முயற்சிக்கலாம். க்ரீன் டீ பேக் கியூப் ட்ரேயில் வைத்து தண்ணீர் ஊற்றிடுங்கள். அவை கட்டியானதும் க்ரீன் டீ க்யூப் எடுத்து கண்களுக்கு ஒத்தடம் கொடுத்தால் உடனடி பலன் கிடைக்கும்.
நகைகளை சுலபமான முறையில், தங்கம் தேயாமல் எப்படி சுத்தம் செய்வது என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு மூலம் தெரிந்து கொள்ளலாம்.
எப்போதுமே நம்முடைய உடலில் அணிந்து கொண்டிருக்கும் கம்மல், செயின், வளையல், பிரேஸ்லெட் இவைகள் சீக்கிரமாகவே அழுக்குப் படிந்துவிடும். சூடு உடம்பாக இருந்தால், சீக்கிரம் கருப்பாக மாறிவிடும். இதுமட்டுமல்லாமல் கழுத்தில் போட்டிருக்கும் செயினில், மஞ்சள் கரை, பவுடர் திட்டு, அதிகமாக படிந்து, அதன் நிறம் மங்கி இருக்கும். இதை அப்படியே அணிந்து கொண்டிருந்தால், தங்க நகை எடுப்பாக இருக்காது. மங்கலாகக் காணப்படும். இந்த நகைகளை சுலபமான முறையில், தங்கம் தேயாமல் எப்படி சுத்தம் செய்வது என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பூந்தி கொட்டையின் மேல் தோலை தண்ணீரில் ஊறவைத்து அதில் பொன் நகைகளை (கல், முத்து, பவளம் போன்றவை கூடாது) ஒரு நாள் முழுக்க போட்டுவைக்கவும். மறுநாள் பிரஷ் மூலம் சுத்தம் செய்தால் அன்று வாங்கிய நகை போலவே பளபளக்கும். நகைகள் அனைத்தையும் ஒரே டப்பாவில் போட்டு வைக்கக்கூடாது.
தனித்தனி பிரிவு உள்ள நகை பெட்டியை தேர்ந்தெடுத்து வாங்கி அவற்றில் வைத்துவிட்டால் நகைகள் நசுங்காமல் இருக்கும். முத்து நகைகளை அணிந்துகொண்டு வெந்நீரில் குளிக்கக்கூடாது. நகைகளை அணிந்த பிறகு வாசனை திரவியங்களை ஸ்பிரே செய்யக்கூடாது. கல், முத்து நகைகள் மங்கிவிடக்கூடும்.
தங்க வளையல்களுடன் கண்ணாடி வளையல்களைச் சேர்த்து அணிந்தால் தங்க வளையல்கள் சீக்கிரம் தேய்மானம் அடைந்துவிடும். வைரத் தோடு, மோதிரம், வளையல் ஆகியவை மங்கலாக இருந்தால் நான்கைந்து நாட்கள் விபூதி டப்பாவில் போட்டு வைத்து எடுத்து சுத்தம் செய்தால் பளிச்சென்று இருக்கும்.
நகைகளை நின்றுகொண்டே கழற்றவோ, போடவோ கூடாது. அப்படிச் செய்வதால் கை தவறி மோதிரம், கம்மல் திருகாணி போன்றவை கீழே விழுந்துவிடக்கூடும். அதனால் உட்கார்ந்துகொண்டு மடியில் மெல்லிய துண்டை விரித்து நகைகளை அணிந்தால் அவை கீழே விழுந்தாலும் துண்டின் மீது விழும். சேதாரம் குறையும்.
நாம் அணிந்திருக்கும் நகைகள், நம் வீட்டின் லட்சுமி கலாட்ச்சத்தை வெளிப்படுத்தும். அந்த நகைகளை அழுக்குப் படிந்த நகைகளாக, மங்கலான நிலையில் வைத்திருப்பது அவ்வளவு சரியல்ல. ஏனென்றால், மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய நகை எப்போதுமே பார்ப்பதற்கு பளிச்சென்று இருப்பதுதான் நம் வீட்டிற்கு நல்லது. அதிர்ஷ்டமும் கூட!
பூந்தி கொட்டையின் மேல் தோலை தண்ணீரில் ஊறவைத்து அதில் பொன் நகைகளை (கல், முத்து, பவளம் போன்றவை கூடாது) ஒரு நாள் முழுக்க போட்டுவைக்கவும். மறுநாள் பிரஷ் மூலம் சுத்தம் செய்தால் அன்று வாங்கிய நகை போலவே பளபளக்கும். நகைகள் அனைத்தையும் ஒரே டப்பாவில் போட்டு வைக்கக்கூடாது.
தனித்தனி பிரிவு உள்ள நகை பெட்டியை தேர்ந்தெடுத்து வாங்கி அவற்றில் வைத்துவிட்டால் நகைகள் நசுங்காமல் இருக்கும். முத்து நகைகளை அணிந்துகொண்டு வெந்நீரில் குளிக்கக்கூடாது. நகைகளை அணிந்த பிறகு வாசனை திரவியங்களை ஸ்பிரே செய்யக்கூடாது. கல், முத்து நகைகள் மங்கிவிடக்கூடும்.
தங்க வளையல்களுடன் கண்ணாடி வளையல்களைச் சேர்த்து அணிந்தால் தங்க வளையல்கள் சீக்கிரம் தேய்மானம் அடைந்துவிடும். வைரத் தோடு, மோதிரம், வளையல் ஆகியவை மங்கலாக இருந்தால் நான்கைந்து நாட்கள் விபூதி டப்பாவில் போட்டு வைத்து எடுத்து சுத்தம் செய்தால் பளிச்சென்று இருக்கும்.
நகைகளை நின்றுகொண்டே கழற்றவோ, போடவோ கூடாது. அப்படிச் செய்வதால் கை தவறி மோதிரம், கம்மல் திருகாணி போன்றவை கீழே விழுந்துவிடக்கூடும். அதனால் உட்கார்ந்துகொண்டு மடியில் மெல்லிய துண்டை விரித்து நகைகளை அணிந்தால் அவை கீழே விழுந்தாலும் துண்டின் மீது விழும். சேதாரம் குறையும்.
நாம் அணிந்திருக்கும் நகைகள், நம் வீட்டின் லட்சுமி கலாட்ச்சத்தை வெளிப்படுத்தும். அந்த நகைகளை அழுக்குப் படிந்த நகைகளாக, மங்கலான நிலையில் வைத்திருப்பது அவ்வளவு சரியல்ல. ஏனென்றால், மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய நகை எப்போதுமே பார்ப்பதற்கு பளிச்சென்று இருப்பதுதான் நம் வீட்டிற்கு நல்லது. அதிர்ஷ்டமும் கூட!
மஞ்சளைக் கொண்டு பேஸ் பேக் போட்டால், அதனை மணிக்கணக்கில் ஊற வைக்கக்கூடாது. எப்போதுமே மஞ்சள் பேஸ் பேக் போட்டால், 20 நிமிடத்திற்கு மேல் வைக்காதீர்கள்.
மஞ்சள் மிகவும் சக்தி வாய்ந்த பொருள். அதன் முழு பலனையும் பெற வேண்டுமானால், சரியான பொருட்களுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். அதுவும் ரோஸ் வாட்டர், பால் மற்றும் தண்ணீர் தான் மஞ்சளுடன் கலந்து பயன்படுத்துவதற்கான சிறந்த பொருட்கள். இப்பொருட்களில் ஏதேனும் ஒன்றுடன் மஞ்சளைக் கலந்து பயன்படுத்தினால், முழு பலனையும் பெறலாம்.
மஞ்சளைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், அதனை மணிக்கணக்கில் ஊற வைக்கக்கூடாது. எப்போதுமே மஞ்சள் ஃபேஸ் பேக் போட்டால், 20 நிமிடத்திற்கு மேல் வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அது மஞ்சள் நிற கறைகளை சருமத்தில் ஏற்படுத்தும்.
தேவையான பொருட்கள்:
புதினா இலைகள் - 6-7
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* புதினா இலைகளை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இக்கலவை மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது வெது வெதுப்பான நீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
* பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை தினமும் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதனால் முகம் பிரகாசமாக இருக்கும்.
ஒரு பவுலை எடுத்து எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் மூன்று ஸ்பூன் காய்ச்சாத பால், ஒரு சிட்டிகை அளவு கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையினை சருமத்தில் இப்பொழுது அப்ளை செய்து நன்றாக காயவிடுங்கள், பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பால், கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் தேன் இவை மூன்று சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்குவதுடன், இயற்கையான முறையில் சருமத்தை என்றும் பளிச்சென்று வைத்து கொள்ளும்.
மஞ்சளைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், அதனை மணிக்கணக்கில் ஊற வைக்கக்கூடாது. எப்போதுமே மஞ்சள் ஃபேஸ் பேக் போட்டால், 20 நிமிடத்திற்கு மேல் வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அது மஞ்சள் நிற கறைகளை சருமத்தில் ஏற்படுத்தும்.
தேவையான பொருட்கள்:
புதினா இலைகள் - 6-7
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* புதினா இலைகளை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இக்கலவை மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது வெது வெதுப்பான நீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
* பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை தினமும் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதனால் முகம் பிரகாசமாக இருக்கும்.
ஒரு பவுலை எடுத்து எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் மூன்று ஸ்பூன் காய்ச்சாத பால், ஒரு சிட்டிகை அளவு கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையினை சருமத்தில் இப்பொழுது அப்ளை செய்து நன்றாக காயவிடுங்கள், பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பால், கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் தேன் இவை மூன்று சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்குவதுடன், இயற்கையான முறையில் சருமத்தை என்றும் பளிச்சென்று வைத்து கொள்ளும்.
ரோஜாப்பூக்களை வைத்து பேஸ் பேக் போட்டால், முகம் நன்கு பொலிவோடு, அழகான ரோஜாப்பூ நிறத்தில் மின்னும். இப்போது ரோஜாப்பூக்களை வைத்து எப்படியெல்லாம் பேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போமா!!!
ரோஜாப்பூக்களை வீணடிக்காமல், அவற்றை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், அதனை வைத்து முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம். இவ்வாறு ரோஜாப்பூக்களை வைத்து ஃபேஸ் பேக் போட்டால், முகம் நன்கு பொலிவோடு, அழகான ரோஜாப்பூ நிறத்தில் மின்னும். இப்போது ரோஜாப்பூக்களை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போமா!!!
ரோஜாப்பூக்களின் இதழ்களை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை அரைத்து பேஸ்ட் போல் செய்து, சிறிது தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை மற்றும் வறட்சியான சருமத்திற்கு சிறந்தது.
ரோஜாவின் இதழ்களை நீரில் 30 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை எடுத்து, ஓரளவு அரைத்து, அத்துடன் ஓட்ஸை பொடி செய்து போட்டு, முகத்திற்கு தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். முக்கியம், இந்த ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் செய்யும் முன், முகத்தை நீரில் கழுவி, பின் பாலில் ஒருமுறை கழுவி, ரோஸ் வாட்டர் வைத்து துடைத்து, பின் முகத்திற்கு இந்த பேக் போட்டு, காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
ரோஜா இதழ்களை அரைத்து, அதில் கடலை மாவு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, சிறிது ரோஸ் வாட்டர் ஊற்றி, கெட்டியான பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, காய வைத்து, பின் பாலால் கழுவி, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இதனால் முகம் நன்கு மென்மையாகவும், அழகாகவும் காணப்படும்.
பருக்கள் மற்றும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இந்த ஃபேஸ் பேக் சரியானதாக இருக்கும். இந்த ஃபேஸ் பேக்கிற்கு ரோஜாவின் இதழ்களை அரைத்து, சந்தனப் பொடி சேர்த்து கலந்து, ரோஸ் வாட்டர் மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் பருக்கள், கரும்புள்ளிகள், பிம்பின், அதிகப்படியான எண்ணெய் பசை போன்றவை நீங்கிவிடும்.
ரோஜாவை அரைத்து, சந்தனப் பொடியுடன் சேர்த்து கலந்து, ரோஸ் வாட்டர் மற்றும் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பாலால் முகத்தில் கழுவி, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறெல்லாம் செய்து வந்தால், முகம் நன்கு பொலிவோடு, அழகாக மின்னும்.
ரோஜாப்பூக்களின் இதழ்களை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை அரைத்து பேஸ்ட் போல் செய்து, சிறிது தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை மற்றும் வறட்சியான சருமத்திற்கு சிறந்தது.
ரோஜாவின் இதழ்களை நீரில் 30 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை எடுத்து, ஓரளவு அரைத்து, அத்துடன் ஓட்ஸை பொடி செய்து போட்டு, முகத்திற்கு தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். முக்கியம், இந்த ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் செய்யும் முன், முகத்தை நீரில் கழுவி, பின் பாலில் ஒருமுறை கழுவி, ரோஸ் வாட்டர் வைத்து துடைத்து, பின் முகத்திற்கு இந்த பேக் போட்டு, காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
ரோஜா இதழ்களை அரைத்து, அதில் கடலை மாவு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, சிறிது ரோஸ் வாட்டர் ஊற்றி, கெட்டியான பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, காய வைத்து, பின் பாலால் கழுவி, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இதனால் முகம் நன்கு மென்மையாகவும், அழகாகவும் காணப்படும்.
பருக்கள் மற்றும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இந்த ஃபேஸ் பேக் சரியானதாக இருக்கும். இந்த ஃபேஸ் பேக்கிற்கு ரோஜாவின் இதழ்களை அரைத்து, சந்தனப் பொடி சேர்த்து கலந்து, ரோஸ் வாட்டர் மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் பருக்கள், கரும்புள்ளிகள், பிம்பின், அதிகப்படியான எண்ணெய் பசை போன்றவை நீங்கிவிடும்.
ரோஜாவை அரைத்து, சந்தனப் பொடியுடன் சேர்த்து கலந்து, ரோஸ் வாட்டர் மற்றும் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பாலால் முகத்தில் கழுவி, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறெல்லாம் செய்து வந்தால், முகம் நன்கு பொலிவோடு, அழகாக மின்னும்.
வீட்டிலேயே நேச்சுரல் ஷாம்பு தயாரித்து, அதைக் கொண்டு தலை முடியை அலசினால், மயிர் கால்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, தலை முடியின் ஆரோக்கியம் மேம்படும். இங்கு தலை முடி உதிர்வை தடுக்கும் நேச்சுரல் ஷாம்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தலைமுடி வளர்வதில்லை என்று ஏங்குவோர் பலர். ஆனால் நாம் தற்போது பயன்படுத்தி வரும் ஷாம்பு, கண்டிஷனர்களில் உள்ள கெமிக்கல்களால் தலை முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, தலைமுடி உதிர்கிறதே தவிர வளர்வதில்லை. இருப்பினும் வீட்டிலேயே நேச்சுரல் ஷாம்பு தயாரித்து, அதைக் கொண்டு தலை முடியை அலசினால், கெமிக்கல்களால் மயிர் கால்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, தலை முடியின் ஆரோக்கியம் மேம்படும். இங்கு தலை முடியின் வளர்ச்சியை வேகமாக்கும் ஓர் நேச்சுரல் ஷாம்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
பேக்கிங் சோடா - 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 9 டேபிள் ஸ்பூன்
பயன் படுத்தும் முறை:
பேக்கிங் சோடாவை தண்ணீர் சேர்த்து கலந்து, வறட்சியான அல்லது ஈரமான தலை முடியில் தடவி, 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள அளவு நீளமான முடி உள்ளவர்களுக்கு தான். உங்கள் முடியின் நீளத்திற்கு ஏற்ப பேக்கிங் சோடாவையும், நீரையும் எடுத்து கலந்து பயன்படுத்துங்கள்.
பின்பு 1 பங்கு ஆப்பிள் சீடர் வினிகரை 4 பங்கு நீரில் கலந்து, அத்துடன் வேண்டுமானால் வாசனைமிக்க எண்ணெய் எதையேனும் சேர்த்து தலைமுடியை அலச வேண்டும். பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும். முக்கியமாக இப்படி செய்யும் போது, கண்களில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த முறையின் போது, நுரை ஏதும் வராது. ஆனால் இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வந்தால், உங்கள் தலைமுடியின் தரம் அதிகரித்திருப்பதுடன், தலை முடியின் வளர்ச்சியிலும் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
நீங்கள் வாங்கியுள்ள ஷாம்புவில் இருக்கும் கெமிக்கல் தலைமுடியை பாதிக்காமல் இருக்க வேண்டுமானால், ஷாம்புவை நீரில் கலந்து, அதோடு சிறிது பேக்கிங் சோடாவை சேர்த்துக் கலந்து பயன்படுத்தினால், பொடுகு உடனே நீங்கி, தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பேக்கிங் சோடா - 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 9 டேபிள் ஸ்பூன்
பயன் படுத்தும் முறை:
பேக்கிங் சோடாவை தண்ணீர் சேர்த்து கலந்து, வறட்சியான அல்லது ஈரமான தலை முடியில் தடவி, 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள அளவு நீளமான முடி உள்ளவர்களுக்கு தான். உங்கள் முடியின் நீளத்திற்கு ஏற்ப பேக்கிங் சோடாவையும், நீரையும் எடுத்து கலந்து பயன்படுத்துங்கள்.
பின்பு 1 பங்கு ஆப்பிள் சீடர் வினிகரை 4 பங்கு நீரில் கலந்து, அத்துடன் வேண்டுமானால் வாசனைமிக்க எண்ணெய் எதையேனும் சேர்த்து தலைமுடியை அலச வேண்டும். பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும். முக்கியமாக இப்படி செய்யும் போது, கண்களில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த முறையின் போது, நுரை ஏதும் வராது. ஆனால் இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வந்தால், உங்கள் தலைமுடியின் தரம் அதிகரித்திருப்பதுடன், தலை முடியின் வளர்ச்சியிலும் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
நீங்கள் வாங்கியுள்ள ஷாம்புவில் இருக்கும் கெமிக்கல் தலைமுடியை பாதிக்காமல் இருக்க வேண்டுமானால், ஷாம்புவை நீரில் கலந்து, அதோடு சிறிது பேக்கிங் சோடாவை சேர்த்துக் கலந்து பயன்படுத்தினால், பொடுகு உடனே நீங்கி, தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஒவ்வொரு வரும் மற்றவர்கள் முன்பு அழகாக காட்சியளிக்க கற்றாழையுடன் இந்த பொருட்களை சேர்த்து தினமும் முகத்திற்கு மாஸ்க் போடுங்கள். அப்புறம் பாருங்க நீங்க அழகு ராணியாக ஜொலிப்பீர்கள்.
ஒவ்வொரு வரும் மற்றவர்கள் முன்பு அழகாக காட்சியளிக்க வேண்டுமென்று நினைப்போம். அதற்காக பல முயற்சிகளையும் மேற்கொள்வோம். குறிப்பாக சற்று கருப்பாக இருப்பவர்கள், வெள்ளையாவதற்கு பல முயற்சிகளை எடுப்பார்கள். மேலும் வேறு வழிகள் ஏதேனும் உள்ளதா என்றும் தேடுவார்கள். நீங்களும் அப்படி வெள்ளையாக வழிகளைத் தேடுபவரா? அப்படி யெனில் எளிதில் கிடைக்கும் கற்றாழையைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போடுங்கள்.
கற்றாழை மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஓர் அற்புதமான பொருள். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகளும் விரைவில் நீங்கும். சரி, இப்போது வெள்ளையாவதற்கு கற்றாழையைக் கொண்டு எப்படி யெல்லாம் மாஸ்க் போடலாம் என்று பார்ப்போம்.
1 . சிறிது கற்றாழை ஜெல்லுடன், சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமைகள் அகலும்.
2 . ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவும் முன், சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முதுமைப் புள்ளிகள் போன் றவை மறைந்து, முகமும் பொலிவோடு காணப்படும்.
3 . இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தினருக்கு பொருந்தமானவை. அதற்கு கற்றாழை இலையை எடுத்து, அதன் கூர்மையான முனைகளை கத்தியால் நீக்கி விட்டு, நீரில் போட்டு வேக வைத்து இறக்கி, அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
4 . உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால் கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக்காய் சாறு, தயிர் மற்றும் ரோஸ் ஆயில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, முகத்தின் பொலிவை அதிகரிக்கும்.
5 . இந்த ஃபேஸ் பேக் வறட்சியான சருமத்திற்கு ஏற்றது. அதற்கு கற்றாழை ஜெல்லுடன், காட்டேஜ் சீஸ், பேரிச்சம் பழம் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
6 . இந்த ஃபேஸ் பேக் சரும நிறத்தை அதிகரிப்பதோடு, முகத்தை புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் வெளிக்காட்டும். அதற்கு கற்றாழை ஜெல்லுடன் மாம்பழ கூழ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
7 . வெள்ளரிக் காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வர, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பிரகாசமாக இருக்கும்.
கற்றாழை மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஓர் அற்புதமான பொருள். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகளும் விரைவில் நீங்கும். சரி, இப்போது வெள்ளையாவதற்கு கற்றாழையைக் கொண்டு எப்படி யெல்லாம் மாஸ்க் போடலாம் என்று பார்ப்போம்.
1 . சிறிது கற்றாழை ஜெல்லுடன், சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமைகள் அகலும்.
2 . ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவும் முன், சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முதுமைப் புள்ளிகள் போன் றவை மறைந்து, முகமும் பொலிவோடு காணப்படும்.
3 . இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தினருக்கு பொருந்தமானவை. அதற்கு கற்றாழை இலையை எடுத்து, அதன் கூர்மையான முனைகளை கத்தியால் நீக்கி விட்டு, நீரில் போட்டு வேக வைத்து இறக்கி, அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
4 . உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால் கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக்காய் சாறு, தயிர் மற்றும் ரோஸ் ஆயில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, முகத்தின் பொலிவை அதிகரிக்கும்.
5 . இந்த ஃபேஸ் பேக் வறட்சியான சருமத்திற்கு ஏற்றது. அதற்கு கற்றாழை ஜெல்லுடன், காட்டேஜ் சீஸ், பேரிச்சம் பழம் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
6 . இந்த ஃபேஸ் பேக் சரும நிறத்தை அதிகரிப்பதோடு, முகத்தை புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் வெளிக்காட்டும். அதற்கு கற்றாழை ஜெல்லுடன் மாம்பழ கூழ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
7 . வெள்ளரிக் காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வர, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பிரகாசமாக இருக்கும்.
நீங்கள் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கிற காய்கறிகளில் ஒளிந்திருக்கும் அழகுத் தன்மையையும் தெரிந்து கொள்ளுங்கள். சமையலுக்குப் போக தினம் ஒரு பகுதியை அழகுக்கும் ஒதுக்குங்கள்
நீங்கள் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கிற காய்கள் தான் எல்லாம். விதம் விதமாய் அவற்றை சமைத்து சாப்பிடுகிற நீங்கள், அவற்றில் ஒளிந்திருக்கும் அழகுத் தன்மையையும் தெரிந்து கொள்ளுங்கள். சமையலுக்குப் போக தினம் ஒரு பகுதியை அழகுக்கும் ஒதுக்குவீர்கள்.
கேரட்:
விட்டமின் ஏ அதிகமுள்ள காய் இது சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டது. கேரட்டை பால்விட்டு விழுதாக அரைத்து, முகத்துக்கு பேக் மாதிரிப் போட்டுக் கழுவினால், நிறம் கூடும். கேரட் சாற்றுடன், தேன் கலந்து முகத்தில் போட்டாலும் நிறம் கூடும்.
உருளைக் கிழங்கு:
இதன் சாறு எடுத்து கரும்புள்ளிகளின் மேல் தடவ. அவை மறையும். கண்களுக்கடியில் உள்ள கருவளையங்கள் மறையும். உருளைக் கிழங்கை வேக வைத்து, மசித்து அத்துடன் இரண்டு ஸ்பூன் பால், நான்கு துளிகள் தேன் கலந்து முகத்தில் தடவினாலும் நிறம் கூடும்.
முட்டைக்கோஸ்:
எக்கச்சக்க தாதுப் பொருட்கள் அடங்கியது இது. இதை நன்றாக வேகவிட்டு, அந்தத் தண்ணீரீல் முகம் கழுவினால், முகம் மாசு மறுவின்றி பளபளக்கும்.
புதினா:
இதன் சாற்றுடன், சம அளவு தண்ணீர் கலந்து பருக்களின் மேல் போட, அவை விட்டால் போதும் என ஓடும். கரும்புள்ளிகளும் மறையும்.
கொத்தமல்லி:
தினம் இரவில் இதைக் கொஞ்சம் கசக்கி, அந்தச் சாற்றை உதடுகளில் தடவி வர, லிப்ஸ்டிக் போடாமலேயே உங்கள் உதடுகள் சிவப்பாகும்.
அரைக்கீரை:
அரைக்கீரையின் சாறெடுத்து அத்துடன் கொஞ்சம் மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவிப் பாருங்கள். பிளீச் செய்தது மாதிரி உங்கள் முகம் பளிச்சென்றாகும்.
கேரட்:
விட்டமின் ஏ அதிகமுள்ள காய் இது சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டது. கேரட்டை பால்விட்டு விழுதாக அரைத்து, முகத்துக்கு பேக் மாதிரிப் போட்டுக் கழுவினால், நிறம் கூடும். கேரட் சாற்றுடன், தேன் கலந்து முகத்தில் போட்டாலும் நிறம் கூடும்.
உருளைக் கிழங்கு:
இதன் சாறு எடுத்து கரும்புள்ளிகளின் மேல் தடவ. அவை மறையும். கண்களுக்கடியில் உள்ள கருவளையங்கள் மறையும். உருளைக் கிழங்கை வேக வைத்து, மசித்து அத்துடன் இரண்டு ஸ்பூன் பால், நான்கு துளிகள் தேன் கலந்து முகத்தில் தடவினாலும் நிறம் கூடும்.
முட்டைக்கோஸ்:
எக்கச்சக்க தாதுப் பொருட்கள் அடங்கியது இது. இதை நன்றாக வேகவிட்டு, அந்தத் தண்ணீரீல் முகம் கழுவினால், முகம் மாசு மறுவின்றி பளபளக்கும்.
புதினா:
இதன் சாற்றுடன், சம அளவு தண்ணீர் கலந்து பருக்களின் மேல் போட, அவை விட்டால் போதும் என ஓடும். கரும்புள்ளிகளும் மறையும்.
கொத்தமல்லி:
தினம் இரவில் இதைக் கொஞ்சம் கசக்கி, அந்தச் சாற்றை உதடுகளில் தடவி வர, லிப்ஸ்டிக் போடாமலேயே உங்கள் உதடுகள் சிவப்பாகும்.
அரைக்கீரை:
அரைக்கீரையின் சாறெடுத்து அத்துடன் கொஞ்சம் மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவிப் பாருங்கள். பிளீச் செய்தது மாதிரி உங்கள் முகம் பளிச்சென்றாகும்.
இந்த பொருட்களை போட்டு சருத்திற்கு ஆவி பிடித்தால் அவை சருமத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, தேவையான ஈரப்பதத்தைக் கொடுத்து முகத்தை ஜொலிக்க வைக்கும்.
குளிர்காலம், கோடைக்காலம், மழைக்காலம் என பருவ காலங்கள் மாறும் போது நம்முடைய உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, சரும அழகும் அதே அளவுக்குப் பாதிக்கப்படுகிறது. பருவ கால மாற்றங்களால் நமக்கு ஏற்படுகிற முதல் பிரச்சினை சரும வறட்சி தான். அந்த சரும வறட்சியைப் போக்குவதற்கான மிகச்சிறந்த தீர்வாக மஞ்சள் இருக்கிறது. இது சருமத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, தேவையான ஈரப்பதத்தைக் கொடுக்கிறது.
மூன்று கப் அளவுக்கு தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வையுங்கள். அப்படி கொதிக்க தண்ணீரில் பசும் மஞ்சள் கிழங்கை ஒரு இன்ஞ் அளவுக்கு எடுத்து அரைத்து அதில் கலந்து சிறிது நேரம் கலந்து கொதிக்க வையுங்கள். அப்படி கொதிக்கிற தண்ணீரை எடுத்து நன்கு ஆவி பிடியுங்கள். சரும துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.
இந்த ஆவி பிடிக்கிற தண்ணீருக்குள் வெறுமனே மஞ்சள் கிழங்கு மட்டும் தான் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதனுடன் சேர்த்து ஒரு கைப்பிடி அளவுக்கு துளசி இலைகளையும் போட்டுக் கொள்ளலாம்.
ஆவி பிடிப்பதற்கு எலுமிச்சையும் மிகச் சிறந்த பொருள். பொதுவாக ஆவி பிடிக்கிற பொழுது, அதனுள் சிறிதளவு எலுமிச்சை இலைகளைப் போடுங்கள். ஜலதோஷம், தலையில் நீர் கோர்த்தல் போன்ற பிரச்சினைகள் கூட குணமாகி விடும். எலுமிச்சை இலைகள் கிடைக்காதவர்கள் அரை மூடி எலுமிச்சை சாறைக்கூட சேர்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் எலுமிச்சை பழத்தை சாறெடுத்து விட்டு, தோல்களைத் தூக்கி கீழே போட்டு விடாதீர்கள். அதை பத்திரப்படுத்தி வைத்து அந்த தோல்களைக் கூட தண்ணீரோடு சேர்த்து கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம்.
பொதுவா ஆவி பிடித்த பின்னால் நாம் அப்படியே டவலில் துடைத்துக் கொண்டு, அடுத்த வேலை பார்க்கக் கிளம்பி விடுகிறோம். ஆனால் அப்படி செய்ய கூடாது. ஆவி பிடித்து முடித்த பின்பு, துண்டால் துடைத்துக் கொண்டு பின் ஐஸ் கட்டியை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்கு தேய்க்க வேண்டும்.
ஆவி பிடித்த பின்னர், நம்முடைய முகத்தில் உள்ள சருமத் துவாரங்கள் விரிவடையாமல் இருக்க வேண்டுமென்றால் நிச்சயம் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது அவசியம். அதன்பின் ஏதாவது ஒரு பேஸ்பேக் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவி விடுங்கள். உங்கள் முகம் தேவதை போல ஜொலிக்கும்.
மூன்று கப் அளவுக்கு தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வையுங்கள். அப்படி கொதிக்க தண்ணீரில் பசும் மஞ்சள் கிழங்கை ஒரு இன்ஞ் அளவுக்கு எடுத்து அரைத்து அதில் கலந்து சிறிது நேரம் கலந்து கொதிக்க வையுங்கள். அப்படி கொதிக்கிற தண்ணீரை எடுத்து நன்கு ஆவி பிடியுங்கள். சரும துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.
இந்த ஆவி பிடிக்கிற தண்ணீருக்குள் வெறுமனே மஞ்சள் கிழங்கு மட்டும் தான் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதனுடன் சேர்த்து ஒரு கைப்பிடி அளவுக்கு துளசி இலைகளையும் போட்டுக் கொள்ளலாம்.
ஆவி பிடிப்பதற்கு எலுமிச்சையும் மிகச் சிறந்த பொருள். பொதுவாக ஆவி பிடிக்கிற பொழுது, அதனுள் சிறிதளவு எலுமிச்சை இலைகளைப் போடுங்கள். ஜலதோஷம், தலையில் நீர் கோர்த்தல் போன்ற பிரச்சினைகள் கூட குணமாகி விடும். எலுமிச்சை இலைகள் கிடைக்காதவர்கள் அரை மூடி எலுமிச்சை சாறைக்கூட சேர்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் எலுமிச்சை பழத்தை சாறெடுத்து விட்டு, தோல்களைத் தூக்கி கீழே போட்டு விடாதீர்கள். அதை பத்திரப்படுத்தி வைத்து அந்த தோல்களைக் கூட தண்ணீரோடு சேர்த்து கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம்.
பொதுவா ஆவி பிடித்த பின்னால் நாம் அப்படியே டவலில் துடைத்துக் கொண்டு, அடுத்த வேலை பார்க்கக் கிளம்பி விடுகிறோம். ஆனால் அப்படி செய்ய கூடாது. ஆவி பிடித்து முடித்த பின்பு, துண்டால் துடைத்துக் கொண்டு பின் ஐஸ் கட்டியை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்கு தேய்க்க வேண்டும்.
ஆவி பிடித்த பின்னர், நம்முடைய முகத்தில் உள்ள சருமத் துவாரங்கள் விரிவடையாமல் இருக்க வேண்டுமென்றால் நிச்சயம் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது அவசியம். அதன்பின் ஏதாவது ஒரு பேஸ்பேக் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவி விடுங்கள். உங்கள் முகம் தேவதை போல ஜொலிக்கும்.
சருமத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு சரும முடிகளை நீக்குங்கள்.
சருமத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு சரும முடிகளை நீக்குங்கள். இங்கு அப்படி சரும முடிகளை நீக்குவதற்கு பயன்படும் ஒருசில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி, சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவததோடு, அதன் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துங்கள்.
• சர்க்கரையில் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து, முடி வளரும் திசையை நோக்கி தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
• 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சருமத்தின் தேவையற்ற இடங்களில் வளரும் முடியின் மீது தடவி, 10-15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இதனையும் வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், நல்ல மாற்றம் தெரியும்.
• மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் முடி வளரும் இடத்தில் தடவி, சிறிது நேரம் வட்ட சுழற்சியில் தேய்த்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.
• ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில், 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து, கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, சருமத்தில் தடவி 10 நிமிடம் கழித்த பின் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்ய வேண்டும்.
• தயிரில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளானது அகலும்.
• சர்க்கரையில் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து, முடி வளரும் திசையை நோக்கி தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
• 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சருமத்தின் தேவையற்ற இடங்களில் வளரும் முடியின் மீது தடவி, 10-15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இதனையும் வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், நல்ல மாற்றம் தெரியும்.
• மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் முடி வளரும் இடத்தில் தடவி, சிறிது நேரம் வட்ட சுழற்சியில் தேய்த்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.
• ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில், 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து, கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, சருமத்தில் தடவி 10 நிமிடம் கழித்த பின் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்ய வேண்டும்.
• தயிரில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளானது அகலும்.






