என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ஸ்நாக்ஸ் பிரெட் பக்கோடா. இன்று இந்த பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் - 5 துண்டுகள்
    வெங்காயம் - 2 (நறுக்கியது)
    இஞ்சி துண்டு - சிறிய துண்டு
    மிளகாய் - 3
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய், தண்ணீர்- தேவைக்கு
    உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    ப.மிளகாய்,  கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பிரெட்டை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    பிரெட் துண்டுகளுடன் வெங்காயம், இஞ்சி, மிளகாய், உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பிரெட் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக பரவலாக கிள்ளி போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    சுவையான பிரெட் பக்கோடா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கனை வைத்து வித்தியாசமான டெவில் சிக்கன் ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 200 கிராம்
    பஜ்ஜி மிளகாய் - 2 (மீடியம் சைஸ் துண்டுகள்)
    குடை மிளகாய் - 1 (மீடியம் சைஸ் துண்டுகள்)
    இஞ்சி-பூண்டு விழுது - 5 கிராம்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி சாஸ் - 50 கிராம்
    இடித்த மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
    வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
    சர்க்கரை - 1 டீஸ்பூன்
    பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 10 கிராம்
    முட்டை - 1
    மைதா மாவு - 50 கிராம்
    கார்ன்ஃப்ளார் - 100 கிராம்
    வெங்காயத்தாள் - 10 கிராம்
    தக்காளி - 1
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    பெரிய வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயத்தாள், தக்காளியை பெடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை நன்றாக அடித்து வைக்கவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    சிக்கன் துண்டுகளைக் கழுவி, மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, உடைத்த முட்டை, இஞ்சி, பூண்டு விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கனை போட்டு மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.

    இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம், குடைமிளகாய், பஜ்ஜி மிளகாய் போட்டு வதக்கவும்.

    இதில் சிறிது தண்ணீர் சேர்த்து தக்காளி சாஸ், இடித்த மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள் சேர்க்கவும்.

    இத்துடன் கடைசியாக பொரித்த சிக்கன், தக்காளி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்து இறக்கவும்.

    சூப்பரான டெவில் சிக்கன் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆட்டு மண்ணீரலில் (சுவரொட்டி) அதிகளவு இரும்புசத்து நிறைந்துள்ளது. இன்று இந்த சுவரொட்டி கறி பிரட்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஆட்டு சுவரொட்டி - கால் கிலோ
    சின்ன வெங்காயம் - 150 கிராம்
    பச்சை மிளகாய் - 2

    அரைக்க

    தேங்காய் - 2 துண்டு
    மிளகு - இரண்டு தேக்கரண்டி
    சீரகம் - ஒரு தேக்கரண்டி
    நல்லெண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    ஆட்டு சுவரொட்டியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை சற்று தூக்கலாக விட்டு சூடானதும் சுத்தம் செய்த ஆட்டு சுவரொட்டியை போட்டு நன்கு வதக்கவும்.

    பிறகு பொதியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை  மிளகாய் சேர்த்து லேசாக தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    சிறிது வாசம் வந்ததும் அரைத்த தேங்காய் விழுதுகளைச் சேர்த்து பச்சை வாசம் போனபிறகு இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சுவரொட்டி கறி பிரட்டல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மாலை நேரத்தில் சாப்பிட சூப்பரான சிக்கன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ  
    மிளகாய் தூள் - தேவைக்கு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    பஜ்ஜி மாவு - 3 டேபிள்ஸ்பூன்
    அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய், தண்ணீர் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு
    எலுமிச்சை சாறு - சிறிதளவு



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த சிக்கனுடன் சிறிதளவு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் அதனுடன் அரிசி மாவு, பஜ்ஜி மாவு, மிளகாய் தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து கெட்டி பதத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் மாவு கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பக்கோடாவாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சிக்கன் பக்கோடா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் மட்டன் என்றால் சாப்பிட மறுப்பார்கள். இன்று மட்டனை வைத்து குழந்தைகள் சாப்பிடும் வகையில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாமல் கொத்திய மட்டன் - 200 கிராம்
    கடலைப்பருப்பு - 50 கிராம்
    சோம்பு - 10 கிராம்
    கரம்மசாலாத் தூள் - 2 கிராம்
    பூண்டு - 50 கிராம்
    பச்சைமிளகாய் - 3
    கறிவேப்பிலை - 3 ஈர்க்கு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    சீரகம் - 5 கிராம்
    வெங்காயம் - 25 கிராம்
    பொட்டுக்கடலை (லேசாகப் பொடிக்கவும்) - 20 கிராம்
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
    பெருங்காயம் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    எலும்பில்லாமல் கொத்திய மட்டனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பவுலில் கடலைப்பருப்பு, சோம்பு, சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து ஊறவைத்து பின்பு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த விழுதுடன் கொத்திய ஆட்டுக்கறியையும் போட்டு அரைத்து தனியாக வைக்கவும்.

    பொட்டுக்கடலை, கரம் மசாலாத்தூள், பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த மட்டன் விழுது, பொட்டுக்கடலை விழுது, உப்பு சேர்த்து ஒன்றாகக் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து, தட்டையாகத் தட்டவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள உருண்டைகளை வடைகளாக தட்டி போட்டு எண்ணெயில் போட்டு பொரித்து சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் வடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காபி, டீயுடன் சாப்பிட சூப்பராக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு பிரெட் போண்டா. இன்று இந்த போண்டாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய பிரட் துண்டுகள் - 10 (ஓரம் நீக்கவும்),  
    எண்ணெய் - தேவையான அளவு.

    ஸ்டஃப் செய்ய :

    உருளைக்கிழங்கு - 2 ,  
    வெங்காயம், தக்காளி - தலா ஒன்று,
    மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) - சிறிதளவு,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    முந்திரி - 10 (துண்டுகளாக்கவும்),
    நறுக்கிய புதினா - ஒரு கைப்பிடி அளவு,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேக வைத்து துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளிவை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் உப்பு, மஞ்சள்தூள், புதினா, முந்திரி, மல்லித்தூள், மிளகாய்த்தூள் மற்றும் வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

    இந்த கலவை சூடு ஆறியதும் பிசைந்து, சிறிய உருண்டைகள் செய்யவும்.

    பிரெட்டை நீரில் நனைத்து எடுத்து, உள்ளங்கையில் வைத்து அழுத்திப் பிழிந்து, உருட்டிய மாவை பிரெட் நடுவே வைத்து நன்கு மூடி, மீண்டும் உருட்டவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள போண்டாவை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

    சூப்பரான பிரெட் போண்டா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கடலைக் கறியை சப்பாத்தி, புட்டு, ஆப்பம், சப்பாத்தி மற்றும் சாதத்துடன் பரிமாறலாம். இன்று கேரளா ஸ்பெஷல் கடலைக்கறியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சின்ன கொண்டைக்கடலை - 2 கப்
    இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
    பெரிய வெங்காயம் -  2
    பச்சை மிளகாய் - 1
    தக்காளி - 1
    துருவிய தேங்காய் - முக்கால் கப்
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - 4 டீஸ்பூன்
    கேரளா கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2
    கறிவேப்பிலை - 8 இலைகள்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு



    செய்முறை :

    சின்ன கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து, அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தேங்காயைச் சேர்த்து குறைந்த தீயில் பொன்னிறமாகும் வரை வறுத்து ஆற விட்டு, மிக்ஸியில் விழுதாக தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து கடுகு, பெருங்காயத்தூள், இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

    இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

    அடுத்து இதில் வேக வைத்த கடலையை தண்ணீரோடு சேர்த்து, அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து சில நிமிடம் வேக விடவும்.

    இதில் இருந்து சிறிதளவு கொண்டைக்கடலையை எடுத்து, மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்து வெந்து கொண்டிருக்கும் கிரேவியில் சேர்த்துக் கிளறவும்.

    இத்துடன் கரம் மசாலாத் தூளைச் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் வரை வேக விடவும்.

    அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து கிரேவியில் சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை சேர்த்துத் தூவி இறக்கவும்.

    சூப்பரான கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும் பன்னீர் பக்கோடா. இன்று இந்த பன்னீர் பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 2 கப்
    கடலை மாவு - 2 கப்
    சாட் மசாலாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - தேவைக்கு
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய், தண்ணீர் - தேவைக்கு உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

    கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் இந்த கலவையை பன்னீர் துண்டுகளுடன் சேர்த்து கிளறிக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பன்னீர் கலவை துண்டுகளை போட்டு பொரித்தெடுத்து ருசிக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளா விசேஷங்களில் செய்யப்படும் உணவுகளில் காளன் முக்கியமானது. நேந்திரங்காய் கொண்டு செய்யும் இந்த காளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நேந்திரங்காய் - 2
    சேனைக்கிழங்கு - 250 கிராம்
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
    தயிர் - கால் கப்
    உப்பு - தேவையான அளவு

    அரைக்க:

    துருவிய தேங்காய் - முக்கால் கப்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்

    தாளிக்க:

    கடுகு - 1 டீஸ்பூன்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 1
    கறிவேப்பிலை - 5 இலைகள்



    செய்முறை:

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    நேந்திரங்காய், சேனைக்கிழங்கை தோல் நீக்கி கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    வெட்டிய காய்கறிகளை பிரஷர் குக்கரில் போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மிக குறைந்த அளவில் தண்ணீர் ஊற்றி, ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.

    தண்ணீர் இருந்தால், அடுப்பில் மீண்டும் வைத்து, தண்ணீரை வற்ற விடவும். அடுப்பை அணைத்து காய்கறிகளை லேசாக மசித்துக் கொள்ளவும்.

    மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் சிம்மில் வைத்து தயிரைச் சேர்த்துக் கலக்கவும்.

    அடுத்து அதில் வேக வைத்த காய்களை போட்டு அதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலக்கி, சில நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்கக் கொடுத்தவற்றை, தாளித்து கலவையில் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புலாவ், தோசை, நாண், சப்பாத்தி, பராத்தாவுக்கு ஏற்ற சைட் டிஷ் இந்த ஹைதராபாதி சிக்கன் மசாலா. இந்த இந்த மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 1 கிலோ
    துருவிய தேங்காய் - அரை கப்
    ஏலக்காய் - 4
    கிராம்பு - 6
    காய்ந்த மிளகாய் - 15
    சீரகம் - 1 டீஸ்பூன்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    தனியா (மல்லி) - 2 டீஸ்பூன்
    பட்டை - 2
    முந்திரி - 3 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
    நெய்/எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 2
    இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
    சர்க்கரை - 2 டீஸ்பூன்
    ஜாதிக்காய் - கால் டீஸ்பூன்
    எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
    டொமேட்டோ பியூரி - 200 மில்லி
    உப்பு - தேவையான அலவு
    தேங்காய்ப்பால் - 200 மில்லி



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் தேங்காய், கிராம்பு, ஏலக்காய், பட்டை, காய்ந்த மிளகாய், சீரகம், வெந்தயம், மல்லி (தனியா), ஜாதிக்காய், முந்திரி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து, நெய் விட்டு சூடானதும் வெங்காயத்தைச் சேர்த்து பிரவுன் நிறம் ஆகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

    இத்துடன் தேங்காய்ப்பால், டொமேட்டோ பியூரி, ஒரு கப் தண்ணீர் விட்டு வேக விடவும்.

    அடுத்து அதில் சிக்கன், உப்பு, சர்க்கரை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு சிக்கனை வேக விடவும்.

    சிக்கன் வெந்து கலவை க்ரீம் பதத்துக்கு வந்ததும், எலுமிச்சைச் சாறு ஊற்றி இறக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மீனில் குழம்பு, வறுவல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மீன் முட்டையில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதன் சுவை அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்

    மீன் முட்டை - 250 கிராம்
    சின்ன வெங்காயம் - 200 கிராம்
    பூண்டு - 10 பற்கள்
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    பச்சைமிளகாய் - 4
    இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் துருவல் - சிறிதளவு



    செய்முறை

    சின்ன வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீன் முட்டையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவேண்டும்.

    அடுத்து இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது நன்றாக வதங்கியதும சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவேண்டும்.

    பின் மீன் முட்டையை போட்டு கைவிடாமல் அடிபிடிக்காமல் கிளறவேண்டும். மீன் முட்டை நன்கு வெந்து உதிரி உதிரியாக ஆகும் வரை கிளறவேண்டும்.

    கடைசியாக தேங்காய் துருவல், கொத்தமல்லி தூவி ஒரு கிளறு கிளறிவிட்டு இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான மீன் முட்டை பொரியல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இடியாப்பம், தோசை, சப்பாத்தி, பூரி, சாதம், இட்லி என அனைத்து வகையான உணவுகளுக்கும் தொட்டுக்கொள்ள தோங்காய் பால் சொதி அருமையாக இருக்கும்.
    தேவையான பொருள்கள்

    உருளைக்கிழங்கு - 200 கிராம்,
    கேரட் - 150 கிராம்,
    பீன்ஸ் - 75 கிராம்,
    பச்சைமிளகாய் - 3,
    இஞ்சி - சிறிய துண்டு,
    வெங்காயம் - 100 கிராம்,
    தேங்காய் - 1,
    கறிவேப்பிலை - தேவையான அளவு,
    மிளகு - 1 டீஸ்பூன்,
    ஏலக்காய் - தேவையான அளவு,  
    பட்டை, கிராம்பு கசகசா,
    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை

    கேரட், பீன்ஸை சிறிதாக வெட்டி அரைவேக்காடு அளவில் வேக வைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    தேங்காயை துருவி முதல் பால், இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளுங்கள்.

    இஞ்சியைச் சிறிதாகவும், வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கிலும் வெட்டிக்கொள்ளுங்கள்.

    பட்டை, மிளகு, கிராம்பு, கசகசா, ஜாதிக்காய், ஏலக்காயை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் வேக வைத்த காய்கறிகள், உருளைக்கிழங்கை சேர்த்து, உப்புப் போட்டு இரண்டாம் பால் ஊற்றி வேகவையுங்கள்.

    அடுத்து அதில் அரைத்த பேஸ்ட் போட்டு, ஒரு கொதி வந்ததும், முதல் பாலை ஊற்றி இறக்குங்கள்.

    சூப்பரான சொதி ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×