என் மலர்tooltip icon

    சமையல்

    • வெண்டைக்காய் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
    • வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவ குணம் உள்ளது.

    தேவையான பொருட்கள்

    வெண்டைக்காய் - 10

    தயிர் - 1 1/2 கப்

    சிவப்பு மிளகாய் - 4

    கடுகு - கால் தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி

    கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    மசாலா அரைக்க

    சிறிய வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 1

    பூண்டு - 2 பற்கள்

    தேங்காய் துருவியது - 2 மேசைக்கரண்டி

    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

    சீரகத்தூள் - அரை தேக்கரண்டி

    செய்முறை

    வெண்டைக்காயை நன்றாக கழுவி துடைத்து விட்டு சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெண்டைக்காயை உப்பு சேர்த்து வறுக்கவும்

    மசாலா அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிச்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் புளித்த தயிருடன் அரைத்த மசாலா விழுதை சேர்த்து கலக்கவும்

    ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வறுத்த வெண்டைக்காய், தயிர் கலவை மற்றும் உப்பு சேர்த்து சிறிது கொதிக்க விடவும்

    சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்

    • கறிவேப்பிலையில் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
    • உடலில் உள்ள கொட்ட கொழுப்பை கரைக்கும்.

    தேவையான பொருட்கள்

    கறிவேப்பிலை - 2 கப்,

    காய்ந்த மிளகாய் - 10,

    மிளகு - 1 டேபிள்ஸ்பூன்,

    சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்,

    கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,

    உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,

    பெருங்காயம் - 1 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப,

    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை

    கறிவேப்பிலையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து கொள்ளவும்.

    அடுத்து அதில் மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு சிவக்க வறுத்து கொள்ளவும்.

    கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, ஆறிய பிறகு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    சூப்பரான சத்தான கறிவேப்பிலை பொடி ரெடி

    இந்தப் பொடியை சாதத்தில் சேர்த்து நெய்/எண்ணெய் கலந்து சாப்பிடலாம்.

    • இதை இட்லி, தோசை, பரோட்டா, சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறலாம்.
    • இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்

    தேவையான பொருட்கள்

    காளான் - 300 கிராம்

    தயிர் - 200 மில்லி கிராம்

    இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 2

    உலர்ந்த வெந்தய இலை (கசூரி மேத்தி) - 2 தேக்கரண்டி

    நறுக்கிய கொத்தமல்லி தழை - 200 கிராம்

    வெங்காயம் - 4

    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி

    கறி மசாலா பொடி - 1 தேக்கரண்டி

    முந்திரி பொடி - 2 தேக்கரண்டி

    உலர் தேங்காய் பொடி - 2 தேக்கரண்டி

    கசகசா - ½ தேக்கரண்டி

    தக்காளி - 2

    எண்ணெய் - 4 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    2 வெங்காயத்தை பொடிதாக நறுக்கி, வெண்ணெய்யில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    மீதம் உள்ள 2 வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும்.

    தக்காளியை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில் சுத்தப்படுத்திய காளான், தயிர், இஞ்சி-பூண்டு விழுது, பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய், உலர்ந்த வெந்தய இலை, கொத்தமல்லி தழை, நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறி மசாலா பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் பொடிதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கசகசா சேர்த்து சிறிது வதக்கவும். பின்பு அதில் முந்திரி பொடி, தேங்காய் பொடி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

    இதனுடன் அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.

    நன்றாக வதங்கியதும் அதில் ஊற வைத்த காளான் மசாலாவைக் கொட்டிக் கிளறவும்.

    தண்ணீர் சேர்க்காமல் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேக விடவும்.

    பின்பு சிறிது கொத்தமல்லி தழை மற்றும் முந்திரி பொடியை மேலே தூவவும்.

    இப்போது சுவையான முகலாய மஷ்ரூம் ரெடி.

    இதை இட்லி, தோசை, பரோட்டா அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறலாம்!

    • ஊத்தாப்பம் அனைவருக்கும் பிடிக்கும்.
    • இன்று பிரெட் வைத்து ஊத்தாப்பம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கடலை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 1 கப்,

    தயிர் - அரை கப்,

    பிரெட் - 5,

    வெங்காயம் - 2,

    பச்சைமிளகாய் - 5,

    கொத்தமல்லி - சிறிது,

    எண்ணெய், உப்பு, சீரகம் - தேவையான அளவு.

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பிரெட்டை பொடித்து போடவும்.

    அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, தயிர், சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த மாவை ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால் பிரெட் ஊத்தப்பம் தயார். சூடாக பரிமாறலாம்.

    இதற்கு தொட்டுகொள்ள தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.

    • சில்லி மசாலா இட்லி மாலை நேர சிற்றுண்டியாக உண்பதற்கு சுவையாக இருக்கும்.
    • மீதமான இட்லியில் உப்புமா செய்யாமல் இப்படி செய்தால் உடனே காலியாகிவிடும்.

    தேவையான பொருட்கள்

    குட்டி இட்லி - 20

    சமையல் எண்ணெய் - ½ கப்

    பெரிய வெங்காயம் - 2

    தக்காளி - 2

    இஞ்சி-பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி

    கொத்தமல்லி - சிறிது

    மிளகாய்த்தூள் - 1 ½ தேக்கரண்டி

    கரம் மசாலா - ½ தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

    காஷ்மீரி மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    டொமேட்டோ கெட்சப் - 1 தேக்கரண்டி

    சோயா சாஸ் - ½ தேக்கரண்டி

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    ஒரு பானில் ¼ கப் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ½ தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்த பின்னர் அதில் குட்டி இட்லிகளை சேர்த்து கிளறவும்.

    குறைவான தீயில் வைத்து இட்லியின் நிறம் மாறி லேசான பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை தனியே எடுத்து வைக்கவும்.

    அதே கடாயில் ¼ கப் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

    பின்னர் டொமேட்டோ கெட்சப் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் செய்து வைத்த இட்லியை சேர்த்து பிரட்டிக் விடவும். அடுப்பை குறைவான தீயில் வைக்கவும்.

    2 நிமிடங்களுக்கு பின்னர் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.

    சுவையான சில்லி மசாலா இட்லி தயார்.

    • பாசிப்பயிறு கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும்.
    • உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இந்த இட்லியை சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    பாசிப்பருப்பு - 1 கப்

    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    கடுகு - 1/2 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - சிறிதளவு

    பச்சை மிளகாய் - 3

    பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

    துருவிய கேரட் - 1/4 கப்

    கொத்தமல்லி - சிறிதளவு

    இஞ்சி - 1 துண்டு

    உப்பு - தேவையான அளவு

    Eno - 1 தேக்கரண்டி

    செய்முறை

    ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசிப்பருப்பு நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பேனில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், அரை தேக்கரண்டி கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்துக் வதக்கவும்.

    அடுத்து அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அதனுடன் துருவிய கேரட், கொத்தமல்லி, இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

    பின்னர் ஒரு தேக்கரண்டி Eno மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

    இட்லி தட்டில் எண்ணெய் தடவி தயார் செய்து வைத்துள்ள மாவில் இட்லி ஊற்றவும்.

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடானதும் இட்லி தட்டுகளை வைத்து மூடி வைக்கவும்.

    மிதமான சூட்டில் 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

    இப்போது சுவையான பாசிப்பருப்பு தாளிச்ச இட்லி தயார்.

    தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.

    • மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இது.
    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    முட்டையை நிரப்புவதற்கு

    முட்டை - 4

    எண்ணெய் - 3 தேக்கரண்டி

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 3

    உப்பு - 1/4 தேக்கரண்டி

    மிளகு - தேவைக்கு

    முட்டை மஞ்சள் கரு - 1

    கொத்துமல்லி தழை - சிறிதளவு

    மாவு தயாரிக்க

    கடலை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி

    உப்பு - 1/2 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    ஓமம் - 1/4 தேக்கரண்டி

    தண்ணீர்

    செய்முறை

    * வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முட்டையை வேக வைத்து கொள்ளவும். வெந்த முட்டையின் ஓடுகளை எடுத்து விட்டு முட்டையை இரண்டாக வெட்டி வைத்து மஞ்சள் கருவையும் வெள்ளை கருவையும் தனி தனியாக எடுத்து வைக்கவும்

    * முட்டையின் வெள்ளை கருவை நிரப்ப ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்தது வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகு தூள், முட்டையின் வேகவைத்த மஞ்சள் கரு, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    * தயாரான கலவையை முட்டையின் வெள்ளை கருவில் சேர்த்து வைக்கவும்

    * போண்டா மாவு தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு கரைத்து கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    * இப்போது சூடான மற்றும் சுவையான முட்டை போண்டா தயார்.

    • இந்த சட்னி இரண்டு நாட்கள் வரை கெட்டு போகாது.
    • இட்லி தோசைக்குக் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    வரமிளகாய் - 7 அல்லது மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி

    வெங்காயம் - 1 பெரியது

    தக்காளி - 1 பெரியது

    புளி - சிறிது,

    பூண்டு - 5 பல்

    உப்பு- 1 /2 தேக்கரண்டி

    தாளிக்க:

    எண்ணெய் - 3 தேக்கரண்டி

    கடுகு - 1 தேக்கரண்டி

    உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

    பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - 1 கொத்து

    செய்முறை :

    வெங்காயம் தோல் உரித்து பெரிதாக வெட்டிக்கொள்ளவும்

    தக்காளியைக்கழுவி பெரிதாக வெட்டிக்கொள்ளவும்

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், தக்காளி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய் என ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.

    நன்றாக வதங்கியதும் ஆற வைத்து மிச்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த அரைத்த சட்னியில் ஊற்றி கிளறி பரிமாறவும்.

    இப்போது காரசாரமான மிளகாய் சட்னி தயார்.

    இது இரண்டு நாட்கள் வரை கெடாதிருக்கும் ஆகையால் சுற்றுலா பயணத்திற்கு கூட எடுத்துச்செல்லலாம்.

    • கேழ்வரகில் சத்தான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று கேழ்வரகு பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 100 கிராம்,

    அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,

    தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்,

    வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 1

    இஞ்சி - சிறிய துண்டு

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,

    உப்பு - தேவையான அளவு,

    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி - கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்துக் கொள்ளவும்.

    * சூப்பரான சத்தான கேழ்வரகு பக்கோடா ரெடி.

    • உருளைக்கிழங்கில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று உருளைக்கிழங்கு அருமையான ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்

    மாவிற்கு…

    மைதா - அரை கப்,

    உப்பு - 1/2 டீஸ்பூன்,

    ஓமம் - 1/4 டீஸ்பூன்,

    எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,

    தண்ணீர் - தேவைக்கு.

    பூரணத்திற்கு…

    உருளைக்கிழங்கு - 1,

    பச்சை மிளகாய் - 2,

    கறிவேப்பிலை, கொத்தமல்லி, கடுகு - சிறிது,

    வெங்காயம் - 1,

    கடலை மாவு - 1 டீஸ்பூன்,

    உப்பு - 1/2 டீஸ்பூன்,

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,

    மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,

    பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து கையில் பிடிக்கும் பதம் வந்ததும் ஓமம், தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து அரை மணிநேரம் அப்படியே மூடி வைக்கவும்.

    பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்த பின், பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்கை, மஞ்சள் தூள், உப்பு, கடலை மாவு, கொத்தமல்லியுடன் சேர்த்து வதக்கி, அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கவும்.

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்திக் கல்லில் நீளவாக்கில் தேய்த்து கொள்ளவும். தேய்த்த மாவின் உள்பக்கம் கத்தியால் 3 பாகங்களாக கீறி விடவும்.

    பிறகு பூரணத்தை நீளவாக்கில் உருட்டி மாவின் நடுவில் வைத்து மூடி சாக்லெட்டாக ரெடி செய்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான ஆலு டோஃபி ரெடி.

    • வழக்கமான ஆம்லெட் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும்.
    • முட்டைப் பிரியர்களுக்கு கரண்டி ஆம்லெட் நல்ல மாற்று.

    தேவையான பொருட்கள் :

    முட்டை - 1

    சின்ன வெங்காயம் - கைப்பிடி

    ப.மிளகாய் - 1

    கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத்தூள் - சிறிதளவு

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    சின்னவெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், கறிவேப்பிலை, மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    ஒரு குழிக்கரண்டியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் முட்டை கலவையை ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம் வெந்ததும் எடுக்கவும்.

    இப்போது சூப்பரான கரண்டி ஆம்லெட் ரெடி.

    ஓட்டல்களில் ஒவ்வொருவருக்கும் இது போன்று செய்து கொடுக்க நேரமாகும் என்பதால், தற்போது தோசைக் கல்லிலேயே குழிகள் அமைக்கப்பட்டு அதிலேயே கரண்டி ஆம்லெட் சுடச்சுடத் தயார் செய்யப்படுகிறது.

    • ஒரு முட்டையில் 72 கலோரி மற்றும் 6 கிராம் புரதம் இருக்கிறது.
    • முட்டையை வைத்து ஏராளமான உணவு வகைகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    வேக வைத்த முட்டை- 4

    சாட் மசாலா- 1/2 டீஸ்பூன்

    சீரகத் தூள்- 1/4 டீஸ்பூன்

    இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்

    மிளகாய் தூள்- 1/2 டீஸ்பூன்

    சோள மாவு- ஒரு டீஸ்பூன்

    வெண்ணெய்- ஒரு டீஸ்பூன்

    மல்லித் தூள்- 1/2 டீஸ்பூன்

    கரம் மசாலா- 1/2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்

    உப்பு- 1/4 டீஸ்பூன்

    கொத்தமல்லி தழை- சிறிதளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    மசாலா செய்ய :

    வெங்காயம் - 1

    சாட் மசாலா- 1/2 டீஸ்பூன்

    தக்காளி - 1

    இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் பேஸ்ட்- ஒரு டீஸ்பூன்

    வெண்ணெய்- 2 டீஸ்பூன்

    மிளகாய் தூள்- 1/2 டீஸ்பூன்

    உப்பு- 1/4 டீஸ்பூன்

    கொத்தமல்லி தழை- சிறிதளவு

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    வேக வைத்த முட்டையை துருவிக் கொள்ளவும்.

    துருவிய முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காய விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சாட் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

    இப்போது இந்த கலவையில் சோள மாவு சேர்த்து உருண்டையாக பிடிக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

    இதே தோசைக்கல்லில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் வெங்காயம் விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி விழுது சேர்த்து கிளறவும்.

    இதனோடு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.

    ஒரு கொதி வந்தவுடன் மிளகாய் தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடலாம்.

    கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவவும்.

    இந்த சமயத்தில் நாம் தயார் செய்து வைத்த முட்டை கபாபை சேர்த்து விடலாம்.

    அவ்வளவு தான்… ருசியான முட்டை கபாப் தயார்.

    ×