என் மலர்
சமையல்
- சிக்கனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- நாளை ஞாயிற்றுக்கிழமை இந்த ரெசிபி செய்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
குடைமிளகாய் - சிறியது 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தக்காளி - 2
கொத்தமல்லி - சிறிது
உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
வறுத்து அரைப்பதற்கு...
மல்லி விதைகள் - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய - 3
பட்டை - 1 இன்ச்
செய்முறை:
* வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* தக்காளியை அரைத்து கொள்ளவும்.
* வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், குடைமிளகாயை சேர்த்து ஒருமுறை வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* சிக்கனை மஞ்சள் சேர்த்து நன்கு கழுவி பின்னர் அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியில் பாதியைப் போட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி ஊற வைத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி, உப்பு மற்றும் மீதமுள்ள வறுத்து அரைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
* பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் வதக்கி, 1 கப் நீர் ஊற்றி மூடி வைத்து 10-15 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும் அல்லது குக்கரில் போட்டு 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ளலாம்.
* இறுதியில் குக்கரைத் திறந்து, கிரேவி அதிகம் வேண்டுமானால் தேவையான அளவு நீர் சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு, வதக்கி வைத்துள்ள குடைமிளகாயையும் சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான கடாய் சிக்கன் கிரேவி தயார்.
- சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
- அரிசியை விட 8 மடங்கு அதிக இரும்புச்சத்து கம்பில் உள்ளது.
தேவையான பொருட்கள்
கம்பு - 1 கப்
உளுந்தம் பருப்பு - 1 குழிக்கரண்டி
வெந்தயம் - 2 ஸ்பூன்
கருப்பட்டி - 300 கிராம்
ஏலக்காய் - 2
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை
கம்பு, உளுந்து, வெந்தயத்தை நான்கு மணிநேரம் ஊற வைக்கவும்.
கருப்பட்டியை சிறு சிறு துண்டுகளாக நொறுக்கிக் கொள்ளவும்.
ஏலக்காயை ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும்.
ஊறிய கம்பை மிக்சியில் போட்டு அதனுடன் கருப்பட்டியை சேர்த்து அரைக்கவும்.
அடுத்து நசுக்கிய ஏலக்காயைச் சேர்த்து இட்லிப் பதத்தில் அரைத்து கொள்ளவும்.
இந்த மாவை ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.
குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடு ஏறியதும் குழிகளில் சிறிது எண்ணெய் தடவவும்.
- தென்னிந்திய விருந்துகளில் முக்கிய இடம் பிடிப்பது 'பாயாசம்'.
- இதில் பொட்டாசியம், கால்சியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளன.
தேவையான பொருட்கள்:
இளநீர் - 200 மில்லி லிட்டர்
இளம் தேங்காய் - 200 கிராம்
பால் - ½ லிட்டர்
சர்க்கரை - 200 கிராம்
மில்க்மெய்ட் - 1 கப்
சாரைப்பருப்பு - 2 டீஸ்பூன்
முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 8
ஏலக்காய்த்தூள் - ¼ டீஸ்பூன்
பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை
நெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பாதாம் பருப்பை ஊறவைத்து தோலுரிக்கவும்.
பின்பு முந்திரி, பாதாம், பிஸ்தா இவற்றை பொடிதாக நறுக்கவும்.
இளம் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு சிறிது பாலூற்றி நன்றாக அரைத்துக்கொள்ளவும். பின்பு அதில் இளநீரை சேர்த்துக் கலக்கவும்.
அடிப்பகுதி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடுபடுத்தவும்.
அதில் மில்க்மெய்ட் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பிறகு தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.
பிறகு அதில் பச்சைக்கற்பூரம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
வாணலியில் நெய் ஊற்றி சாரைப்பருப்பு, முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றைப் போட்டு மிதமான தீயில் வறுக்கவும். பின்பு அவற்றைப் பாலில் சேர்த்து கலக்கவும்.
10 நிமிடங்கள் கழித்து பாலை அடுப்பில் இருந்து இறக்கவும்.
பால் அறை வெப்பநிலைக்கு வந்ததும், அதில் இளநீர் மற்றும் இளம் தேங்காய் கலவையை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பிறகு இதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, 2 மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான 'இளநீர் பாயாசம்' தயார்.
- இந்த ரெசிபி வெளியே மொறு மொறு என்றும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.
- சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம்
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - ½ தேக்கரண்டி
சோள மாவு - 5 தேக்கரண்டி
ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறை - 100 கிராம்
பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பன்னீரை சிறிய சதுர வடிவ துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பன்னீர் துண்டுகள், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை, சிறிது மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறி 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் மீதமிருக்கும் மிளகு தூள், சோள மாவு, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டியில்லாமல் தோசை மாவு பதத்தில் கலக்கிக்கொள்ளவும்.
பின்னர் மசாலா கலந்திருக்கும் பன்னீர் துண்டுகளை, சோளமாவு கலவையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறையில் புரட்டி எடுத்து, மீண்டும் சோளமாவு கலவையில் தோய்த்து, எண்ணெய்யில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான மொறு மொறு பன்னீர் பாப்கார்ன் தயார்.
இதை தக்காளி சாசுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
- சூடான டீயுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
- குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
சமோசா - 3
அப்பளம் - 4
தயிர் - 3 மேஜைக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 1
கொத்தமல்லி இலை - சிறிதளவு
புதினா சட்னி - 2 தேக்கரண்டி
புளி சட்னி - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி
ஓமப் பொடி - 1 கப்
உப்பு - சுவைக்கு ஏற்ப
செய்முறை
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சூடான சமோசாவை சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட்டு கொள்ளவும்.
அப்பளத்தையும் நொறுக்கி போட்டு கொள்ளவும்.
தயிரை கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.
துண்டுகளாக உடைத்த சமோசாவை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் நன்றாக கலந்த தயிரை ஊற்றவும்.
அதன் மேல் அரைத்து வைத்த சட்னிகளை சேர்க்கவும்.
மசாலாவை விட இனிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் புளி சட்னியை அதிகம் சேர்க்கவும்.
அடுத்து அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து அலங்கரிக்கவும்.
கடைசியாக அதன் மேல் ஓமப் பொடியை தூவி பரிமாறவும்.
இப்போது சூப்பரான சமோசா சாட் ரெடி.
- சர்க்கரை நோயாளிகளுக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம்.
- உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு.
தேவையான பொருட்கள்
அரிசி - 1 கப்
கம்பு - 1 கப்
கொள்ளு - கால் கப்
காய்ந்த மிளகாய் - 5
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - சுவைக்கு
செய்முறை
அரிசியை, வெந்தயத்தை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
கொள்ளு, கம்பை நன்றாக கழுவி 8 மணிநேரம் ஊறவைக்கவும்.
நன்றாக ஊறியதும் அரிசியை, வெந்தயத்தை தனியாக அரைத்து கொள்ளவும்.
கொள்ளு, கம்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து அதனுடன் அரைத்த அரிசி மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
உப்பு சேர்த்து புளிக்க விடவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சூப்பரான கம்பு - கொள்ளு தோசை ரெடி.
- குழந்தைகளுக்கு ஏற்ற அருமையான டிபன் இது.
- இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
மைதா - 1 கப்
முட்டை - 2
டொமேட்டோ கெட்சப் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
வெள்ளரிக்காய் - 1
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி இலை - சிறிதளவு
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு - பாதி பழம்
உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், வெள்ளரிக்காயை நீளவாக்கில் மெல்லிதாக வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பாத்திரத்தில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
மற்றொரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், சாட் மசாலா தூள், எலுமிச்சைபழச்சாறு ஊற்றி கலந்து வைத்துக்கொள்ளவும்.
முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிரித்து பராத்தாவாக தேய்த்து வைக்கவும்.
தேய்த்த பராத்தாவை சூடான பானில் சேர்த்து இருபுறமும் நெய் ஊற்றி பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஒரு கரண்டி முட்டை கலவையை ஊற்றவும்.
பின்பு அதன் மேல் வேகவைத்த பராத்தாவை வைத்து இரண்டு பக்கமும் வேகவிடவும்.
வேகவைத்த பராத்தாவை தட்டில் வைத்து அதில் நடுவில் வெங்காய கலவையை வைத்து, பிறகு சாட் மசாலாவை தூவி அதன் மேல் டொமேட்டோ கெட்சப்பை ஊற்றவும்.
பராத்தாவை நன்கு இறுக்கமாக உருட்டி, பட்டர் பேப்பரில் சுருட்டி வைத்து சூடாக பரிமாறவும்.
இப்போது சூப்பரான சப்பாத்தி முட்டை மசாலா ரோல் தயார்!
- முட்டையில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று முட்டையில் பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 5
வெங்காயம் - 2
தக்காளி - 2
கேரட் - 1
முட்டைகோஸ் -
பச்சை மிளகாய் - 4
தனி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிதளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு- சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட், முட்டைகோஸை துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், முட்டைகோஸ், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் முட்டை கலவையை ஊற்றவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிவிடவும், இருபக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான முட்டை வெஜிடபிள் பணியாரம் தயார்!
- சமையலைப் பொருத்தவரையில் பக்குவம் என்பது மிக மிக முக்கியம்.
- ஐய்யங்கார் வீட்டு சாம்பார் ஆளை அசத்தும் சுவையில் இருக்கும்.
தேவையான பொருள்கள்
தனியா - கால் கிலோ
குண்டு மிளகாய் - 125 கிராம்
துவரம்பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
மிளகு - 25 கிராம்
வெந்தயம் - 10 கிராம்
விரளி மஞ்சள் - 25 கிராம்
செய்முறை
மேற்கண்ட பொருள்கள் அனைத்தையும் தனித்தனியாக மூன்று நாள் நல்ல சுல்லென்று அடிக்கும் வெயிலில் போட்டு உலர்த்த வேண்டும். பின்னர் தனித்தனியே எண்ணெய் எதுவும் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.
சூடாக இருக்கும் பொழுது பொடி திரிக்கக் கூடாது. வறுத்த அல்லது நன்கு காய வைத்த மசாலாப் பொருள்கள் சூடு ஆறியவுடன் அரவை மில்லில் கொடுத்து நைசாக அரைத் வாங்கிக் கொள்ளுங்கள்.
அரைத்த பொடியை அப்படியே சூடாக அடைத்து வைக்கக்கூடாது. அது விரைவில் கெட்டி தட்டியோ கெட்டுப் போகவோ வாய்ப்புண்டு. அதனால் சிறிது ஆறவிட்டு, டைட்டான கண்டெய்னரில் போட்டு சேமித்து வையுங்கள். தினசரி பயன்பாட்டுக்கு சிறிய டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் அய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி.
- ரவை உப்புமாவா என்று முகம் சுளிப்பவர்கள் கூட இந்த உப்புமாவை விரும்பி சாப்பிடுவார்கள்.
- சத்துக்கள் நிறைந்த இந்த உப்புமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
அரிசி நொய் தயாரிக்க:
பச்சரிசி – 1 கிலோ
துவரம்பருப்பு- கால் கிலோ
மிளகு, சீரகம்- தலா 10 கிராம்
பெருங்காயம் கட்டி- சிறிய கோலி அளவு.
செய்முறை:
பச்சரிசியைச் சுத்தம் செய்து நன்றாக கழுவி ஈரம் போக வெயிலில் காயவைக்கவும். துவரம் பருப்பையும் சுத்தம் செய்து கழுவி காய வைக்கவும். நன்றாகக் காய்ந்ததும் இரண்டையும் கலந்து மிளகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து மிஷினில் நொய்யாக உடைத்து வைத்துக் கொள்ளவும். ஆறு மாதங்கள் வரை இந்த அரிசி நொய் கெடாமல் இருக்கும்.
தேவையான பொருள்கள்:
நொய் அரிசி - 1 கப்,
தாளிக்க:
கடுகு- 1 டீஸ்பூன்,
உ.பருப்பு, க.பருப்பு – 1 தேக்கரண்டி,
வெந்தயம், சீரகம்- தலா 3 டீஸ்பூன்
வரமிளகாய் -2 பெருங்காயம்,
நல்லெண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு சேர்த்து பொரிந்ததும், உ.பருப்பு, க.பருப்பு, சீரகம், வரமிளகாய், வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் ஒருகப் அரிசி நொய்க்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்ததும் நொய் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு இருபது நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.
இப்போது சூப்பரான நொய் அரிசி உப்புமா ரெடி.
- பன்னீரில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவும்.
- தினசரி பன்னீர் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் - 300 கிராம்
ஷாஹி ஜீரா - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 6
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
தயிர் - 1 மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
கஸ்தூரி மேத்தி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 5
இஞ்சி நீளவாக்கில் - சிறிய துண்டு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு, நெய், எண்ணெய் - தேவைக்கேற்ப
தாளிக்க
பட்டை
கிராம்பு
பச்சை ஏலக்காய்
கருப்பு ஏலக்காய்
அன்னாசி பூ
பிரியாணி இலை
செய்முறை:
பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்
தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சி, ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் நறுக்கிய பன்னீரை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் நெய்யில் வறுத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ, ஷாஹி ஜீரா, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி விழுது, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், கடலை மாவு, உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
பின்பு அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி பச்சை வாசனை போய் சுருண்டு வரும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் அடித்த தயிர், கரம் மசாலா தூள், சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விட்ட பின்னர் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
அடுத்து மசாலாவில் கஸ்தூரி மேத்தி, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
கடைசியாக வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் குறைந்த தீயில் வைத்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்..
இப்போது தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா தயார்.
- காபியில் உள்ள கொழுப்பின் அளவு நீண்ட நேரத்திற்கு பசி ஏற்படாமல் தடுக்கும்.
- பட்டர் காபி குடல் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கிறது.
தேவையான பொருட்கள்:
தண்ணீர் - 1 கப்
பால் - 1 கப்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
காபி தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
செய்முறை:
* தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். கொதிக்க வைத்த தண்ணீரில் காபித்தூளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
* பின்னர் அதில் நன்றாக கொதிக்கும் பாலை சேர்த்து கலக்கவும்.
* அடுத்து உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். அல்லது மிக்சியில் போட்டு இந்த கலவை மிருதுவாகும் வரை சுமார் 3 முதல் 4 நிமிடங்கள் கலக்க வேண்டும்.
* காபி அதிக நுரை மற்றும் கிரீம் பதம் வரும் போது எடுத்து கண்ணாடி கப்பில் ஊற்றி பருகவும்.
* அவ்வளவுதான் உங்கள் பட்டர் காபியை 10 நிமிடங்களில் தயார் செய்து விடலாம்.
* பால் விரும்பாதவர்கள் பால் சேர்க்காமலும் செய்யலாம்.






