என் மலர்
சமையல்
- மழை நேரத்தில் சூடான காபி, டீயுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
- காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்துகொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - சிறியது 1
கேரட் - 1
கோஸ் - 100 கிராம்
பீன்ஸ் - 75 கிராம்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 250 கிராம்.
மேல்மாவுக்கு:
கடலை மாவு - 150 கிராம்,
அரிசி மாவு - 25 கிராம்,
உப்பு - சிறிதளவு.
செய்முறை:
காய்கறிகளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய காய்களை போட்டு நன்கு வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் நீர் சேர்த்து, தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் வெஜிடபிள் கலவை உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதை சாஸ் உடன் பரிமாறவும்.
தேங்காய் சட்னி, புதினா சட்னியும் தொட்டுக்கொள்ளலாம்.
- குடைமிளகாயில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று குடைமிளகாய் சேர்த்து சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1/2 கப்
குடைமிளகாய் - 2
சாம்பார் பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம், தக்காளி - தலா 1
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
புலி பேஸ்ட் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 5
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
துவரம் பருப்பு நன்றாக வேகவைத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒன்றரை கப் தண்ணீரில் புளி, சாம்பார் பொடி சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து அதில் குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி, சாம்பார் பொடி கரைசலை ஊற்றி பொடி வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
அடுத்து வேகவைத்த துவரம் பருப்பை அத்துடன் சேர்த்து அதற்கு தேவையான உப்பு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விடவும்.
இறுதியாக கொத்தமல்லி சேர்த்து 1 டீஸ்பூன் நெய் சேர்க்க சுவை மற்றும் வாசனை அதிகரிக்கும்.
சூப்பரான குடைமிளகாய் சாம்பார் ரெடி.
- கிறிஸ்துமஸ் என்றாலே கேக், பிரியாணி தான் ஸ்பெஷல்.
- சீரக சம்பா அரிசியில் மட்டன் பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
சீரக சம்பா அரிசி - 4 கப்
மட்டன் - அரை கிலோ
இஞ்சி, பூண்டு - 4 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி
தயிர் - அரை கப்
லெமன் - 1
புதினா - ஒரு கட்டு
கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
நெய் - அரை கப்
எண்ணெய் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கிராம்பு - 3
பட்டை - 3 சிறிய துண்டு
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - ஒன்று
சோம்பு - ஒரு ஸ்பூன்
செய்முறை :
* மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.
* அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
* தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு அரைத்து 4 கப் பால் எடுத்து வைக்கவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
* கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து வைக்கவும்.
* குக்கரில் மட்டனை போட்டு அதனுடன் கால் கப் தயிர், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது 2 ஸ்பூன், உப்பு போட்டு நன்றாக கலந்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்த பின் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.
* இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடங்கள் வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும்.
* அடுத்து அதில் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 8 கப் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.
* ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு அதனுடன் லெமன் சாறு சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து குக்கரை இறக்கவும்.
* பின்பு 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து ஒருமுறை கிளறி விட்டு பரிமாறவும்.
* சுவையான சீரக சம்பா மட்டன் பிரியாணி தயார்.
- கிறிஸ்துமஸ் என்றாலே கேக், பிரியாணி தான் ஸ்பெஷல்.
- இன்று பிளம் கேக் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 3
மைதா - 100 கிராம்
பட்டர் - 100 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
கார்ன் பிளார் - 2 ஸ்பூன்
ஓமம் தூள் - அரை ஸ்பூன்
திராட்சை - 30 கிராம்
சுக்குத் தூள் - அரை ஸ்பூன்
பால் - கால் கப்
முந்திரி, பிஸ்தா, வால்நட்- விருப்பத்திற்கேற்ப
செர்ரி பழம் - 50 கிராம்
செய்முறை:
சர்க்கரையை மிக்சி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
மைதா மாவினை சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பட்டரை உருக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
செர்ரி பழங்களை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
முந்திரி, பிஸ்தா மற்றும் வால்நட் போன்றவற்றை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கார்ன் பிளாரை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் பால் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும் .
பின் அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கூழ் போன்று காய்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது பாலினை அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் பொடித்த சர்க்கரையை சேர்த்து அதில் உருகிய பட்டர் சேர்த்து சாஃப்டாக பிசைய வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்றாக கலக்க வேண்டும். பின் முட்டையை மைதா மற்றும் சர்க்கரை கலவையில் ஊற்றி மீண்டும் பிசைய வேண்டும்.
பின் இந்த கலவையை பாலில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
பின் கேக் டின்னில் பட்டர் பேப்பர் தடவி கலவையை பாதி வரும் வரை ஊற்ற வேண்டும்.
வெட்டி வைத்துள்ள செர்ரி பழங்களை தூவி மீதி மீதி கலவையை ஊற்ற வேண்டும். அதன் மேல் பொடித்த நட்ஸ்களை தூவி விட வேண்டும்.
ப்ரீ ஹீட் செய்து கொண்ட ஓவனில் கேக் டின்னை வைத்து சுமார் நாற்பது நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். அவ்ளோதான் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் "பிளம் கேக்" ரெடி.
- குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
- இதை செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள்
தக்காளி - 10 பழுத்தது
தண்ணீர் - 1 கப்
கிராம்பு - 6
பட்டை - 1 துண்டு
மிளகு - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
வினிகர் - 1 தேக்கரண்டி
செய்முறை
தக்காளியை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
கடாயில் தண்ணீர் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, மிளகு, நறுக்கிய தக்காளி போட்டு கடாயை மூடி, 30 நிமிடம் வேகவிடவும்.
தக்காளி நன்கு வெந்ததும், இதை ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து அரைத்த தக்காளி விழுதை வடிகட்டவும்.
வேறொரு கடாயில், வடிகட்டிய தக்காளி விழுது ஊற்றி, கொதிக்கவிடவும்.
5 நிமிடம் கழித்து, இதில் உப்பு மற்றும் சர்க்கரை போட்டு கிண்டவும்.
தக்காளி கெட்சப்'பின் சுவையை சரி பார்த்து இறுதியாக வினிகர் சேர்த்து கிளறவும்.
கெட்சப்'பின் ஈரம் நீங்கி, கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.
தக்காளி கெட்சப் இப்பொழுது தயார்.
நன்கு ஆறியபின் கண்ணாடி ஜாடியில் போட்டு பிரிட்ஜ்ஜில் வைக்கவும். 1 மாதம் வரை கெட்டுப்போகாது.
- இன்று அனுமனுக்கு படைக்க நைவேத்தியத்தை செய்யலாம்.
- இந்த வடை செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள்
முழு கருப்பு உளுந்து - 1 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
செய்முறை
முழு உளுந்தை நன்றாக கழுவி ஐந்து மணி நேரம் ஊற வைத்து , தோலுடன் சிறிது கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
மிளகு, சீரகத்தை வெறும் கடாயில் வறுத்து, மிக்சியில் கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்.
அரைத்த மாவுடன் மிளகு, சீரகப்பொடி, உப்பு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவை மெல்லிய வடைகளாக, வாழை இலையில் தட்டிப் போட்டு போடவும்.
நன்றாக வெந்து பொன்னிறமாக முறுவலாக வந்ததும் எடுக்கவும்.
இப்போது சுவையான ஆஞ்சநேயர் கோவில் மிளகு வடை ரெடி.
- இந்த ரெசிபியை 10 நிமிடத்தில் செய்யலாம்.
- திடீரென விருந்தினர் வந்தால் இந்த ரெசிபி செய்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள் :
உளுந்து அப்பளம் அல்லது மிளகு அப்பளம் - 4,
கடலை மாவு - 100 கிராம்,
அரிசி மாவு - 20 கிராம்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
சமையல் சோடா- ஒரு சிட்டிகை,
பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு,
எண்ணெய் - 300 கிராம்.
செய்முறை:
ஒவ்வொரு அப்பளத்தையும் நான்காக கட் செய்துகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
இதில் ஒரு டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய் விட்டுக் கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அப்பளத் துண்டுகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இப்போது சூப்பரான அப்பள பஜ்ஜி ரெடி.
குறிப்பு: அப்பளத்தில் உப்பு இருக்கும் என்பதால், கவனமாக சற்று குறைவான உப்பை மாவில் சேர்க்கவும்.
- குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் இது.
- இதை செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி - 3/4 கப்
அரிசி மாவு - 1/2 கப்
கடலை மாவு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பன்னீர் - 1/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பன்னீரை துருவிக்கொள்ளவும்.
ஒரு பௌலில் மசித்த பச்சை பட்டாணியை போட்டு, அத்துடன் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பன்னீர், உப்பு, மற்றும் தண்ணீர் ஊற்றி, சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
பின் அந்த கலவையை கட்லெட் போல், தட்டையாகவும் சற்று தடிமனாகவும் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் ஓரளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள கட்லெட்டை, முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.
இதேப் போல் அனைத்து மாவையும் வேக வைத்து எடுத்தால், பச்சை பட்டாணி பன்னீர் கட்லெட் ரெடி!!!
இதனை தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
- மட்டன் நல்லி எலும்பு வறுவல் ஒரு சூப்பரான உணவாகும்
- எலும்பு பிரியர்களுக்கு இது ஒரு சிறப்பான டிஷ்.
தேவையான பொருட்கள்
மட்டன் எலும்பு - முக்கால் கிலோ
வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 150 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் தூள் - ½ டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - ¼ டீஸ்பூன்
கருப்பு மிளகு தூள் - ½ டீஸ்பூன்
தேங்காய் பால் - அரை கப் கெட்டியானது
உப்பு - தேவைக்கேற்ப
தாளிப்பு
கடுகு - அரை டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டன் எலும்பை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
குக்கரில் சுத்தம் செய்த மட்டன் எலும்பை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து 4 விசில் வரை வேக விடவும். எலும்புகள் நன்கு வேகவைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், பெருஞ்சீரகம் தூள், கரம் மசாலா தூள், கருப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும் போது, மட்டன் எலும்பை வேக வைத்த நீருடன் சேர்க்கவும். தண்ணீர் வற்றும் வரை அடுப்பை மிதான தீயில் வைத்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
அடுத்து அதில் தேங்காய் பால் சேர்க்கவும்.
எண்ணெய் பிரிந்து, தண்ணீர் வற்றி திக்கான தொக்கும் பதம் வந்ததும் இறக்கி தனியாக வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெயை சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து வறுத்த எலும்புகளுடன் சேர்க்கவும்.
நன்றாக கலந்து சாதம், ரொட்டி அல்லது தோசையுடன் பரிமாறவும்!
இப்போது சூப்பரான மதுரை ஸ்டைல் மட்டன் நல்லி எலும்பு வறுவல் ரெடி.
- மதுரை கறி தோசை மிகவும் பிரபலம்.
- இந்த தோசையை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கீமா மசாலா செய்ய
மட்டன் கீமா - கால் கிலோ
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் தூள் - அரை டீஸ்பூன்
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
கல் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கரி தோசை செய்ய:
தோசை மாவு
மட்டன் கீமா மசாலா
கொத்துமல்லி இலை
எண்ணெய்
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, கல் உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து குழைய வதக்கவும்.
இந்தக் கலவையில் மட்டன் கொத்துக்கறி சேர்த்து நன்கு கிளறவும்.
இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் கடாயை மூடி வேக வைக்கவும்.
20 நிமிடம் கழித்து கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கி எடுத்து வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி அதன் மேல் அடித்து வைத்த முட்டையை ஊற்றவும்.
அடுத்து மட்டன் கீமா மசாலாவை தோசையின் மேல் பரப்பி விடவும் இதன் மேல் கொத்தமல்லி தலை, மிளகுத்தூள் சேர்த்து மறுபுறம் திருப்பி விடவும்.
மறுபுறம் மசாலா நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
இப்போது சூடான மற்றும் சுவையான மதுரை ஸ்டைல் கறி தோசை தயார்
- கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
- வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி ரைஸ் - 1/2 கிலோ,
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
தக்காளி - 4,
பட்டாணி - ஒரு கைப்பிடி,
வெந்தயக்கீரை - ஒரு கைப்பிடி
தேங்காய் பால் - 1 கப்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
சமையல் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க
பட்டை - 2,
கிராம்பு - 4,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
ஏலக்காய் - 2,
அண்ணாச்சி பூ - 1,
மராத்தி மொக்கு - 4,
பிரியாணி இலை - 3,
செய்முறை :
வெங்காயம், தக்காளி, வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடேறியதும் அதில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து அதில் பட்டாணியையும் சேர்த்து வதக்க வேண்டும்.
பச்சை பட்டாணியாக இருந்தால் புலாவ் செய்வதற்கு ஒரு மணிநேரம் முன்பு நன்கு கழுவி சுத்தம் செய்து சுடு தண்ணீரில் ஊற வைத்தால் போதுமானது. பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள வெந்தயக்கீரையை முழுதாக அப்படியே சேர்க்க வேண்டும்.
கீரை வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து, லேசாக உப்பு போட்டு வதக்க வேண்டும்.
இவைகள் அனைத்தும் நன்கு சுருள வதங்கி வந்ததும், பாஸ்மதி ரைஸ் சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு பங்கு அரிசிக்கு, இரண்டு பங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆனால் இதில் தேங்காய் பால் சேர்த்து உள்ளதால், ஒன்னே முக்கால் பங்கு தண்ணீர் சேர்த்தால் போதும். உப்பு சரி பார்த்து விட்டு குக்கரை மூடி வைத்து இரண்டே விசில் விட்டால் போதும், அற்புதமான வாசனையில், ஆரோக்கியமான வெந்தயக்கீரை பச்சை பட்டாணி புலாவ் ரெடி ஆகி இருக்கும்.
இதற்கு காரசாரமான சைடிஷ் அல்லது துவையல் வைத்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
- வயிறு தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்யும்.
- இந்த கீரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
தேவையான பொருட்கள் :
வெந்தயக் கீரை - 2 கட்டு,
வெங்காயம் - 1,
தக்காளி - 2,
இஞ்சி - ஒரு துண்டு,
காய்ந்த மிளகாய் - 8,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - சிறிதளவு,
கறிவேப்பிலை
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை:
கீரையை நன்றாக ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளி, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, ஆறவைக்க வேண்டும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தை சேர்த்து தாளித்து துவையலில் சேர்க்க வேண்டும்.
இப்போது சூப்பரான வெந்தயக்கீரை துவையல் ரெடி.






