search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அவல் கார பொங்கல்
    X
    அவல் கார பொங்கல்

    சத்தான அவல் கார பொங்கல்

    அவலில் செய்யும் கார பொங்கல் சூப்பராக இருக்கும். சத்தானதும் கூட. இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அவல் - அரை கப்
    பாசிப்பருப்பு - கால் கப்
    பெருங்காயதூள் - சிறிதளவு
    மிளகு, சீரகம் - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்)
    இஞ்சி - 1 துண்டு (நறுக்கவும்)
    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
    எண்ணெய், நெய் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு

    அவல் கார பொங்கல்

    செய்முறை:

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசிப்பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி உதிரியாக வேகவைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி உருகியதும் மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கவும்.

    பின்னர் அதனுடன் அவலை கொட்டி கிளறவும்.

    அவல் ஓரளவு வதங்கியதும் வேகவைத்த பாசிப்பருப்பு, பெருங்காயதூள், உப்பு ஆகியவற்றுடன் போதுமான தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

    பொங்கல் பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சத்தான சுவையான அவல் கார பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×