என் மலர்
சமையல்
- தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
- சர்க்கரை பாகில் சேர்த்து நன்கு ஊற வைக்கவும்.
வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் பெண்களுக்கு கையும் ஓடாது... காலும் ஓடாது... என்ன செய்வது என்று தெரியாமல் திணருவோம்... அப்போ நமக்கு ஈஸியா ஒரு ஸ்வீட் ரெடி பண்ணணும் தோணும். அப்போ இதை பண்ணுங்க... வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்து மிகவும் சுவையாகவும், சுலபமாகவும் செய்ய கூடிய ரெஸிபி....
தேவையான பொருட்கள்:
ரவை - 1/2 கப்
கோதுமை மாவு - 1/2 கப்
மைதா - 1/4 கப்
சர்க்கரை - 1 கப்
எண்ணெய் (அல்லது) நெய் தேவையான அளவு
ஏலக்காய் தூள்
செய்முறை:
முதலில் சர்க்கரை 1 கப் மற்றும் தண்ணீர் 1/2 கப் சேர்த்து கொதிக்க (5 நிமிடங்கள்) வைத்து பாகு தயாரித்து கொள்ளவும். இறுதியாக ஏலக்காய் தூள் சேர்த்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் ரவை + கோதுமை மாவு+ மைதா தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சூடாக்கி அதில் நாம் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி பொரித்து எடுக்கவும்.
நாம் பொரித்து வைத்துள்ள பூரிகளை சர்க்கரை பாகில் சேர்த்து நன்கு ஊற வைக்கவும்.
சுவையான மால்புவா தயார்...
- சிறிது பால் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- குங்குமப்பூ பாலை அடுப்பில் வைத்துத் பாலை நன்கு கொதிக்க விட வேண்டும்.
தேவையானவை :
பால் - 2 1/2 கப்
தோல் நீக்கிய கனிந்த மாம்பழ துண்டுகள் - ஒரு கப்
சர்க்கரை - 1/4 கப்
பிஸ்தா - 5
பாதாம் - 4
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிது
செய்முறை:
1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்துத் விட்டு பிறகு இறக்கி அதில் பாதாமை போட்டு இருபது நிமிடம் ஊற வைத்து, பின் அதன் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
2. பின்னர் பிஸ்தாவையும் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துத் வெதுவெதுப்பாக சூடேற்றி இறக்கி, அதில் குங்குமப்பூவை சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
3. பிறகு மாம்பழ துண்டுகளை மிக்ஸியில் போட்டு , அத்துடன் சிறிது பால் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
4. பின் குங்குமப்பூ பாலை அடுப்பில் வைத்துத் பாலை நன்கு கொதிக்க விட வேண்டும். அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து கிளறி, சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
5. பாலானது குளிர்ந்ததும், அதில் மாம்பழ கூழ் சேர்த்துத் , ஏலக்காய் பொடி, பாதாம், பிஸ்தா, சேர்த்துத் கிளறி பரிமாறினால், சுவையான மாம்பழ ரப்ரி ரெடி!!!
- முட்டையாக சேர்த்து நன்றாக கலக்கவும்.
- மாவையும் பேக்கிங் பவுடரையும் ஒன்றாக கலந்து தனியாக வைக்கவும்.
மிருதுவான கப்கேக்கை அற்புதமான டீயுடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.
தயாரிப்பு நேரம்: 15 நிமிடங்கள்
பேக்கிங் நேரம்: 25 நிமிடங்கள்
எத்தனை: 4 முதல் 6 கப்கேக் செய்ய
தேவையானவை:
மாவு - 150 கி.
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - 110 கி.
சர்க்கரை - 200 கி.
பீநட் பட்டர் - 4 மேசைக்கரண்டி
முட்டைகள் - 2
வெண்ணில்லா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
பால் - 80 மி.லி.
செய்முறை:
1. ஓவனை முன்னதாகவே 180 செல்சியஸுக்கு சூடாக்கவும். கப்கேக் மோல்டில் எண்ணெயை பூசவும். மாவையும் பேக்கிங் பவுடரையும் ஒன்றாக கலந்து தனியாக வைக்கவும்.
2. வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து திக்காகும் வரை நன்றாக அடிக்கவும். பீநட் பட்டரை சேர்த்து மீண்டும் நன்றாக அடிக்கவும்.
3. ஒவ்வொரு முட்டையாக சேர்த்து நன்றாக கலக்கவும். வெண்ணில்லா எசன்ஸை கலக்கவும்.
4. இல்லையென்றால் பால், மாவை சேர்க்கவும்.
5. இந்த கலவையை கப்கேக் மோல்டில் ஊற்றவும். 20 அல்லது 25 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். சூடாகவோ, சில்லென்றோ பரிமாறலாம்.
- வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- எண்ணெய் பிரிந்து வந்தவுடன், அரைத்த முந்திரியை சேர்க்கவும்
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 500 கி
இறால் - 500 கி
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
எலுமிச்சை பழம் - 1/2
தயிர் - 1 கப்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
பிரியாணி மசாலா - 1 ஸ்பூன்
புதினா - சிறிதளவு
கொத்தமல்லை - சிறிதளவு
முந்திரி (அ) பாதாம் பருப்பு - 10 (சுடுநீரில் ஊற வைத்து அரைக்கவும்)
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை
செய்முறை:
இறாலை நன்கு கழுவி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பிரியாணி மசாலா சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி ஊற வைத்த இறாலை பொரித்து எடுக்கவும்.
அதே எண்ணெயில் கூடுதலாக எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து பொரிய விடவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயத்தை பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியவுடன் அதனுடன் புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்.
பின்னர் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி, தயிரை சேர்த்து கிளறி விடவும். அதில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் வைக்கவும்.
எண்ணெய் பிரிந்து வந்தவுடன், அரைத்த முந்திரியை சேர்க்கவும். முந்திரி சேர்த்தவுடன் கிரேவி கெட்டியாக மாறும். அதனால் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். பின்னர் பொரித்து வைத்துள்ள இறால் சேர்த்து, எலுமிச்சை சாறு சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, ஊற வைத்த பிரியாணி அரிசி, உப்பு, பிரிஞ்சி இலை, சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும். அரிசி குழையாமல், வெந்து இருந்தால் போதும். இந்த பதத்தில் வடித்து உதிரியாக எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் இறால் கலவையில் வேக வைத்த சாதத்தை சேர்த்து மெதுவாக உடையாமல் கிளறி விடவும். சாதத்தை ஒன்றாக்கி அதன் மேல் கொத்தமல்லி, புதினா தூவி 10 நிமிடம் மூடி வைத்து தம் போடவும். தம் போட ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடி மேல் வைக்கலாம்.
10 நிமிடம் ஆனவுடன் அடுப்பை அணைத்து விடவும். மேலும் 10 நிமிடம் கழித்து திறக்கவும். சுவையான இறால் தம் பிரியாணி ரெடி.
- கூட்டோ, குழம்போ கொதித்த பின் தீ எரியும் அளவை குறைத்து விட்டால் எரிபொருள் சிக்கனம் செய்யலாம்.
- வெற்றிலையை அலமாரி மூலையில் வைத்தால் கரப்பான் பூச்சி வராது.
* அடுப்பில் வைத்த பாத்திரம் தீய்ந்து கருகி போனால் உப்பு நீரில் ஒரு நாள் இரவு முழுக்க ஊற வைத்து மறுநாள் காலையில் அழுத்தி தேய்க்க சுத்தமாகி விடும்.
* தயிர் புளித்துப்போனால் அதில் 4 டம்ளர் நீர் ஊற்றி அரைமணி நேரம் கழித்து மேலே நிற்கும் நீரை மட்டும் கீழே ஊற்றி விட்டால் தயிர் புளிக்காது.
* பாட்டில் மூடியை திறக்க முடியாமல் போனால் ஈரத்துணியால் மூடியை இறுகப்பற்றி கொண்டு திருகினால் சுலபமாக கழன்று விடும்.
* கூட்டோ, குழம்போ கொதித்த பின் தீ எரியும் அளவை குறைத்து விட்டால் எரிபொருள் சிக்கனம் செய்யலாம்.
* மிளகாய் தூள் கெட்டுப் போகாமல் இருக்க அதில் சிறிதளவு பெருங்காயக் கட்டியைப் போட்டு வைத்தால் நீண்ட நாள் காரம், மணம் மாறாமல் இருக்கும்.
* சாம்பார் செய்து இறக்குவதற்கு முன் 2 தக்காளிகளை மிக்சியில் அரைத்து சேர்க்க அதிக ருசி கிடைக்கும்.
* மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காயை இட்லி தட்டில் வைத்து சிறிது நேரம் வேக வைத்து, ஊறுகாய் போட்டால் விரைவாக ஊறும், சத்துக்களும் வீணாகாது.
* லேசான தீக்காயம் என்றால் ஒரு வாழைப்பழத்தை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி சூடுபட்ட இடத்தில் வைத்தால் குளுகுளுவென்று இருக்கும். அரிப்பு ஏற்படாது.
* அரிசி, தானியங்களை வைக்கும் டப்பாவில் பூச்சிகள் தொல்லை இருந்தால் அதில் பூண்டு அல்லது மஞ்சள் துண்டு போட்டால் பூச்சிகள் அண்டாது.
* வெற்றிலையை அலமாரி மூலையில் வைத்தால் கரப்பான் பூச்சி வராது.
* புரோட்டாவிற்கு மாவு பிசையும் போது அதில் சிறிதளவு மில்க் மெயிட் சேர்க்க ருசியாக இருக்கும்.
* பூண்டுவை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தால் அதன் மேல் தோலை எளிதாக நீக்கி விடலாம்.
* உளுந்து வடை மாவில் சிறிது நெய் சேர்த்தால் வடை மொறு மொறுப்பாக இருக்கும். அதிக எண்ணெய் செலவாகாது.
* கட்லெட்டில் அதிக ருசி கிடைக்க அதற்குரிய மாவில் சிறிதளவு ரொட்டித் தூள் அல்லது ரவை சேர்க்க வேண்டும்.
- சிக்கனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து ஒரு ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
சன்டே ஸ்பெஷல் கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கி
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
சோம்பு - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் அதனை நன்கு கழுவி கடைசியாக ஒரு முறை மஞ்சள் தூள் சேர்த்து கழுவிக்கொள்ளவும். பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து ஒரு ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை இரண்டையும் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆறிய பின் வறுத்த சோம்பு, கறிவேப்பிலையுடன் பொடித்து, அதனுடன் மிளகுத்தூள் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும்.
அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். பின் மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து குறைந்த தீயில் வதக்க வேண்டும்.
இதனுடன் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து சிறிதளவு தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
சிக்கன் நன்கு வெந்ததும் பொடித்து வைத்துள்ள கறிவேப்பிலை பொடியை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கலந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான கறிவேப்பிலை மிளகு சிக்கன் தயார்.
கிரேவி பதமாக இருந்தால் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கழித்து இறக்கினால் ட்ரை கறிவேப்பிலை மிளகு சிக்கன் தயார்.
- கோடைகால பழங்கள் தர்பூசணி மற்றும் முலாம்பழம் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
- முலாம்பழத்தின் தோல், விதைகளை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கி போடவும்.
கோடைகால பழங்கள் தர்பூசணி மற்றும் முலாம்பழம் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். முலாம் பழம் சிறுநீரகக் கோளாறுகளை தடுக்கிறது. வாதத்தையும் பித்தத்தையும் குறைக்க உதவுகிறது. மலச்சிக்கலை போக்கும். உடல் சூட்டை குறைக்கும். குடல் புண் ஏற்படுவதை தவிர்க்கிறது. வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தது. இத்தனை நன்மைகளை கொண்ட முலாம் பழத்தில் சுவையான முலாம் பழ மில்க் ஷேக் செய்யலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
முலாம்பழ துண்டுகள் - 1/2 கப்
காய்ச்சி ஆற வைத்த பால் - 1 டம்ளர்
சர்க்கரை - 1/4 கப்
முலாம்பழ துண்டுகள் - 1 சிறிதளவு
செய்முறை:
முலாம்பழத்தின் தோல், விதைகளை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கி போடவும்.
மிக்சி ஜாரில் முலாம்பழத்தை சேர்த்து அரைக்கவும். இதனுடன் சர்க்கரை, பால் சேர்த்து அரைக்கவும். இதனை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடும் முன்பு முலாம்பழ துண்டுகளை சேர்த்துக்கொள்ளவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான முலாம் பழ மில்க் ஷேக் தயார்.
- இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும்.
- கிருஷ்ணருக்கு பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று.
இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும். பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது கிடைக்கின்றன. சைவ பிரியர்களுக்கு பிடித்த இனிப்புகளில் ஒன்று அவல் லட்டு. அவல் புரத தேவையில் மூன்றில் ஒரு பகுதியை பூர்த்தி செய்கிறது.
கிருஷ்ணருக்கு பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய சுவையான உணவு பொருள் தான் அவல் லட்டு. அவல் அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும்.
தேவையானவை:
வெள்ளை அவல் – ½ கப்
பொட்டுக்கடலை – ¼ கப்
தேங்காய்த் துருவல் – ½ கப்
வேர்க்கடலை – ¼ கப்
வெள்ளை எள் – 2 டேபிள் ஸ்பூன்
துருவிய வெல்லம் – 1½ கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
பாதாம், முந்திரி – தலா 1 டீஸ்பூன்
செய்முறை:
வெறும் வாணலியில் அவல், பொட்டுக்கடலை, எள், தேங்காய்த் துருவல் முதலியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
எல்லா பொருட்களும் ஆறியதும் வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி அதையும் அதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அனைத்து பொருட்களையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு நைசாக பொடித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி, கம்பிப் பாகு பதம் வந்ததும் இறக்கி அதனை பொடித்து வைத்துள்ள மாவில் சேர்க்க வேண்டும்.
பின்னர் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரியை வறுத்த மாவில் கலந்து கை பொறுக்கும் சூட்டில் லட்டுகளாகபிடிக்கவும். மேலே பாதாம் அலங்கரித்து குழந்தைகளுக்கு மாலையில் சாப்பிட கொடுக்கலாம். மிகவும் சுவையான புரோட்டின் சத்து நிறைந்த லட்டு தயார்.

- சிறுதானியங்களில் சாமையும் முக்கியமானதாகும்.
- நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன.
உடலுக்கு நன்மை பயக்கும் சிறுதானியங்களில் சாமையும் முக்கியமானதாகும். இதில் நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் இதை யாரும் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. இந்த சாமையை வைத்து இனிப்பான பொங்கல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க....
தேவையான பொருட்கள்:
சாமை - 1 கப்
தண்ணீர் - 2 கப்
நெய் – ½ கப்
வெல்லம் – ½ கப்
ஏலக்காய் தூள் – ¼ ஸ்பூன்
முந்திரி, உலர் திராட்சை - தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் சாமையை சுத்தமாக கழுவி குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். ஏனெனில் ஊறிய சாமையை வேக வைக்க எளிமையாக இருக்கும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த சாமையை தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். சாமையும் அரிசி போலவே இருப்பதால் அதை எடுத்து அழுத்தி பார்த்தே வெந்துவிட்டதா என்பதை அறிய முடியும். சாமை வெந்த பிறகு தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு வாணலியில் நெய் விட்டு உருகும் வரை காத்திருந்து நெய்யில் வேகவைத்த சாமையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
நெய்யும் சாமையும் நன்றாக கலந்த பிறகு அதில் வெல்லத்தை சேர்க்க வேண்டும். வெல்லம் உருகி சாமையோடு சேரும் வரை நன்றாக கிளற வேண்டும்.
அதன் பிறகு அதில் ஏலக்காய் தூள், முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்க வேண்டும். சுவையான சாமை இனிப்பு பொங்கல் தயார்.
மாலை வேளைகளில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க உகந்த பலகாரமாக இந்த சாமை பொங்கல் இருக்கும்.

- காலை உணவாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்.
- வயிற்றில் உள்ள புண்களை ஆற்றுவதற்கு உதவுகிறது.
செட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமானது இந்த தேங்காய்ப்பால் குணுக்கு. இதனை பால் பனியாரம் என்று கூறுவார்கள். இந்த குணுக்கு வகைகளில் காரம், இனிப்பு என்று விதவிதமாக செய்வார்கள். இதனை காலை உணவாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
இதில் உள்ள தேங்காய்ப்பால் உடல் உஷ்ணத்தை குறைத்து வயிற்றில் உள்ள புண்களை ஆற்றுவதற்கு உதவுகிறது. மேலும் உளுந்து உடலுக்கு தேவையான வலிமையை கொடுக்கிறது. எனவே அனைத்து வயதினரும் இதனை உண்ணலாம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய்- 1
உளுந்து- 100
நாட்டு சர்க்கரை- 100
அரிசி- 2 ஸ்பூன்
எண்ணெய்- பொறிப்பதற்கு
ஏலக்காய்- ஒரு சிட்டிகை
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு (தண்ணீர் அதிகம் சேர்க்காமல்) அரைக்க வேண்டும். அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகைஉப்பு சேர்த்து நன்றாக கலந்து 2 மணிநேரம் அப்படியே மூடி வைக்க வேண்டும்.
அதற்குள் தேங்காயை துருவி தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால், அதனுடன் பால் வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளலாம். ஏலக்காய் தூள், ருசிகேற்ப நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து ஒரு கப்பில் போட்டு அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும். தித்திப்பான தேங்காய் பால் குணுக்கு தயார்.

- வைட்டமின் பி மற்றும் போலேட் சத்துக்கள் நிறையவே இருக்குது.
- ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய பாதிப்புகள் ஏற்படாமல்l தடுக்க உதவுகிறது.
கம்புக்கு அடுத்தபடியாக நம் முன்னோர்கள் சோளத்தை தங்கள் அன்றாட உணவுகளில் அதிகமாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். சோளத்தில் அதிகமான புரதம், தாமிரம், இரும்புச் சத்துக்கள் இருக்கிறது. மெக்னீசியம், கால்சியம் சத்துக்களும் இதில் இருக்கறதால் உடலுக்கு வேண்டிய உயிரோட்டம் கிடைக்குது. உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமான சத்தான வைட்டமின் பி மற்றும் போலேட் ஆகிய சத்துக்கள் இதில் நிறையவே இருக்குது.
இதில் இருக்கிற ஒமேகா–3 கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பை குறைத்து, இதய நாளங்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கறதோட, சீரான ரத்த ஓட்டத்தை உறுதிப்படுத்தி, இதய பாதிப்புகள் ஏற்படாம தடுக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
சிவப்பு சோளம்-2 கப்
அரிசி-அரை கப்
வெந்தயம்- ஒரு ஸ்பூன்
கடுகு- கால் டீஸ்பூன்
உளுந்து- கால்கப்
பச்சைமிளகாய்- 2
கறிவேப்பிலை- தாளிக்க
தேங்காய்- துருவல் ஒரு கப்
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில் அரிசியையும், சிவப்பு சோளத்தையும் கழுவி ஊற வைக்க வேண்டும். அதேபோல உளுந்தையும் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு இவைமூன்றயும் வெந்தயம் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவில் உப்பு சேர்த்து 5 மணிநேரம் புளிக்க வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி இந்த கலவையினை அரைத்து வைத்துள்ள மாவில் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இபோது குழிப்பனியாரக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி ஒவ்வொன்றாக ஊற்றி எடுத்தால் சிவப்ப சோள குழிப்பனியாரம் தயார். கார சட்னியுடன் தொட்டுக்கொள்ள பிரமாதமாக இருக்கும். இதே மாவினை இட்லி, தோசையாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். சுவையாக இருக்கும்.
- கொள்ளு ஊறவைத்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும்.
- ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.
கொள்ளு பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.
இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும்.
அனைவரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதற்கு கொள்ளினை முளைகட்டி குழம்பு வைத்து உண்ணலாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்களின் உடலில் உள்ள வேண்டாத கொழுப்பு கரைந்து உடல் எடை எளிதில் குறையும்.
தேவையான பொருட்கள் :
முளைக்கட்டிய கொள்ளு - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 2
தக்காளி - 3
வரமிளகாய் - 5
மல்லித்தூள்- ஒரு ஸ்பூன்
சீரகம் - சிறிதளவு
தேங்காய் துருவல் - சிறிதளவு
செய்முறை:
கொள்ளினை 10 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்த கொள்ளினை எடுத்து கழுவி வடிகட்டிவிட்டு அதனை ஒரு துணியில் வைத்து கட்டி இரவு முழுவதும் விட வேண்டும். காலையில் எடுத்து பார்த்தால் கொள்ளு சிறிது முளைகட்டி இருக்கும்.
முளைகட்டிய கொள்ளினை பாத்திரத்தில் கொட்டி வேக வைக்க வேண்டும்.
ஒரு வாணொலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், பூண்டு, சீரகம், வர மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தேங்காய், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் வேக வைத்த கொள்ளு சிறிதளவு சேர்த்து மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த மசாலா கலவையினை வேகவைத்த கொள்ளுவில் சேர்க்க வேண்டும். மசாலா கொதித்து வரும்போது தாளிப்பு சேர்க்கலாம்.
அதற்காக மீண்டும் வாணொலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை தாளித்து கொள்ளு குழம்பில் சேர்த்து கிளறினால் சுவையான கொள்ளு குழம்பு தயார்.







