search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "almond"

    • சிறிது பால் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
    • குங்குமப்பூ பாலை அடுப்பில் வைத்துத் பாலை நன்கு கொதிக்க விட வேண்டும்.

    தேவையானவை :

    பால் - 2 1/2 கப்

    தோல் நீக்கிய கனிந்த மாம்பழ துண்டுகள் - ஒரு கப்

    சர்க்கரை - 1/4 கப்

    பிஸ்தா - 5

    பாதாம் - 4

    ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

    குங்குமப்பூ - சிறிது

    செய்முறை:

    1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்துத் விட்டு பிறகு இறக்கி அதில் பாதாமை போட்டு இருபது நிமிடம் ஊற வைத்து, பின் அதன் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

    2. பின்னர் பிஸ்தாவையும் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துத் வெதுவெதுப்பாக சூடேற்றி இறக்கி, அதில் குங்குமப்பூவை சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    3. பிறகு மாம்பழ துண்டுகளை மிக்ஸியில் போட்டு , அத்துடன் சிறிது பால் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    4. பின் குங்குமப்பூ பாலை அடுப்பில் வைத்துத் பாலை நன்கு கொதிக்க விட வேண்டும். அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து கிளறி, சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

    5. பாலானது குளிர்ந்ததும், அதில் மாம்பழ கூழ் சேர்த்துத் , ஏலக்காய் பொடி, பாதாம், பிஸ்தா, சேர்த்துத் கிளறி பரிமாறினால், சுவையான மாம்பழ ரப்ரி ரெடி!!!

    • நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்துக்கு பாதாம் பெரிதும் உதவுகிறது.
    • எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது.

    பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்துககு அவசியமான ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கு முழு தானியங்கள், காய்கறிகள், பழங்களுடன் விதைகள், பருப்புகள், உலர் பழங்களையும் சாப்பிட வேண்டும்.

    அந்த வகையில் பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, பேரீச்சம் பழம், அத்தி ஆகியவற்றில் உடலுக்கு நன்மை தரும் ஏராளமாக ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் பாதாமை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இங்கே பார்க்கலாம்.

    பாதாமை ஊறவைத்து அதன் மேல் தோலை நீக்கிய பின்பு சாப்பிடுவதே சிறந்தது. ஒரு கைப்பிடி அளவு பாதாமை முதல் நாள் இரவு ஊறவைத்து அடுத்தநாள் காலையில் எழுந்தவுடன் காலை உணவுக்கு முன்பாக சாப்பிடலாம். இவ்வாறு தினமும் சாப்பிட்டு வந்தால் புரதச்சத்து நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பெறலாம்.

    தொடர்ந்து பாதாமை சாப்பிட்டு வருவதன் மூலம் சுவாசக்கோளாறு இதய நோய், நீரிழிவு நோய், சரும பிரச்சனை, முடி உதிர்வு, ரத்த சோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

    தினமும் 6-7 ஊறவைத்த பாதாம் பருப்பகளை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.

    உடல் எடையை குறைப்பதற்கு முயற்சிப்பவர்கள். தினமும் 5 பாதாம் பருப்புகளை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பு கரையும்.

    ஊறவைத்த பாதாமில் உள்ள சத்துக்கள் ரத்தத்தில் ஆல்ஃபா டேகோபெராலை அதிகரித்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன. ரத்தத்தில் வெள்ளை மற்றும் சிகப்பு அணுக்களை பெருக்கும் சக்தி கொண்டது பாதாம்

    இதில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது.

    ரிபோஃபிளேவின் எல் கார்னிடைன் போன்றவை மூளையின் செயல்திறனை மேம்படுத்தி புத்தி கூர்மையை அதிகரிப்பதற்கு உதவுகின்றன. நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்துக்கு பாதாம் பெரிதும் உதவுகிறது.

    வயது முதிர்ச்சியால் வரக்கூடிய ஞாபக மறதி நோயை தடுக்கம் ஆற்றல் பாதாமில் உள்ளது.

    பாதாம் எண்ணெய் கொண்டு சருமத்தை மசா% செய்து வந்தால் உடலில் ரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து சருமம ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.

    தினமும் இரவில் தூங்கச்செல்வதற்கு முன்பு முகத்தில் பாதாம் எண்ணெய் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் பொலிவு அதிகரிக்கும்.

    மாதவிடாய் நின்ற பெண்கள் தினமும் பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்க முடியும்.

    ×