என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    இந்த ஆசனத்தை செய்வதால் முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து முதுகெலும்புகளுக்கிடையிலான இறுக்கத்தை குறைக்கிறது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    வக்கிராசனம் என்றால் முறுக்கிய நிலை ஆகும். வடமொழியில் வக்கிரம் என்றால் முறுக்குதல் (twisted) ஆகும். முதுகுத்தண்டினை இடபுறமாகவும், பின் வலபுறமாகவும் முறுக்கி செய்வது ஆகும். இதனால், முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து முதுகெலும்புகளுக்கிடையிலான இறுக்கத்தை குறைக்கிறது. உடல் முறுக்குவதால் இடுப்பு பகுதி பலப்படுகிறது. முக்கியமாக சீரண மண்டலத்தின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

    பலன்கள்

    மலச்சிக்கலை போக்குகிறது. சீரணத்தை மேம்படுத்துகிறது. கழுத்து வலியை போக்குகிறது. தைராய்டு சுரப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
    வயிற்றிலுள்ள அதிக கொழுப்பை குறைக்கிறது. மாதவிடாய் கோளாறுகளை போக்குகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

    செய்முறை

    விரிப்பில் கால்களை நீட்டி அமரவும். வலது காலை மடித்து வலது பாதத்தை இடது கால் முட்டியின் அருகே வைக்கவும். வலது கையை வலது புட்டத்திற்கு பின்னால் தரையில் வைக்கவும்.இடது கையை வலது முட்டியின் மேல் வழியாக கொண்டு வந்து வலது கணுக்காலை பிடிக்கவும். தலையை திருப்பி முகவாயை வலது தோளுக்கு நேர் மேலே வைக்கவும். 30 வினாடிகள் இதே நிலையில் இருந்த பின் காலை மாற்றி செய்யவும்.

    குடலிறக்கம், அல்சர் மற்றும் தீவிர முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.
    அனைத்து தரப்பினரும் வெறும் வயிற்றில் மேற்கொள்ளும் பயிற்சிகள் சில உள்ளன. அவற்றுள் நடைப்பயிற்சி, ஜாக்கிங், எளிமையான ஏரோபிக் பயிற்சிகள், யோகா போன்றவை முக்கியமானவை.
    காலை வேளையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ‘இரவு முதல் மறுநாள் காலை தூங்கி எழுவது வரை எதுவும் சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்வது அதிக கலோரிகளை எரிக்க உதவும், இதனால் எடை குறையும்’ என்று நம்பப்படுகிறது. ஆனால் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லதா? என்ற கேள்வி எழாமல் இல்லை.

    அப்படி வெற்று வயிற்றில் பயிற்சி செய்யும் போது உடலுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது உடற்பயிற்சி, ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அதேவேளையில் கடுமையான உடற்பயிற்சிகளை செய்வதற்கு பழகிய, அனுபவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே வெறும் வயிற்றில் செய்யும் உடற்பயிற்சி உகந்தது.

    மற்றவர்கள் வெறும் வயிற்றில் பயிற்சி செய்யும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையக்கூடும். இதனால் தலைச்சுற்றல், குமட்டல் ஏற்படலாம். இருப்பினும் அனைத்து தரப்பினரும் வெறும் வயிற்றில் மேற்கொள்ளும் பயிற்சிகள் சில உள்ளன. அவற்றுள் நடைப்பயிற்சி, ஜாக்கிங், எளிமையான ஏரோபிக் பயிற்சிகள், யோகா போன்றவை முக்கியமானவை.

    உடற்பயிற்சிக்கு முன் என்ன சாப்பிட வேண்டும்?

    காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சரியான ஊட்டச்சத்து கொண்ட உணவை சரியான அளவில் சாப்பிடும்போது உடலின் செயல் திறன் மேம்படும். குறிப்பாக உடற்பயிற்சி செய்வதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன்பு ஒரு வாழைப் பழம் அல்லது சில துண்டு ஆப்பிள்கள் சாப்பிடலாம். இவை உடலுக்கு ஊக்கம் அளித்து சோர்வில்லாமல் உடற்பயிற்சி செய்வதற்கு உதவும். எளிதில் ஜீரணமாகக்கூடிய சிற்றுண்டியை சிறிதளவு சாப்பிடலாம்.

    உடற்பயிற்சிக்கு முன் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?

    சிட்ரஸ் பழங்கள், பால் பொருட்கள் போன்றவை சளியை உருவாக்கக்கூடும். மேலும் அசவுகரியத்தை ஏற்படுத்தும். இதனால் உடற்பயிற்சியின் செயல்திறன் பாதிக்கப்படும். எண்ணெய் தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதும் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும். உணவை போலவே நீர்ச்சத்தை பேணுவதும் முக்கியம். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சிறிதளவு தண்ணீர் பருகலாம். தாகமாக இருப்பதாக உணர்ந்து அதிக அளவில் தண்ணீர் பருகினால் உடனே உடற்பயிற்சி செய்யக்கூடாது. சிறிது நேரம் கழித்த பிறகே உடற்பயிற்சி செய்ய தொடங்க வேண்டும்.

    உடற்பயிற்சிக்கு பிறகு சாப்பிட வேண்டியவை:

    உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு சாப்பிட வேண்டிய உணவு வகைகள் பல உள்ளன. அவற்றுள் பழங்கள், நட்ஸ் வகைகள், முழு தானியங்கள், முட்டை, கோதுமை பிரெட், சாண்ட்விச், தயிர், பால் போன்றவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

    உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சிறிதளவு சிற்றுண்டியை உட்கொள்வது சிறந்த செயல்திறனுக்கு உதவும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அப்படி உடற்பயிற்சி செய்யும்போது உடலானது உணவுகளின் மூலம் ஆற்றலை பெறுவதற்கு பதிலாக உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை பயன்படுத்தும். இது உடல் எடையை நிர்வகிப்பதற்கு உதவும்.

    இருப்பினும் இதுபற்றிய ஆய்வில் எதிர்மறையான முடிவுகள் கிடைத்துள்ளன. 12 ஆண்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, வெறும் வயிற்றில் பயிற்சி செய்த அவர்களின் உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்பு வெளியேறியது கண்டறியப்பட்டது. இதே ஆய்வுக்கு பெண்களை உட்படுத்தியபோது அவர் களின் உடலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

    இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும்போது, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை மட்டுமல்ல, புரதங்களையும் உடல் பயன்படுத்துகிறது. அதனை ஈடு செய்வதற்கு ஊட்டச்சத்துமிக்க உணவை சாப்பிடுவது அவசியமானது.

    உடலுக்கு தேவையான தசைகளை உருவாக்க இது தேவைப்படுகிறது. ஆதலால் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சிறிதளவு சிற்றுண்டி சாப்பிடுவது ஆரோக்கியமானது.
    அதி தீவிரமான பயிற்சி நிகழ்வுகளின்போது மாரடைப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். உடல் வெளிப்படுத்தும் ஒருசில அறிகுறிகளை கொண்டே கடுமையாக உடற்பயிற்சி மேற்கொள்வதை யூகித்துவிடலாம்.
    ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. உடற் பயிற்சி உடலுக்கு பல நன்மைகளை வழங்கினாலும் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வது ஆபத்தானது. அதிகப்படியான உடல் செயல்பாடு தசைப்பிடிப்புக்கு வழிவகுக்கும். அதி தீவிரமான பயிற்சி நிகழ்வுகளின்போது மாரடைப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். உடல் வெளிப்படுத்தும் ஒருசில அறிகுறிகளை கொண்டே கடுமையாக உடற்பயிற்சி மேற்கொள்வதை யூகித்துவிடலாம்.

    * உடற்பயிற்சிக்கான வரம்பை கடந்து கடுமையாக பயிற்சி செய்யும்போது காயம், மூட்டுவலி, உடல் வலி போன்றவை ஏற்பட வழிவகுக்கும். இந்த அறிகுறிகள் ஒவ்வொன்றும் நீங்கள் மிகவும் கடினமாக உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதை குறிப்பிடும். உடற்பயிற்சி செய்யும்போது ஆரம்ப காலத்தில் ஓரிரு நாட்கள் இத்தகைய அறிகுறிகளை அனுபவிப்பது இயல்பானது. ஆனால் தொடர்ந்து தசை வலியை அனுபவித்தால் நீங்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

    * உடற்பயிற்சி செய்யும்போதோ, அதற்கு பிறகோ எப்போதும் சோர்வாக இருக்கிறீர்களா? உடற்பயிற்சியின்போது போதிய கவனம் செலுத்த முடியவில்லையா? ஆம் எனில் அதுவும் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதன் வெளிப்பாடாக அமையலாம். நாள்பட்ட சோர்வு உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் சோர்வை ஏற்படுத்தும்.

    * மிதமான உடற்பயிற்சி, நோய் எதிர்ப்பு அமைப்புக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும். ஆனால் அதிகப்படியான உடற்பயிற்சி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதிக சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பை எதிர்கொண்டால் அது அதிகமாக உடற்பயிற்சி செய்ததால் நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்திருப்பதற்கான அறிகுறியாக அமையலாம்.

    * தூங்கி எழுந்த பிறகும், ஓய்வெடுக்கும் போதும் இதயத்துடிப்பு அதிகமாக இருந்தாலோ, தொடர்ந்து 4-5 நாட்கள் அதே நிலை நீடித்தாலோ அது அதிக உடற்பயிற்சி செய்ததால் அனுபவிக்கும் ஆபத்தின் வெளிப்பாடாகும்.

    * அடிக்கடியோ, அதிகமாகவோ உடற்பயிற்சி செய்வது மூட்டு வலி, எலும்பு முறிவு, மென்மையான திசு காயங்கள் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். அமெரிக்க உடற்பயிற்சி கவுன்சிலின் கருத்துபடி, அடிக்கடி ஏற்படும் காயம் உடலில் ஏதோ தவறு நடந்ததற்கான அறிகுறியாகும்.

    * சில நேரங்களில், கடினமான பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று நிறைய பேர் விரும்புகிறார்கள். ஆனால் அது எடை அதிகரிக்க வழிவகுக்கும். அதிகமாக உடற்பயிற்சி செய்வது டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதற்கும், மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் என்பதால் உடல் பருமன் பிரச்சினை உண்டாகிறது. இந்த ஹார்மோன் மாற்றங்கள் பெரும்பாலும் தசை திசுக்களின் இழப்பு, எடை அதிகரிப்பு மற்றும் அதிகப்படியான தொப்பை கொழுப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையவை.

    * நீங்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்தால் தூக்கமின்மையால் அவதிப்படுவீர்கள். அதிக பயிற்சியினால் தசைகள் அழுத்தத்திற்கு உள்ளாகும். அதனால் தூக்கம் பாதிப்புக்குள்ளாகும்.

    உலகமே ஒரு அற்புத ஒலியால் இயங்கி கொண்டிருக்கிறது. அந்த ஒலி நம்முள்ளும் சதா சர்வ காலமும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அதுதான் “ஓம்“ என்ற பிரணவ மந்திரம்.
    இப்பொழுதுதான் நாம் கொரோனாவில் இருந்து விடுதலை அடைந்து வருகின்றோம். இந்த நேரத்தில் ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவி வருவதாக செய்தியை அறிந்து மக்கள் சற்று மனக்கலக்கம் அடையும் நேரமிது. இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் தைரியமாக வாழும் யோக நெறிமுறைகளை பற்றி சற்று சிந்திப்போம்.

    நமது நாட்டு நலன் கருதி சமுதாய விழிப்புணர்வுடன் அரசு, சுகாதாரத்துறை கூறும் நெறிமுறைகளை சரியாகக் கடைபிடிப் போம். ஆனால் எந்த ஒரு மனிதருக்கும் பயம் என்ற உணர்வு அதிகமாகாமல் வாழும் நெறிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அதுவே யோக முறையாகும்.
     
    பதஞ்சலி மகரிஷி யோகத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவரது யோகம் அஷ்டாங்க யோகமாகும். எட்டு படிகளைக் கொண்டது. இதில் மனித உடல் அமைப்பு பற்றியும், இதனுள் மறைந்துள்ள இயற்கை ஆற்றல், சக்தி பற்றியும் இந்த அற்புத சக்தியை எப்படி பயன்படுத்துவது, எப்படி அறிவது என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார்.

    மனித உடல்

    மனித உடல் பல மில்லியன் செல்களால் ஆனது, இந்த உடல் பஞ்ச பூத தன்மையை கொண்டது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூத தன்மைகள் உள்ளன. இந்த உடலில் உள்ள எல்லா உறுப்புக்களும் எப்படி இயங்குகின்றது. இந்த உடம்பிற்குள் ஒரு அற்புத இயற்கை சக்தி (உயிர் ஆற்றல்) உள்ளது. அதனையே நாம் கடவுள், இறைவன் என்று அழைக்கின்றோம். இறைவனுக்கு பல பெயர்கள் உள்ளன. ஆனால் பதஞ்சலி மகரிஷி தனது யோக சூத்திரத்தில் இறைவனின் பெயர் என்ன என்றும், இறைவனின் ஒலி (சப்தம்) என்ன என்றும் தெளிவாக விளக்கியுள்ளார்.

    இறைவனின் பெயர்

    இந்த உலகமே “ஓம்“ என்ற ஒலியில் அதிர்வலையில் இயங்குகின்றது. இதுவே இறைவனின் பெயர் என்கிறார். மனித உடலிலும் “ஓம்“ என்ற ஒலி அதிர்வலைகளுடன் இறைவன் குடி கொண்டுள்ளார். உங்களது இரு காதுகளையும் கட்டை விரலால் அடைத்து. கண்களை மூடி ஒரு நிமிடம் இருங்கள். ஒரு அற்புதமான ஒலியை “ஓம்“ என்ற ஒலியை வண்டின் ரீங்காரம் போல் கேட்கலாம். இதுவே இறைவனின் பெயர் என்கிறார்.

    இந்த உலகமே ஒரு அற்புத ஒலியால் இயங்கி கொண்டிருக்கிறது. அந்த ஒலி நம்முள்ளும் சதா சர்வ காலமும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அதுதான் “ஓம்“ என்ற பிரணவ மந்திரம்.

    இந்த ஓம் என்ற சொல்லுக்கு மட்டும் இவ்வளவு பெரிய ஆற்றல் எப்படியிருக்கின்றது. ஓம் என்ற சொல்லை பிரித்தால் அ + உ + ம் = ஓம். எல்லா மொழியின் முதல் எழுத்து “அ” என்ற எழுத்தாகும். நாம் வாயைத் திறந்தவுடன் உண்டாகும் ஒலி “அ” ஆகும். இது தொண்டையின் அடியிலிருந்து தோன்றுகின்றது.
    “அ” என்று தொடங்கும் ஒலி வாய் முழுவதும் பரவி உதட்டில் வந்து முடிவதற்கு முன் தோன்றுகின்ற உயிர் ஒலி “உ” என்பதாகும். நாம் உதட்டை மூடும் பொழுது உண்டாகின்ற ஒலி “ம்“ ஆகும். அ,உ,ம் = ஓம். உலகில் உள்ள எல்லா ஒலிகளும் இந்த மூன்று எழுத்தின் ஒலிகளுக்குள் அடக்கம்.

    இந்த ஓம் என்ற ஒலி நமது உடலில் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. அதிலிருந்து அதிர்வலைகள் உடலின் இயக்கத்திற்கு பரவிக் கொண்டே இருக் கின்றது. இதுதான் அனாகத ஒலி ஆகும். அழிக்க முடியாத ஒலி என்று பெயர். இதை பிரணவ ஒலி என்று கூறுவர். பிரணவம் என்ற சொல் நமது பிராணனுடன் தொடர்பு கொண்டுள்ளது. பிராணன் எப்பொழுதும் உடலை, உயிருடன் வைத்துக் கொண்டிருக்கின்றது.

    இந்த பிராணன், மனித உடலில் உயிர் தங்கி இயங்குவதற்குறிய அதிர்வு அலைகளை உண்டாக்கிக்கொண்டிருக்கின்றது. இந்த ஓம்கார ஒலி அலைகள் உயிர் உள்ள பொருட் களிலும் உயிரற்ற பொருட்கள், அசையா பொருட்களிலும், கல்லினுள்ளும் இருக்கிறது. எனவே கல்லிற்குள் தேரையும் உயிருடன் இருக்கின்றது.
    கல்லில் பிராணன் தூங்குகின்றது. தாவரங்களில் அது புரண்டு கொண்டு இருக்கிறது. விலங்குகளில் கனவு காண்கின்றது. மனிதர்களில் விழித்து எழுகிறது. மாமனிதர்களிடம் மட்டும் பிராணன் துடிப்புடன் செயல்படுகின்றது என்று யோகத் தந்தை பதஞ்சலி மகரிஷி அருள்கின்றார்.
    ஓம் மந்திரம்

    ஓம் மந்திரத்தை முறையாக பொருள் உணர்ந்து காலை/மாலை உச்சரித்தால் அதன் அதிர்வலைகள் மனிதனின் ஒவ்வொரு செல்லிலும் புத்துணர்வை அளிக்கும். ஒவ்வொரு உறுப்பிற்கும், குறிப்பாக ராஜ உறுப்பான இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீரகப்பை, நல்ல சக்தி பெற்று இயங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். மனோ பயம், படபடப்பு, மன அழுத்தம், டென்ஷன், கவலை நீக்கும். மனோ தைரியம் கிடைக்கும். ஒவ்வொரு செல்களும் “ஓம்“ மந்திரத்தின் மூலம் மிகச் சிறப்பாக இயங்கும். எந்த ஒரு தொற்றுக் கிருமியும் தாக்காமல் வாழலாம். இது ஒவ்வொருவருக்கும் ஒரு கவசமாக அமைகின்றது.

    முதலில் சண்முகி முத்திரையும் ஓம் மந்திரமும்

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். கை பெருவிரலால் காதை நன்கு அடைக்கவும். மற்ற விரல்களை படத்தில் உள்ளதுபோல் வைக்கவும். காதை மட்டும் நன்கு அடைக்கவும். கண்களை மூடி ஐந்து நிமிடங்கள் இருக்கவும். ஓம்கார ஓசை வண்டின் ரீங்காரம் போல் ஒலிப்பதை உணர முடியும். பின் மெதுவாக கைகளை சாதாரண நிலைக்கு கொண்டு வரவும்.

    உடன் கைகளை சின் முத்திரையில் வைக்கவும். பெருவிரல், ஆள்காட்டி விரல் நுனிகளை இணைக்கவும். கண்களை மூடி “ஓ” என்று சத்தமாக ஒலியை எழுப்பவும், அப்பொழுது உங்கள் உணர்வு முதுகுத் தண்டின் அடிப்பகுதியிலிருந்து பிராணன் மேல் நோக்கி வருவதாக “ஓ” என்று கூறி முடிந்த அளவு கூறி “ம்“ என்று சொல்லும் பொழுது உங்களது உணர்வு கழுத்து பின் பகுதியிலிருந்து உச்சந்தலை நெற்றிப்பொட்டு வழியாக இதயத்தில் “ம்“ என்று கூறி முடிக்கவும்.

    இவ்வாறு ஒரு முறை கூறி ஒரு பத்து வினாடிகள் கழித்து மீண்டும் ஒரு முறை உச்சரிக்கவும். இவ்வாறு 12 முறை உச்சரிக்கவும். இது சிரமமாக இருந்தால் “ஓம்“ என்று ஆழமாக முடிந்த அளவு “ஓ” என்று கூறி “ம்“ என்று கூறவும் 12 முறைகள். பின் இயல்பாக நடக்கும் மூச்சை 5 நிமிடங்கள் கூர்ந்து கவனிக்கவும்.

    பலன்கள்

    ஓம் என்ற மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நம் மனதில் உள்ள தீய அனுபவப்பதிவுகள் அழிக்கப்படுகின்றது. ஓம் மந்திரம் உச்சரிப்பதால் நல்லவரின் தொடர்பு கிடைக்கின்றது. இந்த உடலில் ஐந்தாவது அடுக்கில் உள்ள ஆத்மாவின் தொடர்பு கிடைக்கின்றது. உடல் முழுவதும் புத்துணர்வு ஓம் மந்திர அதிர்வலை மூலம் கிடைக்கின்றது.

    பத்மாசனத்தில் ஓம்

    விரிப்பில் ஒரு மேட் விரித்து அமரவும். படத்தில் உள்ளதுபோல் ஒவ்வொரு காலாக மடியில் போடவும். கைகளை சின் முத்திரையில் வைக்கவும். கண் களை மூடி “ஓம்“ என்ற மந்திரத்தை சத்தமாக 12 முறைகள் உச்சரிக்கவும். பின் சாதாரண மூச்சில் மூச்சை மட்டும் கவனிக்கவும் இரண்டு நிமிடங்கள்.

    வஜ்ராசனத்தில் ஓம்

    இதே போல் படத்தில் உள்ளது போல் வஜ்ராசன மிட்டு அதில் ஓம் மந்திரத்தை 12 முறைகள் உச்சரிக்கவும்.

    அர்த்த பத்மாசனம்

    படத்தில் உள்ளதுபோல் ஒரு காலை மட்டும் தொடையில் வைத்து கைகளை சின் முத்திரையில் வைத்து “ஓம்“ மந்திரத்தை 12 முறைகள் உச்சரிக்கவும்.
    சுகாசனம்

    பத்மாசனம், வஜ்ராசனம், அர்த்த பத்மாசனம் போட முடியாதவர்கள் சுகாசனத்தில் அமர்ந்து “ஓம்“ மந்திரத்தை 12 முறைகள் உச்சரிக்கவும். ஏதாவது ஒரு ஆசனத்தில் அமர்ந்து ஓம் மந்திரத்தை காலை / மாலை உச்சரிக்கவும்.

    ஓம்காரத்தின் மகிமைகள்

    அவ்வையார் தனது அகவலில் “ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பது காட்டி” என்று கூறுவார். இந்த உடலில் ஒன்பது ஓட்டை, அதனை வாயில் என்கிறார். இந்த ஒன்பது வாயிலையும் ஒரு மந்திரத்தால் அடைப்பதுங் காட்டி “ஓம்“ என்ற மந்திரம் ஒன்பது வாயிலையும் அடைத்து தனக்குள் உள்ள ஆற்றலை வெளிப்படுத்தும் அற்புத மந்திரம் என்கிறார். ஐம்புலனையும் அடக்கி ஆனந்தம் அளிக்கும், ஆரோக்கியம் அளிக்கும் அற்புத மந்திரம் “ஓம்“ என்கிறார்.

    இல்லத்தில் ஓம் மந்திரம்

    உங்கள் இல்லத்தில் தினம் வீட்டில் உள்ளவர்கள் காலை/மாலை அமர்ந்து பத்து நிமிடங்கள் “ஓம்“ மந்திரத்தை சத்தமாக உச்சரித்தால் அந்த இல்லத்தில் நல்ல அதிர் வலைகள் இல்லத்திற்கே நன்மை செய்யும். உச்சரிப்பவர்கள் ஒவ்வொருவர் உடலிலும் நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
    நம்பிக்கையுடன் ஒவ்வொருவரும் “ஓம்“ மந்திரத்தை உச்சரியுங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்வும் வளமாகும். நாட்டில் நல்ல நேர்முகமான அதிர்வலைகள் மலரும்.

    இன்று ஒவ்வொரு மனிதர்களுக்கும் தேவை தன்னம்பிக்கை, நோய் எதிர்ப்பாற்றல், நுரையீரலின் சிறப்பு இயக்கம், இவை அனைத்தும் தனக்குள் இருக்கும் ஓம்கார ஒலியின் மூலம் கிடைக்கும். அதனை முறையாக உச்சரிக்கும் பொழுது தன்னை உணரலாம். தனக்குள் உள்ள அற்புத சக்தியின் மூலம் பயமின்றி வளமாக வாழலாம்.

    யோகக் கலைமாமணி

    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA) 6369940440
    ஓம் என்ற மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நம் மனதில் உள்ள தீய அனுபவப்பதிவுகள் அழிக்கப்படுகின்றது. ஓம் மந்திரம் உச்சரிப்பதால் நல்லவரின் தொடர்பு கிடைக்கின்றது.
    விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும்.  கை பெருவிரலால் காதை நன்கு அடைக்கவும்.  மற்ற விரல்களை படத்தில் உள்ளதுபோல் வைக்கவும்.  காதை மட்டும் நன்கு அடைக்கவும். கண்களை மூடி ஐந்து நிமிடங்கள் இருக்கவும். ஓம்கார ஓசை வண்டின் ரீங்காரம் போல் ஒலிப்பதை உணர முடியும். பின் மெதுவாக கைகளை சாதாரண நிலைக்கு கொண்டு வரவும்.

    உடன் கைகளை சின் முத்திரையில் வைக்கவும்.  பெருவிரல், ஆள்காட்டி விரல் நுனிகளை இணைக்கவும்.  கண்களை மூடி “ஓ” என்று சத்தமாக ஒலியை எழுப்பவும்,  அப்பொழுது உங்கள் உணர்வு முதுகுத் தண்டின் அடிப்பகுதியிலிருந்து பிராணன் மேல் நோக்கி வருவதாக “ஓ” என்று கூறி முடிந்த அளவு கூறி “ம்“ என்று சொல்லும் பொழுது உங்களது உணர்வு கழுத்து பின் பகுதியிலிருந்து உச்சந்தலை நெற்றிப்பொட்டு வழியாக இதயத்தில் “ம்“ என்று கூறி முடிக்கவும்.

    இவ்வாறு ஒரு முறை கூறி ஒரு பத்து வினாடிகள் கழித்து மீண்டும் ஒரு முறை உச்சரிக்கவும்.  இவ்வாறு 12  முறை உச்சரிக்கவும்.  இது சிரமமாக இருந்தால்  “ஓம்“ என்று ஆழமாக முடிந்த அளவு “ஓ” என்று கூறி “ம்“ என்று கூறவும்  12 முறைகள். பின் இயல்பாக நடக்கும் மூச்சை 5  நிமிடங்கள் கூர்ந்து கவனிக்கவும்.

    பலன்கள்

    ஓம் என்ற மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நம் மனதில் உள்ள தீய அனுபவப்பதிவுகள் அழிக்கப்படுகின்றது.  ஓம் மந்திரம் உச்சரிப்பதால் நல்லவரின் தொடர்பு கிடைக்கின்றது.  இந்த உடலில் ஐந்தாவது அடுக்கில் உள்ள ஆத்மாவின் தொடர்பு கிடைக்கின்றது.  உடல் முழுவதும் புத்துணர்வு ஓம் மந்திர அதிர்வலை மூலம் கிடைக்கின்றது.
    நமது ஆழ்மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அழிக்கவும், மீண்டும் வராமல், எழாமல் தடுக்கவும் முத்திரைகளை மூன்று மாதங்கள் தொடர்ந்து பயிலுங்கள்.
    இன்று உலகில் நிறைய மனிதர்களுக்கு பயம் உள்ளது. மனதில் பல வகையான பய உணர்வுகள் உள்ளது. இந்த பய உணர்வு, பய எண்ணங்களினால் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் ஒழுங்காக சுரக்காது. அதனால் உடலில் பல வகையான பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதற்கு மேல் மன அழுத்தத்தினால் நுரையீரல், இதயம் பாதிப்பு ஏற்படுகின்றது. எல்லா மனிதர்கள் போல் அவர்களால் எல்லோரிடமும் பழக, பேசக்கூட முடிவதில்லை. தனிமையில் பய உணர்வினால் பல நபர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். வாழ்வில் ஏற்கனவே நடந்த ஏதாவது ஒரு சோகமான சம்பவம் மீண்டும், மீண்டும் நினைவில் வந்து கொண்டே இருக்கும். அல்லது, நாளை வாழ்வில் ஏதாவது விபரீதமாக நடந்துவிடுமோ என்று பயம் இருக்கும்.

    இந்த பயத்தினால்தான் இதயத்துடிப்பு சரியாக துடிப்பதில் மாற்றம் ஏற்படுகின்றது. இதய வாழ்வில் ரத்தம் சரியாக செல்லாமல் தடை ஏற்படுகின்றது. இதய வலி ஏற்படுகின்றது. நுரையீரலின் செயல் திறனும் பாதிக்கப்படுகின்றது. நல்ல காற்றை உள் வாங்குவதில் பாதிப்பு ஏற்படுகின்றது. அதனால் சிறுகுடல் பாதிப்பு ஏற்படுகின்றது. ஜீரண மண்டலம் பாதிப்படைகின்றது. அதனால் பசி சரியாக எடுப்பதில்லை. பத்து விதமான வாயுக்களும் பய உணர்வினால் ஒழுங்கான விகிதத்தில் இருப்பதில்லை.

    இதிலிருந்து நாம் உணர வேண்டியது உடலில் ஏற்படும் நிறைய பிரச்சினைகளுக்கு மூல காரணமாய் இருப்பது மனதில் ஏற்படும் பயம். இதற்காக பல மருந்துகள் மாத்திரைகள் சாப்பிடுகின்றனர். ஆனால் இது மனம் சம்பந்தமானது. மனதை செம்மைப்படுத்த மருந்து முழுப்பலன் தராது. இதற்கு தீர்வு நம்மிடமே உள்ளது. அதுவே யோக முத்ரா சிகிச்சையாகும்.

    நமது ஆழ்மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அழிக்கவும், மீண்டும் வராமல், எழாமல் தடுக்கவும் முத்திரைகள் பயிலுங்கள். மூன்று மாதங்கள் தொடர்ந்து பயிலுங்கள் காலை / மாலை சாப்பிடுமுன் ஒவ்வொரு முத்திரையும் இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யுங்கள்.

    முதல் முத்திரை - சின் முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் பெருவிரல், ஆள்காட்டி விரல் நுனியை இணைக்கவும். மற்ற மூன்று விரல்களும் படத்தில் உள்ளதுபோல் தரையை நோக்கி இருக்கவும். அந்த விரல் நுனியில் சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.

    பிராண முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் சுண்டு விரல், மோதிரவிரல் அதன் மத்தியில் கட்டை விரல் நுனியை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். அதிகம் மனோ பயம் உள்ளவர்கள் ஐந்து நிமிடங்கள் மூன்று முறை காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    சங்கு முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் வலது கை இடது கை விரல்களை கோர்த்து கட்டைவிரல் மட்டும் படத்தில் உள்ளது போல் சேர்த்து முன்னால் வைக்கவும். படத்தை பார்க்கவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும். ஒரு மனம் மூச்சிலும், மற்றொரு மனம் விரலில் கொடுத்த அழுத்தத்திலும் லயிக்கட்டும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

    பத்மாசனம்

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். இரு கால் களையும் நீட்டவும். வலது காலை மடித்து இ டது தொடையில் போடவும். இ டது காலை மடித்து வலது தொடையில் வைக்கவும். முது கெலும்பு நேராக இருக்கட்டும். இரு கைகளையும் சின் முத்திரையில் வைக்கவும். மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை இழுக்கவும். மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள். பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கூர்ந்து கவனிக்கவும். ஐந்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடங்கள் இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும். இவ்வாறு மூச்சை கவனிக்கும் பொழுது நமது எண்ணங்கள் சாந்தமாகும். பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும். அனைவராலும் முதலில் பத்மாசனத்தில் ஐந்து நிமிடங்கள் இருக்க முடியாது. எனவே முப்பது வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக ஒரு நிமிடமிருக்க முயற்சிக்கவும். தொடர்ந்து பயின்றால் ஐந்து நிமிடங்கள் இருக்க முடியும். பத்மாசனத்தில் இருக்கும் பொழுது எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நேர்முக எண்ணங்கள் வளரும்.

    மனோபயமும் மூச்சும்

    பொதுவாக பய உணர்வு இருக்கும் பொழுது உடலில் மூச்சோட்ட மண்டலம் சரியாக இயங்காது. பிராணன் உடல் உள் உறுப்புக்கள் அனைத்திற்கும் சரியாகக் கிடைக்காது. அதனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஆழ்ந்த மூச்சு எடுத்து விடவும். இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஐந்து முறைகள் செய்யவும். அப்பொழுது பிராண சக்தி உடல் முழுவதும் நன்கு பரவும். மூளை செல்களுக்கு ரத்த ஓட்டம் நன்கு இயங்கும். மன அமைதி கிடைக்கும்.

    மந்திரமும் மன அமைதியும் - ஓம்

    இந்த பிரபஞ்சமே “ஓம் “ என்ற அதிர்வலையில் இயங்குகின்றது. நமது உடலில் ஓம் என்ற ஒலி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. நமது புலன்களின் வழி பிராணன் வெளி செல்வதால், மன ஒருமைப்பாடு இல்லாததால் அதனை உணர முடியவில்லை. ஓம் என்ற ஒலியை நன்கு நீட்டி பத்து முறைகள் உச்சரித்தால் மனோ பயம் நீங்கும். மன அமைதி கிடைக்கும். இது அனாகத ஒலி என்று அழைக்கப்படுகின்றது. அதிக மனோபயமுள்ளவர்கள் காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் ஓம் என்ற மந்திரத்தை நன்கு நீட்டி உச்சரிக்கவும். பத்து முறைகள். யார் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் உங்கள் மத வழிபாடு தினமும் தவறாமல் செய்து வாருங்கள். அதில் மனோபயம் நீங்கும்.

    மணிப்பூரக சக்கரா தியானம்

    நிமிர்ந்து அமரவும். தரையில் விரிப்பு விரித்து அதில் காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் மேற்கு திசை நோக்கியும் அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
    பத்து முறைகள். பின் உங்களது மூச்சோட்டத்தை வயிற்று உள் பகுதியில் நிலை நிறுத்தவும். உங்களது மூச்சோட்டத்தை வயிற்று உள் பகுதியில் கூர்ந்து தியானிக்கவும். நல்ல பிராண சக்தி வயிற்று உள் உறுப்புகளில் கிடைப்பதாக எண்ணவும்.

    ஐந்து நிமிடங்கள் காலை / மாலை இவ்வாறு தியானிக்கவும்.பய உணர்வால் பிராண சக்தி உடல் முழுவதும் சரியாக செல்லாமல் இருக்கும். இந்த மணிப்பூரக சக்கரா தியானத்தால் பிராண ஆற்றல் உடல் முழுக்க நன்கு இயங்கும். மனோ பயம் நீங்கும். மன தைரியம் கிடைக்கும். நேர்முக எண்ணங்கள் வளரும். இதயத்துடிப்பு சீராகும். உடல் முழுக்க இந்தப் பகுதியில் சக்தி ஓட்டம் குறைவாக இருந் தாலும் மணிப்பூரக சக்கரா தியானம் தொடர்ந்து ஐந்து நிமிடம் தினம் செய்தாலே உடல் இயக்கம், மனோ இயக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். எனவே தினமும் இடைவிடாமல் காலை / மாலை இந்த தியானத்தை செய்யுங்கள்.

    தீப தியானம்

    தினமும் காலை / மாலையில் உங்கள் முன்பு ஒரு விளக்கு தீபம் ஏற்றி வையுங்கள். அந்த தீபத்தை ஒரு ஐந்து நிமிடங்கள் உற்று கவனிக்கவும். பின்பு கண்களை மூடி இரண்டு நிமிடங்கள் இருக்கவும். இதனை தினமும் செய்ய முடியாவிட்டாலும் வாரம் இரு முறைகள் பயிற்சி செய்யவும்.

    காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் இதே போல் கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஐந்து முறைகள். பின் இந்த உணவு எனக்கு ஆரோக்கியத்தையும், அமைதியையும் தரும் உணவாக அமையட்டும் என்று பிரார்த்தித்து விட்டு பின் சாப்பிடவும்.
    மேற்குறிப்பிட்ட பயிற்சிகளை நம்பிக்கையுடன் பயிற்சி செய்யுங்கள். ஒரு மண்டலம் 48 நாட்கள் தொடர்ந்து செய்யுங்கள். நிச்சயமாக மனோபயம் நீங்கி, தைரியமாக, வளமாக வாழலாம்.

    யோகக் கலைமாமணி
    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
    6369940440

    தினமும் இரு முறை தியானம் செய்ய முடிந்தவர்கள் காலை ஒரு தியானமும், மாலை ஒரு தியானமும் செய்யலாம். இன்று தீப தியானம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    இந்த தியானத்தை அரையிருட்டு அறையில் செய்வது நல்லது. உங்கள் கண்பார்வைக்கு நேரான ஓரிடத்தில் இரண்டு அல்லது மூன்று அடிகள் தூரத்தில் மெழுகு வர்த்தி அல்லது விளக்கு பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.

    முறையாக அமர்ந்து, கண்களை மூடி மூச்சை சீராக்கிக் கொள்ளுங்கள். மூன்றாவதாக மூச்சில் முழுக்கவனம் வைப்பதற்குப் பதிலாக, கண்களைத் திறந்து அந்த எரியும் தீபத்தின் ஒளிச்சுடரில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். எண்ணங்கள் அந்த தீப ஒளியை விட்டு ஓட ஆரம்பிக்கும் போதெல்லாம் மனதை மென்மையாக திரும்பவும் அந்த தீப ஒளிக்கே கொண்டு வந்து விடுங்கள்.

    மனதை மெழுகுவர்த்தி பற்றியோ, விளக்கு பற்றியோ எண்ணக் கூட விடாதீர்கள். அந்த சுடர் மிகப்பிரகாசமாக எரிகின்றது, மிக மங்கலாக எரிகின்றது என்பது போன்ற எண்ணங்களைக் கூட வளர்த்தாதீர்கள். உடனே அதனுடன் சம்பந்தப்பட்ட மற்ற எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடக்கூடும். தீப ஒளியில் மனம் லயிக்கப் பாருங்கள்.

    மனம் அதை விட்டுச் செல்லும் போதெல்லாம் சலிக்காமல் அந்த தீபச்சுடருக்கே திரும்பக் கொண்டு வாருங்கள். நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்று அறிந்த பின் உங்கள் மனம் சிறிது சிறிதாக அலைவதை நிறுத்தி வசப்படும். தியான நிலை கைகூடும். சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் இந்த தியானத்தைச் செய்து முடியுங்கள்.

    தியானத்தை முடித்த பின்னரும் தடாலென்று எழுவது, உடனே பரபரப்பான சூழ்நிலைக்கு மாறுவது கூடாது. சற்று நிதானமாக தியான நிலையில் இருந்து இயல்பான நிலைக்குத் திரும்புங்கள். அப்போது தான் அந்த தியானத்தால் பெற்ற அமைதியின் ஒரு பகுதியை மனதின் ஆழத்தில் நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

    தினமும் இரு முறை தியானம் செய்ய முடிந்தவர்கள் காலை ஒரு தியானமும், மாலை ஒரு தியானமும் செய்யலாம். 
    உடல் முழுக்க இந்தப் பகுதியில் சக்தி ஓட்டம் குறைவாக இருந்தாலும் மணிப்பூரக சக்கரா தியானம் தொடர்ந்து ஐந்து நிமிடம் தினம் செய்தாலே உடல் இயக்கம், மனோ இயக்கம் மிகச் சிறப்பாக இருக்கும்.
    நிமிர்ந்து அமரவும். தரையில் விரிப்பு விரித்து அதில் காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் மேற்கு திசை நோக்கியும் அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
    பத்து முறைகள். பின் உங்களது மூச்சோட்டத்தை வயிற்று உள் பகுதியில் நிலை நிறுத்தவும்.

    உங்களது மூச்சோட்டத்தை வயிற்று உள் பகுதியில் கூர்ந்து தியானிக்கவும். நல்ல பிராண சக்தி வயிற்று உள் உறுப்புகளில் கிடைப்பதாக எண்ணவும். ஐந்து நிமிடங்கள் காலை / மாலை இவ்வாறு தியானிக்கவும்.

    பய உணர்வால் பிராண சக்தி உடல் முழுவதும் சரியாக செல்லாமல் இருக்கும். இந்த மணிப்பூரக சக்கரா தியானத்தால் பிராண ஆற்றல் உடல் முழுக்க நன்கு இயங்கும். மனோ பயம் நீங்கும். மன தைரியம் கிடைக்கும். நேர்முக எண்ணங்கள் வளரும்.

    இதயத்துடிப்பு சீராகும். உடல் முழுக்க இந்தப் பகுதியில் சக்தி ஓட்டம் குறைவாக இருந்தாலும் மணிப்பூரக சக்கரா தியானம் தொடர்ந்து ஐந்து நிமிடம் தினம் செய்தாலே உடல் இயக்கம், மனோ இயக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். எனவே தினமும் இடைவிடாமல் காலை / மாலை இந்த தியானத்தை செய்யுங்கள்.
    குளிர், மழை காலத்திலும் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் எழுந்து விடுங்கள். எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு சிறிய முத்திரை, யோகா, மூச்சுப்பயிற்சி செய்துவிடுங்கள். உடல் சுறுசுறுப்பாக இயங்கும்.
    நேராக படுத்த நிலையில் செய்யும் அர்த்த ஹாலாசனம் செய்முறை

    ஸ்டெப் 1: விரிப்பில் நேராகப் படுக்கவும். இரு கால்களையும் சேர்த்து வைக்கவும். இரு கைகளையும் பக்கவாட்டில் வைக்கவும். கைகளை அழுத்தி வலது காலை மட்டும் ஒரு அடி உயர்த்தவும். பத்து வினாடிகள் சாதாரண மூச்சில் இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு காலை தரையில் வைக்கவும். பின் இடது காலை மட்டும் ஒரு அடி உயர்த்தவும். பத்து வினாடிகள் சாதாரண மூச்சில் இருக்கவும். பின் மெதுவாக காலை கீழே வைக்கவும்.

    ஸ்டெப் 2: பின் இரு கைகளையும் அழுத்தி இரு கால்களையும் ஒரு அடி உயர்த்தவும். சாதாரண மூச்சில் பத்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக கால்களை தரைக்கு கொண்டு வரவும்.

    ஸ்டெப் 3: பின் இரு கால்களையும் படத்தில் உள்ளதுபோல் இடுப்பு வரை உயர்த்தவும். பத்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக காலை கீழே வைக்கவும். இதேபோல் இரண்டு தடவைகள் செய்ய வேண்டும்.

    அர்த்த ஹாலாசனம் பலன்கள்: கணையம் நன்கு இயங்கும். வாயு பிரச்சினை சரியாகும். சுகர் சரியாகும் இடுப்பு வலி நீங்கும். இடுப்பு எலும்பு தேய்மானமாகாமல் திடமாக இயங்கும். குதி கால் வலி வராது. கால் பாத வீக்கம் வராது. குளிர்காலத்தில் குளிரை சமாளிக்கவும், கால் நரம்புகள் குளிர்காலத்தில் சிலருக்கு இழுக்கும், அந்த மாதிரி நரம்புப் பிரச்சினைகள் வராது.

    குப்புறப்படுத்து செய்யும் புஜங்காசனம்

    செய்முறை: விரிப்பில் குப்புறபடுக்கவும். இரு கால்களையும் சேர்த்து படத்தில் உள்ளதுபோல் வைக்கவும். இரு கைகளையும் இதயம் பக்கத்தில் வைத்து மெதுவாக மூச்சை இழுத்துக்கொண்டே உடம்பை பின்னால் வளைக்கவும். இடுப்பு வரை தரையில் இருக்கவும். இடுப்பிற்கு மேல் படத்தில் உள்ளது போல் வளைக்கவும். பத்து வினாடிகள் இருக்கவும். பின் மூச்சை வெளிவிட்டு தரையில் வந்து விடவும்.

    புஜங்காசனத்தின் பலன்கள்: முதுகுத்தண்டு திடப்படும், அடிமுதுகு வலி, நடுமுதுகு வலி, கழுத்து முதுகு வலி நீங்கும். அதைச் சார்ந்த உள் உறுப்புக்கள் சிறுநீரகம், சிறுநீரகப்பை, சிறுகுடல், பெருங்குடல், இதயம், நுரையீரல், நன்கு சக்தி பெற்று இயங்கும். ராஜ உறுப்பான இதயம் பாதுகாக்கப்படுகின்றது. மழைக்காலம், குளிர்காலங்களில் வரும் மூக்கடைப்பு, சைனஸ், ஆஸ்துமா வராமல் பாதுகாக்கும் அற்புத ஆசனமிது. முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்தம், இதய பலவீன முடையவர்கள் இதனை பயில வேண்டாம்.

    அமர்ந்த நிலையில் செய்யும் வஜ்ராசனம்

    செய்முறை: விரிப்பில் நேராக இரு கால்களையும் நீட்டி அமரவும். பின் ஒவ்வொரு காலாக மடக்கி இரு குதிகால்களில் குதம் படும்படி படத்தில் உள்ளது போல் அமரவும். இரு கைகளையும் மூட்டின் மேல் வைக்கவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கவனிக்கவும். இரண்டு நிமிடங்கள் இருக்கலாம். முதலில் ஒரு நிமிடம் இருக்கவும். பின் தொடர்ந்து செய்யும் பொழுது இரு நிமிடங்கள் இருக்கலாம்.

    வஜ்ராசனத்தின் பலன்கள்: மன உறுதி, உடல் உறுதி கிடைக்கும். ஜீரண மண்டலம் நன்கு இயங்கும். குளிர் காலம், மழை காலத்தில் வஜ்ராசனத்தில் அமர்ந்து ஐந்து நிமிடம் மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளியிட்டால் குளிருக்கு ஏற்றபடி சரீரம் தாங்கக்கூடிய சக்தி கிடைக்கும். அதிக குளிரால் தசை சுருக்கம், உடல் நடுக்கம் ஏற்படாது.

    நின்ற நிலையில் செய்யும் பாதஹஸ்தாசனம்

    செய்முறை: விரிப்பில் இரு கால்களையும் சேர்த்து நேராக நிற்கவும் கைகளை தலைக்குமேல் உயர்த்தி மூச்சை வெளிவிட்டு மெதுவாகக் குனிந்து கால் பெருவிரல்களை தொடவும். அங்கு சாதாரண மூச்சில் பத்து வினாடிகள் இருக்கவும். பின் பொறுமையாக நிமிர்ந்து வரவும், இதுபோல் இரண்டு முறைகள் செய்யவும்.

    பாதஹஸ்த ஆசனத்தின் பலன்கள்: வயிற்று உள் உறுப்புகள் நன்கு இயங்கும். முதுகு வலி வராது. முதுகுத்தண்டு திடப்படும். அதிக எடை, தொப்பை குறையும். தசைகள் குளிர்காலம், மழைக்காலத்தில் தாங்கக்கூடிய சக்தியை பெறுகின்றது.

    மேற்குறிப்பிட்ட நான்கு ஆசனங்களை தினமும் காலை / மாலை பயிற்சி செய்தால் குளிர் காலத்தில் வரும் அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகும். அதோடு சேர்த்து நுரையீரலை வலுப்படுத்தும் எளிய நாடிசுத்தியை செய்ய வேண்டும்.

    மழை காலம், குளிர்காலத்தில் செய்ய வேண்டிய மூச்சு பயிற்சி

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். விரிப்பில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். இடது கை சின் முத்திரையில் வைக்கவும். பெருவிரல் ஆள்காட்டி விரல் நுனியை இணைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். வலது கை பெருவிரலால் வலது நாசியில் அடைக்கவும். இடது மூக்கு துவாரத்தின் வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.

    பின் வலது கை மோதிரவிரலால் இடது நாசியை அடைத்து வலது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து வலது நாசி வழியாக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.

    பின் வலது நாசியை பெருவிரலால் அடைத்து இடது நாசியில் மூச்சை மெதுவாக இழுக்கவும். உடன் இடது நாசியை மோதிர விரலால் அடைத்து வலது நாசியில் மெதுவாக மூச்சை வெளிவிடவும். மீண்டும் இடதில் இழுத்து வலது நாசியில் மூச்சை மெதுவாக வெளிவிடவும். பத்து முறைகள் பயிற்சி செய்யவும்.

    பின் இடது நாசியை மோதிர விரலால் அடைத்து, வலது நாசியில் மூச்சை மெதுவாக இழுத்து உடன் வலது நாசியை அடைத்து இடது நாசியில் மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் பயிற்சி செய்யவும்.

    குளிர் காலங்களில் செய்ய வேண்டிய முத்திரை

    லிங்க முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக் கட்டும். எல்லா கை விரல் களையும் இணைக்கவும். இடது கை கட்டை விரல் மட்டும் நேராக படத்தில் உள்ளது போல் வைக்கவும். கையை இதயத்திற்கு நேராக வைக் கவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடங்கள் செய்யவும். நுரையீரல் நன்கு இயங்கும். சளி / சைனஸ் / மூக்கடைப்பு வராது. குளிர் தாங்குமளவு உடலில் சக்தி கிடைக்கும்.

    பிராங்கியல் முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். மோதிரவிரல், சுண்டு விரலை கட்டை விரலின் அடிபக்கத்தில் வளைத்து தொடவும். நடுவிரல் பெரு விரல் நுனியைச் சேர்க்கவும். ஆள்காட்டி விரல் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் வரை இருக்கவும். பின் சாதாரணமாக கைகளை வைக்கவும். நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும். ஆஸ்துமா / சைனஸ் வருவதை தடுக்கும். குளிர் காலத்தில் வரும் எல்லா வகையான காய்ச்சலும் வராமல் பாதுகாப்பாக வாழலாம்.

    முகுள முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் பெரு விரலை நோக்கி மற்ற நான்கு விரல்களையும் குவித்து மேல் நோக்கி படத்தில் உள்ளது போல் வைக்கவும். இரு கைக ளிலும் பயிற்சி செய்யவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

    பஞ்ச பூதங்களும் உடலில் சமமாக இயங்கும். இதயத் துடிப்பு சீராகும். குளிர் தாங்கும் சக்தியை உடல் உள் உறுப்புக்கள் பெறுகின்றது. உடலில் குளிர்காலம், மழைக் காலத்தில் ஏற்படும் சோம்பலை அகற்றி சுறுசுறுப்பை கொடுக்கின்றது. உடலில் குளிர், மழை காலங்களில் பஞ்ச பூதத்தில் ஏற்பட்ட மாறுபாடுகளை சரி செய்கின்றது.

    மேற்குறிப்பிட்ட யோகாசனங்களை வயதானவர்கள் செய்ய முடியவில்லையெனில் மூச்சுப்பயிற்சியையும், முத்திரைகளையும் மட்டும் காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடங்களாவது ஒவ்வொரு முத்திரையும் பயிலுங்கள். நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும். குளிர்காலங்களில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் அதிக குளிரைத் தாங்கும் சக்தி கிடைக்கும். சளி பிடிக்காது. மூக்கடைப்பு வராமல் வாழலாம்.

    யோகக் கலைமாமணி
    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
    6369940440
    குளிர் காலம், மழை காலத்தில் வஜ்ராசனத்தில் அமர்ந்து ஐந்து நிமிடம் மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளியிட்டால் குளிருக்கு ஏற்றபடி சரீரம் தாங்கக்கூடிய சக்தி கிடைக்கும்.
    செய்முறை: விரிப்பில் நேராக இரு கால்களையும் நீட்டி அமரவும். பின் ஒவ்வொரு காலாக மடக்கி இரு குதிகால்களில் குதம் படும்படி படத்தில் உள்ளது போல் அமரவும். இரு கைகளையும் மூட்டின் மேல் வைக்கவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கவனிக்கவும். இரண்டு நிமிடங்கள் இருக்கலாம். முதலில் ஒரு நிமிடம் இருக்கவும். பின் தொடர்ந்து செய்யும் பொழுது இரு நிமிடங்கள் இருக்கலாம்.

    வஜ்ராசனத்தின் பலன்கள்: மன உறுதி, உடல் உறுதி கிடைக்கும். ஜீரண மண்டலம் நன்கு இயங்கும். குளிர் காலம், மழை காலத்தில் வஜ்ராசனத்தில் அமர்ந்து ஐந்து நிமிடம் மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளியிட்டால் குளிருக்கு ஏற்றபடி சரீரம் தாங்கக்கூடிய சக்தி கிடைக்கும். அதிக குளிரால் தசை சுருக்கம், உடல் நடுக்கம் ஏற்படாது.
    ஆஸ்துமா வராமல் பாதுகாக்கும் அற்புத ஆசனமிது. முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்தம், இதய பலவீன முடையவர்கள் இதனை பயில வேண்டாம்.
    செய்முறை: விரிப்பில் குப்புறபடுக்கவும். இரு கால்களையும் சேர்த்து படத்தில் உள்ளதுபோல் வைக்கவும். இரு கைகளையும் இதயம் பக்கத்தில் வைத்து மெதுவாக மூச்சை இழுத்துக்கொண்டே உடம்பை பின்னால் வளைக்கவும். இடுப்பு வரை தரையில் இருக்கவும். இடுப்பிற்கு மேல் படத்தில் உள்ளது போல் வளைக்கவும். பத்து வினாடிகள் இருக்கவும். பின் மூச்சை வெளிவிட்டு தரையில் வந்து விடவும்.

    புஜங்காசனத்தின் பலன்கள்: முதுகுத்தண்டு திடப்படும், அடிமுதுகு வலி, நடுமுதுகு வலி, கழுத்து முதுகு வலி நீங்கும். அதைச் சார்ந்த உள் உறுப்புக்கள் சிறுநீரகம், சிறுநீரகப்பை, சிறுகுடல், பெருங்குடல், இதயம், நுரையீரல், நன்கு சக்தி பெற்று இயங்கும்.

    ராஜ உறுப்பான இதயம் பாதுகாக்கப்படுகின்றது. மழைக்காலம், குளிர்காலங்களில் வரும் மூக்கடைப்பு, சைனஸ், ஆஸ்துமா வராமல் பாதுகாக்கும் அற்புத ஆசனமிது. முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்தம், இதய பலவீன முடையவர்கள் இதனை பயில வேண்டாம்.

    இந்த முத்திரைகளை செய்தால் குளிர்காலங்களில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் அதிக குளிரைத் தாங்கும் சக்தி கிடைக்கும். சளி பிடிக்காது. மூக்கடைப்பு வராமல் வாழலாம்.
    லிங்க முத்திரை: விரிப் பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக் கட்டும். எல்லா கை விரல் களையும் இணைக்கவும். இடது கை கட்டை விரல் மட்டும் நேராக படத்தில் உள்ளது போல் வைக்கவும். கையை இதயத்திற்கு நேராக வைக் கவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடங்கள் செய்யவும். நுரையீரல் நன்கு இயங்கும். சளி / சைனஸ் / மூக்கடைப்பு வராது. குளிர் தாங்குமளவு உடலில் சக்தி கிடைக்கும்.

    பிராங்கியல் முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். மோதிரவிரல், சுண்டு விரலை கட்டை விரலின் அடிபக்கத்தில் வளைத்து தொடவும். நடுவிரல் பெரு விரல் நுனியைச் சேர்க்கவும். ஆள்காட்டி விரல் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் வரை இருக்கவும். பின் சாதாரணமாக கைகளை வைக்கவும். நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும். ஆஸ்துமா / சைனஸ் வருவதை தடுக்கும். குளிர் காலத்தில் வரும் எல்லா வகையான காய்ச்சலும் வராமல் பாதுகாப்பாக வாழலாம்.

    முகுள முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் பெரு விரலை நோக்கி மற்ற நான்கு விரல்களையும் குவித்து மேல் நோக்கி படத்தில் உள்ளது போல் வைக்கவும். இரு கைக ளிலும் பயிற்சி செய்யவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

    பஞ்ச பூதங்களும் உடலில் சமமாக இயங்கும். இதயத் துடிப்பு சீராகும். குளிர் தாங்கும் சக்தியை உடல் உள் உறுப்புக்கள் பெறுகின்றது. உடலில் குளிர்காலம், மழைக் காலத்தில் ஏற்படும் சோம்பலை அகற்றி சுறுசுறுப்பை கொடுக்கின்றது. உடலில் குளிர், மழை காலங்களில் பஞ்ச பூதத்தில் ஏற்பட்ட மாறுபாடுகளை சரி செய்கின்றது.

    யோகக் கலைமாமணி
    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
    6369940440
    ×