என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    உடற்பயிற்சிக்கு முன்பு எப்படி வாம் அப் அவசியமோ அதேபோல உடற்பயிற்சிக்கு பின்பும் ஸ்ட்ரெச்சிங் அவசியம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஸ்ட்ரெச்சிங்... ஜிம்முக்கு செல்பவர்கள் இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவதை நீங்கள் காணலாம். ஸ்ட்ரெச்சிங் என்றால் என்ன? வாம் அப் க்கும் ஸ்ட்ரெச்சிங்க்கும் என்ன வித்தியாசம்? ஸ்ட்ரெச்சிங் செய்வதன் பயன் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

    இப்போதும் எடுத்தவுடனேயே உடற்பயிற்சியை மேற்கொள்ள கூடாது நமது உடல் நார்மலாக இருக்கும்போது திடீரென்று உடற்பயிற்சி செய்வதால் தசைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் அதனால் உடற்பயிற்சிக்கு முன்பு warm-up என்று சிலவற்றை செய்ய வேண்டும் அப்போதுதான் தசைகள் நமது உடல் உடற்பயிற்சிக்கு தயாராகும் சரி அப்போது ஸ்ட்ரெச்சிங்?

    நல்ல உடற்பயிற்சி செய்தவுடன் உடனே உணவையோ குளிர் பானத்தையோ அல்லது ரெஸ்ட் எடுப்பதோ கூடாது. உடற்பயிற்சிக்கு முன்பு எப்படி warm-up அவசியமோ அதேபோல உடற்பயிற்சிக்கு பின்பும் ஸ்ட்ரெச்சிங் அவசியம். ஏனென்றால் உடற்பயிற்சி செய்ததனால் ரத்த அழுத்தம் , இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும். உடலைக் கூல் டவுன் செய்ய ஸ்ட்ரெச்சிங் செய்ய வேண்டும். மேலும் உடற்பயிற்சி செய்யாதவர்கள்கூட உடலை வலுவாக்குவதற்கும் தடைகளை உறுதியாக்குவதற்கும் ஸ்ட்ரெச்சிங்கை தினமும் செய்யலாம்.

    காலையில் எழுந்தவுடன் ஸ்ட்ரெட்சிங் செய்வதால் அசௌகரியத்தால் ஏற்படும் முதுகுவலி குணமடையும். பைக் ஓட்டுபவர்கள் கூட்ட நெரிசலில் பயணம் செய்பவர்கள் உடலைப் பயன்படுத்தி வேலை செய்பவர்கள் கண்டிப்பாக அதிகாலையில் ஸ்ரெச்சிங் செய்யுங்கள்.

    தினமும் ஸ்ட்ரெச்சிங் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகுகிறது.மனதை ஒருநிலைப்படுகிறது. தினமும் மூச்சுப் பயிற்சியுடன் செய்யும்போது மன அழுத்தம் படிப்படியாக குறைகிறது பொறுமை அதிகரிக்கிறது.

    முதுகெலும்பை வலுப்பெற செய்கிறது இதனால் நரம்பு பிரச்சனைகள் குறைகிறது. தினமும் செய்வதன் மூலம் உடலுக்கு flexibility கிடைக்கிறது. இப்போதெல்லாம் தரையில் உட்கார சிலருக்கு முடிவதில்லை இந்தியன் டாய்லெட்டில் உட்காருவதற்கு சிரமப்படுகிறார்கள் கிட்டத்தட்ட யோகா போல ஸ்ட்ரெச்சிங் உடலுக்கு நெகிழ்வுத் தன்மையை கொடுக்கிறது இவ்வளவு நன்மை தரும் இதனை தினமும் ஒரு 15 நிமிடம் செய்யலாமே?

    சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிச்ய நோய்தீர்க்கும் யோக பயிற்சியாகும்.
    சூரியனை முழுமுதற்கடவுளாகப் போற்றி வணங்கும் வழக்கம் பண்டைய காலம் தொட்டே இருந்துவருகிறது. சூரியனின் ஆற்றலையும், பயனையும் நம் முன்னோர்கள் மட்டுமின்றி, அன்றைய நவீன அறிவியல் தொழில் நுட்ப உலகத்தில் மின்சக்தி பற்றாக்குறையை நீக்க சூரிய சக்தியை சரியான முறையில் பயன்படுத்த நமது அறிவியல் அறிஞர்கள் முன்வந்துள்ளனர். காலம் செல்லச் செல்ல சூரிய நமஸ்காரம் மட்டுமல்லாது அனைத்து சக்திகளும் சூரியனிடமிருந்து நேரடியாகப் பெறும் வாய்ப்பு உருவாகும்.

    சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிச்ய நோய்தீர்க்கும் யோக பயிற்சியாகும். தொன்று தொட்டே பாரத மக்கள் பின்பற்றி வந்த ஓர் ஆசார முறை சூரிய நமஸ்காரம். உடல் மற்றும் மனது உறுதியடையவும் அமைதியடையவும் உதவும் ஆசாரமிது. இதை விதி முறைகள் படி செய்யும் போது உடற்பாகங்களில் ஆற்றலும் சக்தியும் வருகின்றது.

    அதிகாலைநேரத்தில் நம் உடலில் படும் சூரிய ஒளி தேக ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதைத்தான் நமது புண்ணிய பாரத பூமியில் வாழ்ந்த சித்தர்கள் காலை வெயிலில் ஆரம்பிக்கும் பித்தம், மாலை வெயிலில் தணிந்து போகும் என்றனர். சூரிய ஒளியைக் கொண்டு கொடிய நோயான காமாலையையும் குணப்படுத்தலாம் என்கிறது அதர்வண வேதம்.

    மேற்கத்திய நாடுகள் உட்பட உலகின் எல்லா பாகங்களிலும் இந்த ஆசார முறை பிரசித்தி பெற்றிருக்கிறது. ஜிம்னாஸ்டிக், சன்பாத் என்ற பெயர்களில் சூரிய நமஸ்காரத்தை உட்படுத்தி உடற்பயிற்சிகள் செய்து வருகின்றனர்.

    சூரிய நமஸ்காரம் வாயிலாக நமது உடலிலுள்ள எல்லா முட்டுகளுக்கும் அசைவு ஏற்படுகிறது. சருமத்தில் வைட்டமின் டி உற்பத்தி செய்யும் திறன் காலை சூரிய ஒளிகதிர்களும் உண்டு. கால்சியம் உற்பத்தியை கட்டுபடுத்தும் திறனும் உண்டு என்பது அறிவியல் துறைகள் அங்கீகரித்து உள்ளன. மேலும் உடலுறுப்புகள் உறுதி பெறுவதால் காச நோயனுக்களின் ஆக்கிரமிப்பையும் தடுக்கின்றன.

    தொடர்சியாக சூரிய நமஸ்காரம் செய்வதினால் அகால வயது முதிர்ச்சியை ஓரளவுக்கு தடை செய்யலாம். மூட்டுகள் நல்ல லாவகமடைகின்றது. தொப்பை வயிறு வருவதை கட்டுபடுத்த இயல்கின்றது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் நிலைநிறுத்தவும் சூரிய நமஸ்காரம் உதவகின்றது.

    சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் ஆரம்பத்தில் அனுசரிக்க வேண்டிய சில விசயங்களை பார்ப்போம். பரிசுத்தமான எளிய வாழ்க்கை வாழ வேண்டும். அளவான உணவு அருந்த வேண்டும். விசாலமானதும் காற்றோட்டம் உள்ளதுமான இடத்தில் நமஸ்காரம் செய்ய வேண்டும். நமஸ்கார வேளையில் மிக அவசியமான ஆடை மட்டும் தளர்த்தியாக அணியவேண்டும். தேனிர், காபி, கொக்கோ, புகையிலை, மதுபானம் முதலியவை அருந்த வேண்டாம், இப்படி அநேக விஷயங்கள் கவனித்து சூரிய நமஸ்காரம் ஆரம்பிக்க வேண்டும்.

    சூரிய நமஸ்காரம் செய்வதற்கு மிகவும் உகந்த நேரம் சூரிய உதயமாகும் அதிகாலை நேரம். இளஞ்சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. இரவில் தூக்கத்தால் உடலுக்கும், மனத்திற்கும் ஓய்வு கிடைப்பதால், அதிகாலையில் உடற்தசைகள் உடற்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக இருக்கும். மூளையின் அலைகள், அதிர்வுகள் குறைந்து அமைதியாக இருப்பதும் அதிகாலையில்தான். அதிகாலையில் வெப்பம் குறைவாக இருப்பதால் சூரிய நமஸ்கார பயிற்சியின் போது நமது உடலும் உள்ளமும் சோர்வடைவதில்லை. சூரிய நமஸ்காரம் செய்வதற்கு உகந்த திசை கிழக்கு. சூரியனின் கதிர்கள் உடல் முழுவதும் படும் வகையில் சுத்தமான காற்று இருக்கக்கூடிய திறந்த வெளியில் நின்றபடி செய்ய வேண்டும்.

    சூரிய நமஸ்காரம் எட்டு நிலைகளை வரிசையாகக் கொண்ட ஒரு யோக பயிற்சியாகும். ஒவ்வொரு சூரிய நமஸ்காரமும் மொத்தம் பன்னிரண்டு ஆசன நிலைகளை உள்ளடக்கியதாகும். பன்னிரண்டு ஆசனங்கள் இணைந்தது ஒரு சுற்று. இவ்வாறு 12 நமஸ்கார சுற்றுகள் இணைந்தது ஒரு சூரிய நமஸ்காரமாகும்.
    கடுமையான பயிற்சிக்கு உடலை உட்படுத்தும் முன்னர் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்துவது முக்கியம். உடற்பயிற்சி செய்வதற்கு ஆற்றல் அவசியம்.
    உடற்பயிற்சியும் சமச்சீர் உணவும் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியமானவை. பலர், நாள் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு மாலையில் உடற்பயிற்சிக் கூடத்திற்கு (ஜிம்) செல்லுகின்றனர். இன்னும் சிலருக்கு காலையில் உடற்பயிற்சி செய்வது வசதியாக உள்ளது. எப்படியாயினும் கடுமையான பயிற்சிக்கு உடலை உட்படுத்தும் முன்னர் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்துவது முக்கியம். உடற்பயிற்சி செய்வதற்கு ஆற்றல் அவசியம். ஆகவே, நன்கு சக்தியளிக்கக்கூடிய உணவு பொருள்களை சாப்பிட வேண்டும். எவற்றை சாப்பிட வேண்டும் என்று சரியாக தேர்ந்தெடுப்பதே முக்கியம்.

    காலை வேளையில் உடற்பயிற்சி செய்வோர் சாப்பிடக்கூடிய சில உணவு பொருள்கள்:

    ஓட்ஸ் கஞ்சி:

    காலையில் ஒரு கோப்பை ஓட்ஸ் கஞ்சி குடிப்பது நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். ஓட்ஸ், அதிக நார்ச்சத்தும் கார்போஹைட்ரேட்டும் அடங்கியது. ஆகவே, அதிக ஆற்றலை உடலுக்கு அளிக்கும். ஓட்ஸ் கஞ்சியுடன் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் விருப்பத்திற்கிணங்க முந்திரி, வாதுமை போன்ற கொட்டை வகைகள், பெர்ரி வகை பழங்கள் அல்லது யோகர்ட் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம். அவற்றை சேர்க்கும்போது சாப்பிட சுவையாக இருக்கும்.

    பழங்கள்:

    காலையில் உடற்பயிற்சிக் கூடத்திற்கு (ஜிம்) செல்லும் முன்னர், பழங்கள் சாப்பிடுவது விரும்பத்தக்கது. இரும்பு, மெக்னீசியம் உள்ளிட்ட பல சத்துகள் பழங்களில் அடங்கியுள்ளன. பழங்களுடன் சுவையாக எதையாவது சாப்பிட விரும்பினால் வாழைப்பழம் மற்றும் பால் சேர்த்து ஸ்மூத்தி தயாரித்து அருந்தலாம்.

    கிரீக் யோகர்ட்

    பிரோபியோடிக்ஸ் என்னும் நன்மை தரும் நுண்ணுயிரிகள், புரோட்டீன் என்னும் புரதம் மற்றும் கால்சியம் ஆகியவை அடங்கியிருப்பதால் உடற்பயிற்சிக்கு முன்பதாக எடுத்துக்கொள்ளக்கூடிய உணவு பொருள் கிரீக் யோகர்ட் ஆகும்.

    பான்கேக்

    உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சாப்பிடக்கூடியது புரத பான்கேக்குகள் ஆகும். இவை செரிப்பதற்கு சற்று கடினமானவை என்பதால் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்வதற்கு அதிக நேரத்திற்கு முன்பதாக புரோட்டீன் பான்கேக்கை சாப்பிட வேண்டும்.

    சாண்ட்விச்

    காலையில் எழுந்ததும் பெரும்பாலும் யாரும் சாண்ட்விச் சாப்பிட விரும்ப மாட்டார்கள். தீட்டப்படாத முழுதானியத்தில் செய்யப்பட்ட ரொட்டியை (பிரெட்) கொண்டு செய்யப்பட்ட சாண்ட்விச் காலையில் சாப்பிட ஏற்றது. அதில் நார்ச்சத்து அதிகம் அடங்கியிருக்கும். உங்கள் விருப்பத்திற்கிணங்க நல்ல காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். முட்டை சேர்க்க விரும்புவோர் அதைச் சேர்த்துக்கொள்வது நல்லது.
    அர்த்த மத்ஸ்யேந்திராசனம் நீரிழிவு, மலச்சிக்கல், முதுகெலும்பு பிரச்சனைகள், கர்ப்பப்பை வாய் தொற்றுகள், சிறுநீர்த்தாரை தொற்று நோய்களை போக்குகிறது.
    விரிப்பில் காலை நீட்டி உடலை நேராக நிமிர்த்தியபடி அமர வேண்டும். இடதுகாலை வலப்பக்கமாக மடக்கி வைக்க வேண்டும். வலது காலை இடதுகாலிற்கு வெளிப்புறமாக கொண்டுவந்து தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும்.

    மூச்சை வெளியேற்றியவாறு உடலின் மேல்பாகத்தை வலதுபக்கமாகத் திருப்ப வேண்டும். முதுகுத்தண்டுவடம் வளையாமல் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

    வலதுகால் பாதத்தை இடதுகையால் பிடித்துக்கொண்டு வலதுகையை பின்புறம் வைத்துக் கொள்ள வேண்டும். இயல்பாக மூச்சிழுத்தவாறு 20 முதல் 30 நொடிகள் இதே நிலையில் இருக்கலாம். இப்போது மெதுவாக இந்நிலையிலிருந்து வெளியே வந்து திரும்பவும் மறுபக்கம் இதேபோல செய்ய வேண்டும்.

    நன்மைகள்

    இடுப்பு மற்றும் முதுகு எலும்புகள் நெகிழ்ச்சியடைகின்றன. தலையோடு உடல் முழுவதும் நன்றாகத் திருப்பி செய்யும்போது மூளைக்குச் செல்லும் இரத்தஓட்டம் சீராகிறது. இதனால் மைக்ரேன் தலைவலிக்கு காரணமான மூளை நரம்புகளின் இறுக்கம் தளர்வடைகிறது. கழுத்து இடுப்பு மற்றும் தோள்பட்டை தசைகள் விரிவடைகின்றன.

    செரிமான உறுப்புகளில் உள்ள கழிவுகளை அகற்றி செரிமானத்தை தூண்டுகின்றன. இதயம் சிறுநீரகம் கல்லீரல் நுரையீரல் உறுப்புகளை தூண்டுகிறது. உடல்சோர்வு முதுகெலும்பு முதுகுவலி மற்றும் மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் அசௌகரியங்களிலிருந்து விடுவிக்கிறது. உள்ளுறுப்புகளை சுத்தம் செய்கிறது.

    உள்ளுறுப்பு திசுக்களில் இருக்கும் அதிகப்படியான நச்சுகள் மற்றும் வெப்பத்தை வெளியேற்றுகிறது. நீரிழிவு.  நீரிழிவு, மலச்சிக்கல், முதுகெலும்பு பிரச்சனைகள், கர்ப்பப்பை வாய் தொற்றுகள், சிறுநீர்த்தாரை தொற்று நோய்களை போக்குகிறது.
    ஊரடங்கால் உடற்பயிற்சி கூடங்களில் இருந்த உற்சாகம் பறிக்கப்பட்டுள்ளது. உடலை கட்டுக்கோப்பாக வைக்க முடியாமல் மக்கள் திணறி வருகிறார்கள்.
    ஒரு கட்டிடத்துக்கு அஸ்திவாரம் போல, கப்பலுக்கு கலங்கரை விளக்கம் போல, வண்டிக்கு அச்சாணி போல, நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வுக்கு உடல்நலமே முக்கியமானதாக அமைகிறது. ஒரு காலத்தில் நாமெல்லாம் ஒவ்வொரு உணவையும் சுவையறிந்து சாப்பிட்டோம். ஆனால் இன்று சாப்பிடும் உணவில் சர்க்கரை இருக்கிறதா? என்று அறிந்து சாப்பிட வேண்டி உள்ளது. உணவே மருந்து என்ற நிலை மாறி மருந்தே உணவு என்ற நிலை வந்துவிடுமோ? என்ற அச்சம் நிலவுகிறது.

    அதனால் இந்த காலக்கட்டத்தில் உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. அதனாலேயே உடற்பயிற்சி கூடங்களும் அதிகளவு முளைக்க தொடங்கின. உடற்பயிற்சியாளர்களும் அதிகளவு களத்துக்கு வந்துவிட்டனர். இதனால் ஆரோக்கியத்தை பேணுவதற்கு என நேரம் ஒதுக்கி மக்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று உடல்நலத்தை மேம்படுத்தி வருகிறார்கள்.

    கட்டுக்கோப்பான உடல் பெற வேண்டும் என்று வருவோர் ஒரு ரகம் என்றால், நோயற்ற உடல் நலத்துக்காக வருவோர் மற்றொரு ரகமாக இருக்கிறார்கள். ஆண்கள் போல பெண்களும் தற்போது உடற்பயிற்சி கூடங்களுக்கு வருகிறார்கள். தன்னம்பிக்கையுடன் பயிற்சி பெறுகிறார்கள். மருந்து, மாத்திரைகளால் இல்லாமல் கடுமையான உடற்பயிற்சியின் மூலம் உடலை கட்டுக்கோப்பாக்கி விடுகிறார்கள். இதுதவிர ஏராளமான உடற்பயிற்சி கூடங்களில் இப்போது யோகா வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இவ்வாறு ஆரோக்கியம் பேணும் இடமாக உடற்பயிற்சி கூடங்கள் திகழ்கின்றன என்றால் அது மிகையல்ல.

    தற்போது கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் எப்போதுமே பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கி கொண்டிருக்கும் உடற்பயிற்சி கூடங்கள் தற்போது வெறிச்சோடி கிடக்கின்றன.

    இதுகுறித்து சென்னை பட்டாபிராமை சேர்ந்த உடற்பயிற்சி கூட நிர்வாகி பிரேமா குமாரி கூறியதாவது:-

    நல்ல உடல் நலம் என்பது தானாக கிடைக்கக் கூடியது அல்ல. அதை நாம் தான் தேடி பெற்றுக்கொள்ள வேண்டும். நலமான வாழ்க்கையை விரும்புபவர்கள் நிச்சயம் உடற்பயிற்சியை தவிர்க்க முடியாது. தற்போதைய சூழலில் பெரும்பாலானோர் எதிர்காலத்தை கருதி உடற்பயிற்சி கூடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். எடை குறைப்பு, உடல் கட்டுக்கோப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக உடற்பயிற்சி கூடங்களை அணுகி உடல்நலம் பேணுகிறார்கள்.

    ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் எங்களது வாடிக்கையாளர்களை வீடுகளில் இருந்தே உடற்பயிற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறோம். உடற்பயிற்சி கூடங்கள் மூடியிருப்பதால் வாடகை, பணியாளர்கள் கூலி என பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் வேறு வழியின்றி சமாளித்து வருகிறோம். உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி அளித்தாலும் முன்பு போல வாடிக்கையாளர்கள் வருவார்களா? என்பது சந்தேகமே...

    இவ்வாறு அவர் கூறினார்.

    உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டு இருப்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஆண்களும், பெண்களும் தவித்து திணறி போகிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். இப்போதைய சூழலில் வீட்டின் வளாகங்கள் மற்றும் மொட்டை மாடிகளில் நடைபயிற்சியில் ஈடுபடுவது, எளிய உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது என இருக்கிறார்கள். ஊரடங்கு காரணமாக பலர் உடல் பருமனாலும் அவதிப்படுகிறார்கள். இதையெல்லாம் போக்க மீண்டும் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட வேண்டும் என வேண்டுகோளும் விடுக்கிறார்கள்.

    அதேபோல சலூன் கடைகள் மூடப்பட்டிருப்பதால் ஏராளமானோர் தாடி, பெரிய மீசைகளுடன் வலம் வருகிறார்கள். ‘டை’ அடிக்க முடியாததால் பலரது சாயம் வெளுத்திருக்கிறது. வெண் பஞ்சு போன்ற முடிகளை மறைக்க மிகவும் சிரமப்படுவதையும் பார்க்கமுடிகிறது. அதேபோல் அழகுநிலையங்களுக்கு செல்லாததால் பெண்களும் தவித்து போயிருக்கிறார் கள். பல பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை என்றால் பாருங்களேன்...

    உடலுழைப்பு இல்லாதவர்கள், அலுவலகங்களில் அமர்ந்து வேலை செய்கிறவர்கள், மூளைக்கு வேலை கொடுக்கிறவர்கள், 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக நடைபயிற்சி செய்ய வேண்டும்.
    கடற்கரைகள், பூங்காக்கள், மைதானங்கள் மற்றும் மரங்கள் உள்ள இடங்களில் நடப்பது நல்லது. அதிகாலையில் நடக்கிறவர்கள் அரை லிட்டர் தண்ணீர் குடித்து விட்டு நடக்க ஆரம்பிக்கலாம். உகந்த ஆடைகளை அணிந்துகொண்டு, இரு கைகளையும் வீசியபடி, நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கி பார்த்தபடி நடக்க வேண்டும்.

    சிறுபிள்ளைகளில் இருந்து பெரியவர்கள் வரை நடக்கலாம். இன்றைக்கு குழந்தைகளை அடுக்குமாடி கட்டிடங்களில் அடைத்து வைத்து பாடம் நடத்துவதால், அவர்களுக்கு ஓடியாடி விளையாடக்கூடிய வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. எனவே சின்ன பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நடைபயிற்சி செய்வது நல்லது.

    அதிலும் குறிப்பாக உடலுழைப்பு இல்லாதவர்கள், அலுவலகங்களில் அமர்ந்து வேலை செய்கிறவர்கள், மூளைக்கு வேலை கொடுக்கிறவர்கள், 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக நடைபயிற்சி செய்ய வேண்டும்.

    அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரையுள்ள நேரமே நடப்பதற்கு மிக மிக உகந்த நேரமாகும். ஏனெனில் அந்த நேரத்தில் தான் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். மேலும் அப்போது நம் நுரையீரல் நன்றாக வேலை செய்யும். அதிகாலை 5 மணிக்குள் நடக்க முடியாதவர்கள் 5-6 மணிக்குள் நடக்கலாம். காலையில் நடக்க முடியாதவர்கள் மாலை 6-7 மணிக்குள் நடக்கலாம். தினமும் 45 நிமிடங்கள் நடந்தால் போதுமானது.

    நடைபயிற்சி செய்வதால் உடலின் உள் உறுப்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டம் சீராக கிடைக்கும். உடல் உறுப்புகள் சீராக இயங்குவதால் உடல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. நரம்பு மண்டலம் வலுவடைகிறது. எலும்புகளுக்கு உறுதி கிடைக்கிறது. இடுப்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் உள்ள ஊளைச்சதைகள் கரைகிறது. ஹார்மோன்கள் சீராக சுரக்கவும், மூளையின் செயல்பாடுகள் மேம்படவும் உதவுகிறது. ரத்தத்தில் உள்ள கெட்டக்கொழுப்பின் அளவு குறைகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

    நடைபயிற்சியாளர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை நோய் போன்றவை ஏற்படும் அபாயம் குறைவு. நடைபயிற்சி செய்தால் நோய் குணமாகாது, நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். வியாதி இல்லாதவர்கள் நடக்கும் போது வியாதி வராமல் தடுக்கப்படுகிறது. 
    அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரையுள்ள நேரமே நடப்பதற்கு மிக மிக உகந்த நேரமாகும். ஏனெனில் அந்த நேரத்தில் தான் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும்.
    கடலூர் நகரின் இதயம் போன்ற பகுதியில் அண்ணா ஸ்டேடியம் உள்ளது. கடலூர் நகர மக்களின் உடல் தகுதியை பேணுவதற்கும், அநேக விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது அண்ணா ஸ்டேடியம்.

    அதிகாலை 4 மணிக்கெல்லாம் தன் வாசல் கதவுகளை ஆர விரித்து விளையாட்டு வீரர்களையும், நடைபயிற்சியாளர்களையும் வரவேற்க தொடங்கி விடுகிறது.

    நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் நடைபயிற்சியாளர்களும், விளையாட்டு வீரர்களும் அண்ணா ஸ்டேடியத்துக்கு வரத்தொடங்குகின்றனர். காலை 6 மணிக்கெல்லாம் அண்ணா விளையாட்டு அரங்கின் இருவாயில்களிலும் கஞ்சி மற்றும் மூலிகை சூப் வியாபாரிகள் கடை விரிக்கத் தொடங்குகின்றனர். இங்கு பல்வேறு விதமான பாரம்பரிய தானியங்களின் கஞ்சிகள், மூலிகை சூப்புகள் விற்கப்படுகிறது. நடைபயிற்சி மேற்கொள்கிறவர்கள், பயிற்சியை முடித்துக்கொண்டு மூங்கில் அரிசி கஞ்சி, ஆளிவிதை கஞ்சி, கற்றாழை சூப், ஆவாரம்பூ சூப், பருத்திப்பால், உளுந்து கஞ்சி, மாப்பிள்ளை சம்பா அரிசி கஞ்சி, வெந்தயக்கஞ்சி, கொள்ளு கஞ்சி, குதிரை வாலி அரிசி கஞ்சி, கருப்புக்கவுனி கஞ்சி போன்றவற்றை அருந்திச்செல்கின்றனர்.

    இந்தியாவில் நகரங்களைக்காட்டிலும் கிராமங்களே அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் அன்றாடம் வயல்காட்டுக்கு சென்று மண்வெட்டி பிடித்து வேலை செய்வதால் உடலுக்கு போதுமான உழைப்பு கிடைத்து விடுகிறது. ஆனால் நகர்புறங்களில் அலுவலக வேலை செய்கிறவர்களுக்கு உடல் உழைப்பு இல்லாததால் உடல் எடை கூடுதல், சர்க்கரை வியாதி, இதயநோய் போன்ற உடற்கோளாறுகள் ஏற்படுகிறது. எனவே அலுவலகங்களில் வேலை செய்கிறவர்கள், போதிய உடலுழைப்பு இல்லாதவர்கள் நோயின்றி வாழவேண்டுமானால் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது அவசியமாகும்.

    கடலூர் அண்ணா ஸ்டேடியத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள் உள்ளதால் இந்த சூழலில் நடைபயிற்சி செய்யும் போது நமக்கு சுத்தமான பிராணவாயு கிடைக்கிறது. இதனால் நம் உடல் சுறுசுறுப்பாகிறது. உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. நடை, நோய்க்கு தடை என்று சொல்வார்கள். எனவே ஒவ்வொருவரும் தினமும் நடைபயிற்சி செய்ய வேண்டும். சர்வலோக நிவாரணியாக உள்ள நடைபயிற்சியை அனைவரும் மேற்கொள்ளலாம் என்றார்.

    நடைபயிற்சியை முறையாக செய்வது எப்படி? என்று அக்குபஞ்சர் மற்றும் மூலிகை டாக்டர் ரவியிடம் கேட்டோம். இதோ அவர்....

    கடற்கரைகள், பூங்காக்கள், மைதானங்கள் மற்றும் மரங்கள் உள்ள இடங்களில் நடப்பது நல்லது. அதிகாலையில் நடக்கிறவர்கள் அரை லிட்டர் தண்ணீர் குடித்து விட்டு நடக்க ஆரம்பிக்கலாம். உகந்த ஆடைகளை அணிந்துகொண்டு, இரு கைகளையும் வீசியபடி, நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கி பார்த்தபடி நடக்க வேண்டும்.

    வெறும் காலால் நடப்பது மிக நல்லது என்றாலும் நாம் நடக்கும் இடத்தில் கற்கள், முட்கள் கிடந்தால் கால்களில் குத்தி காயம் ஏற்பட்டு விடும். எனவே சாதாரண காலணி அல்லது இறுக்கமில்லாத ஷூ அணிந்து நடக்க வேண்டும். அப்போது தான் பாதம் அழுந்தும் போது, பாதத்தின் அடியில் உள்ள நரம்பு முடிச்சுகள் தூண்டப்படும். புதிதாக நடைபயிற்சிக்கு வருபவர்கள் நடக்கும் தூரத்தை சிறிது, சிறிதாக அதிகரிக்க வேண்டுமே தவிர ஆர்வக்கோளாறால் முதல் நாளே பல கிலோ மீட்டர் தூரம் நடக்கக்கூடாது. ஒரு கையில் செல்போன் வைத்து பேசிக்கொண்டு நடப்பதையும், நாலைந்து பேர் சேர்ந்து பேசிக்கொண்டு செல்வதையும் நடைபயிற்சி என்று சொல்ல முடியாது. ஏனெனில் பேசிக்கொண்டு நடந்தால் நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறையலாம்.

    அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரையுள்ள நேரமே நடப்பதற்கு மிக மிக உகந்த நேரமாகும். ஏனெனில் அந்த நேரத்தில் தான் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். மேலும் அப்போது நம் நுரையீரல் நன்றாக வேலை செய்யும். அதிகாலை 5 மணிக்குள் நடக்க முடியாதவர்கள் 5-6 மணிக்குள் நடக்கலாம். காலையில் நடக்க முடியாதவர்கள் மாலை 6-7 மணிக்குள் நடக்கலாம். தினமும் 45 நிமிடங்கள் நடந்தால் போதுமானது.

    சிலர் எட்டு போட்டு நடக்கலாம் என்கிறார்கள். எட்டு போட்டு நடப்பதை விட குறுக்கும், நெடுக்குமாக நடப்பது நல்லது. ரிஷிகளும், முனிவர்களும் குறுக்கும், நெடுக்குமாகத்தான் நடந்தார்கள். இதனை பாம்பு நடை என்று சொல்வார்கள். இப்படி நடக்கும் போது கூடுதலாக கணையத்துக்கும் பயிற்சி கிடைப்பதால் இன்சுலீன் நன்றாக சுரக்கும். ஒரு சிலர் வீடுகளில் ‘டிரெட்மில்’ பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு மூட்டு வலி வரும் அபாயம் உள்ளது. எனவே இயற்கையோடு இணைந்த வகையில் நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை செய்வதே உடலுக்கு ஆரோக்கியமானது.

    இந்த ஆசனம் வயிறு, தொடைப்பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைகிறது. மேலும் முதுகொலும்புக்கு வலிமை தருகிறது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    பிளாங்க் நிலை அல்லது கும்பகாசன நிலையை வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மூச்சு வெளிவிடும் போது உங்கள் கைகளை மணிகட்டுகளைல் வளைக்கவும்.
    தரைக்கு சமமாக இருக்கும் படி உங்கள் பிட்டங்களை இறக்கி மற்றும் உங்கள் முழு உடலும் ஒரு நேர்கோட்டில் இருக்கும் படி வைக்கவும். உங்கள் தலை கீழ்நோக்கி அல்லது மேல் நோக்கி சாயாமல் உங்கள் முதுகுதண்டுடன் நேர்கோட்டில் இருப்பதை உறுதி செய்யுங்கள்

    இந்த நிலைகள் உங்கள் பலத்தை தோள்கள் மற்றும் மேற்கைகளில் அதிகப்படுத்தி மற்றும் நீங்கள் தலைகீழ் யோகா போஸ்கள் பெற உதவும். தலைகீழாக நிற்றல் போன்ற சவாலான நேரெதிரானவை நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே உங்கள் உடலை பயத்தை நீக்கி பலத்தை கூட்ட நேரம் அளியுங்கள். அவசரப் படாதீர்கள்.

    பலன்கள் :

    கால்கள், கைகளுக்கு நல்ல வலிமை கிடைக்கிறது. வயிறு, தொடைப்பகுதியில் உள்ள அதிகப்படியான சதை குறைகிறது. மேலும் முதுகொலும்புக்கு வலிமை தருகிறது.
    ஊரடங்கு உத்தரவு காரணமாக சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்காததால் முடிவெட்ட முடியாமலும், ஷேவிங் செய்ய முடியாமலும் ஆண்கள் பரிதவித்து வருகின்றனர். அதே நேரத்தில் அழகு நிலையம் செல்ல முடியாமல் பெண்கள் கவலையடைந்துள்ளனர்.
    கொரோனா நோய் தாக்குதல் கட்டுப்படுத்த வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நலன் கருதி ஊரடங்கில் தொடர்்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. பல தொழில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களின் முக்கிய தேவையான சலூன் கடைகளுக்கு மட்டும் இன்னும் அனுமதி வழங்கப் படாமல் உள்ளது.

    சலூன் கடைகள் திறக்கப்படாததால் ஆண்கள் பாடு படு திண்டாட்டமாக இருந்து வருகிறது. பலரும் முடிவெட்ட முடியாமல் சடை முடியுடன் தவித்து வருகிறார்கள். சுயமாக ஷேவிங்(முகசவரம்) செய்து கொள்ளும் நிலையில், சிலர் இன்னும் அதற்கும் சலூன் கடைகளை மட்டுமே நம்பியுள்ளனர். சலூன் கடைகள் கடந்த 40 நாட்களுக்கு மேலாக மூடி கிடப்பதால் ஆண்கள் தலைநிறைய முடியுடனும், நீண்ட தாடியுடனும் அலைந்து வருகின்றனர். வெள்ளை முடிகளை மறைக்க அவ்வப்போது ‘டை’ அடித்துக்கொண்டு தங்களை இளைஞர்கள் போல் ஏமாற்றி வந்தவர்கள் பாடு ரொம்ப திண்டாட்டமாக உள்ளது.

    குறிப்பாக கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிக்கொண்டதுபோல் எல்லையற்ற முடி, தாடியுடன் பலர் சுற்றி வருகின்றனர். ஒரு சிலர், இணைதளங்களை பயன்படுத்தி சுயமாக முடி வெட்டி கொள்ளுதல், முக சவரம் என்பதில் களம் இறங்கி ரத்த காவுகளை கொடுத்து வருகின்றனர்.

    சில வீட்டில் பெண்கள் களம் இறங்கி குழந்தைகளுக்கு முடிவெட்டி சிகை அலங்கார நிபுணர்களாக மாறி வருகின்றனர். அக்னி நட்சத்திரத்தின் காரணமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதி்ல் வியர்வையில் நனைந்து வரும் நிலையில் தலையில் முடி அதிகமாக உள்ளவர்கள் சளி தொந்தரவுகளை அனுபவித்து வருகின்றனர். கொரோனா நிலவி வரும் நிலையில் சளி தொந்தரவினால் தேவையற்ற மனக்கவலை அடைந்து வருகின்றனர். கோடை காலத்தில் போலீஸ்காரர்கள் போல் ‘சம்மர் கட்டிங்’ போட முடியாமல் தவித்து வருகின்றனர்.

    ஆண்களின் திண்டாட்டம் ஒருபுறம் என்றால் பெண்களின் கவலையோ வேறு விதமாக உள்ளது. பெண்கள் அழகு நிலையம் செல்லும் பழக்கம் என்பது தற்போது நகரத்தை தாண்டி கிராமங்கள் வரை பரவியுள்ளது. இதனால் தற்போது பெரும்பாலான ஊர்களில் ஒரு அழகு நிலையம் இருப்பதை காண முடிகிறது.

    சலூன் கடைகள் திறக்கப்படாததால் பரிதவிக்கும் ஆண்கள்

    ஆண்களுக்கு இணையாக தங்களது முடியை ஸ்டைலாக வெட்டி கொள்வதிலும், ‘டை’ அடிப்பதிலும் பெண்களும் அதிகம் ஆர்்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு விதமான அழகு சாதனங்களை பயன் படுத்துவதில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர்.

    அவ்வப்போது அழகு நிலையத்திற்கு சென்று தங்கள் அழகுக்கு அழகூட்டி மெருகேற்றி புதுப்பொலிவுடன் திகழும் பெண்கள் அழகு நிலையம் திறக்கப்படாததால் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

    எனவே இந்த விசயத்தை பொறுத்தவரையில் ஆண்கள், பெண்கள் என பாகுபாடின்றி பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த கொடுமையில் இருந்து விடுதலை பெற சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தி்ன் திருவாரூர் மாவட்ட தலைவர் ராமன், செயலாளர் முருகானந்தம், நகர தலைவர் மதியழகன் ஆகியோர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்ட அளவில் 3 ஆயிரம் கடைகள் உள்ளன. இதனை சார்ந்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக கடைகளை திறக்காமல் வேலையின்றி நாங்கள் வருமானம் இழந்து தவித்து வருகின்றோம். இதனால் பல குடும்பங்கள் வறுமையில் வாடுகிறது.

    இந்்த நிலையில் ஊரடங்கி்ல் இருந்து பல தொழில்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால்் சலூன் கடைகளை திறக்க இன்னும் அனுமதி அளிக்கப்படாமல் உள்ளது. நாங்களும் அரசு விதிமுறைகளின் படி கொரோனா நோய் தொற்றினை தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணிகளை மேற்கொள்வோம். நோய் தொற்று ஏற்படாத வகையில் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவோம். எனவே எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட சலூன் கடைகளை உடனடியாக திறக்க அரசு அனுமதி அளி்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கோடைக்காலத்தில் உடற்பயிற்சி சொல்பவர்கள் வழக்கமாக குடித்து வரும் நீரை விட சற்று அதிகமாகவே கொடுக்க வேண்டும்.
    கோடைக்காலத்தில் உடற்பயிற்சி சொல்பவர்கள் வழக்கமாக குடித்து வரும் நீரை விட சற்று அதிகமாகவே கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வியர்வையின் வழியே உடலில் உள்ள நீர் சத்தின் அளவு குறைந்துவிடும். மேலும் உடல் வறட்சி அடைந்து விடும் ஆகையால் உடற்பயிற்சிக்கு முன் மற்றும் உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு அதிக அளவு நீரை குடியுங்கள்.

    எலக்ட்ரோலைட்டுகள் அதிகப்படியான வியர்வையால் உடலில் அதன் அளவு குறையும். எனவே கோடை காலங்களில் உடலுக்கு தேவையான சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்தை உடலுக்கு அளிக்க வேண்டும். அதற்கு எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். அடிக்கடி இளநீர் பருக வேண்டும்.

    கோடை காலங்களில் உடற்பயிற்சி செய்ய சரியான நேரம் அதிகாலை தான். இதனால் நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட முடியும். காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நீர்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் எடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடுவது இன்னும் நல்லது. கோடை காலங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சி எடுக்காதீர்கள்.
    உடலை ஒல்லியாக்குவதற்கு செய்யும் செயல்களில் உடற்பயிற்சியும் (weight) ஒன்று. அதிலும் அத்தகைய உடற்பயிற்சியை செய்யும் போது, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்து வெளியேறிவிடும்.
    உடலை ஒல்லியாக்குவதற்கு செய்யும் செயல்களில் உடற்பயிற்சியும் (weight) ஒன்று. அதிலும் அத்தகைய உடற்பயிற்சியை செய்யும் போது, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்து வெளியேறிவிடும். முக்கியமாக அவ்வாறு செய்யும் உடற்பயிற்சியை தினமும் 3௦ முதல் 45 நிமிடம் தொடர்ந்து செய்துவந்தால், உடல் கச்சிதமாக விரைவில் மாறிவிடும்.

    1. பிளாங்க் உடற்பயிற்சி

    குப்புற படுத்தவாறான நிலையில், கைகளை உந்தி உடலை மேலே வைத்திருக்க வேண்டும். கால்களை நிலத்தில் ஊன்றி, இடுப்பு பகுதியை மேலே உயர்த்த வேண்டும். அப்போது தலை முதல் கால் வரை உடல் கிடைமட்டமாக இருக்கவும். அந்த நிலையிலேயே 30 முதல் 40 நொடிகள் இருக்கவும்.

    2. ஜம்பிங் ஜாக்

     கைகளை பக்கவாட்டில் தளர்ந்த நிலையில் வைத்து நேராக நிற்க வேண்டும். கால்களை ஒன்றாக சேர்த்துவைக்கவும். இப்போது இரண்டு கால்களையும் அகட்டிக் குதித்து, அதே நேரத்தில் கைகளை தலைக்கு மேல் உயர்த்தித் தட்ட வேண்டும். பிறகு, பழையபடி குதித்து கால்களை ஒன்றுசேர்த்தபடியே, கைகளை இயல்புநிலைக்குக் கொண்டுவர வேண்டும். இதுபோன்று 20 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

    3. ஸ்கிப்பிங்

    தரம் குறைவான ஸ்கிப்பிங் கயிற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அது உங்களின் பயிற்சியைக் கடினமானதாக மாற்றும். நல்ல தரமான ஸ்கிப்பிங் கயிறைப் பயன்படுத்தவும். இது உங்கள் பயிற்சிக்கும் உங்களுக்கும் ஊக்கத்தைக் கொடுக்கும்.

    4. புஷ் அப்

     புஷ் அப் உடற்பயிற்சி செய்வது மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை செய்வதால் உடல் மிகவும் வலிமையாகிறது. தினசரி வேலைகளை செய்வதற்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. உடலை திடமாகவும், தொப்பை இல்லாமலும் வைத்துக்கொள்ள இந்த உடற்பயிற்சி உதவுகிறது
     
     5. பை சைக்கிள் உடற்பயிற்சி

    அடி வயிற்று தசைகளை உறுதிப்படுத்துவதற்காக பை சைக்கிள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    6. எலிப்டிகர் ட்ரெய்னர்

    இந்த கருவியின் மூலம் எளிய உடற்பயிற்சி(weight) மேற்கொண்டு, தொப்பையை குறைக்கலாம். 30 நிமிடங்கள் பயிற்சி செய்வதன் மூலம், 300 கலோரி வரை எரிக்க முடியும்.

    7. பை சைக்கிளிங்

    சைக்கிளில் நீண்ட தூரம் பயணிக்கும் போது, அது நமது உடல் வலிமைக்கு உதவுகிறது. 30 நிமிட பயணிப்பதன் மூலம், 250-500 கலோரிகள் வரை எரிக்கலாம்.

    8. ஓடுதல்

    உடற்பயிற்சி செய்யும் போது, கலோரிகள் எரிந்து, கொழுப்பு சதவிகிதம் குறைந்துவிடுகின்றன. உடற்பயிற்சியால் வயிற்று தொப்பை குறைவது மட்டுமல்ல, பிற இடங்களில் உள்ள கொழுப்பும் கரைந்துவிடுகின்றன. கொழுப்பைக் கரைக்க ஓடுதல் அல்லது நடத்தல் சிறந்த உடற்பயிற்சியாகும். இதற்கு நல்ல ஷூக்கள் வாங்கி வைத்துக் கொள்ளவும். இவை இரண்டில் ஓடுதல் மட்டுமே வேகமாக கொழுப்பை கரைத்து விடுகிறது.

    9. யோகா

     மன அழுத்தத்தை குறைத்து தாம்பத்திய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட யோகாசனப்பயிற்சி உதவுகின்றது. யோகாசனத்தை பழக விரும்பும் ஒருவர் குறைந்தது ஒரு வார காலமாவது நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நல்லது.

    10. சலபாசனம்

     சலபாசனம் வயிற்றுக்கும் வயிற்றுக்கு உள்ளிருக்கும் குடல், இரைப்பை, பித்தப்பை முதலிய முக்கிய அங்கங்களுக்கும் உயிர் வீர்யத்தை தரும் அதியற்புதமானது. மானிட விரோதியாகிய மலச்சிக்கலை அடியோடு அகற்றும்.
    உடற்பயிற்சி செய்யும்போது தொடக்கத்தில், உடலிலும் சிந்தனையிலும் சில மாற்றங்கள் ஏற்படும். அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.
    உடற்பயிற்சி செய்யும்போது தொடக்கத்தில், உடலிலும் சிந்தனையிலும் சில மாற்றங்கள் ஏற்படும். அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.



    * எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும், சிக்ஸ்-பேக் வைக்க வேண்டும் என்பதற்காகவும் உடற்பயிற்சி செய்பவர்கள், ஓரே நாளில் பலன் கிடைத்து விடாது என்ற எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யத் தொடங்கியதும், இதயத்தின் செயல்பாடு அதிகரிக்கும். மூளை உற்சாகமாக இயங்கும்.



    * தொடக்கத்திலேயே கடுமையான வொர்க்-அவுட்டுகளைச் செய்யக் கூடாது. தசைகளில் அழற்சியும், தசைநார்களில் பிரச்னையும் ஏற்படலாம். காலையில் படுக்கையிலிருந்து எழ முடியாத அளவுக்கு பலவீனமாக உணர்வார்கள். உடற்பயிற்சி செய்து முடித்ததும், சுமார் ஐந்து நிமிடங்கள் ஃபோம் ரோலரைப் (Foam Roller) பயன்படுத்தி தசைகளை இயல்புநிலைக்குக் கொண்டுவர வேண்டும்.



    * கடுமையான வொர்க்-அவுட் செய்பவர்களுக்கு, உடலில் `கிரெலின்’ (Ghrelin) எனப்படும் பசிக்கான ஹார்மோன் சுரப்பு சீரற்ற நிலைக்குச் செல்லலாம். இதனால் பசியின்மை ஏற்படும். டீஹைட்ரேசன் என்கிற நீர்வறட்சி நிலையும் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும் குறைந்தது அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
     


    * உடற்பயிற்சி மூலம் மாதம் இரண்டு முதல் மூன்று கிலோவரை எடை குறைப்பதுதான் ஆரோக்கியமானது. ‘நேரம் கிடைக்கும்போது மட்டுமே ஜிம் செல்வேன்’ என்பவர்களுக்கும் இது பொருந்தும். அதற்கு மேல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், முறையான ஆலோசனை பெற்று அதற்குரிய பயிற்சிகளை எடுக்க வேண்டும்
    ×