என் மலர்
உலக கோப்பை கால்பந்து-2022
- லயோனல் மெஸ்சி உலகக் கோப்பையை வென்றால் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அடைவேன்.
- 46 வயதான ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் மொத்தம் 15 கோல்கள் அடித்தவர் என்பது நினைவு கூரத்தக்கது.
தோகா:
பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ நேற்று அளித்த பேட்டியில், 'உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில்- பிரான்ஸ் அணிகள் மோதும் என்பதே எனது கணிப்பாக இருந்தது. இப்போது பிரேசில் வெளியேறி விட்டது. இனி பிரான்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கே மிக அதிக வாய்ப்புள்ளது.
தடுப்பாட்டம், தாக்குதல், நடுகளம் என்று எல்லா வகையிலும் நிலையான ஒரு அணியாக இருக்கிறது. கிலியன் எம்பாப்பே, இந்த உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடி வருகிறார். உடல் மற்றும் தொழில்நுட்ப அளவில் அவரது தரம் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளின் மிகச்சிறந்த வீரராக அவர் உருவெடுக்கலாம்' என்றார்.
லயோனல் மெஸ்சி உலகக் கோப்பையை வென்றால் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அடைவேன், ஆனால் ஒரு பிரேசில் வீரராக அல்ல' என்றும் குறிப்பிட்டார். 46 வயதான ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் மொத்தம் 15 கோல்கள் அடித்தவர் என்பது நினைவு கூரத்தக்கது.
- குரோஷியா அணி இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை.
- அர்ஜென்டினா அணி அரை இறுதி ஆட்டங்களில் தோல்வி அடைந்ததில்லை.
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அரையிறுதி ஆட்டங்களுக்கு அர்ஜென்டினா, பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ அணிகள் முன்னேறியுள்ளன. இந்த நிலையில் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் முதலாவது அரை இறுதியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் மோதுகிறது.
கடந்த உலகக் கோப்பையில் இறுதி சுற்றில் தோல்வியை தழுவிய குரோஷியா, இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. நடப்பு உலகக் கோப்பை தொடரில் அந்த அணி எந்த போட்டியிலும் தோல்வியை சந்திக்கவில்லை. 1978, 1986-ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா, அரை இறுதி ஆட்டங்களில் இதுவரை தோல்வி அடைந்ததில்லை.
அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி தமது நாட்டிற்கு உலகக் கோப்பையை பெற்று தர இதுவே கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் உள்ளதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அரையிறுதிச் சுற்றுக்கு 4 நாடுகள் தகுதி பெற்றுள்ளன.
- இதில் இருந்து 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
தோகா:
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன.
லீக் சுற்றுகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழைந்தன. நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்) , பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா (எச்) ஆகிய 16 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றன.
நாக் அவுட் சுற்றில் வென்றதன் மூலம் நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோசியா, பிரேசில், மொராக்கோ, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், காலிறுதி சுற்றுகள் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தன. காலிறுதியில் வென்றதன் மூலம் அர்ஜென்டினா, குரோசியா, பிரான்ஸ், மொராக்கோ ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
நாளை மறுதினம் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா, குரோசியா அணிகள் மோதுகின்றன. டிசம்பர் 14-ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் 2-வது அரையிறுதியில் பிரான்ஸ், மொராக்கோ மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய அணிகளுக்கு குரோசியா, மொராக்கோ அணிகள் அதிர்ச்சி அளிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இறுதிப்போட்டி வரும் 18-ம் தேதி இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
- முதல் பாதியில் ஒரு கோல் அடித்து பிரான்ஸ் முன்னிலை பெற்றிருந்தது.
- இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன.
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு நடைபெற்ற காலிறுதி சுற்று ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ட்சோயமெனி ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
2வது பாதி ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சம நிலையில் இருந்தது. பின்னர் 78 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஒலிவர் கிரவுட் ஒரு கோல் அடித்து தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் ஆட்ட நேர முடிவிலும் வேறு எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
- மொராக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
- மொராக்கோ அணி இந்தத் தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை.
தோகா:
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 8.30 மணிக்கு அல்துமாமா ஸ்டேடியத்தில் நடைபெற்ற 3-வது காலிறுதியில் போர்ச்சுக்கல், மொராக்கோ அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கம் முதல் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினர். ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் யூசுப் என் நெய்ஸிரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் மொராக்கோ அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இறுதியில், மொராக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
மொராக்கோ அணி முதல் முறையாக உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணி அரை இறுதிக்கு இதுவரை நுழைந்தது இல்லை என்ற குறையையும் தீர்த்துள்ளது.
- போர்ச்சுக்கல் வீரர்கள் அடித்த அனைத்து கோல்களையும் ரொனால்டோ கொண்டாடினார்.
- ரொனால்டோ இல்லாத நிலையில் போர்ச்சுக்கல் அணி சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது.
தோஹா:
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில், போர்ச்சுக்கல் அணியின் கேப்டனும், கோல் மெஷின் என அழைக்கப்படும் தலைசிறந்த வீரருமான கிறிஸ்டியானா ரொனால்டோ (வயது 37), களமிறக்கப்படவில்லை. கடைசி நேரத்தில் மாற்று வீரராக களமிறக்கப்பட்டார்.
சுவிட்சர்லாந்துடனான போட்டி தொடங்கியபோது, தேசிய அணியில் இருந்து விலகப் போவதாக மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியானது. தலைமை பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோசுடனான உரையாடலின்போது இதனை தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் அணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு விளக்கம் அளித்தது. அதில், "கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ எந்த நேரத்திலும் கத்தாரில் தேசிய அணியை விட்டு வெளியேறுவதாக மிரட்டவில்லை. அவர் தேசிய அணிக்காகவும் நாட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் ஒரு தனித்துவமான சாதனையை உருவாக்குகிறார். இதை மதிக்க வேண்டும்" என கூறியிருந்தது.
இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரொனால்டோ குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டி நடைபெற்ற நாளில் மதிய உணவுக்குப் பிறகு ரொனால்டோவை எனது அலுவலகத்திற்கு அழைத்தேன். அவர் எப்போதும் ஆரம்பத்திலேயே களமிறங்கியதால், நான் எடுத்த முடிவு அவருக்கு திருப்தி அளிக்கவில்லை.
இது ஒரு நல்ல யோசனை என்று நினைக்கிறீர்களா? என என்னிடம் கேட்டார். இந்த உரையாடல் சாதாரணமாகவே இருந்தது. நான் எனது கருத்துக்களை விளக்கினேன். அதை அவர் ஏற்றுக்கொண்டார். வெளிப்படையாகவும் சாதாரணமாகவும் உரையாடினோம். அப்போது அவர் தேசிய அணியை விட்டு வெளியேற விரும்புவதாக என்னிடம் ஒருபோதும் கூறவில்லை.
அவர் தனது சக வீரர்களை ஊக்குவிக்க முடிவு செய்தார். மேலும் நாங்கள் அடித்த அனைத்து கோல்களையும் கொண்டாடினார். இறுதியில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சக வீரர்களை அழைத்தார். அவரை விட்டுவிடுங்கள். அவரை சுதந்திரமாக விட்டுவிட வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும், 90 சதவீத கேள்விகள் அவரைப் பற்றியே இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில், ரொனால்டோ இல்லாத நிலையில் போர்ச்சுக்கல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ரொனால்டோவுக்கு பதிலாக களமிறங்கிய ஸ்ட்ரைக்கர் கோன்கலோ ராமோஸ் (21) ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
எனினும், இன்று மொராக்கோவுடனான காலிறுதி ஆட்டத்தில் ரொனால்டோவுக்கான கதவு திறந்திருக்கிறது என பயிற்சியாளர் சான்டோஸ் தெரிவித்தார். இது வித்தியாசமான ஆட்டமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். எந்த வீரராக இருந்தாலும், களத்தில் இறக்கப்படாமல் மாற்று வீரராக வெளியில் இருக்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்றும் பயிற்சியாளர் சான்டோஸ் தெரிவித்தார்.
- மொராக்கோ இந்தப்போட்டி தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை.
- ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணி அரை இறுதிக்கு இதுவரை நுழைந்தது இல்லை.
தோகா:
உலககோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 8.30 மணிக்கு அல்துமாமா ஸ்டேடியத்தில் நடைபெறும் 3-வது கால்இறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல்-மொராக்கோ அணிகள் மோதுகின்றன.
போர்ச்சுக்கல் அணி 3-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி லீக் சுற்றில் 3-2 என்ற கோல் கணக்கில் கானாவையும், 2-0 என்ற கணக்கில் உருகுவேயையும் தோற்கடித்து இருந்தது. தென் கொரியாவிடம் 1-2 என்ற கணக்கில் தோற்றது. 2-வது சுற்றில் சுவிட்சர்லாந்தை 6-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.
போர்ச்சுக்கல் 12 கோல் போட்டுள்ளது. 5 கோல் வாங்கியுள்ளது. சுவிட்சர்லாந்துக்கு எதிரான 2-வது சுற்றில் அந்த வீரர்கள் அபாரமாக ஆடினார்கள்.ரொனால்டோ இடத்தில் இடம் பெற்ற ராமோஸ் ஹாட்ரிக் கோல் அடித்தார். புருனோ பெர்னாண்டஸ், பெப்பே , ரபெல் லியோ போன்ற முன்னணி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.
மொராக்கோ முதல் முறையாக உலக கோப்பை அரைஇறுதிக்கு நுழைந்து புதிய சாதனை படைக்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணி அரை இறுதிக்கு இதுவரை நுழைந்தது இல்லை.
மொராக்கோ இந்தப்போட்டி தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை. லீக் சுற்றில் பெல்ஜியம்(2-0), கனடா (2-1 ) அணிகளை வீழ்த்தி இருந்தது. குரோஷியாவுடன் கோல் எதுவும் இல்லாமல் டிரா செய்தது. 2-வது ரவுண்டில் ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட்டில் தோற்கடித்தது.
போர்ச்சுக்கல் அணிக்கு எல்லா வகையிலும் மொரோக்கோ சவால் கொடுக்கும். இதனால் போட்டி பரபரப்பாக இருக்கும்.
இரு அணிகள் 2 முறை முறை மோதியுள்ளன. இதில் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன.
அல்கோரில் உள்ள அல்பயத் மைதானத்தில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் கடைசி கால் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப் பாக இருக்கும்.
பிரான்ஸ் 7-வது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா (4-1), டென்மார்க்கை ( 2-1 ) வீழ்த்தி இருந்தது. துனிசியாவிடம் (0-1) தோற்றது. 2-வது சுற்றில் 3-1 என்ற கணக்கில் போலந்தை தோற்கடித்தது.
பிரான்ஸ் அணியில் எம்பாப்வே (5 கோல்), ஆலிவர் ஜிரவுட் ( 3 கோல்) , ரேபியாட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இங்கிலாந்து அணி 4-வது முறையாக அரை இறுதிக்கு நுழையும் வேட்கையில் உள்ளது.
அந்த அணி தோல்வி எதையும் சந்திக்கவில்லை. ஈரான் ( 6-2 ) , வேல்சை (3-0) வீழ்த்தியது. அமெரிக்காவுடன் (0-0 ) டிரா செய்தது. 2-வது சுற்றில் செனகலை 3-0 என்ற கணக்கில் வென்றது.
இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரிகேன் , ராஷ்போர்ட், ஷகா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகள் மோதிய போட்டிகளில் பிரான்ஸ் 9-ல், இங்கிலாந்து 17-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் 'டிரா' ஆனது.
- பெனால்டி சூட் அவுட் முறையில் 4-2 கோல் கணக்கில் குரோஷியா வெற்றி
- உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது பிரேசில்.
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடரில் தற்போது காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு 8.30 மணிக்கு எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதலாவது கால் இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியினான பிரேசில் அணி, குரோஷியாவை எதிர் கொண்டது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்ட நிறைவுவரை இரு அணி வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
இந்நிலையில் கூடுதல் ஆட்ட நேரத்தின்போது 106 வது நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மர் கோல் அடித்தார். தொடர்ந்து 117வது நிமிடத்தில் குரோஷியா தரப்பில் புருனோ பெகோவிக் ஒருகோல் அடித்ததால் ஆட்டம் சமனில் ஆடிந்தது. இதையெடுத்து பெனால்டி சூட் அவுட் முறை வழங்கப்பட்டது. இதில் 4-2 கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்திய குரோஷியா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
- 2 நாள் ஓய்வுக்கு பிறகு கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.
- சிறந்த வீரர்களை கொண்ட நெதர்லாந்து 6-வது முறையாக அரை இறுதிக்குள் நுழையும் வேட்கையில் உள்ளது.
லுசைல்:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது.
2 நாள் ஓய்வுக்கு பிறகு கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் பிரான்ஸ், பிரேசில் அர்ஜென்டினா, இங்கிலாந்து, நெதர்லாந்து, போர்ச்சுக்கல், குரோஷியா, மொராக்கோ ஆகிய நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.
இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் கால்இறுதி ஆட்டத்தில் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில்-ஜரோப்பாவில் இருக்கும் குரோஷியா அணிகள் மோதுகின்றன. பிரேசில் 12-வது தடவையாகவும், குரோஷியா 3-வது முறையாகவும் அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளன.
இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு 2-வது கால்இறுதி போட்டி நடக்கிறது. லுசைல் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி லீக் சுற்றில் முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. அதைத்தொடர்ந்து மெக்சிகோவை 2-0 என்ற கணக்கிலும், போலந்தை 2-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது. 2-வது சுற்றில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் தோற்கடித் தது. அந்த அணி 7 கோல் போட்டுள்ளது. 3 கோல் வாங்கியுள்ளது.
உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா 6-வது முறையாக அரைஇறுதிக்கு தகுதிபெறுமா ? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. நெதர்லாந்து பலம் வாய்ந்தது. அந்த அணியை சமாளிப்பது அர்ஜென்டினாவுக்கு சவாலானது.
முன்களத்தில் வலுவாக இருக்கும் அந்த அணி பின்களத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மெஸ்சி தான் அர்ஜென்டினாவின் பலம். அவர் வீரர்களை ஒருங்கிணைத்து கொண்டு முன்னோக்கி செல்வது முக்கியமானது.
மெஸ்சி 3 கோல்கள் அடித்துள்ளார். ஜூலியன் அல்வாரெஸ், என்சோ பெர்னாண்டஸ் போன்ற முன்னணி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.
உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள நெதர்லாந்து இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை. அந்த அணி செனகல் (2-0), கத்தார் ( 2-0 ) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. ஈக்வடாருடன் 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. 2-வது சுற்றில் அமெரிக்காவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது. அந்த அணி 8 கோல் போட்டுள்ளது. 2 கோல் வாங்கியுள்ளது.
சிறந்த வீரர்களை கொண்ட நெதர்லாந்து 6-வது முறையாக அரை இறுதிக்குள் நுழையும் வேட்கையில் உள்ளது. அந்த அணியில் காக்போ ( 3 கோல்) , டிபே, கிளாசன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் மோதிய போட்டியில் அர்ஜென்டினா 3-ல், நெதர்லாந்து 4-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டிரா ஆனது. உலக கோப்பையில் மோதிய 5 போட்டியில் இரு அணிகளும் தலா 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.
அர்ஜென்டினாவும், நெதர்லாந்தும் அரை இறுதிக்கு தகுதி பெற கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
- பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழையா விருந்தாளியாக வந்த அதை பார்த்து சிரித்தபடியே வினிசியஸ் நிருபர்களிடம் பேசினார்.
- சில வினாடிகளுக்கு பிறகு அருகில் நின்ற பிரேசில் அதிகாரி அந்த பூனையை பிடித்து கீழே தூக்கிப்போட்டார்.
தோகா:
பிரேசில் கால்பந்து அணியின் புயல்வேக வீரர் 22 வயதான வினிசியஸ் ஜூனியர் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது திடீரென பூனை ஒன்று துள்ளி குதித்து டேபிள் மீது பவ்வியமாக அமர்ந்து கொண்டது.
பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழையா விருந்தாளியாக வந்த அதை பார்த்து சிரித்தபடியே வினிசியஸ் நிருபர்களிடம் பேசினார். சில வினாடிகளுக்கு பிறகு அருகில் நின்ற பிரேசில் அதிகாரி அந்த பூனையை பிடித்து கீழே தூக்கிப்போட்டார்.
இந்த காட்சி இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
- பிரேசில் அணி இதுவரை குரோஷியாவிடம் தோற்றது இல்லை.
- நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதியில் அர்ஜென்டினா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கிய இந்த போட்டி தற்போது விறு விறுப்பான நிலைக்கு சென்றுள்ளது.
32 நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்றன. கடந்த 2-ந்தேதியுடன் 'லீக்' ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் 16 நாடுகள் 'நாக் அவுட்' சுற்றுக்கு முன்னேறின. 2-வது சுற்று ஆட்டங்கள் 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடந்தது.
2-வது சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், 5 முறை உலக கோப்பையை வென்ற பிரேசில், 2 தடவை சாம்பியனான அர்ஜென்டினா, 1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து, 3 முறை 2-வது இடத்தை பிடித்த நெதர்லாந்து, கடந்த முறை 2-வது இடத்தை பிடித்த குரோஷியா, 1966-ம் ஆண்டு 3-வது இடத்தை பிடித்த போர்ச்சுக்கல், ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மொராக்கோ ஆகிய 8 நாடுகள் கால் இறுதிக்கு முன்னேறின.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, போலந்து, செனகல், ஜப்பான், தென் கொரியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகியவை 2-வது சுற்றில் வெளியேற்றப்பட்டன.
2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு கால் இறுதி ஆட்டங்கள் நாளை (9-ந்தேதி) தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை 2 கால் இறுதியும், சனிக்கிழமை 2 கால் இறுதி ஆட்டமும் நடக்கிறது.
நாளை இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் கால் இறுதி ஆட்டத்தில் பிரேசில்-குரோஷியா அணிகள் மோதுகின்றன. அல்ரையானில் உள்ள எஜிகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடக்கிறது.
பிரேசில் அணி 'லீக்' ஆட்டங்களில் செர்பியாவை 2-0 என்ற கணக்கிலும், சுவிட்சர்லாந்தை 1-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது.
கேமரூனிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. 2-வது சுற்று ஆட்டத்தில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. அந்த அணி 7 கோல்கள் போட்டுள்ளன. 2 கோல்கள் வாங்கியுள்ளது.
பிரேசில் அணி குரோஷியாவை வீழ்த்தி 12-வது முறையாக அரை இறுதிக்குள் நுழையும் ஆர்வத்தில் இருக்கிறது. ஜெர்மனி அணி தான் அதிகபட்சமாக 13 தடவை அரைஇறுதிக்கு நுழைந்து இருந்தது. 4 முறை சாம்பியனான அந்த அணி கடந்த 2 உலக கோப்பையிலும் 'லீக்' சுற்றிலேயே வெளியேறியது.
கடந்த உலக கோப்பையில் பிரேசில் அணி கால் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்று இருந்தது. அது மாதிரியான நிலைமை தற்போது வந்து விடக் கூடாது என்பதில் அந்த அணி கவனமாக இருக்கும்.
உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பிரேசில் அணியில் பல நட்சத்திர வீரர்கள் உள்ளனர். ரிச்சர்லிசன் 3 கோல் அடித்து முத்திரை பதித்து உள்ளார்.
நெய்மர், வின்சியஸ் ஜூனியர், கேசிமிரோ, கேப்டன் தியோகோ சில்வா போன்றோரும் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.
உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் முதன்மையாக கருதப்படும் பிரேசில் அணி குரோஷியாவை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும். அந்த அணி இதுவரை குரோஷியாவிடம் தோற்றது இல்லை.
குரோஷியா அணி 3-வது முறையாக அரை இறுதிக்கு நுழையும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி இதுவரை தோல்வி எதையும் தழுவவில்லை. குரூப் போட்டிகளில் கனடாவை 4-1 என்ற கணக்கில் வென்றது. மொராகோ, பெல்ஜியத்து டன் கோல் எதுவுமின்றி 'டிரா' செய்தது
2-வது சுற்றில் பெனால்டி ஷீட் அவுட்டில் ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. குரோஷியா அணியில் கேப்டன் மாட்ரிச், பெரிசிக் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் பிரேசில் 3-ல் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் டிரா ஆனது. 2006 உலக கோப்பையில் 1-0 என்ற கோல் கணக்கிலும், 2014 உலக கோப்பையில் 3-1 என்ற கணக்கிலும் பிரேசில் வெற்றி பெற்று இருந்தது.
நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதியில் அர்ஜென்டினா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
- காலிறுதிச் சுற்றில் 8 நாடுகள் விளையாடுகின்றன.
- இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.
தோகா:
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன.
லீக் சுற்றுகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும். நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்) , பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா (எச்) ஆகிய 16 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், நாக் அவுட் சுற்றுகள் நள்ளிரவுடன் முடிந்தது. நாக் அவுட் சுற்றில் வென்றதன் மூலம் நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோசியா, பிரேசில், மொராக்கோ, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
நாளை மறுதினம் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதியில் குரோசியா, பிரேசில் அணிகள் மோதுகின்றன. டிசம்பர் 10-ம் தேதி இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2-வது காலிறுதியில் மொராக்கோ, போர்ச்சுக்கல் அணியும், நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் 3-வது காலிறுதியில் நெதர்லாந்து, அர்ஜென்டினா அணிகளும் மோதுகின்றன. நான்காவது காலிறுதி டிசம்பர் 11-ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.






