என் மலர்
இஸ்லாம்
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா வருகிற நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையதலி பாத்திமா (ரலி), ஹசரத் சேகு முகம்மது (ஒலி) தர்காவும் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் இல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை 5.30 மணிக்கு கத்முல் குர்ஆன் தொடக்கம், காலை 7 மணிக்கு பள்ளிவாசல் பேஷ் இமாம் முகம்மது யூசுப் ஆலிம் தலைமையில் குர்ஆன் தமாம் செய்தல் நடக்கிறது.
காலை 8 மணிக்கு அரண்மனை புலிமான் குளத்தில் இருந்து யானை மீது கொடி, சந்தனக்குடம் ஊர்வலமாக எடுத்து தர்காவுக்கு கொண்டு வரப்படுகிறது. 9 மணிக்கு கொடி கம்பத்தில் கொடியேற்றப்படுகிறது. 10 மணிக்கு டிரஸ்டிகள் நயாஸ் அகமத் பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி, அஸீம் அகமத் பிஜிலி ஆகியோர் தர்காவில் சந்தனம் மெழுகுகிறார்கள். மாலை 3.30 மணிமுதல் 5.30 மணிவரை மவ்லூது ஷரீப் ஓதுதல், 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை சலாஹூத்தீன் தலைமையில் ராத்திப்புத்துல் காதிரிய்யா திக்று மஜ்லீஸ் ஓதப்படுகிறது.
8 மணி முதல் 12 மணிவரை பெட்டைகுளம் காதர்மீரா சாகிப் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி ஹபீலுல் காதர், அதிராம்பட்டினம் ரகுமானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் ஷர்புத்தீன் மிஸ்பாஹி, நாகை நீடுர் ஜாமியா மிஸ்பாஹில் ஹூதா பேராசிரியர் அப்துர் ரகுமான் பாகவி, மேலப்பாளையம் செய்யது முகைதீன் சாஹிப் ஜூம்ஆ பள்ளிவாசல் இமாம் முகம்மது இஸ்மாயில் பாஜில் உஸ்மானி ஆகியோரின் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நடக்கிறது. இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணிவரை அபுபக்கர், வகிதா குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு நன்றி நவிலல் நிகழ்ச்சியும், 5.45 மணிக்கு சிறப்பு துவா ஓதப்பட்டு, 6 மணிக்கு நயாஸ் அஸ்மத் பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் தலைமையில் நேர்ச்சை வினியோகம் செய்யப்படுகிறது.
கந்தூரி விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
காலை 8 மணிக்கு அரண்மனை புலிமான் குளத்தில் இருந்து யானை மீது கொடி, சந்தனக்குடம் ஊர்வலமாக எடுத்து தர்காவுக்கு கொண்டு வரப்படுகிறது. 9 மணிக்கு கொடி கம்பத்தில் கொடியேற்றப்படுகிறது. 10 மணிக்கு டிரஸ்டிகள் நயாஸ் அகமத் பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி, அஸீம் அகமத் பிஜிலி ஆகியோர் தர்காவில் சந்தனம் மெழுகுகிறார்கள். மாலை 3.30 மணிமுதல் 5.30 மணிவரை மவ்லூது ஷரீப் ஓதுதல், 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை சலாஹூத்தீன் தலைமையில் ராத்திப்புத்துல் காதிரிய்யா திக்று மஜ்லீஸ் ஓதப்படுகிறது.
8 மணி முதல் 12 மணிவரை பெட்டைகுளம் காதர்மீரா சாகிப் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி ஹபீலுல் காதர், அதிராம்பட்டினம் ரகுமானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் ஷர்புத்தீன் மிஸ்பாஹி, நாகை நீடுர் ஜாமியா மிஸ்பாஹில் ஹூதா பேராசிரியர் அப்துர் ரகுமான் பாகவி, மேலப்பாளையம் செய்யது முகைதீன் சாஹிப் ஜூம்ஆ பள்ளிவாசல் இமாம் முகம்மது இஸ்மாயில் பாஜில் உஸ்மானி ஆகியோரின் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நடக்கிறது. இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணிவரை அபுபக்கர், வகிதா குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு நன்றி நவிலல் நிகழ்ச்சியும், 5.45 மணிக்கு சிறப்பு துவா ஓதப்பட்டு, 6 மணிக்கு நயாஸ் அஸ்மத் பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் தலைமையில் நேர்ச்சை வினியோகம் செய்யப்படுகிறது.
கந்தூரி விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் அதன் தலைநகரங்களில் மிகப்பெரிய பொது நூலகங்கள் அமைக்கப்பெற்றிருந்தன.
பனூ இஸ்ரவேலரைச் சேர்ந்த இருவர் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் கல்வியாளர். அவர் கடமையான தொழுகையை முடித்துவிட்டு, மக்களிடம் அமர்ந்து அவர்களுக்கு நல்லதை கற்றுக்கொடுக் கிறார். மற்றொருவர் இறை பற்றாளர். பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவு முழுவதும் நின்று வணங்கு கிறார். அவ்விருவர்களில் சிறந்தவர் யார்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள் ‘வணக்கசாலியைவிட மக்களுக்கு நல்லதை கற்றுக் கொடுக்கும் கல்வியாளரே சிறந்தவர்’ என பதில் கூறினார்கள். (தாரமீ, திர்மிதி)
கல்வி கற்பதையும், கற்றுக்கொடுப்பதையும் இறை வணக்கத்திற்கு மேலானதாகவும்; இணையானதாகவும் இஸ்லாம் குறிப்பிடுகிறது. ஆணும், பெண்ணும் கல்வி கற்பதை அடிப்படை உரிமையாக இஸ்லாம் வரையறுத்திருக்கிறது.
கல்விதான் மனிதனை மனிதனாக்கும், மனிதநேய உள்ளவனாக்கும், ஞானமுள்ளவனாக மாற்றும், நேரான பாதை எது, தவறான பாதை எது என்பதை உணர்ந்துகொள்ளும் பகுத்தறிவு தன்மையை வழங்கும். இதுபோன்று கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லிக்கொண்டே போகலாம். அதனால் தான் மற்ற மதங்களை காட்டிலும் இஸ்லாம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறது.
திருக்குர்ஆனின் முதல் வசனமே ‘இக்ரஃ’. ‘நபியே நீர் ஓதுவீராக, கற்பீராக’ என்ற இறைவனின் கட்டளையுடன்தான் தொடங்குகிறது. கல்வியை தேடி பயணிக்குமாறு தூண்டும் படியான 70-க்கும் மேற்பட்ட வசனங்கள் திருக்குர் ஆனில் இடம்பெற்றுள்ளன. ‘சீனம் சென்றேனும் ஞானம் கல்’ என்பது புகழ் பெற்ற இஸ்லாமிய பழமொழியாக இருக்கின்றது. கல்வி எங்கு கிடைத் தாலும் அங்கு சென்று கல்வி ஞானத்தை பெற்றுக்கொள்ள வலியுறுத்துகிறது இஸ்லாம்.
உலகக்கல்வி, இஸ்லாமிய கல்வி என்று மட்டுமல்ல அறிவை விசாலமாக்கும்; ஞானத்தை அள்ளிக்கொடுக்கும் எந்த கல்வியையும் கற்பதற்கு இஸ்லாம் அனுமதியளிக்கிறது. கற்கும் கல்வி பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அதன் எதிர்பார்ப்பாகும்.
‘கல்வி ஞானம் இல்லாமல் தன் மனோ இச்சைப்படி நடப்பவர்கள் அநியாயக்காரர்கள்’ என்றே திருக்குர்ஆன் (30:29) சொல்கிறது. அடிப்படையில் கல்வி இருந்தால் மட்டுமே எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து அறிந்துகொள்ள முடியும். இல்லையென்றால் அவன் தவறான திசையை நோக்கி செல்ல வழிவகுக்கும் என்பதைத்தான் மேற்கண்ட இறைவசனம் உணர்த்துகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கினார்கள். பத்ர் யுத்தத்தில் நடைபெற்ற சம்பவத்தைக்கூட இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
அந்த யுத்தத்தில் இஸ்லாமியர்களின் படை வெற்றி பெறுகிறது. யுத்தக் கைதியாக பலர் சிறைபிடிக்கப்பட்டனர். அன்றைய யுத்த வழக்கப்படி யுத்தக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றால் அதற்கு பகரமாக பணம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் நபியவர்கள் பணத்தை பெற்றுக்கொள்ளாமல் ‘முஸ்லிம் குழந்தைகளில் பத்துக் குழந்தைகளுக்கு கல்வி அறிவை ஊட்டி, அதன் மூலம் ஒரு கைதி தனது விடுதலையை பெற்றுக் கொள்ளட்டும்’ என அறிவித்தார்கள்.
பத்து குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்தால் உனக்கு விடுதலை என்ற அந்த நடவடிக்கை ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாகும். ஒரே நேரத்தில் கல்வியையும் ஊக்குவித்தார்கள், யுத்தக் கைதியையும் விடுத்தார்கள். கல்வி கற்றோரை அதிகரிப்பதற்காக இலவச கல்வி நடைமுறையை முதன்முதலாக கொண்டு வந்தார்கள். அவர்களுக்கான இடமும், உணவும் கூட இலவசமாக கொடுக்கப்பட்டது. அந்த நடைமுறைகளின்படி கல்வி பயின்றவர்கள்தாம் ‘திண்ணைத்தோழர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.
‘தான தருமங்களைவிட சிறந்தது ஒருவர் தான் கல்வி கற்று, பிறகு கல்வி கற்றுக்கொடுப்பதாகும்’ (இப்னு மாஜா) என்றும் ‘யார் கல்வியின் பாதையை தேடிச் செல்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் பாதையை இலேசாக்குகிறான்’ (முஸ்லீம்) என்றும் நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதுபோன்று பல இடங்களில் கல்வி குறித்து அதிகம் வலியுறுத்தி பேசியிருக்கிறார்கள். இஸ்லாம் வழங்கிய கட்டளையை பின்பற்றி நபியவர்களின் வாக்கிற்கு மதிப்பளித்து நடைபெற்ற பல இஸ்லாமிய அரசுகள் கல்வியில் பல புரட்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அந்த காலங்களில் பல முஸ்லிம் அறிஞர்கள் தோன்றினார்கள். பல கண்டு பிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவம், வானியல், அறிவியல் போன்ற துறைகளில் பல சாதனைகள் எட்டப்பட்டன.
இஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் அதன் தலைநகரங்களில் மிகப்பெரிய பொது நூலகங்கள் அமைக்கப்பெற்றிருந்தன. ஸ்பெயின்-கார்டோபா மற்றும் ஈராக்-பாக்தாத் ஆகிய நகரங்களில் இருந்த பொது நூலகங்களில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருந்துள்ளன என்பது வியப்புக்குரிய செய்தியாகும். அந்த அளவிற்கு இஸ்லாமும், இஸ்லாத்தை பின்பற்றிய ஆட்சியாளர்களும் கல்வி ஞானத்திற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்துள்ளார்கள்.
இன்றைய சூழலில் கல்விதான் எல்லோருக்குமான பாதுகாப்பு அரணாக இருக்கிறது. கல்வியை விடுத்து வேறு எதுவும் எந்த பயனையும் அளிக்காது. இது எல்லோருக்கும் பொருந்தக் கூடியதுதான். மழை எப்படி தரிசு நிலங்களை உயிர்ப்புள்ளதாக ஆக்குகிறதோ, அதுபோன்றுதான் கல்வியும் மனதையும், இதயத்தையும் உயிர்ப்புள்ளதாக ஆக்குகிறது.
வி.களத்தூர் பாரூக்
கல்வி கற்பதையும், கற்றுக்கொடுப்பதையும் இறை வணக்கத்திற்கு மேலானதாகவும்; இணையானதாகவும் இஸ்லாம் குறிப்பிடுகிறது. ஆணும், பெண்ணும் கல்வி கற்பதை அடிப்படை உரிமையாக இஸ்லாம் வரையறுத்திருக்கிறது.
கல்விதான் மனிதனை மனிதனாக்கும், மனிதநேய உள்ளவனாக்கும், ஞானமுள்ளவனாக மாற்றும், நேரான பாதை எது, தவறான பாதை எது என்பதை உணர்ந்துகொள்ளும் பகுத்தறிவு தன்மையை வழங்கும். இதுபோன்று கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லிக்கொண்டே போகலாம். அதனால் தான் மற்ற மதங்களை காட்டிலும் இஸ்லாம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறது.
திருக்குர்ஆனின் முதல் வசனமே ‘இக்ரஃ’. ‘நபியே நீர் ஓதுவீராக, கற்பீராக’ என்ற இறைவனின் கட்டளையுடன்தான் தொடங்குகிறது. கல்வியை தேடி பயணிக்குமாறு தூண்டும் படியான 70-க்கும் மேற்பட்ட வசனங்கள் திருக்குர் ஆனில் இடம்பெற்றுள்ளன. ‘சீனம் சென்றேனும் ஞானம் கல்’ என்பது புகழ் பெற்ற இஸ்லாமிய பழமொழியாக இருக்கின்றது. கல்வி எங்கு கிடைத் தாலும் அங்கு சென்று கல்வி ஞானத்தை பெற்றுக்கொள்ள வலியுறுத்துகிறது இஸ்லாம்.
உலகக்கல்வி, இஸ்லாமிய கல்வி என்று மட்டுமல்ல அறிவை விசாலமாக்கும்; ஞானத்தை அள்ளிக்கொடுக்கும் எந்த கல்வியையும் கற்பதற்கு இஸ்லாம் அனுமதியளிக்கிறது. கற்கும் கல்வி பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அதன் எதிர்பார்ப்பாகும்.
‘கல்வி ஞானம் இல்லாமல் தன் மனோ இச்சைப்படி நடப்பவர்கள் அநியாயக்காரர்கள்’ என்றே திருக்குர்ஆன் (30:29) சொல்கிறது. அடிப்படையில் கல்வி இருந்தால் மட்டுமே எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து அறிந்துகொள்ள முடியும். இல்லையென்றால் அவன் தவறான திசையை நோக்கி செல்ல வழிவகுக்கும் என்பதைத்தான் மேற்கண்ட இறைவசனம் உணர்த்துகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கினார்கள். பத்ர் யுத்தத்தில் நடைபெற்ற சம்பவத்தைக்கூட இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
அந்த யுத்தத்தில் இஸ்லாமியர்களின் படை வெற்றி பெறுகிறது. யுத்தக் கைதியாக பலர் சிறைபிடிக்கப்பட்டனர். அன்றைய யுத்த வழக்கப்படி யுத்தக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றால் அதற்கு பகரமாக பணம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் நபியவர்கள் பணத்தை பெற்றுக்கொள்ளாமல் ‘முஸ்லிம் குழந்தைகளில் பத்துக் குழந்தைகளுக்கு கல்வி அறிவை ஊட்டி, அதன் மூலம் ஒரு கைதி தனது விடுதலையை பெற்றுக் கொள்ளட்டும்’ என அறிவித்தார்கள்.
பத்து குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்தால் உனக்கு விடுதலை என்ற அந்த நடவடிக்கை ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாகும். ஒரே நேரத்தில் கல்வியையும் ஊக்குவித்தார்கள், யுத்தக் கைதியையும் விடுத்தார்கள். கல்வி கற்றோரை அதிகரிப்பதற்காக இலவச கல்வி நடைமுறையை முதன்முதலாக கொண்டு வந்தார்கள். அவர்களுக்கான இடமும், உணவும் கூட இலவசமாக கொடுக்கப்பட்டது. அந்த நடைமுறைகளின்படி கல்வி பயின்றவர்கள்தாம் ‘திண்ணைத்தோழர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.
‘தான தருமங்களைவிட சிறந்தது ஒருவர் தான் கல்வி கற்று, பிறகு கல்வி கற்றுக்கொடுப்பதாகும்’ (இப்னு மாஜா) என்றும் ‘யார் கல்வியின் பாதையை தேடிச் செல்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் பாதையை இலேசாக்குகிறான்’ (முஸ்லீம்) என்றும் நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதுபோன்று பல இடங்களில் கல்வி குறித்து அதிகம் வலியுறுத்தி பேசியிருக்கிறார்கள். இஸ்லாம் வழங்கிய கட்டளையை பின்பற்றி நபியவர்களின் வாக்கிற்கு மதிப்பளித்து நடைபெற்ற பல இஸ்லாமிய அரசுகள் கல்வியில் பல புரட்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அந்த காலங்களில் பல முஸ்லிம் அறிஞர்கள் தோன்றினார்கள். பல கண்டு பிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவம், வானியல், அறிவியல் போன்ற துறைகளில் பல சாதனைகள் எட்டப்பட்டன.
இஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் அதன் தலைநகரங்களில் மிகப்பெரிய பொது நூலகங்கள் அமைக்கப்பெற்றிருந்தன. ஸ்பெயின்-கார்டோபா மற்றும் ஈராக்-பாக்தாத் ஆகிய நகரங்களில் இருந்த பொது நூலகங்களில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருந்துள்ளன என்பது வியப்புக்குரிய செய்தியாகும். அந்த அளவிற்கு இஸ்லாமும், இஸ்லாத்தை பின்பற்றிய ஆட்சியாளர்களும் கல்வி ஞானத்திற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்துள்ளார்கள்.
இன்றைய சூழலில் கல்விதான் எல்லோருக்குமான பாதுகாப்பு அரணாக இருக்கிறது. கல்வியை விடுத்து வேறு எதுவும் எந்த பயனையும் அளிக்காது. இது எல்லோருக்கும் பொருந்தக் கூடியதுதான். மழை எப்படி தரிசு நிலங்களை உயிர்ப்புள்ளதாக ஆக்குகிறதோ, அதுபோன்றுதான் கல்வியும் மனதையும், இதயத்தையும் உயிர்ப்புள்ளதாக ஆக்குகிறது.
வி.களத்தூர் பாரூக்
திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையதலி பாத்திமா (ரலி), ஹசரத் சேகு முகம்மது (ஒலி) தர்காவும் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் இல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி 24-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கத்முல் குர்ஆன் தொடக்கம், காலை 7 மணிக்கு பள்ளிவாசல் பேஷ் இமாம் முகம்மது யூசுப் ஆலிம் தலைமையில் குர்ஆன் தமாம் செய்தல் நடக்கிறது.
காலை 8 மணிக்கு அரண்மனை புலிமான் குளத்தில் இருந்து யானை மீது கொடி, சந்தனக்குடம் ஊர்வலமாக எடுத்து தர்காவுக்கு கொண்டு வரப்படுகிறது. 9 மணிக்கு கொடி கம்பத்தில் கொடியேற்றப்படுகிறது. 10 மணிக்கு டிரஸ்டிகள் நயாஸ் அகமத் பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி, அஸீம் அகமத் பிஜிலி ஆகியோர் தர்காவில் சந்தனம் மெழுகுகிறார்கள். மாலை 3.30 மணிமுதல் 5.30 மணிவரை மவ்லூது ஷரீப் ஓதுதல், 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை சலாஹூத்தீன் தலைமையில் ராத்திப்புத்துல் காதிரிய்யா திக்று மஜ்லீஸ் ஓதப்படுகிறது.
8 மணி முதல் 12 மணிவரை பெட்டைகுளம் காதர்மீரா சாகிப் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி ஹபீலுல் காதர், அதிராம்பட்டினம் ரகுமானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் ஷர்புத்தீன் மிஸ்பாஹி, நாகை நீடுர் ஜாமியா மிஸ்பாஹில் ஹூதா பேராசிரியர் அப்துர் ரகுமான் பாகவி, மேலப்பாளையம் செய்யது முகைதீன் சாஹிப் ஜூம்ஆ பள்ளிவாசல் இமாம் முகம்மது இஸ்மாயில் பாஜில் உஸ்மானி ஆகியோரின் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நடக்கிறது. இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணிவரை அபுபக்கர், வகிதா குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு நன்றி நவிலல் நிகழ்ச்சியும், 5.45 மணிக்கு சிறப்பு துவா ஓதப்பட்டு, 6 மணிக்கு நயாஸ் அஸ்மத் பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் தலைமையில் நேர்ச்சை வினியோகம் செய்யப்படுகிறது.
கந்தூரி விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
காலை 8 மணிக்கு அரண்மனை புலிமான் குளத்தில் இருந்து யானை மீது கொடி, சந்தனக்குடம் ஊர்வலமாக எடுத்து தர்காவுக்கு கொண்டு வரப்படுகிறது. 9 மணிக்கு கொடி கம்பத்தில் கொடியேற்றப்படுகிறது. 10 மணிக்கு டிரஸ்டிகள் நயாஸ் அகமத் பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி, அஸீம் அகமத் பிஜிலி ஆகியோர் தர்காவில் சந்தனம் மெழுகுகிறார்கள். மாலை 3.30 மணிமுதல் 5.30 மணிவரை மவ்லூது ஷரீப் ஓதுதல், 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை சலாஹூத்தீன் தலைமையில் ராத்திப்புத்துல் காதிரிய்யா திக்று மஜ்லீஸ் ஓதப்படுகிறது.
8 மணி முதல் 12 மணிவரை பெட்டைகுளம் காதர்மீரா சாகிப் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி ஹபீலுல் காதர், அதிராம்பட்டினம் ரகுமானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் ஷர்புத்தீன் மிஸ்பாஹி, நாகை நீடுர் ஜாமியா மிஸ்பாஹில் ஹூதா பேராசிரியர் அப்துர் ரகுமான் பாகவி, மேலப்பாளையம் செய்யது முகைதீன் சாஹிப் ஜூம்ஆ பள்ளிவாசல் இமாம் முகம்மது இஸ்மாயில் பாஜில் உஸ்மானி ஆகியோரின் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நடக்கிறது. இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணிவரை அபுபக்கர், வகிதா குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு நன்றி நவிலல் நிகழ்ச்சியும், 5.45 மணிக்கு சிறப்பு துவா ஓதப்பட்டு, 6 மணிக்கு நயாஸ் அஸ்மத் பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் தலைமையில் நேர்ச்சை வினியோகம் செய்யப்படுகிறது.
கந்தூரி விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
நன்மையான காரியங்களில் மட்டும்தான் பொறுப்பாளர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும், கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தீமையான காரியங்களில், இணைவைப்பான செயல்களில், கெடுதலான விஷயங்களில் யாரும் யாருக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை.
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70- க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘பொறுப்பாளர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது’ குறித்த தகவல்களை காண்போம்.
ஒருவரின் பொறுப்பிலும், அவரின் பராமரிப்பிலும், மற்றொருவர் வாழும்போது அவர் தமது பொறுப்பாளர்களுக்கு அவசியம் கட்டுப்பட்டுதான் நடக்க வேண்டும். இவ்வாறு கட்டுப்பட்டு நடப்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
இறைவனுக்கோ, இறைத்தூதருக்கோ கட்டுப்பட்டு நடப்பது மட்டும் இறைநம்பிக்கை அல்ல. அவ்விருவரையும் தாண்டி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவருக்கும் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.
இறைவனுக்கு நாம் அடியார்கள் எனும் விஷயத்தில் இறைவன் இட்ட கட்டளைக்கு, அவன் வகுத்த கடமைகளுக்கு, அவன் தடுத்த நடவடிக்கைகளுக்கு நாம் முழுமையாக அடிபணிந்து வருகிறோம்.
இறைவனின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் நாம் கட்டுப்பட்டு நடக்கிறோம். அவர், இறைசெய்திகளை மக்களுக்கு எடுத்துக்கூறி இப்படித்தான் நடக்க வேண்டும் என்கிறார். அவர் முழு மனித குலத்திற்கு வழிகாட்டி என்ற அடிப்படையில் அவர் காட்டிய நேரான வழியில் நாம் வெற்றி நடைபோடுகிறோம். இவ்வாறு மற்றவர்களுக்கும் அவர்கள் வகிக்கும் பொறுப்புகளின் கீழ் கட்டுப்பட்டு பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். இதை இறைவனே ஆதரித்து திருக்குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகிறான்:
‘இறைவனுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; உங்களில் பொறுப்பு(ம் அதிகாரமும்) உடையோருக்கும் கீழ்ப்படியுங்கள்’. (திருக்குர்ஆன் 4:59)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எனக்குக் கீழ்ப்படிந்தவர் இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எனக்கு மாறுசெய்தவர் இறைவனுக்கு மாறுசெய்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறுசெய்தவராவார்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
‘உலர்ந்த திராட்சை போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய (கருப்பு நிற) அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் (அவரின் சொல்லைக்) கேளுங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)
ஒரு பொறுப்புக்குத் தலைமை தாங்குபவர் அவர் பெரிய மனிதராக இருக்க வேண்டிய அவசியமில்லை. சொல்வாக்கு, செல்வாக்கு, பணபலம், மக்கள் பலம் பெற்று விளங்கியவராக இருக்க வேண்டிய கட்டாயமும் கிடையாது.
விளிம்பு நிலையில் இருக்கும் ஒருவர் தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்பட்டாலும் அவர் வகிக்கும் பொறுப்புக்கு, அவருக்குக் கீழ் இயங்குபவர்கள் கீழ்ப்படிந்தே ஆக வேண்டும். அவர் ஒரு கருப்பு நிற அடிமையாக இருந்தாலும் சரியே.
இறைவனுக்கு மாறுசெய்யும்படி தலைமை அறிவிக்கும் போது அந்த விஷயத்தில் மட்டும் எந்தத்தலைமைக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
இது அல்லாத மற்ற விஷயங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான, விருப்பமில்லாத விஷயங்களாக இருந்தாலும் தலைமையின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
‘இறைவனுக்கு மாறுசெய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும், விருப்பமில்லாத விஷயத்திலும் தலைமையின் கட்டளையைச் செவியேற்பதும், அதற்குக்கீழ்ப்படிவதும் கடமையாகும். இறைவனுக்கு மாறுசெய்யும்படி கட்டளையிடப்பட்டால் அதைச்செவியேற்பதோ, அதற்குக் கட்டுப்படுவதோ கூடாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
தலைமைக்கு கட்டுப்படுவது என்பது நாட்டுத் தலைமையிலிருந்து வீட்டுத்தலைமை வரைக்கும் பொருந்தும். அரசியல் தலைமையில் ஆரம்பித்து ஆன்மிகத் தலைமை வரைக்கும் கீழ்ப்படிந்து நடப்பது இஸ்லாமிய கோட்பாடாகவும், இறைநம்பிக்கையின் உடல் சார்ந்த செயல் திட்டமாகவும் அமைந்துள்ளது.
அதே சமயம் பொறுப்பாளர்கள் இறைவனுக்கு மாறுபுரியுமாறு தமக்குக் கீழ் உள்ளவர்களுக்கு கட்டளை பிறப்பித்தால், இவர்கள் தங்களின் பொறுப்புகளுக்கு அப்பால் தலையிடுவதாக அர்த்தம். இந்த தலையீடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை. அவை பெற்றோரின் புறத்திலிருந்து வந்தாலும் சரி. மற்றவர்களின் புறத்திலிருந்து வந்தாலும் சரி.
இதுகுறித்த திருக்குர்ஆன் வசனம் வருமாறு:
“தனது தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள். (பிறந்த) பிறகும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. முடிவில் நீ நம்மிடமே வந்து சேர வேண்டியதிருக்கின்றது”.
“எனினும், (இறைவன் என்று) நீ அறிந்துகொள்ளாத யாதொரு பொருளை எனக்கு இணைவைக்கும்படி அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ் விஷயத்தில்) நீ அவர்களுக்கு வழிபட வேண்டாம். ஆயினும், இவ்வுலக விஷயத்தில் நீ அவர்களுக்கு (நீதமாக) உதவி செய்து (அன்பாக) நேசித்துவா. எவ்விஷயத்திலும் என்னையே நோக்கி நிற்பவர்களின் வழியை நீ பின்பற்றி நட. பின்னர், நீங்கள் அனைவரும் நம்மிடமே வரவேண்டியதிருக்கின்றது. நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அச்சமயம் நான் உங்களுக்கு அறிவுறுத்துவேன்” (என்று கூறினோம்). (திருக்குர்ஆன் 31:14,15)
மேற்கூறப்பட்ட வசனம் நபித்தோழர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் சம்பந்தமாக இறங்கியது. அதுகுறித்து அந்த நபித்தோழர் கூறியிருப்பதாவது:
‘என் தாயார் உம்முசஅத், நான் எனது இஸ்லாமிய மார்க்கத்தை நிராகரிக்காத வரை என்னுடன் பேசமாட்டேன்; உண்ணமாட்டேன்; பருகமாட்டேன் என சத்தியம் செய்துவிட்டார். மேலும், அவர் ‘உன் பெற்றோரிடம் நீ நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு இறைவன் உன்னை அறிவுறுத்தியுள்ளான் என்று நீ கூறுகிறாய். நான் உன் தாய். நான் தான் இந்த மார்க்கத்தை கைவிடுமாறு கட்டளையிடுகின்றேன். அதற்கு நீ கட்டுப்பட வேண்டும்’ என்று கூறினார். இவ்வாறு என் தாய் மூன்று நாட்கள் உண்ணாமலும், பருகாமலும் இருந்து பசியால் மயக்கமுற்றுவிட்டார். அப்போது உமாரா எனப்படும் அவரின் மகன் எழுந்து அவருக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் குடித்தார். அப்போது என் தாய் எனக்கெதிராகப் பிரார்த்தித்தார். அந்த வேளையில் இந்த இறைவசனம் இறங்கியது’. (நூல்: முஸ்லிம்)
“ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தமது தாயாரின் நிலைகண்டு, ‘என் தாயே! நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு நூறு உயிர்கள் இருந்து, அதிலிருந்து ஒவ்வொரு உயிராக நீங்கள் வெளியேற்றினாலும் இதற்காக நான் ஒரு போதும் இஸ்லாமிய மார்க்கத்தை விடமாட்டேன். நீங்கள் நாடினால் சாப்பிடுங்கள்; அல்லது சாப்பிடாமல் போங்கள்’ என்றார். பிறகு அவரின் தாயார் தமது நிலையிலிருந்து பின்வாங்கி சாப்பிட்டார்”. (அறிவிப்பாளர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), நூல்: தப்ரானீ).
கீழ்ப்படிதல் என்பது எவ்வாறு இருக்கவேண்டும் என்று நபிகளார் கூறியதாக அலீ (ரலி) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
நபி (ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி, அவர்களுக்கு அன்சாரித்தோழர்களில் ஒருவரைத் தளபதியாக்கி, அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
அந்த அன்சாரித் தளபதி ஒரு கட்டத்தில் படைவீரர்களின் மீது கோபம் கொண்டு, ‘நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லையா?’ என்று கேட்டார். அவர்கள் ‘ஆம்’, என்றனர்.
அவர், ‘விறகுகளைச் சேகரித்து, நெருப்பை மூட்டி அதில் புகுந்து விடும்படி உங்களுக்கு நான் உத்தரவிடுகிறேன்’ என்றார். அவ்வாறே அவர்கள் விறகுகளைச் சேகரித்து நெருப்பை மூட்டினர்.
அதில் நுழைய நினைத்த போது ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றனர். அவர்களில் ஒருவர், ‘(நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே நாம் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றினோம். அவ்வாறிருக்க, அதில் நாம் நுழைய வேண்டுமா?’ என்று கேட்டார். இதற்கிடையே நெருப்பும் அணைந்தது; அவரின் கோபமும் தணிந்தது.
பிறகு நபிகளாரிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அதில் மட்டும் அவர்கள் புகுந்திருந்தால் அதிலிருந்து ஒரு போதும் வெளியேறியிருக்க மாட்டார்கள்; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்’ என்றார்கள். (நூல்: புகாரி)
நன்மையான காரியங்களில் மட்டும்தான் பொறுப்பாளர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும், கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தீமையான காரியங்களில், இணைவைப்பான செயல்களில், கெடுதலான விஷயங்களில் யாரும் யாருக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
ஒருவரின் பொறுப்பிலும், அவரின் பராமரிப்பிலும், மற்றொருவர் வாழும்போது அவர் தமது பொறுப்பாளர்களுக்கு அவசியம் கட்டுப்பட்டுதான் நடக்க வேண்டும். இவ்வாறு கட்டுப்பட்டு நடப்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
இறைவனுக்கோ, இறைத்தூதருக்கோ கட்டுப்பட்டு நடப்பது மட்டும் இறைநம்பிக்கை அல்ல. அவ்விருவரையும் தாண்டி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவருக்கும் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.
இறைவனுக்கு நாம் அடியார்கள் எனும் விஷயத்தில் இறைவன் இட்ட கட்டளைக்கு, அவன் வகுத்த கடமைகளுக்கு, அவன் தடுத்த நடவடிக்கைகளுக்கு நாம் முழுமையாக அடிபணிந்து வருகிறோம்.
இறைவனின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் நாம் கட்டுப்பட்டு நடக்கிறோம். அவர், இறைசெய்திகளை மக்களுக்கு எடுத்துக்கூறி இப்படித்தான் நடக்க வேண்டும் என்கிறார். அவர் முழு மனித குலத்திற்கு வழிகாட்டி என்ற அடிப்படையில் அவர் காட்டிய நேரான வழியில் நாம் வெற்றி நடைபோடுகிறோம். இவ்வாறு மற்றவர்களுக்கும் அவர்கள் வகிக்கும் பொறுப்புகளின் கீழ் கட்டுப்பட்டு பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். இதை இறைவனே ஆதரித்து திருக்குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகிறான்:
‘இறைவனுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; உங்களில் பொறுப்பு(ம் அதிகாரமும்) உடையோருக்கும் கீழ்ப்படியுங்கள்’. (திருக்குர்ஆன் 4:59)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எனக்குக் கீழ்ப்படிந்தவர் இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எனக்கு மாறுசெய்தவர் இறைவனுக்கு மாறுசெய்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறுசெய்தவராவார்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
‘உலர்ந்த திராட்சை போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய (கருப்பு நிற) அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் (அவரின் சொல்லைக்) கேளுங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)
ஒரு பொறுப்புக்குத் தலைமை தாங்குபவர் அவர் பெரிய மனிதராக இருக்க வேண்டிய அவசியமில்லை. சொல்வாக்கு, செல்வாக்கு, பணபலம், மக்கள் பலம் பெற்று விளங்கியவராக இருக்க வேண்டிய கட்டாயமும் கிடையாது.
விளிம்பு நிலையில் இருக்கும் ஒருவர் தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்பட்டாலும் அவர் வகிக்கும் பொறுப்புக்கு, அவருக்குக் கீழ் இயங்குபவர்கள் கீழ்ப்படிந்தே ஆக வேண்டும். அவர் ஒரு கருப்பு நிற அடிமையாக இருந்தாலும் சரியே.
இறைவனுக்கு மாறுசெய்யும்படி தலைமை அறிவிக்கும் போது அந்த விஷயத்தில் மட்டும் எந்தத்தலைமைக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
இது அல்லாத மற்ற விஷயங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான, விருப்பமில்லாத விஷயங்களாக இருந்தாலும் தலைமையின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
‘இறைவனுக்கு மாறுசெய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும், விருப்பமில்லாத விஷயத்திலும் தலைமையின் கட்டளையைச் செவியேற்பதும், அதற்குக்கீழ்ப்படிவதும் கடமையாகும். இறைவனுக்கு மாறுசெய்யும்படி கட்டளையிடப்பட்டால் அதைச்செவியேற்பதோ, அதற்குக் கட்டுப்படுவதோ கூடாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
தலைமைக்கு கட்டுப்படுவது என்பது நாட்டுத் தலைமையிலிருந்து வீட்டுத்தலைமை வரைக்கும் பொருந்தும். அரசியல் தலைமையில் ஆரம்பித்து ஆன்மிகத் தலைமை வரைக்கும் கீழ்ப்படிந்து நடப்பது இஸ்லாமிய கோட்பாடாகவும், இறைநம்பிக்கையின் உடல் சார்ந்த செயல் திட்டமாகவும் அமைந்துள்ளது.
அதே சமயம் பொறுப்பாளர்கள் இறைவனுக்கு மாறுபுரியுமாறு தமக்குக் கீழ் உள்ளவர்களுக்கு கட்டளை பிறப்பித்தால், இவர்கள் தங்களின் பொறுப்புகளுக்கு அப்பால் தலையிடுவதாக அர்த்தம். இந்த தலையீடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை. அவை பெற்றோரின் புறத்திலிருந்து வந்தாலும் சரி. மற்றவர்களின் புறத்திலிருந்து வந்தாலும் சரி.
இதுகுறித்த திருக்குர்ஆன் வசனம் வருமாறு:
“தனது தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள். (பிறந்த) பிறகும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. முடிவில் நீ நம்மிடமே வந்து சேர வேண்டியதிருக்கின்றது”.
“எனினும், (இறைவன் என்று) நீ அறிந்துகொள்ளாத யாதொரு பொருளை எனக்கு இணைவைக்கும்படி அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ் விஷயத்தில்) நீ அவர்களுக்கு வழிபட வேண்டாம். ஆயினும், இவ்வுலக விஷயத்தில் நீ அவர்களுக்கு (நீதமாக) உதவி செய்து (அன்பாக) நேசித்துவா. எவ்விஷயத்திலும் என்னையே நோக்கி நிற்பவர்களின் வழியை நீ பின்பற்றி நட. பின்னர், நீங்கள் அனைவரும் நம்மிடமே வரவேண்டியதிருக்கின்றது. நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அச்சமயம் நான் உங்களுக்கு அறிவுறுத்துவேன்” (என்று கூறினோம்). (திருக்குர்ஆன் 31:14,15)
மேற்கூறப்பட்ட வசனம் நபித்தோழர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் சம்பந்தமாக இறங்கியது. அதுகுறித்து அந்த நபித்தோழர் கூறியிருப்பதாவது:
‘என் தாயார் உம்முசஅத், நான் எனது இஸ்லாமிய மார்க்கத்தை நிராகரிக்காத வரை என்னுடன் பேசமாட்டேன்; உண்ணமாட்டேன்; பருகமாட்டேன் என சத்தியம் செய்துவிட்டார். மேலும், அவர் ‘உன் பெற்றோரிடம் நீ நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு இறைவன் உன்னை அறிவுறுத்தியுள்ளான் என்று நீ கூறுகிறாய். நான் உன் தாய். நான் தான் இந்த மார்க்கத்தை கைவிடுமாறு கட்டளையிடுகின்றேன். அதற்கு நீ கட்டுப்பட வேண்டும்’ என்று கூறினார். இவ்வாறு என் தாய் மூன்று நாட்கள் உண்ணாமலும், பருகாமலும் இருந்து பசியால் மயக்கமுற்றுவிட்டார். அப்போது உமாரா எனப்படும் அவரின் மகன் எழுந்து அவருக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் குடித்தார். அப்போது என் தாய் எனக்கெதிராகப் பிரார்த்தித்தார். அந்த வேளையில் இந்த இறைவசனம் இறங்கியது’. (நூல்: முஸ்லிம்)
“ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தமது தாயாரின் நிலைகண்டு, ‘என் தாயே! நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு நூறு உயிர்கள் இருந்து, அதிலிருந்து ஒவ்வொரு உயிராக நீங்கள் வெளியேற்றினாலும் இதற்காக நான் ஒரு போதும் இஸ்லாமிய மார்க்கத்தை விடமாட்டேன். நீங்கள் நாடினால் சாப்பிடுங்கள்; அல்லது சாப்பிடாமல் போங்கள்’ என்றார். பிறகு அவரின் தாயார் தமது நிலையிலிருந்து பின்வாங்கி சாப்பிட்டார்”. (அறிவிப்பாளர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), நூல்: தப்ரானீ).
கீழ்ப்படிதல் என்பது எவ்வாறு இருக்கவேண்டும் என்று நபிகளார் கூறியதாக அலீ (ரலி) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
நபி (ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி, அவர்களுக்கு அன்சாரித்தோழர்களில் ஒருவரைத் தளபதியாக்கி, அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
அந்த அன்சாரித் தளபதி ஒரு கட்டத்தில் படைவீரர்களின் மீது கோபம் கொண்டு, ‘நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லையா?’ என்று கேட்டார். அவர்கள் ‘ஆம்’, என்றனர்.
அவர், ‘விறகுகளைச் சேகரித்து, நெருப்பை மூட்டி அதில் புகுந்து விடும்படி உங்களுக்கு நான் உத்தரவிடுகிறேன்’ என்றார். அவ்வாறே அவர்கள் விறகுகளைச் சேகரித்து நெருப்பை மூட்டினர்.
அதில் நுழைய நினைத்த போது ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றனர். அவர்களில் ஒருவர், ‘(நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே நாம் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றினோம். அவ்வாறிருக்க, அதில் நாம் நுழைய வேண்டுமா?’ என்று கேட்டார். இதற்கிடையே நெருப்பும் அணைந்தது; அவரின் கோபமும் தணிந்தது.
பிறகு நபிகளாரிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அதில் மட்டும் அவர்கள் புகுந்திருந்தால் அதிலிருந்து ஒரு போதும் வெளியேறியிருக்க மாட்டார்கள்; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்’ என்றார்கள். (நூல்: புகாரி)
நன்மையான காரியங்களில் மட்டும்தான் பொறுப்பாளர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும், கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தீமையான காரியங்களில், இணைவைப்பான செயல்களில், கெடுதலான விஷயங்களில் யாரும் யாருக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
உமர் (ரலி) கூறினார்கள்: உங்கள் குழந்தைகளுக்கு நீச்சல், ஈட்டி எறிதல் போன்றவற்றை கற்றுக்கொடுங்கள். குதிரை மீது குதித்து ஏறுவதற்கு அவர்கள் பயிற்சி எடுக்கட்டும்.
மனிதனின் மனமும் குணமும் காலச்சூழ் நிலைக்கு ஏற்ப மாறுபடும். சிலபோது மிதமிஞ்சிய போக்கையும் இன்னும் சிலபோது மந்த நிலையையும் மேற்கொள்ளும். இதனை அன்றாட நடைமுறையில் தினமும் காணலாம்.
சமூகத்தில் மிகவும் முக்கியமான விவகாரங்கள் பேசுபொருளாக இருக்கும் சமயத்தில் அதிலிருந்து மக்களை திசைத் திருப்ப, அதிலும் குறிப்பாக இளைய சமூகத்தை திசைதிருப்புவை சமூக வலைத்தளங்களில் பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளே.
‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழிக்கு ஏற்ப, இளைஞர்களின் கைகளில் இருக்கும் விளையாட்டுச் செயலிகள் நஞ்சாக மாறிக்கொண்டிருப்பதை அவர்கள் உணர்ந்தவர்களாகத் தெரியவில்லை.
உலகத்தையே உள்ளங்கையில் கொண்டு வரும் அளவுக்கு தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. கற்பனைக்கு எட்டாததை எல்லாம் கண் முன்னே கொண்டு வந்து நிகழ்த்திக்காட்டத் தொடங்கிவிட்டனர். ஆகவே சாதாரண விளையாட்டுதானே என்று விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் இவற்றை விளையாடும் இளைஞர்களை கொஞ்சம் கருத்தூன்றி கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
இணைய விளையாட்டுகள்
இன்று பகிரங்கமாக நடக்கும் கொலைகளைவிட ரகசியமாக நடக்கும் கொலைகளே அதிகம். கத்தி, துப்பாக்கி, அரிவாள் போன்ற எந்தவொரு ஆயுதமும் இன்றி தங்களிடம் இருக்கும் கைப்பேசிகள் மூலமாகவே பல இளைஞர்கள் கொலை செய்யப்படுகின்றார்கள்.
கைப்பேசி வழியாகத் திருட முடியும், கொள்ளையடிக்க முடியும் என்று ஒருகாலத்தில் சொன்னால், சொன்னவரைப் பார்த்து சிரிப்பார்கள். ஆனால் அவை எல்லாம் இப்போது உண்மையாகி வருகின்றது. அப்படித்தான் கைப்பேசி மூலமாக நடைபெறும் கொலைகளும்.
என்னதான் ஜல்லிக்கட்டு, சிலம்பம், கபடி, ஓட்டப்பந்தயம் போன்ற பாரம்பரியம் மிக்க வீரத்தை நிலைநாட்டும் விளையாட்டுகள் இம்மண்ணில் இருந்தாலும் மேலைநாட்டுக்காரன் உருவாக்கிய விரல் வித்தை விளையாட்டுகளே மனிதனை மயக்குகிறது.
வினையாகும் விளையாட்டுகள்
சாதாரண மனிதனின் மூளையை சலவை செய்து அதற்கு அடிமையாக்கி உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு இந்த இணைய விளையாட்டுகள் செல்கின்றன. தற்போது இணையதளங்களில் வந்து கொண்டிருக்கின்ற விளையாட்டுக்களை பதிவிறக்கம் செய்து அவற்றில் உள்நுழைந்தாலே நம்முடைய கைப்பேசியில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் விவரங்களையும் உடனடியாக அவர்கள் எடுத்துக்கொள்கின்றார்கள். பதிவிறக்கம் செய்த விளையாட்டுக்களை நாம் விளையாடுமுன்னரே அவர்கள் நம்மை வைத்துவிளையாடத் தொடங்கிவிடுகின்றனர்.
கைப்பேசியில் இருக்கும் புகைப்படங்கள் போன்றவற்றை திருடி அதை இணைய தளங்களில் விட்டுவிடவா என்று நம்மை மிரட்டுவார்கள். வேண்டாமென்றால் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுவார்கள். இந்த மிரட்டல்களுக்கு சிலர் அடிபணிந்து விடுவார்கள். வசதியற்றவர்கள் கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து வாழ்வை முடித்துக்கொள்கின்றார்கள்.
தடுக்கும் முறை
இவ்வாறு ஆபத்தாக மாறும் இணையதள விளையாட்டுகளை நம்மால் தடுத்துநிறுத்த முடியாது. ஆயினும் அவற்றில் இருந்து நம்மால் தப்பித்துக்கொள்ள முடியும். உன்னிப்பான கண்காணிப்புகள் மூலம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இணையதள விளையாட்டுகளில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும். ஏனெனில் ஒரே இடத்தில் உட்கார்ந்து விளையாடுவதால் எப்பயனும் ஏற்படப்போவதில்லை. இதற்கு மாறாக ஓடியாடி விளையாடும் விளையாட்டுகளை விளையாடுமாறு தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் தூண்டவேண்டும். அவை உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்ல பயிற்சியைத் தருகின்றன. மூளையை சுறுசுறுப்பாக்குகின்றன, உடலும் ஆரோக்கியம் பெறுகிறது.
ஓடியாடும் இதுபோன்ற விளையாட்டுக்களையே இஸ்லாமும் வலியுறுத்துகிறது. நபித்தோழர்கள் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டவர்களை நபி (ஸல்) அவர்களே உற்சாகப்படுத்தியும் உள்ளார்கள். நபித்தோழர்களிலேயே அதிக வேகத்தில் ஓடக்கூடியவராக அலி (ரலி) திகழ்ந்தார்கள்.
தோழர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காகவும், உற்சாகத்திற்காகவும் மனைவியை மகிழ்விப்பதற்காகவும் நபி (ஸல்) அவர்களேகூட அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
நபி (ஸல்) அருளினார்கள்: அம்பெய்வதை விட்டுவிடாதீர்கள். நிச்சயமாக அது மிகச் சிறந்த விளையாட்டு. (தபரானி, பஸ்ஸார்)
மற்றொரு முறை நபிகளார் கூறினார்கள்: அம்பெய்தல், குதிரையேற்றம் போன்றவற்றில் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். (முஸ்லிம்)
உமர் (ரலி) கூறினார்கள்: உங்கள் குழந்தைகளுக்கு நீச்சல், ஈட்டி எறிதல் போன்றவற்றை கற்றுக்கொடுங்கள். குதிரை மீது குதித்து ஏறுவதற்கு அவர்கள் பயிற்சி எடுக்கட்டும்.
இதுபோன்ற பயனுள்ள விளையாட்டுகள் எத்தனையோ இருக்க நாம் ஏன் இணையதள விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும்? உடலுக்கு திடகாத்திரத்தையும் மனதிற்கு உற்சாகத்தையும் அளிக்கக்கூடிய இந்த விளையாட்டுகளை நாம் ஏன் அலட்சியம் செய்யவேண்டும்?
எனவே, திரையில் விளையாடும் விளையாட்டுக்களை மறந்துவிட்டு, தரையில் விளையாடும் விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்!
முஹம்மத் பாசித்,
அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி, திருச்சி.
சமூகத்தில் மிகவும் முக்கியமான விவகாரங்கள் பேசுபொருளாக இருக்கும் சமயத்தில் அதிலிருந்து மக்களை திசைத் திருப்ப, அதிலும் குறிப்பாக இளைய சமூகத்தை திசைதிருப்புவை சமூக வலைத்தளங்களில் பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளே.
‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழிக்கு ஏற்ப, இளைஞர்களின் கைகளில் இருக்கும் விளையாட்டுச் செயலிகள் நஞ்சாக மாறிக்கொண்டிருப்பதை அவர்கள் உணர்ந்தவர்களாகத் தெரியவில்லை.
உலகத்தையே உள்ளங்கையில் கொண்டு வரும் அளவுக்கு தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. கற்பனைக்கு எட்டாததை எல்லாம் கண் முன்னே கொண்டு வந்து நிகழ்த்திக்காட்டத் தொடங்கிவிட்டனர். ஆகவே சாதாரண விளையாட்டுதானே என்று விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் இவற்றை விளையாடும் இளைஞர்களை கொஞ்சம் கருத்தூன்றி கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
இணைய விளையாட்டுகள்
இன்று பகிரங்கமாக நடக்கும் கொலைகளைவிட ரகசியமாக நடக்கும் கொலைகளே அதிகம். கத்தி, துப்பாக்கி, அரிவாள் போன்ற எந்தவொரு ஆயுதமும் இன்றி தங்களிடம் இருக்கும் கைப்பேசிகள் மூலமாகவே பல இளைஞர்கள் கொலை செய்யப்படுகின்றார்கள்.
கைப்பேசி வழியாகத் திருட முடியும், கொள்ளையடிக்க முடியும் என்று ஒருகாலத்தில் சொன்னால், சொன்னவரைப் பார்த்து சிரிப்பார்கள். ஆனால் அவை எல்லாம் இப்போது உண்மையாகி வருகின்றது. அப்படித்தான் கைப்பேசி மூலமாக நடைபெறும் கொலைகளும்.
என்னதான் ஜல்லிக்கட்டு, சிலம்பம், கபடி, ஓட்டப்பந்தயம் போன்ற பாரம்பரியம் மிக்க வீரத்தை நிலைநாட்டும் விளையாட்டுகள் இம்மண்ணில் இருந்தாலும் மேலைநாட்டுக்காரன் உருவாக்கிய விரல் வித்தை விளையாட்டுகளே மனிதனை மயக்குகிறது.
வினையாகும் விளையாட்டுகள்
சாதாரண மனிதனின் மூளையை சலவை செய்து அதற்கு அடிமையாக்கி உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு இந்த இணைய விளையாட்டுகள் செல்கின்றன. தற்போது இணையதளங்களில் வந்து கொண்டிருக்கின்ற விளையாட்டுக்களை பதிவிறக்கம் செய்து அவற்றில் உள்நுழைந்தாலே நம்முடைய கைப்பேசியில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் விவரங்களையும் உடனடியாக அவர்கள் எடுத்துக்கொள்கின்றார்கள். பதிவிறக்கம் செய்த விளையாட்டுக்களை நாம் விளையாடுமுன்னரே அவர்கள் நம்மை வைத்துவிளையாடத் தொடங்கிவிடுகின்றனர்.
கைப்பேசியில் இருக்கும் புகைப்படங்கள் போன்றவற்றை திருடி அதை இணைய தளங்களில் விட்டுவிடவா என்று நம்மை மிரட்டுவார்கள். வேண்டாமென்றால் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுவார்கள். இந்த மிரட்டல்களுக்கு சிலர் அடிபணிந்து விடுவார்கள். வசதியற்றவர்கள் கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து வாழ்வை முடித்துக்கொள்கின்றார்கள்.
தடுக்கும் முறை
இவ்வாறு ஆபத்தாக மாறும் இணையதள விளையாட்டுகளை நம்மால் தடுத்துநிறுத்த முடியாது. ஆயினும் அவற்றில் இருந்து நம்மால் தப்பித்துக்கொள்ள முடியும். உன்னிப்பான கண்காணிப்புகள் மூலம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இணையதள விளையாட்டுகளில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும். ஏனெனில் ஒரே இடத்தில் உட்கார்ந்து விளையாடுவதால் எப்பயனும் ஏற்படப்போவதில்லை. இதற்கு மாறாக ஓடியாடி விளையாடும் விளையாட்டுகளை விளையாடுமாறு தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் தூண்டவேண்டும். அவை உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்ல பயிற்சியைத் தருகின்றன. மூளையை சுறுசுறுப்பாக்குகின்றன, உடலும் ஆரோக்கியம் பெறுகிறது.
ஓடியாடும் இதுபோன்ற விளையாட்டுக்களையே இஸ்லாமும் வலியுறுத்துகிறது. நபித்தோழர்கள் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டவர்களை நபி (ஸல்) அவர்களே உற்சாகப்படுத்தியும் உள்ளார்கள். நபித்தோழர்களிலேயே அதிக வேகத்தில் ஓடக்கூடியவராக அலி (ரலி) திகழ்ந்தார்கள்.
தோழர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காகவும், உற்சாகத்திற்காகவும் மனைவியை மகிழ்விப்பதற்காகவும் நபி (ஸல்) அவர்களேகூட அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
நபி (ஸல்) அருளினார்கள்: அம்பெய்வதை விட்டுவிடாதீர்கள். நிச்சயமாக அது மிகச் சிறந்த விளையாட்டு. (தபரானி, பஸ்ஸார்)
மற்றொரு முறை நபிகளார் கூறினார்கள்: அம்பெய்தல், குதிரையேற்றம் போன்றவற்றில் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். (முஸ்லிம்)
உமர் (ரலி) கூறினார்கள்: உங்கள் குழந்தைகளுக்கு நீச்சல், ஈட்டி எறிதல் போன்றவற்றை கற்றுக்கொடுங்கள். குதிரை மீது குதித்து ஏறுவதற்கு அவர்கள் பயிற்சி எடுக்கட்டும்.
இதுபோன்ற பயனுள்ள விளையாட்டுகள் எத்தனையோ இருக்க நாம் ஏன் இணையதள விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும்? உடலுக்கு திடகாத்திரத்தையும் மனதிற்கு உற்சாகத்தையும் அளிக்கக்கூடிய இந்த விளையாட்டுகளை நாம் ஏன் அலட்சியம் செய்யவேண்டும்?
எனவே, திரையில் விளையாடும் விளையாட்டுக்களை மறந்துவிட்டு, தரையில் விளையாடும் விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்!
முஹம்மத் பாசித்,
அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி, திருச்சி.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தர்காவில் இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த தர்காவில் இந்தஆண்டிற்கான சந்தனக்கூடு திருவிழா நேற்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு தர்காவில் உள்ள கொடிமரத்தில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது. பின்னர் இரவு மின் அலங்காரத்தில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. சிலம்பாட்டம்,மேளதாள வாத்தியங்கள் முழங்க, ஒட்டகம், யானை, குதிரையுடன் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக சந்தனக்கூடு வலம் வந்தது.
விழாவையொட்டி நேற்று இரவு 7 மணி மற்றும் 12 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு நாகூர் சாதமின் கச்சேரியும், 16-ந் தேதி ஜப்பான் அலுவா, கொச்சி ஜியா-உல்-ஹக் ஆகியோரின் உருது கவ்வாலி கச்சேரியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள் சையதுபாபுஜான், சுல்தான்பாஷா, தாஜூதீன், பாபு மற்றும்தர்கா பரம்பரை ஹக்தார்கள்,விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.
விழாவையொட்டி நேற்று இரவு 7 மணி மற்றும் 12 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு நாகூர் சாதமின் கச்சேரியும், 16-ந் தேதி ஜப்பான் அலுவா, கொச்சி ஜியா-உல்-ஹக் ஆகியோரின் உருது கவ்வாலி கச்சேரியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள் சையதுபாபுஜான், சுல்தான்பாஷா, தாஜூதீன், பாபு மற்றும்தர்கா பரம்பரை ஹக்தார்கள்,விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தர்காவில் இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த தர்காவில் இந்தஆண்டிற்கான சந்தனக்கூடு திருவிழாஇன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்றுகாலை 6 மணிக்குதர்காவில் உள்ள கொடிமரத்தில்சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் இரவுமின் அலங்காரத்தில்சந்தனக்கூடு ஊர்வலம்நடைபெறும்.சிலம்பாட்டம்,மேளதாள வாத்தியங்கள் முழங்க, ஒட்டகம், யானை, குதிரையுடன் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாகசந்தனக்கூடுவலம் வரும்.
விழாவையொட்டிஇன்று இரவு 7 மணி மற்றும் 12 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு நாகூர் சாதமின் கச்சேரியும், 16-ந் தேதி ஜப்பான் அலுவா, கொச்சி ஜியா-உல்-ஹக் ஆகியோரின் உருது கவ்வாலி கச்சேரியும் நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள் சையதுபாபுஜான், சுல்தான்பாஷா, தாஜூதீன், பாபு மற்றும்தர்கா பரம்பரை ஹக்தார்கள்,விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.
விழாவையொட்டிஇன்று இரவு 7 மணி மற்றும் 12 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு நாகூர் சாதமின் கச்சேரியும், 16-ந் தேதி ஜப்பான் அலுவா, கொச்சி ஜியா-உல்-ஹக் ஆகியோரின் உருது கவ்வாலி கச்சேரியும் நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள் சையதுபாபுஜான், சுல்தான்பாஷா, தாஜூதீன், பாபு மற்றும்தர்கா பரம்பரை ஹக்தார்கள்,விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இன்று இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘நம்பகத்தன்மை’ குறித்த தகவல்களை காண்போம்.
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இன்று இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘நம்பகத்தன்மை’ குறித்த தகவல்களை காண்போம்.
நம்பகத்தன்மை என்பது ஒரு சிறந்த பண்பு. மக்களை வெகுவாக கவர்ந் திழுக்கும் பண்புகளில் இதுவும் ஒன்று. நம்பகத்தன்மை என்பது பேச்சில் மட்டும் இருந்துவிடக் கூடாது.
நம்பகத்தன்மை என்பது நாவு சார்ந்த விஷயமோ, உள்ளம் சார்ந்த விஷயமோ கிடையாது. அது உடல் சார்ந்த, உடல் அமைப்பு சார்ந்த, உடல் இயக்கம் சார்ந்த, செயல் சார்ந்த விஷயமாக அமைந்துள்ளது. அதனால்தான் அதை இஸ்லாம் உடல்சார்ந்த இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாக அங்கீகரித்துள்ளது.
நம்பகத்தன்மையின் உண்மையான நோக்கம், ‘நம்மிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை சேதாரமின்றி, பாதகமின்றி திருப்பிச் செலுத்துவது’ ஆகும். நம்பி ஒப்படைக்கப்பட்டவை பொருள், பொறுப்பு, கடன், கடமை, பணம், பதவி என எதுவாகவும் இருக்கலாம். நம்மை நம்பி யார் எதை ஒப்படைத்தாலும், அவர் அதை திருப்பிக் கேட்கும் போது திருப்திகரமாக செலுத்திட வேண்டும்.
இந்த தன்மை உள்ளவரிடம் இயற்கையாகவே இறைநம்பிக்கை குடி கொண்டிருக்கும். இந்த தன்மையற்றவரிடம் ஒருபோதும் இறைநம்பிக்கை இணைந்திருக்க வாய்ப்பில்லை. இது நபி (ஸல்) அவர்களின் கருத்து ஆகும்.
‘எவரிடம் நம்பகத்தன்மை இல்லையோ, அவரிடம் பரிபூரண இறைநம்பிக்கை இல்லை. எவரிடம் உடன்படிக்கையை நிறைவேற்றுதல் இல்லையோ, அவரிடம் பரிபூரண மார்க்கப்பற்று இல்லை என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: அஹ்மது)
இறை நம்பிக்கையின் அடையாளம்
‘நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான். பேசும்போது பொய் சொல்வதும், வாக்குறுதி அளித்தால் (அதற்கு) மாறு செய்வதும், ஒப்பந்தம் செய்தால் நம்பிக்கை மோசடி செய்வதும், வழக்காடினால் அவ மதிப்பதும் தான் அவை. எவனிடம் இவற்றில் ஒரு குணம் குடி கொண்டுள்ளதோ, அவன் அதை விட்டுவிடும் வரை அவனுள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)
‘உன்னிடம் நான்கு அம்சங்கள் இருந்தால், நீ உலக வாழ்வில் தவறவிட்ட எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. அவை: உண்மை பேசுவது, நம்பி ஒப்படைக்கப்பட்டதை பாதுகாப்பது, நற்குணத்துடன் நடந்து கொள்வது, தூய்மையான உணவை உண்பது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: அஹ்மது).
நபி (ஸல்) அவர்களின் இயற்கை குணமாக நம்பகத்தன்மை இருந்துள்ளது. இதனால்தான் நபியவர்கள் ‘அல்அமீன்’ (நம்பகத்தன்மையாளர்) என்றும், ‘அஸ்ஸாதிக்’ (வாய்மையாளர்) என்று ம் அழைக்கப்பட்டார்கள்.
மக்காவாசிகளின் தொல்லைகள் காரணமாக நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் மக்காவைத் துறந்து மதீனாவிற்கு அகதிகளாக செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அந்த நிலையிலும் தமது மருமகன் அலி (ரலி) அவர்களிடம், ‘என்னை நம்பி குறைஷிகள் ஒப்படைத்த பொருட்களை மக்காவில் தங்கி, நீர் ஒப்படைத்து விட்டு வாரும்’, என நபி (ஸல்) அவர்கள் கூறியது மெய் சிலிர்க்க வைக்கிறது.
இறைவன் நம்மிடம் ஒப்படைத்த மார்க்கமும், மார்க்க கடமைகளும், பகுத்தறிவும், உடல் சார்ந்த உறுப்புகளும், நமது பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்ட அனைத்தும் ‘அமானிதம்’ எனும் அடைக்கலப் பொருட்களேயாகும். நாம் இவற்றில் நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இவற்றில் எதிலும் நாம் நம்பிக்கை மோசடி செய்யக்கூடாது.
இறைவனின் விசாரணை
நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட நமது பெற்றோரும், நம்மை நம்பி வந்த மனைவியும், குழந்தைகளும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பிறரின் பொருட்களும் அமானிதங்களே. இவற்றை நாம் பாழ்படுத்தி விடக்கூடாது. இது குறித்து இறைவன் நாளை மறுஉலகில் விசாரிப்பான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதுகுறித்த நபிமொழி வருமாறு:
‘நினைவில் கொள்க, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் (குடும்பத்தலைவன்) தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளர் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் (குடும்பத்தலைவி) தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க, உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். மகன் தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னுஉமர் (ரலி), நூல்: புகாரி)
இறைவன் நமக்கு வழங்கிய உறுப்புகள் அமானிதமே. இறைகோபத்திற்கு ஆளாகாத வண்ணம் அவற்றை பாதுகாப்பது அவசியமே. இது குறித்து திருக்குர்ஆன் (17:36) குறிப்பிடும்போது, ‘(நபியே!) எதைப் பற்றி உமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அதை நீர் பின் தொடராதீர். (ஏனெனில்) நிச்சயமாக செவி, பார்வை, இதயம் (ஆகிய) இவை ஒவ்வொன்றும் - அதனைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது’ என்று தெரிவிக்கிறது.
இரவல் பொருட்களை ஒப்படைப்பதும், நம்மிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருட்களும் அமானிதங்களே. இவற்றை வாங்கியது போன்று, கொடுத்தது போன்று திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
‘அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப் படைக்க வேண்டும் என இறைவன் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்’ (திருக்குர்ஆன் 4:58)
ரகசியத்தை பாதுகாப்பதும் அமானிதமே
‘ஒருவர் மற்றவரிடம் ஒரு செய்தியைக் கூறிவிட்டு, அங்கும் இங்கும் திரும்பிப் பார்த்துக் கொண்டால், அந்தச் செய்தி நம்பி ஒப்படைக்கப்பட்டதாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: அபூதாவூத்)
ஒருவர் ஒரு செய்தியைக் கூறிவிட்டு, இதை ரகசியமாக வைக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆயினும் அவரது செய்கை அதை பகிரங்கப்படுத்தக்கூடாது என்ற விதத்தில் இருந்தால், அதுவும் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானித செய்தியாகும். பொருளைப் போன்று அதையும் பாதுகாப்பது அவசியமாகும்.
நம்பகத்தன்மை குறைந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். நம்பகத்தன்மையை பாழ்படுத்தினால் நரகம், அதை பாதுகாத்தால் சொர்க்கம் நிச்சயம் என்பதை பின்வரும் நபி மொழிகள் விளக்குகின்றன:
“நபி (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் ‘நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் உலக அழிவு நாளை நீ எதிர்பார்க்கலாம்’ என்றார்கள். அவர் ‘இறைத்தூதரே, அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?’ என்று கேட்டதற்கு, ‘ஆட்சியதிகாரம், நீதி நிர்வாகம் போன்ற எந்தப் பொறுப்பும் அதற்குத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது மறுமை நாளை எதிர்பார்த்துக் கொள்’ என நபி (ஸல்) பதிலளித்தார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
‘என்னிடம் உங்களில் ஆறு விஷயங்களில் பொறுப்பேற்பவருக்கு நான் உங்களுக்கு சொர்க்கத்தை பிணையாக பெற்றுத் தருகிறேன். நீங்கள் பேசினால் உண்மை பேசுங்கள், நீங்கள் வாக்களித்தால் நிறைவேற்றுங்கள், உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை நிறைவேற்றுங்கள், உங்களது மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள், உங்களது பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுங்கள், உங்களது கரங்களை தீங்கிலிருந்து தடுத்துக் கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: உப்பாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மது)
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
நம்பகத்தன்மை என்பது ஒரு சிறந்த பண்பு. மக்களை வெகுவாக கவர்ந் திழுக்கும் பண்புகளில் இதுவும் ஒன்று. நம்பகத்தன்மை என்பது பேச்சில் மட்டும் இருந்துவிடக் கூடாது.
நம்பகத்தன்மை என்பது நாவு சார்ந்த விஷயமோ, உள்ளம் சார்ந்த விஷயமோ கிடையாது. அது உடல் சார்ந்த, உடல் அமைப்பு சார்ந்த, உடல் இயக்கம் சார்ந்த, செயல் சார்ந்த விஷயமாக அமைந்துள்ளது. அதனால்தான் அதை இஸ்லாம் உடல்சார்ந்த இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாக அங்கீகரித்துள்ளது.
நம்பகத்தன்மையின் உண்மையான நோக்கம், ‘நம்மிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை சேதாரமின்றி, பாதகமின்றி திருப்பிச் செலுத்துவது’ ஆகும். நம்பி ஒப்படைக்கப்பட்டவை பொருள், பொறுப்பு, கடன், கடமை, பணம், பதவி என எதுவாகவும் இருக்கலாம். நம்மை நம்பி யார் எதை ஒப்படைத்தாலும், அவர் அதை திருப்பிக் கேட்கும் போது திருப்திகரமாக செலுத்திட வேண்டும்.
இந்த தன்மை உள்ளவரிடம் இயற்கையாகவே இறைநம்பிக்கை குடி கொண்டிருக்கும். இந்த தன்மையற்றவரிடம் ஒருபோதும் இறைநம்பிக்கை இணைந்திருக்க வாய்ப்பில்லை. இது நபி (ஸல்) அவர்களின் கருத்து ஆகும்.
‘எவரிடம் நம்பகத்தன்மை இல்லையோ, அவரிடம் பரிபூரண இறைநம்பிக்கை இல்லை. எவரிடம் உடன்படிக்கையை நிறைவேற்றுதல் இல்லையோ, அவரிடம் பரிபூரண மார்க்கப்பற்று இல்லை என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: அஹ்மது)
இறை நம்பிக்கையின் அடையாளம்
‘நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான். பேசும்போது பொய் சொல்வதும், வாக்குறுதி அளித்தால் (அதற்கு) மாறு செய்வதும், ஒப்பந்தம் செய்தால் நம்பிக்கை மோசடி செய்வதும், வழக்காடினால் அவ மதிப்பதும் தான் அவை. எவனிடம் இவற்றில் ஒரு குணம் குடி கொண்டுள்ளதோ, அவன் அதை விட்டுவிடும் வரை அவனுள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)
‘உன்னிடம் நான்கு அம்சங்கள் இருந்தால், நீ உலக வாழ்வில் தவறவிட்ட எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. அவை: உண்மை பேசுவது, நம்பி ஒப்படைக்கப்பட்டதை பாதுகாப்பது, நற்குணத்துடன் நடந்து கொள்வது, தூய்மையான உணவை உண்பது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: அஹ்மது).
நபி (ஸல்) அவர்களின் இயற்கை குணமாக நம்பகத்தன்மை இருந்துள்ளது. இதனால்தான் நபியவர்கள் ‘அல்அமீன்’ (நம்பகத்தன்மையாளர்) என்றும், ‘அஸ்ஸாதிக்’ (வாய்மையாளர்) என்று ம் அழைக்கப்பட்டார்கள்.
மக்காவாசிகளின் தொல்லைகள் காரணமாக நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் மக்காவைத் துறந்து மதீனாவிற்கு அகதிகளாக செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அந்த நிலையிலும் தமது மருமகன் அலி (ரலி) அவர்களிடம், ‘என்னை நம்பி குறைஷிகள் ஒப்படைத்த பொருட்களை மக்காவில் தங்கி, நீர் ஒப்படைத்து விட்டு வாரும்’, என நபி (ஸல்) அவர்கள் கூறியது மெய் சிலிர்க்க வைக்கிறது.
இறைவன் நம்மிடம் ஒப்படைத்த மார்க்கமும், மார்க்க கடமைகளும், பகுத்தறிவும், உடல் சார்ந்த உறுப்புகளும், நமது பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்ட அனைத்தும் ‘அமானிதம்’ எனும் அடைக்கலப் பொருட்களேயாகும். நாம் இவற்றில் நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இவற்றில் எதிலும் நாம் நம்பிக்கை மோசடி செய்யக்கூடாது.
இறைவனின் விசாரணை
நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட நமது பெற்றோரும், நம்மை நம்பி வந்த மனைவியும், குழந்தைகளும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பிறரின் பொருட்களும் அமானிதங்களே. இவற்றை நாம் பாழ்படுத்தி விடக்கூடாது. இது குறித்து இறைவன் நாளை மறுஉலகில் விசாரிப்பான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதுகுறித்த நபிமொழி வருமாறு:
‘நினைவில் கொள்க, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் (குடும்பத்தலைவன்) தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளர் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் (குடும்பத்தலைவி) தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க, உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். மகன் தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னுஉமர் (ரலி), நூல்: புகாரி)
இறைவன் நமக்கு வழங்கிய உறுப்புகள் அமானிதமே. இறைகோபத்திற்கு ஆளாகாத வண்ணம் அவற்றை பாதுகாப்பது அவசியமே. இது குறித்து திருக்குர்ஆன் (17:36) குறிப்பிடும்போது, ‘(நபியே!) எதைப் பற்றி உமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அதை நீர் பின் தொடராதீர். (ஏனெனில்) நிச்சயமாக செவி, பார்வை, இதயம் (ஆகிய) இவை ஒவ்வொன்றும் - அதனைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது’ என்று தெரிவிக்கிறது.
இரவல் பொருட்களை ஒப்படைப்பதும், நம்மிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருட்களும் அமானிதங்களே. இவற்றை வாங்கியது போன்று, கொடுத்தது போன்று திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
‘அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப் படைக்க வேண்டும் என இறைவன் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்’ (திருக்குர்ஆன் 4:58)
ரகசியத்தை பாதுகாப்பதும் அமானிதமே
‘ஒருவர் மற்றவரிடம் ஒரு செய்தியைக் கூறிவிட்டு, அங்கும் இங்கும் திரும்பிப் பார்த்துக் கொண்டால், அந்தச் செய்தி நம்பி ஒப்படைக்கப்பட்டதாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: அபூதாவூத்)
ஒருவர் ஒரு செய்தியைக் கூறிவிட்டு, இதை ரகசியமாக வைக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆயினும் அவரது செய்கை அதை பகிரங்கப்படுத்தக்கூடாது என்ற விதத்தில் இருந்தால், அதுவும் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானித செய்தியாகும். பொருளைப் போன்று அதையும் பாதுகாப்பது அவசியமாகும்.
நம்பகத்தன்மை குறைந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். நம்பகத்தன்மையை பாழ்படுத்தினால் நரகம், அதை பாதுகாத்தால் சொர்க்கம் நிச்சயம் என்பதை பின்வரும் நபி மொழிகள் விளக்குகின்றன:
“நபி (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் ‘நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் உலக அழிவு நாளை நீ எதிர்பார்க்கலாம்’ என்றார்கள். அவர் ‘இறைத்தூதரே, அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?’ என்று கேட்டதற்கு, ‘ஆட்சியதிகாரம், நீதி நிர்வாகம் போன்ற எந்தப் பொறுப்பும் அதற்குத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது மறுமை நாளை எதிர்பார்த்துக் கொள்’ என நபி (ஸல்) பதிலளித்தார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
‘என்னிடம் உங்களில் ஆறு விஷயங்களில் பொறுப்பேற்பவருக்கு நான் உங்களுக்கு சொர்க்கத்தை பிணையாக பெற்றுத் தருகிறேன். நீங்கள் பேசினால் உண்மை பேசுங்கள், நீங்கள் வாக்களித்தால் நிறைவேற்றுங்கள், உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை நிறைவேற்றுங்கள், உங்களது மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள், உங்களது பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுங்கள், உங்களது கரங்களை தீங்கிலிருந்து தடுத்துக் கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: உப்பாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மது)
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
நாமும் நமது வாழ்நாட்களில் நபிகள் நாயகம் காட்டிய வழியில் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற்று விடமுடியும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
பாலைவனமான அரபு நாட்டில் மெக்கா என்ற நகரில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு அப்துல்லாஹ், ஆமினா தம்பதியருக்கு அருந்தவப் புதல்வராய் முகம்மது பிறந்தார். ஆறுமாத குழந்தையாக இருந்தபோது தந்தையையும், ஆறு வயதை அடைந்தபோது தாயையும் இழந்துவிட்டார்.
பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கு தாத்தா-பாட்டிகள் தானே தக்க ஆதரவு. அவ்வாறே இவரது பாட்டனார் அப்துல் முத்தலிப் ஆரம்பத்திலும், அவரது மறைவுக்குப்பிறகு பெரிய தந்தை அபூ தாலிபும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்கள்.
முகம்மது, சிறு வயதிலேயே சுறு சுறுப்பாய் இருந்தார். கடைவீதிக்குச் செல்லும் போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கித்தருபவராக இருந்தார். இதனாலேயே அவர் “அல் அமீன்” (நம்பிக்கைக்குரியவர்), “அஸ் ஸாதிக்” (உண்மைக்குரியவர்) என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே அம்பு எய்தல், குதிரையேற்றம், மல்யுத்தம் போன்ற பயிற்சிகளில் நன்கு தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தார்.
நபிகளார் சிறுவயதிலிருந்தே பொய், புரட்டு, கோள், இட்டுக்கட்டு என எதுவும் சொன்னதில்லை. வாய்மை தவறியதேயில்லை, கொடுத்தவாக்கு மீறியதில்லை, நம்பிக்கை மோசடி செய்ததில்லை. இப்படி நல்ல பல நற்குணங்களோடு திகழ்ந்தவர்கள் தான் நபிகள்நாயகம்.
இதனால் தான் நபிகளாரின் நற் குணம் தனியொரு இறை வசனத்தின் மூலம் இப்படி புகழ்ந்துரைக்கப் படுகிறது: “(நபியே!) நிச்சயமாக நீங்கள் மகத்தான நற் குணமுடையவராகவே இருக்கின்றீர்கள்”. (திருக்குர்ஆன் 68:4)
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபிகளாரின் குணம் எப்படியிருந்தது என்று கேட்கப்பட்டபோது, “அவர்களின் குணம் குர்ஆனாக இருந்தது” என்று கூறினார்கள்.
திருக்குர்ஆன் தௌிவானது, அழகானது, அறிவுப்பூர்வமானது. அது ஆதாரப்பூர்வமானதும் கூட. அப்படியானால் அண்ணலாரின் வாழ்வும், வாக்கும் அப்படியே அழகானது, ஆதாரப்பூர்வமானது. அதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமே இல்லை.
இதனால்தான் ஒருமெய்யான இறை பக்தனைப் பற்றி பேசும் போது நபிகளார் இவ்வாறு நவின்றார்கள்: “நற்குணத்தில் பரிபூரணமானவர்தான் ‘ஈமான்’ எனும் இறைவிசுவாசத்தில் பரிபூரணமானவர் ஆவார்” (நூல்: புகாரி).
நபிகளாரின் சிறப்பை விளக்கும் மற்றொரு திருக்குர்ஆன் வசனம் இதோ:
“(நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அதுஅவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; தவிர, உங்(கள்நன்மை)களையே அவர் பெரிதும் விரும்பு கிறார்; இன்னும் நம்பிக்கையாளர்களான உங்கள் மீது மிக்க கருணையும் மிகுந்த அன்பும் உடையவராக இருக்கின்றார்”. (திருக்குர்ஆன் 9:128)
இந்த வான்மறை வசனத்தின் அடிப்படையில் தான் தமது வாலிப வயதில் “ஹில்ஃபுல் ஃபுளூல்” என்ற பெயரில் சமூக சேவை அமைப்பு ஒன்றை ஆரம்பித்து ஏழை எளிய மக்களுக்கு நல்ல பல நற்காரியங்களை இதன் மூலம் செய்து வந்தார்கள்.
நபிகளார் தமது பதினைந்தாம் வயதில் பெரிய தந்தையுடன் வியாபாரத்திற்காக சிரியா தேசம் சென்றதன் மூலம் வணிகம் செய்வதைக் கற்றுக்கொண்டார்கள். தமது இருபத்தைந்தாம் வயதில், நாற்பதுவயது மதிக்கத்தக்க கதீஜா என்ற வணிகச் சீமாட்டிப் பெண்ணை அவரது விருப்பத்தின் பேரில் திருமணமும் செய்து கொண்டார்கள். சுமார் இருபத்தைந்து ஆண்டுகாலம் அன்னை கதீஜாவுடன் குடும்பம் நடத்தினார்கள். இத்தம்பதியருக்கு இரண்டு ஆண் மக்களும், நான்கு பெண் மக்களும் பிறந்தார்கள். இதில் காசிம், அப்துல்லாஹ் என்ற இருவரும் தமது சிறு வயதிலேயே மரணித்து விட்டார்கள். ஜைனப், ருகைய்யா, பாத்திமா, உம்மு குல்சும் ஆகிய நால்வரும் நாயகத்தின் பெண் மக்களாவார்கள்.
நபிகளாரின் நாற்பதாம் வயதில் நபித்துவப் பட்டம் பெற்றார்கள். அன்று முதல் “முகம்மது ரசூலுல்லாஹ்- முகம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர்” என்று தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டார். அன்றிலிருந்து சுமார் பத்தாண்டுகாலம் மெக்காவில் “இறைவன் ஒருவனே, முகம்மது கடவுளின் இறைத்தூதர்” என்ற திரு வாசகத்தை மொழிய வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து போராடி வந்தார்கள். எதிர்ப்புகள் பல வலுத்த போது அருகேயுள்ள மதீனா நகருக்கு புலம் பெயரத் தொடங்கினார்கள்.
மதீனா வந்தபின் தான் தொழுகை தொடங்கி, மனிதன் மரணித்த பின் என்ன செய்ய வேண்டும் என்பது வரையிலான எல்லாக்காரியங்களும் ஒவ்வொன்றாக விவரிக்கப்பட்டன. மது, மாது, சூது, வட்டி, திருட்டு, பெண் சிசு கொலை என ஒவ்வொன்றாக தடைசெய்யப்பட்டன. மதீனா நகர் வந்த பின்னர் தான் இஸ்லாம் இன்னும் வேகமாக பரவத் தொடங்கிற்று. பல்வேறு யுத்தங்களும் வெற்றியில் முடிந்தன. கூடவே ஊராரை மதித்து வாழ்தல் என்ற அடிப்படையில் சமய நல்லிணக்க ஒப்பந்தங்களும் புதிய சகாப்தம் படைத்தன. இந்த அளவுக்கு ஊருக்கு மட்டுமல்ல உலகத்திற்கே உழைத்து பெரும் மாற்றத்தை கொண்டு வந்தவர்கள் தான் உத்தம நபியவர்கள்.
தமது இறுதி காலம் வரை நல்ல பல காரியங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்கள். சுமார் ஒன்னேகால் லட்சத்திற்கும் மேற்பட்ட நபித் தோழர்களையும், தோழியர் களையும் ஒப்பற்ற ஒழுக்கமிக்க சீலர்களாக உருவாக்கிக் காட்டினார்கள். ஆகவே தான் அவர்களால் இப்படிச் சொல்ல முடிந்தது “என் தோழர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள், அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நிச்சயம் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்” என்று.
‘வெட்டிய உறவுகளோடு ஒட்டி வாழ்’, ‘அநீதியிழைத்தவனை மன்னித்திடு’, ‘தீங்கு செய்தவனுக்கும் நன்மைசெய்’ என்ற நபிகளாரின் நன்மொழியை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விடமுடியுமா?. நபிகளாரின் சொல்லோவியங்கள் யாவுமே வெற்றுச்சொற்களல்ல, அவையாவுமே அனுபவப்பூர்வமான வெற்றிச்சொற்கள். எனவே நாமும் நமது வாழ்நாட்களில் நபிகள் நாயகம் காட்டிய வழியில் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற்று விடமுடியும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கு தாத்தா-பாட்டிகள் தானே தக்க ஆதரவு. அவ்வாறே இவரது பாட்டனார் அப்துல் முத்தலிப் ஆரம்பத்திலும், அவரது மறைவுக்குப்பிறகு பெரிய தந்தை அபூ தாலிபும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்கள்.
முகம்மது, சிறு வயதிலேயே சுறு சுறுப்பாய் இருந்தார். கடைவீதிக்குச் செல்லும் போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கித்தருபவராக இருந்தார். இதனாலேயே அவர் “அல் அமீன்” (நம்பிக்கைக்குரியவர்), “அஸ் ஸாதிக்” (உண்மைக்குரியவர்) என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே அம்பு எய்தல், குதிரையேற்றம், மல்யுத்தம் போன்ற பயிற்சிகளில் நன்கு தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தார்.
நபிகளார் சிறுவயதிலிருந்தே பொய், புரட்டு, கோள், இட்டுக்கட்டு என எதுவும் சொன்னதில்லை. வாய்மை தவறியதேயில்லை, கொடுத்தவாக்கு மீறியதில்லை, நம்பிக்கை மோசடி செய்ததில்லை. இப்படி நல்ல பல நற்குணங்களோடு திகழ்ந்தவர்கள் தான் நபிகள்நாயகம்.
இதனால் தான் நபிகளாரின் நற் குணம் தனியொரு இறை வசனத்தின் மூலம் இப்படி புகழ்ந்துரைக்கப் படுகிறது: “(நபியே!) நிச்சயமாக நீங்கள் மகத்தான நற் குணமுடையவராகவே இருக்கின்றீர்கள்”. (திருக்குர்ஆன் 68:4)
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபிகளாரின் குணம் எப்படியிருந்தது என்று கேட்கப்பட்டபோது, “அவர்களின் குணம் குர்ஆனாக இருந்தது” என்று கூறினார்கள்.
திருக்குர்ஆன் தௌிவானது, அழகானது, அறிவுப்பூர்வமானது. அது ஆதாரப்பூர்வமானதும் கூட. அப்படியானால் அண்ணலாரின் வாழ்வும், வாக்கும் அப்படியே அழகானது, ஆதாரப்பூர்வமானது. அதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமே இல்லை.
இதனால்தான் ஒருமெய்யான இறை பக்தனைப் பற்றி பேசும் போது நபிகளார் இவ்வாறு நவின்றார்கள்: “நற்குணத்தில் பரிபூரணமானவர்தான் ‘ஈமான்’ எனும் இறைவிசுவாசத்தில் பரிபூரணமானவர் ஆவார்” (நூல்: புகாரி).
நபிகளாரின் சிறப்பை விளக்கும் மற்றொரு திருக்குர்ஆன் வசனம் இதோ:
“(நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அதுஅவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; தவிர, உங்(கள்நன்மை)களையே அவர் பெரிதும் விரும்பு கிறார்; இன்னும் நம்பிக்கையாளர்களான உங்கள் மீது மிக்க கருணையும் மிகுந்த அன்பும் உடையவராக இருக்கின்றார்”. (திருக்குர்ஆன் 9:128)
இந்த வான்மறை வசனத்தின் அடிப்படையில் தான் தமது வாலிப வயதில் “ஹில்ஃபுல் ஃபுளூல்” என்ற பெயரில் சமூக சேவை அமைப்பு ஒன்றை ஆரம்பித்து ஏழை எளிய மக்களுக்கு நல்ல பல நற்காரியங்களை இதன் மூலம் செய்து வந்தார்கள்.
நபிகளார் தமது பதினைந்தாம் வயதில் பெரிய தந்தையுடன் வியாபாரத்திற்காக சிரியா தேசம் சென்றதன் மூலம் வணிகம் செய்வதைக் கற்றுக்கொண்டார்கள். தமது இருபத்தைந்தாம் வயதில், நாற்பதுவயது மதிக்கத்தக்க கதீஜா என்ற வணிகச் சீமாட்டிப் பெண்ணை அவரது விருப்பத்தின் பேரில் திருமணமும் செய்து கொண்டார்கள். சுமார் இருபத்தைந்து ஆண்டுகாலம் அன்னை கதீஜாவுடன் குடும்பம் நடத்தினார்கள். இத்தம்பதியருக்கு இரண்டு ஆண் மக்களும், நான்கு பெண் மக்களும் பிறந்தார்கள். இதில் காசிம், அப்துல்லாஹ் என்ற இருவரும் தமது சிறு வயதிலேயே மரணித்து விட்டார்கள். ஜைனப், ருகைய்யா, பாத்திமா, உம்மு குல்சும் ஆகிய நால்வரும் நாயகத்தின் பெண் மக்களாவார்கள்.
நபிகளாரின் நாற்பதாம் வயதில் நபித்துவப் பட்டம் பெற்றார்கள். அன்று முதல் “முகம்மது ரசூலுல்லாஹ்- முகம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர்” என்று தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டார். அன்றிலிருந்து சுமார் பத்தாண்டுகாலம் மெக்காவில் “இறைவன் ஒருவனே, முகம்மது கடவுளின் இறைத்தூதர்” என்ற திரு வாசகத்தை மொழிய வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து போராடி வந்தார்கள். எதிர்ப்புகள் பல வலுத்த போது அருகேயுள்ள மதீனா நகருக்கு புலம் பெயரத் தொடங்கினார்கள்.
மதீனா வந்தபின் தான் தொழுகை தொடங்கி, மனிதன் மரணித்த பின் என்ன செய்ய வேண்டும் என்பது வரையிலான எல்லாக்காரியங்களும் ஒவ்வொன்றாக விவரிக்கப்பட்டன. மது, மாது, சூது, வட்டி, திருட்டு, பெண் சிசு கொலை என ஒவ்வொன்றாக தடைசெய்யப்பட்டன. மதீனா நகர் வந்த பின்னர் தான் இஸ்லாம் இன்னும் வேகமாக பரவத் தொடங்கிற்று. பல்வேறு யுத்தங்களும் வெற்றியில் முடிந்தன. கூடவே ஊராரை மதித்து வாழ்தல் என்ற அடிப்படையில் சமய நல்லிணக்க ஒப்பந்தங்களும் புதிய சகாப்தம் படைத்தன. இந்த அளவுக்கு ஊருக்கு மட்டுமல்ல உலகத்திற்கே உழைத்து பெரும் மாற்றத்தை கொண்டு வந்தவர்கள் தான் உத்தம நபியவர்கள்.
தமது இறுதி காலம் வரை நல்ல பல காரியங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்கள். சுமார் ஒன்னேகால் லட்சத்திற்கும் மேற்பட்ட நபித் தோழர்களையும், தோழியர் களையும் ஒப்பற்ற ஒழுக்கமிக்க சீலர்களாக உருவாக்கிக் காட்டினார்கள். ஆகவே தான் அவர்களால் இப்படிச் சொல்ல முடிந்தது “என் தோழர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள், அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நிச்சயம் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்” என்று.
‘வெட்டிய உறவுகளோடு ஒட்டி வாழ்’, ‘அநீதியிழைத்தவனை மன்னித்திடு’, ‘தீங்கு செய்தவனுக்கும் நன்மைசெய்’ என்ற நபிகளாரின் நன்மொழியை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விடமுடியுமா?. நபிகளாரின் சொல்லோவியங்கள் யாவுமே வெற்றுச்சொற்களல்ல, அவையாவுமே அனுபவப்பூர்வமான வெற்றிச்சொற்கள். எனவே நாமும் நமது வாழ்நாட்களில் நபிகள் நாயகம் காட்டிய வழியில் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற்று விடமுடியும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இன்று இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘சமாதானம் பேசுவது’ குறித்த தகவல்களை காண்போம்.
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இன்று இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘சமாதானம் பேசுவது’ குறித்த தகவல்களை காண்போம்.
எது சிறந்த பேச்சு?
பிளவுபட்ட இருநபர்களுக்கிடையில், பிரிந்து சென்ற கணவன்-மனைவிக்கிடையில், ரெண்டுபட்ட ஊர் மக்களுக் கிடையில், மோதல் ஏற்பட்ட இரு பிரிவினருக்கிடையில், கல வரத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு சமூகங்களுக்கிடையில், போரில் ஈடுபடும் இரண்டு நாடுகளுக்கிடையில் சமாதானமாக பேச்சுவார்த்தை நடத்தி, சமரச உடன்பாடு ஏற்படும் வரை சுமுகத்தீர்வு காண்பதுதான் பேச்சுக்களிலேயே சிறந்த பேச்சாக மதிப்பீடு செய்யப்படுகிறது.
சமாதானம்
இத்தகைய சமாதான நடவடிக்கைகளை இறைவன் வெகுவாக பாராட்டி மகிழ்கிறான். இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘(நபியே) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் ஏவியவரைத் தவிர, அவர்களின் ரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்தவிதமான நலமும் இல்லை; ஆகவே எவர் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி இதைச்செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்’ (திருக்குர்ஆன் 4:114).
இரண்டு நபர்களுக்கிடையில் உறவில் விரிசல் ஏற்பட்டால், அந்த விரிசலை பூதாகரமாக்கக் கூடாது. இருவருக்கிடையில் சமாதானத்தை நிலவச்செய்ய வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. இதையே திருக்குர்ஆன் இவ்வாறு விளக்குகிறது:
‘இறைவனை அஞ்சுங்கள், உங்களுக்கிடையே உள்ள உறவு களைச் சீர்படுத்திக் கொள்ளுங்கள்’ (திருக்குர்ஆன் 8:1).
ஒரு குடும்பத்தில் பிரச்சினை என்று வரும்போது அவர்கள் அழைக்காமலேயே ஒருவர் சமாதானம் ஏற்படுத்த செல்வது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாக உள்ளது. இதை இந்த நபிமொழி மூலம் அறியலாம்:
‘அம்ர் பின் அவ்ப் குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்குள் ஏதோ தகராறு இருந்து வந்தது. எனவே அவர்களிடையே சமாதானம் செய்து வைப்பதற்காக அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் சிலருடன் சென்றார்கள்’ (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரி)
தடை கூடாது
நன்மைபுரிய, இறைவனை அஞ்ச, மக்களிடையே சமா தானத்தை ஏற்படுத்த எதுவும் தடையாக இருக்கக்கூடாது. நாமும் நமக்கு நாமே தடையையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதை இந்த திருக்குர்ஆன் வசனம் மூலம் அறியலாம்:
‘நன்மை செய்வதற்கும், (இறைவனை) அஞ்சுவதற்கும், மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் உங்கள் சத்தியங்கள் மூலம் இறைவனை ஒரு தடையாக ஆக்காதீர்கள். இறைவன் செவியுறுபவன்; அறிந்தவன்’ (திருக்குர்ஆன் 2:224).
இரண்டு குழுவினருக்கிடையில் சண்டையிட நேர்ந்தால் சமாதானம் ஏற்படுத்த வேண்டும் என்பதை பின்வரும் நிகழ்வு மூலம் அறியலாம்:
‘நபி (ஸல்) அவர்களிடம், ‘தாங்கள் அப்துல்லாஹ்பின் உபையிடம் வந்தால் நன்றாக இருக்கும்’ என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். நபிகளுடன் மற்றவர்களும் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அவனை நபியவர்கள் அடைந்த போது அவன் ‘தூர விலகிப் போ, இறைவனின் மீதாணையாக, உமது கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்திவிட்டது’ என்று கூறினான்.
அப்போது ஒரு அன்சாரித் தோழர் ‘இறைவனின் மீதாணை, இறைவனின் தூதருடைய கழுதை உன்னைவிட நல்ல வாசனையுடையதாகும்’ என்றார்.
அப்துல்லாஹ்வுக்காக அவனது சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரித் தோழரை ஏசினார். அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபம் அடைந்து, தங்களுக்கிடையே ஈச்சங்கிளையின் குச்சியாலும், கைகளாலும் அடித்துக்கொண்டார்கள். அப்போது இரண்டு குழுவினருக்கிடையே சமாதானம் செய்து வையுங்கள் என்று பின்வரும் இறைவசனம் அருளப்பட்டது.
‘நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால், அவர்களுக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்துங்கள். அவர்களில் ஒருவர் மற்றொருவரின் மீது வரம்பு மீறினால், வரம்பு மீறிய கூட்டம் இறைவனின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அவர்களை எதிர்த்துச் சண்டையிடுங்கள். அக்கூட்டத்தினர் திருந்தினால் நீதியான முறையில் இரு குழுவினருக்கிடையே சமா தானத்தை ஏற்படுத்துங்கள். நீதி செலுத்துங்கள், நீதி செலுத்துவோரை இறைவன் விரும்பு கிறான்’ (திருக்குர்ஆன் 49:9).
கணவன்-மனைவி
கணவன்-மனைவிக்கிடையே சமாதானம் ஏற்படுத்துவது குறித்த இறைவசனம் வருமாறு:
“ஒரு பெண், தன் கணவன் (தன்னை வெறுத்து) முகம் சுளிப்பான் என்றோ, (தன்னைப்) புறக்கணிப்பான் என்றோ அஞ்சினால், அவள் சமாதானமாக செல்லவேண்டும். கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து தங்களுக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை. மேலும், சமாதானம் செய்து கொள்வதே நன்மையானதாகும்” (திருக்குர்ஆன் 4:128).
சமாதானம் என்பது பலவிதமான பிரச்சினைகளையும், பலவிதமான சிக்கல்களையும் தீர்த்து வைக்கும் ஒரு கேடயமாக விளங்குகிறது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சமா தானத்தில்தான் அமைந்துள்ளது. எனவேதான் இஸ்லாம் சமா தானத்தை இறைநம்பிக்கையுடன் பொருத்திப் பார்க்கிறது.
சமாதானம் ஏற்படுத்துவது சாதாரணமானது அல்ல. அது சாதுர்யமாக, சாமர்த்தியமாக, சாந்தமாக, சமயோசிதமாக நடப்பவர்களின் கைகளில் உள்ளது. அவர்களின் வார்த்தைகளில், அவர்களின் செயல்பாடு களில், அவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போக்கில்தான் உள்ளது.
ஆதலால்தான் இஸ்லாம் சமாதானம் பேசுவதை உடல் சார்ந்த இறைநம்பிக்கையாக பாவிக்கிறது. இஸ்லாம் என்றால் சாந்தி, சமாதானம் என்று பொருள். முஸ்லிம்கள் என்றால் சாந்தமானவர்கள், சமாதானமாக செல்லக்கூடியவர்கள் என்று அர்த்தம். இது பெயரளவில் மட்டும் பிரதி பலிக்கக் கூடாது. செயலிலும் எதிரொலிக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் பொருளாதார பிரச்சினையில், ஜாதி, மத பிரச்சினையில், அரசியலில், ராணுவ நடவடிக்கையில், சமூக ஒற்றுமையில் சமாதானம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக சமாதானத்தின் தூதுவராக இஸ்லாம் திகழ்கிறது. அதன் தூதராக முஹம்மது நபி (ஸல்) திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அண்டை நாட்டவருடனும், தூரமான நாட்டவருடனும் என்றென்றும் சமாதானமாகவே சென்றார்கள்; செல்லும் வழியை காட்டினார்கள்.
ஹூதைபிய்யா நிகழ்ச்சியின் போது நபி (ஸல்) அவர்கள் மக்கா நாட்டவர்களான இணை வைப்பவர்களுடன் மூன்று நிபந்தனைகளின் பேரில் போர் தடுப்பு நடவடிக்கை எனும் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள்.
அவை: 1) மக்காவிலிருந்து மதீனாவுக்கு வருபவரை அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாலும் கூட அவரை எங்களிடமே திருப்பியனுப்ப வேண்டும். மதீனாவிலிருந்து மக்காவிற்கு வரும் முஸ்லிம்களை நாங்கள் திருப்பியனுப்பமாட்டோம்.
2) இந்த ஆண்டு ‘உம்ரா’ செய்யக்கூடாது. அடுத்த ஆண்டு ‘உம்ரா’ செய்ய மக்காவினுள் நுழைந்து, மூன்று நாட்கள் தங்கலாம்.
3) வாள், வில் போன்ற ஆயுதங்களை உறையிலிட்டுக் கொண்டு தான் மக்காவினுள் நுழைய வேண்டும்.
இந்த ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தும் நபியவர்கள் இதற்கு இசைவு தெரிவித்த காரணத்தினால்தான் மக்காவில் புனித இஸ்லாம் பரவ இந்த சமாதான நடவடிக்கை காரணமாக அமைந்திருந்தது. வணக்கத்தை விட இணக்கமாக செல்வதுதான் சிறந்தது என இஸ்லாம் சமாதான சிந்தனைகளை விதைக்கிறது.
இதுகுறித்த நபிமொழி வருமாறு:
‘‘நோன்பின் அந்தஸ்தைவிட, தொழுகையின் படித்தரத்தைவிட, தானதர்மத்தின் மேன்மையை விட சிறந்த ஒரு செயலை நான் உங்களுக்கு கூறட்டுமா?’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘ஆம், கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே’ என நபித்தோழர்கள் பதில் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘உங்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவது. உங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது மார்க்கத்தை சிதைத்து விடும்’ (அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி), நூல்: தர்கீப்)
ஜாதிமதக் கலவரம் இல்லாத, உலகப் போர் இல்லாத, இனவெறி, நிறவெறி, மொழிவெறி, மதவெறி, ஜாதிவெறி இல்லாத சமத்துவ உலகை படைக்க உறுதியான நடவடிக்கை சமாதான நடவடிக்கை மட்டுமே.
சமாதான நெறிகள் உலகை ஆளட்டும்,
சமூக, சமுதாய, சமய வெறிகள் வீழட்டும்,
வீழ்வது வெறிகளாகட்டும், வாழ்வது நாமாகட்டும்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
எது சிறந்த பேச்சு?
பிளவுபட்ட இருநபர்களுக்கிடையில், பிரிந்து சென்ற கணவன்-மனைவிக்கிடையில், ரெண்டுபட்ட ஊர் மக்களுக் கிடையில், மோதல் ஏற்பட்ட இரு பிரிவினருக்கிடையில், கல வரத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு சமூகங்களுக்கிடையில், போரில் ஈடுபடும் இரண்டு நாடுகளுக்கிடையில் சமாதானமாக பேச்சுவார்த்தை நடத்தி, சமரச உடன்பாடு ஏற்படும் வரை சுமுகத்தீர்வு காண்பதுதான் பேச்சுக்களிலேயே சிறந்த பேச்சாக மதிப்பீடு செய்யப்படுகிறது.
சமாதானம்
இத்தகைய சமாதான நடவடிக்கைகளை இறைவன் வெகுவாக பாராட்டி மகிழ்கிறான். இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘(நபியே) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் ஏவியவரைத் தவிர, அவர்களின் ரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்தவிதமான நலமும் இல்லை; ஆகவே எவர் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி இதைச்செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்’ (திருக்குர்ஆன் 4:114).
இரண்டு நபர்களுக்கிடையில் உறவில் விரிசல் ஏற்பட்டால், அந்த விரிசலை பூதாகரமாக்கக் கூடாது. இருவருக்கிடையில் சமாதானத்தை நிலவச்செய்ய வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. இதையே திருக்குர்ஆன் இவ்வாறு விளக்குகிறது:
‘இறைவனை அஞ்சுங்கள், உங்களுக்கிடையே உள்ள உறவு களைச் சீர்படுத்திக் கொள்ளுங்கள்’ (திருக்குர்ஆன் 8:1).
ஒரு குடும்பத்தில் பிரச்சினை என்று வரும்போது அவர்கள் அழைக்காமலேயே ஒருவர் சமாதானம் ஏற்படுத்த செல்வது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாக உள்ளது. இதை இந்த நபிமொழி மூலம் அறியலாம்:
‘அம்ர் பின் அவ்ப் குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்குள் ஏதோ தகராறு இருந்து வந்தது. எனவே அவர்களிடையே சமாதானம் செய்து வைப்பதற்காக அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் சிலருடன் சென்றார்கள்’ (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரி)
தடை கூடாது
நன்மைபுரிய, இறைவனை அஞ்ச, மக்களிடையே சமா தானத்தை ஏற்படுத்த எதுவும் தடையாக இருக்கக்கூடாது. நாமும் நமக்கு நாமே தடையையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதை இந்த திருக்குர்ஆன் வசனம் மூலம் அறியலாம்:
‘நன்மை செய்வதற்கும், (இறைவனை) அஞ்சுவதற்கும், மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் உங்கள் சத்தியங்கள் மூலம் இறைவனை ஒரு தடையாக ஆக்காதீர்கள். இறைவன் செவியுறுபவன்; அறிந்தவன்’ (திருக்குர்ஆன் 2:224).
இரண்டு குழுவினருக்கிடையில் சண்டையிட நேர்ந்தால் சமாதானம் ஏற்படுத்த வேண்டும் என்பதை பின்வரும் நிகழ்வு மூலம் அறியலாம்:
‘நபி (ஸல்) அவர்களிடம், ‘தாங்கள் அப்துல்லாஹ்பின் உபையிடம் வந்தால் நன்றாக இருக்கும்’ என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். நபிகளுடன் மற்றவர்களும் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அவனை நபியவர்கள் அடைந்த போது அவன் ‘தூர விலகிப் போ, இறைவனின் மீதாணையாக, உமது கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்திவிட்டது’ என்று கூறினான்.
அப்போது ஒரு அன்சாரித் தோழர் ‘இறைவனின் மீதாணை, இறைவனின் தூதருடைய கழுதை உன்னைவிட நல்ல வாசனையுடையதாகும்’ என்றார்.
அப்துல்லாஹ்வுக்காக அவனது சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரித் தோழரை ஏசினார். அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபம் அடைந்து, தங்களுக்கிடையே ஈச்சங்கிளையின் குச்சியாலும், கைகளாலும் அடித்துக்கொண்டார்கள். அப்போது இரண்டு குழுவினருக்கிடையே சமாதானம் செய்து வையுங்கள் என்று பின்வரும் இறைவசனம் அருளப்பட்டது.
‘நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால், அவர்களுக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்துங்கள். அவர்களில் ஒருவர் மற்றொருவரின் மீது வரம்பு மீறினால், வரம்பு மீறிய கூட்டம் இறைவனின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அவர்களை எதிர்த்துச் சண்டையிடுங்கள். அக்கூட்டத்தினர் திருந்தினால் நீதியான முறையில் இரு குழுவினருக்கிடையே சமா தானத்தை ஏற்படுத்துங்கள். நீதி செலுத்துங்கள், நீதி செலுத்துவோரை இறைவன் விரும்பு கிறான்’ (திருக்குர்ஆன் 49:9).
கணவன்-மனைவி
கணவன்-மனைவிக்கிடையே சமாதானம் ஏற்படுத்துவது குறித்த இறைவசனம் வருமாறு:
“ஒரு பெண், தன் கணவன் (தன்னை வெறுத்து) முகம் சுளிப்பான் என்றோ, (தன்னைப்) புறக்கணிப்பான் என்றோ அஞ்சினால், அவள் சமாதானமாக செல்லவேண்டும். கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து தங்களுக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை. மேலும், சமாதானம் செய்து கொள்வதே நன்மையானதாகும்” (திருக்குர்ஆன் 4:128).
சமாதானம் என்பது பலவிதமான பிரச்சினைகளையும், பலவிதமான சிக்கல்களையும் தீர்த்து வைக்கும் ஒரு கேடயமாக விளங்குகிறது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சமா தானத்தில்தான் அமைந்துள்ளது. எனவேதான் இஸ்லாம் சமா தானத்தை இறைநம்பிக்கையுடன் பொருத்திப் பார்க்கிறது.
சமாதானம் ஏற்படுத்துவது சாதாரணமானது அல்ல. அது சாதுர்யமாக, சாமர்த்தியமாக, சாந்தமாக, சமயோசிதமாக நடப்பவர்களின் கைகளில் உள்ளது. அவர்களின் வார்த்தைகளில், அவர்களின் செயல்பாடு களில், அவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போக்கில்தான் உள்ளது.
ஆதலால்தான் இஸ்லாம் சமாதானம் பேசுவதை உடல் சார்ந்த இறைநம்பிக்கையாக பாவிக்கிறது. இஸ்லாம் என்றால் சாந்தி, சமாதானம் என்று பொருள். முஸ்லிம்கள் என்றால் சாந்தமானவர்கள், சமாதானமாக செல்லக்கூடியவர்கள் என்று அர்த்தம். இது பெயரளவில் மட்டும் பிரதி பலிக்கக் கூடாது. செயலிலும் எதிரொலிக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் பொருளாதார பிரச்சினையில், ஜாதி, மத பிரச்சினையில், அரசியலில், ராணுவ நடவடிக்கையில், சமூக ஒற்றுமையில் சமாதானம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக சமாதானத்தின் தூதுவராக இஸ்லாம் திகழ்கிறது. அதன் தூதராக முஹம்மது நபி (ஸல்) திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அண்டை நாட்டவருடனும், தூரமான நாட்டவருடனும் என்றென்றும் சமாதானமாகவே சென்றார்கள்; செல்லும் வழியை காட்டினார்கள்.
ஹூதைபிய்யா நிகழ்ச்சியின் போது நபி (ஸல்) அவர்கள் மக்கா நாட்டவர்களான இணை வைப்பவர்களுடன் மூன்று நிபந்தனைகளின் பேரில் போர் தடுப்பு நடவடிக்கை எனும் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள்.
அவை: 1) மக்காவிலிருந்து மதீனாவுக்கு வருபவரை அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாலும் கூட அவரை எங்களிடமே திருப்பியனுப்ப வேண்டும். மதீனாவிலிருந்து மக்காவிற்கு வரும் முஸ்லிம்களை நாங்கள் திருப்பியனுப்பமாட்டோம்.
2) இந்த ஆண்டு ‘உம்ரா’ செய்யக்கூடாது. அடுத்த ஆண்டு ‘உம்ரா’ செய்ய மக்காவினுள் நுழைந்து, மூன்று நாட்கள் தங்கலாம்.
3) வாள், வில் போன்ற ஆயுதங்களை உறையிலிட்டுக் கொண்டு தான் மக்காவினுள் நுழைய வேண்டும்.
இந்த ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தும் நபியவர்கள் இதற்கு இசைவு தெரிவித்த காரணத்தினால்தான் மக்காவில் புனித இஸ்லாம் பரவ இந்த சமாதான நடவடிக்கை காரணமாக அமைந்திருந்தது. வணக்கத்தை விட இணக்கமாக செல்வதுதான் சிறந்தது என இஸ்லாம் சமாதான சிந்தனைகளை விதைக்கிறது.
இதுகுறித்த நபிமொழி வருமாறு:
‘‘நோன்பின் அந்தஸ்தைவிட, தொழுகையின் படித்தரத்தைவிட, தானதர்மத்தின் மேன்மையை விட சிறந்த ஒரு செயலை நான் உங்களுக்கு கூறட்டுமா?’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘ஆம், கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே’ என நபித்தோழர்கள் பதில் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘உங்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவது. உங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது மார்க்கத்தை சிதைத்து விடும்’ (அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி), நூல்: தர்கீப்)
ஜாதிமதக் கலவரம் இல்லாத, உலகப் போர் இல்லாத, இனவெறி, நிறவெறி, மொழிவெறி, மதவெறி, ஜாதிவெறி இல்லாத சமத்துவ உலகை படைக்க உறுதியான நடவடிக்கை சமாதான நடவடிக்கை மட்டுமே.
சமாதான நெறிகள் உலகை ஆளட்டும்,
சமூக, சமுதாய, சமய வெறிகள் வீழட்டும்,
வீழ்வது வெறிகளாகட்டும், வாழ்வது நாமாகட்டும்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
ஒரு முஸ்லிம் அண்டை வீட்டாருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து இஸ்லாம் மிகச்சிறப்பான முறையில் வழிகாட்டுகிறது.
அண்டை வீட்டாருடன் ஏற்படும் தகராறுகளின் தொடக்கப்புள்ளி அனேகமாக சின்னச்சின்ன விவகாரங்களாகவே இருக்கும்.
‘என் வீட்டு மதில் சுவரில் அவன் மரத்தை சாய்த்து வைத்திருக்கின்றான்’, ‘என் வீட்டுக்கு வெளிச்சமும் காற்றும் வரவிடாமல் தடுத்துவிட்டான்’, ‘எங்கள் வீட்டுக்கு முன்னால் வண்டியை நிறுத்தி வைத்திருக்கின்றான்’ - அண்டை வீட்டாருடனான பெரும் சண்டைக்கு இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள்தான் காரணங்களாக இருக்கும்.
சரி, இவற்றை எவ்வாறு சரி செய்வது?, இதற்கான தீர்வுதான் என்ன?
ஒரு முஸ்லிம் அண்டை வீட்டாருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து இஸ்லாம் மிகச்சிறப்பான முறையில் வழிகாட்டுகிறது.
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்: ‘ஒருவருடைய மதில் சுவர் மீது அண்டை வீட்டுக்காரர் ஒரு மரத்துண்டை நட்டுவைத்தால், மதில் சுவருக்கு அது தீங்கு ஏற்படுத்தவில்லை என்றால், அதனைத் தடுப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்’. (மாலிக்)
இந்த நபிமொழியின் பொருள் குறித்து; அண்டைவீட்டுக்காரர் மரம் நட்டுவைக்க வசதி ஏற்படுத்திக் கொடுப்பது நன்மையான செயல் என்பதா?, அல்லது அவ்வாறு செய்வது கட்டாயக் கடமையா? என்று விவாதம் செய்யும் அளவுக்கு இது குறித்து அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்: ‘‘ஒருவர், தமது (வீட்டுச்) சுவரில், தம் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை (சாரம்) பதிப்பதைத் தடுக்க வேண்டாம்’’. (புகாரி, முஸ்லிம்)
இரு வீடுகளுக்கிடையே உள்ள சுவர் பொதுச்சுவராக இருக்கலாம். அதைப் பயன்படுத்தும் உரிமை இரு வீட்டாருக்கும் சமமாக உண்டு என்பது தெளிவு. இடைச் சுவர் ஒருவருக்கு மட்டும் உரியதாக இருப்பின், மற்றவரும் அதைப் பயன்படுத்திக்கொள்ள, மரக்கட்டை, உத்திரம் போன்றவற்றை சுவரில் சாய்த்து வைக்க அல்லது பதிக்க அனுமதிப்பதில், உரிமையாளர் பெருந்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும் என இந்த நபிமொழி வலியுறுத்துகிறது.
நமது வீட்டு மதில் சுவரை அண்டை வீட்டாருக்குக் கொஞ்சம் இரவலாகக் கொடுப்பதால் என்ன குறைந்துவிடப் போகிறது?
‘இருக்க இடம் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கும் காலம் இது’ என்பதெல்லாம் சாக்குப் போக்குகள்தான். உண்மையில் இஸ்லாம் காட்டும் இந்த வழிமுறை மிக உன்னதமான சமூகத்தை கட்டியெழுப்பும் உயரிய வழிமுறை ஆகும்.
இரவல் கொடுப்பவருக்கு இழப்பு ஏற்படாத அதேவேளை வாங்குபவருக்கு பயன் மிக்கதுமான அனைத்தும் இந்த நபிமொழியில் அடங்கும். இதுபோன்ற இரவல்களைத் தடுப்பது அனுமதிக்கப்பட்டதல்ல. உரிமையாளர் அவ்வாறு தடுப்பதாக இருந்தால், அது குறித்து நீதிமன்றம் விசாரிக்கலாம் என்றும் இஸ்லாம் கூறியுள்ளது.
தம்முடைய தோட்டத்தினூடாக நடந்து செல்ல பிறரை அனுமதித்தல், தம்முடைய தோட்டத்தினூடாக அடுத்தவர் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச அனுமதித்தல் போன்றவை இஸ்லாம் வலியுறுத்தும் உன்னதச் செயல்கள் ஆகும். இந்தச் சின்னச்சின்ன உதவி, ஒத்தாசைகளைக் கூட செய்யாவிட்டால் மனிதன் என்று சொல்லிக் கொள்வதில் என்ன மகத்துவம் இருக்க முடியும்?
ழஹ்ஹாக் பின் கைஸ் (ரலி) அவர்கள், அரீள் என்ற இடத்தில் இருந்து ஓர் நீரோடையைத் தோண்டி, அதனை முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்களுடைய நிலத்தினூடாகக் கொண்டுவர நாடினார். மஸ்லமா (ரலி) அதனைத் தடுத்தார். அப்போது ழஹ்ஹாக் (ரலி) அவரிடம் கேட்டார்: ‘‘அது உங்களுக்கும் நன்மை பயக்கும் செயல்தானே... பின்னர் ஏன் நீங்கள் தடுக்கின்றீர்கள்?. முதாலவதாகவும் கடைசியாகவும் நீங்கள்தானே அதிலிருந்து பயனடைவீர்கள்?. அதன் மூலம் உங்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படப்போவதும் இல்லையே’’.
ஆயினும் மஸ்லமா (ரலி) சம்மதிக்கவில்லை.
ஆகவே ழஹ்ஹாக் (ரலி), உமர் (ரலி) அவர்களிடம் இது குறித்து முறையிட்டார்.
மஸ்லமா (ரலி) அவர்களை அழைத்து, நீரோடைக்கான தடையை நீக்கி வழி ஏற்படுத்திக் கொடுக்குமாறு உமர் (ரலி) உத்தரவு பிறப்பித்தார்.
அப்போதும் மஸ்லமா (ரலி), ‘‘முடியாது’’ என்று கூறினார்.
அதனைச் செவியுற்ற உமர் (ரலி) கூறினார்: ‘‘அல்லாஹ்வின் மீது ஆணை! அந்த நீரோடையை நான் தோண்டத்தான் செய்வேன். அது உமது வயிற்றுக்கு மேலாகச் செல்வதாக இருந்தாலும் சரியே’’.
பின்னர் அவருடைய நிலத்தினூடாக தோண்டுமாறு உமர் (ரலி) உத்தரவு பிறப்பித்தார். ழஹ்ஹாக் (ரலி) அவ்வாறே செய்தார். (மாலிக்)
மறுமை வாழ்வின் மீது உண்மையாக நம்பிக்கை வைத்திருக்கும் மனிதனின் நடத்தையையும், ஏனோதானோ என்று நம்பிக்கை வைத்திருக்கும் மனிதனின் நடத்தையையும் அன்றாடச் செயல்கள் மூலம் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
ஆம், மறுமை மீது நம்பிக்கை கொண்டவன் அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்துகொள்வான். சின்னச்சின்ன இடைஞ்சல்களை சகித்துக்கொள்வான். மேலே கூறப்பட்ட பெருமானாரின் நபிமொழியை ஒருபோதும் மறக்க மாட்டான்.
தொழுகை போன்ற உன்னத வழிபாடுகள் எதற்காக கடமையாக்கப்பட்டுள்ளது? வெறுமனே ஐந்து வேளையும் குனிந்து நிமிர்வதற்காகவா?, அல்ல. மாறாக அதன் மூலம் சமூகத்தில் நல்ல பிரதிபலன்கள் ஏற்பட வேண்டும் என்பதற்காக. அவற்றுள் ஒன்றுதான் அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடப்பது. இல்லையேல் அந்தத் தொழுகையாளிக்குக் கேடுதான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
‘‘மேலும் கேடுதான், தொழுகையாளிகளுக்கு! அவர்கள் தம் தொழுகையில் அலட்சியமாய் இருக்கிறார்கள். அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகவே செயல்படுகின்றார்கள். மேலும், சாதாரணத் தேவைகளுக்கான பொருட்களைக் கூட (மக்களுக்குக்) கொடுத்து உதவுவதைத் தடுக்கின்றார்கள்’’ (திருக்குர்ஆன் 107:4-7)
அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களைக்கூட அண்டை வீட்டாருக்குக் கொடுத்து உதவாதவனுடைய தொழுகையை, மறுமையில் அல்லாஹ் அவனது முகத்திலேயே வீசி எறிந்துவிடுவான். ஆகவேதான் தொழுகையாளிகளுக்குக் கேடு என்று இங்கே கூறப்படுகிறது.
மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
‘என் வீட்டு மதில் சுவரில் அவன் மரத்தை சாய்த்து வைத்திருக்கின்றான்’, ‘என் வீட்டுக்கு வெளிச்சமும் காற்றும் வரவிடாமல் தடுத்துவிட்டான்’, ‘எங்கள் வீட்டுக்கு முன்னால் வண்டியை நிறுத்தி வைத்திருக்கின்றான்’ - அண்டை வீட்டாருடனான பெரும் சண்டைக்கு இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள்தான் காரணங்களாக இருக்கும்.
சரி, இவற்றை எவ்வாறு சரி செய்வது?, இதற்கான தீர்வுதான் என்ன?
ஒரு முஸ்லிம் அண்டை வீட்டாருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து இஸ்லாம் மிகச்சிறப்பான முறையில் வழிகாட்டுகிறது.
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்: ‘ஒருவருடைய மதில் சுவர் மீது அண்டை வீட்டுக்காரர் ஒரு மரத்துண்டை நட்டுவைத்தால், மதில் சுவருக்கு அது தீங்கு ஏற்படுத்தவில்லை என்றால், அதனைத் தடுப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்’. (மாலிக்)
இந்த நபிமொழியின் பொருள் குறித்து; அண்டைவீட்டுக்காரர் மரம் நட்டுவைக்க வசதி ஏற்படுத்திக் கொடுப்பது நன்மையான செயல் என்பதா?, அல்லது அவ்வாறு செய்வது கட்டாயக் கடமையா? என்று விவாதம் செய்யும் அளவுக்கு இது குறித்து அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்: ‘‘ஒருவர், தமது (வீட்டுச்) சுவரில், தம் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை (சாரம்) பதிப்பதைத் தடுக்க வேண்டாம்’’. (புகாரி, முஸ்லிம்)
இரு வீடுகளுக்கிடையே உள்ள சுவர் பொதுச்சுவராக இருக்கலாம். அதைப் பயன்படுத்தும் உரிமை இரு வீட்டாருக்கும் சமமாக உண்டு என்பது தெளிவு. இடைச் சுவர் ஒருவருக்கு மட்டும் உரியதாக இருப்பின், மற்றவரும் அதைப் பயன்படுத்திக்கொள்ள, மரக்கட்டை, உத்திரம் போன்றவற்றை சுவரில் சாய்த்து வைக்க அல்லது பதிக்க அனுமதிப்பதில், உரிமையாளர் பெருந்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும் என இந்த நபிமொழி வலியுறுத்துகிறது.
நமது வீட்டு மதில் சுவரை அண்டை வீட்டாருக்குக் கொஞ்சம் இரவலாகக் கொடுப்பதால் என்ன குறைந்துவிடப் போகிறது?
‘இருக்க இடம் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கும் காலம் இது’ என்பதெல்லாம் சாக்குப் போக்குகள்தான். உண்மையில் இஸ்லாம் காட்டும் இந்த வழிமுறை மிக உன்னதமான சமூகத்தை கட்டியெழுப்பும் உயரிய வழிமுறை ஆகும்.
இரவல் கொடுப்பவருக்கு இழப்பு ஏற்படாத அதேவேளை வாங்குபவருக்கு பயன் மிக்கதுமான அனைத்தும் இந்த நபிமொழியில் அடங்கும். இதுபோன்ற இரவல்களைத் தடுப்பது அனுமதிக்கப்பட்டதல்ல. உரிமையாளர் அவ்வாறு தடுப்பதாக இருந்தால், அது குறித்து நீதிமன்றம் விசாரிக்கலாம் என்றும் இஸ்லாம் கூறியுள்ளது.
தம்முடைய தோட்டத்தினூடாக நடந்து செல்ல பிறரை அனுமதித்தல், தம்முடைய தோட்டத்தினூடாக அடுத்தவர் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச அனுமதித்தல் போன்றவை இஸ்லாம் வலியுறுத்தும் உன்னதச் செயல்கள் ஆகும். இந்தச் சின்னச்சின்ன உதவி, ஒத்தாசைகளைக் கூட செய்யாவிட்டால் மனிதன் என்று சொல்லிக் கொள்வதில் என்ன மகத்துவம் இருக்க முடியும்?
ழஹ்ஹாக் பின் கைஸ் (ரலி) அவர்கள், அரீள் என்ற இடத்தில் இருந்து ஓர் நீரோடையைத் தோண்டி, அதனை முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்களுடைய நிலத்தினூடாகக் கொண்டுவர நாடினார். மஸ்லமா (ரலி) அதனைத் தடுத்தார். அப்போது ழஹ்ஹாக் (ரலி) அவரிடம் கேட்டார்: ‘‘அது உங்களுக்கும் நன்மை பயக்கும் செயல்தானே... பின்னர் ஏன் நீங்கள் தடுக்கின்றீர்கள்?. முதாலவதாகவும் கடைசியாகவும் நீங்கள்தானே அதிலிருந்து பயனடைவீர்கள்?. அதன் மூலம் உங்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படப்போவதும் இல்லையே’’.
ஆயினும் மஸ்லமா (ரலி) சம்மதிக்கவில்லை.
ஆகவே ழஹ்ஹாக் (ரலி), உமர் (ரலி) அவர்களிடம் இது குறித்து முறையிட்டார்.
மஸ்லமா (ரலி) அவர்களை அழைத்து, நீரோடைக்கான தடையை நீக்கி வழி ஏற்படுத்திக் கொடுக்குமாறு உமர் (ரலி) உத்தரவு பிறப்பித்தார்.
அப்போதும் மஸ்லமா (ரலி), ‘‘முடியாது’’ என்று கூறினார்.
அதனைச் செவியுற்ற உமர் (ரலி) கூறினார்: ‘‘அல்லாஹ்வின் மீது ஆணை! அந்த நீரோடையை நான் தோண்டத்தான் செய்வேன். அது உமது வயிற்றுக்கு மேலாகச் செல்வதாக இருந்தாலும் சரியே’’.
பின்னர் அவருடைய நிலத்தினூடாக தோண்டுமாறு உமர் (ரலி) உத்தரவு பிறப்பித்தார். ழஹ்ஹாக் (ரலி) அவ்வாறே செய்தார். (மாலிக்)
மறுமை வாழ்வின் மீது உண்மையாக நம்பிக்கை வைத்திருக்கும் மனிதனின் நடத்தையையும், ஏனோதானோ என்று நம்பிக்கை வைத்திருக்கும் மனிதனின் நடத்தையையும் அன்றாடச் செயல்கள் மூலம் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
ஆம், மறுமை மீது நம்பிக்கை கொண்டவன் அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்துகொள்வான். சின்னச்சின்ன இடைஞ்சல்களை சகித்துக்கொள்வான். மேலே கூறப்பட்ட பெருமானாரின் நபிமொழியை ஒருபோதும் மறக்க மாட்டான்.
தொழுகை போன்ற உன்னத வழிபாடுகள் எதற்காக கடமையாக்கப்பட்டுள்ளது? வெறுமனே ஐந்து வேளையும் குனிந்து நிமிர்வதற்காகவா?, அல்ல. மாறாக அதன் மூலம் சமூகத்தில் நல்ல பிரதிபலன்கள் ஏற்பட வேண்டும் என்பதற்காக. அவற்றுள் ஒன்றுதான் அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடப்பது. இல்லையேல் அந்தத் தொழுகையாளிக்குக் கேடுதான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
‘‘மேலும் கேடுதான், தொழுகையாளிகளுக்கு! அவர்கள் தம் தொழுகையில் அலட்சியமாய் இருக்கிறார்கள். அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகவே செயல்படுகின்றார்கள். மேலும், சாதாரணத் தேவைகளுக்கான பொருட்களைக் கூட (மக்களுக்குக்) கொடுத்து உதவுவதைத் தடுக்கின்றார்கள்’’ (திருக்குர்ஆன் 107:4-7)
அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களைக்கூட அண்டை வீட்டாருக்குக் கொடுத்து உதவாதவனுடைய தொழுகையை, மறுமையில் அல்லாஹ் அவனது முகத்திலேயே வீசி எறிந்துவிடுவான். ஆகவேதான் தொழுகையாளிகளுக்குக் கேடு என்று இங்கே கூறப்படுகிறது.
மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
‘ஹஜ் செய்வது முந்திய பாவங்கள் அனைத்தையும் அது அழித்து விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘புனிதா உம்ரா, ஹஜ் பயணம் மேற்கொள்வது’ குறித்த தகவல்களை காண்போம்.
புனித உம்ரா பயணமும், புனித ஹஜ் பயணமும் இறைநம்பிக்கை சார்ந்த உடல் ரீதியான பயணம் ஆகும். இந்த பயணங்களில் உடல்சார்ந்த இறைநம்பிக்கை அனைத்து வழிபாடுகளிலும் பிரகாசிக்கிறது.
இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் மூன்று விதமாக அமைந்துள்ளது. 1) உடல் சார்ந்தது, 2) பொருள் சார்ந்தது, 3) உடலும், பொருளும் சார்ந்தது.
உடல் சார்ந்த இறைவணக்கம் மற்றும் இறைநம்பிக்கையாக தொழுகை அமைந்துள்ளது. பொருள் சார்ந்த இறைவணக்கமும், இறைநம்பிக்கையும், ‘ஸதகா’ எனும் தர்மநிதியும், ‘ஸகாத்’ எனும் கடமையான ஏழைவரியும் ஆகும். மேலும், ‘ஸதகத்துல் பித்ர்’ எனும் நோன்புப் பெருநாள் தர்மமும், அழகிய கடனும், குடும்பத்தினருக்கு செய்யப்படும் செலவும், தமது சொத்துக்களை இறைவனுக்காக ‘வக்பு’ எனும் நிலையான தர்மமாக அர்ப்பணிப்பதும், கல்வி நிதியுதவியும், மருத்துவ நிதியுதவியும் பொருள் சார்ந்த இறைவணக்கம் ஆகும்.
உடலும், பொருளும் சார்ந்த இறைவணக்கமும், இறைநம்பிக்கையும் யாதெனில் புனித உம்ரா பயணமும், புனித ஹஜ் பயணமும் ஆகும். இது குறித்து இறைவன் தரும் விளக்கத்தை இறைமறையாம் திருக்குர்ஆனில் பார்ப்போம்:
‘இன்னும் இறைவனுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது அதன் பால் சென்று வர சக்தி பெற்றவர் மீது கடமையாகும்’. (திருக்குர்ஆன் 3:97)
புனித மக்கா சென்று இஸ்லாம் கூறும் சில வணக்க வழிபாடுகள் செய்வதற்கு ‘உம்ரா’ என்றும், ‘ஹஜ்’ என்றும் கூறப்படுகிறது. உடல் பலமும், பொருள் வளமும் தன்னிறைவு பெற்ற இஸ்லாமியர்கள் தங்களின் வாழ்நாளில் ஒரு தடவையாவது ஹஜ் செய்வது கட்டாயக் கடமையாகும். உம்ராவை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் நிறைவேற்றலாம்.
‘ஹஜ்ஜையும், உம்ராவையும் இறைவனுக்காக சம்பூரணமாக நிறைவேற்றுங்கள்’ என்று திருக்குர்ஆன் (2:196) குறிப்பிடுகிறது.
‘உம்ரா’
‘உம்ரா’ என்றால் ‘தரிசனம் செய்வது’ என்று பொருள். புனித கஅபாவை தரிசனம் செய்வதற்கு உம்ரா என்று கூறப்படும். இந்த தரிசனம் ஆண்டு முழுவதும் செய்யலாம். இந்த தரிசனத்திற்கு குறிப்பிட்ட மாதங்கள் என்பதெ
ுச் சென்று குறிப்பிட்ட சில வணக்கங்களை நிறைவேற்றுவது ‘ஹஜ் பயணம்’ என்று சொல்லப்படும்.
ஆண்டு முழுவதும் நினைத்த போதெல்லாம் ஹஜ் செய்ய முடியாது. அதற்கென்று குறிப்பிட்ட சில மாதங்கள் உண்டு. அந்த மாதங்களில்தான் ஹஜ் செய்ய முடியும். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிட்ட மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் புரிவதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை இறைவன் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள். திரட்டிக்கொள்ள வேண்டியவற்றில் இறையச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே, என்னை அஞ்சுங்கள்’. (திருக்குர்ஆன் 2:197)
அது என்ன மாதங்கள்? என்ற விவரம் இந்த நபிமொழியில் வருகிறது.
‘ஹஜ்ஜின் மாதங்கள் ஷவ்வால் மாதம், துல்கஅதா மாதம், துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள் என இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள்’. (நூல்: புகாரி). இவை அரபி மாதங்களில் 10 மற்றும் 11, 12-வது மாதங்களாகும்.
ஹஜ் கடமையை நிறைவேற்ற உடல் வலிமையும், உடல் ஆரோக்கியமும் அவசியம் தேவை. மேலும், தமது கடனை நிறைவேற்றி விட்டு, 70 நாட்கள் குடும்பத்தினருக்குத் தேவையான நிதி ஆதாரத்தை வைத்து விட்டு, தமது உணவிற்கும், வாகனத்திற்கும், பயணச் செலவிற்கும் தேவையான நிதியைக் கொண்டு ஹஜ் செய்ய வேண்டும்.
ஹஜ் காலத்தில் ஹஜ் செய்பவர்கள் முதலில் உம்ராவை நிறைவேற்றுவார்கள். பிறகு ‘இஹ்ராம்’ எனும் வெள்ளாடைகளை களைந்துவிடுவார்கள். பிறகு துல்ஹஜ் 7-ம் நாள் ஹஜ்ஜுக்கென்று மக்காவிலிருந்து தனியாக ‘இஹ்ராம்’ எனும் வெள்ளாடைகளை கட்ட வேண்டும். துல்ஹஜ் 8-ம் நாள் காலையில் அதிகாலை தொழுகைக்குப்பின் ‘மினா’விற்குச் சென்று அன்றைய நாளின் தொழுகைகளை தொழுது விட்டு, அன்று இரவு அங்கே தங்கிட வேண்டும். துல்ஹஜ் 9-ம் நாள் காலையில் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றிட வேண்டும். சூரியன் உதயமான பிறகு அங்கிருந்து ‘அரபா’ மைதானத்திற்குச் சென்று கூடாரங்களில் தங்கவேண்டும் அரபாவில் தங்குவது கட்டாயம். அது இல்லாமல் ஹஜ் நிறைவேறாது. துல்ஹஜ் 9-ம் நாள் மாலை சூரியன் மறைந்தவுடன் ‘முஸ்தலிபா’ எனும் இடம் நோக்கி நடந்து சென்று, அன்றைய சூரிய அஸ்தமனத் தொழுகையையும், இரவு நேரத் தொழுகையையும் சேர்த்து தொழ வேண்டும். பிறகு அங்கேயே இரவு தங்கிட வேண்டும். துல்ஹஜ் 10-ம் நாள் அதிகாலை சூரியன் உதயமாகும் முன்பாக திரும்பவும் ‘மினா’ எனும் இடத்திற்கு வந்து, ‘ஜம்ரதுல்அகபா’ எனும் பெரிய சாத்தானின் தூணை நோக்கி ஏழு சிறிய கற்களை எறிய வேண்டும்.
பிறகு ‘உள்ஹிய்யா’ எனும் குர்பானியை நிறைவேற்ற வேண்டும். பிறகு தலைமுடிகளை முழுவதும் களைய வேண்டும். பிறகு மினாவிலிருந்து மக்காவுக்கு வந்து, புனித கஅபாவை 7 தடவை வலம் வரவேண்டும். இந்த வலம் வருதல் ஹஜ்ஜின் கடமைகளில் இதுவும் ஒன்று.
பிறகு ஸபா, மர்வா ஆகிய சிறு குன்றுகளுக்குஇடையே ஏழு தடவை விரைவாக நடக்க வேண்டும். இது முடிந்த பிறகு இஹ்ராமுடைய ஆடையை களைந்துவிட வேண்டும். அன்றைய இரவில் மினா சென்று அங்கே தங்கிட வேண்டும். துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களும் மினாவில் தங்கி சிறிய சைத்தான், நடு சைத்தான், பெரிய சைத்தான் ஆகிய மூன்று சைத்தான்களின் தூண்களில் ஒரு சைத்தானுக்கு 7 கற்கள் வீதம் மூன்றுக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 21 கற்கள் எறிய வேண்டும். இவ்வாறாக மூன்று நாட்கள் 63 கற்கள் எறிய வேண்டும். இதுவரைக்கும் தான் ஹஜ்ஜின் கிரியைகள். இத்துடன் ஹஜ் நிறைவு பெற்றுவிடும்
பிறகு மக்காவிலிருந்து தாயகம் திரும்ப நாடினால் இறுதியாக ‘தவாபுல்விதா’ புனித கஅபாவுக்கு பிரியாவிடை கொடுக்கும் முகமாக ஏழு தடவை கஅபாவை வலம் வரவேண்டும். மேற்கூறப்பட்ட ஹஜ்ஜின் கிரியைகளில் அதிக வேலை உடலுக்குத்தான், உடலுறுப்புகளுக்குத்தான். இந்த உடலுழைப்பிற்கு இறைவன் கொடுக்கும் சன்மானம் அந்த உடலை நரகம் தீண்டாது; அந்த உறுப்புகள் பாவ அழுக்குகளை சுமக்காது. ஹாஜிகள் அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புகிறார்கள்.
இதுகுறித்த நபிமொழிகள் வருமாறு:
‘பாவச்செயல் கலந்திடாத ஹஜ்ஜின் கூலி சுவனம் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்)
‘ஹஜ் செய்வது முந்திய பாவங்கள் அனைத்தையும் அது அழித்து விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)
‘ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் இறைவனின் தூதுக்குழுவினர் ஆவர். இறைவனிடம் அவர்கள் பிரார்த்தித்தால் அதை அவன் ஏற்றுக்கொள்கிறான்; இறைவனிடம் அவர்கள் பாவமன்னிப்புக் கோரினால் அவன் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயீ, இப்னுமாஜா)
இத்தகைய சிறப்புகளை தன்னுள் புதையலாக புதைந்துள்ள சிறப்பான ஒரு செயல்தான் புனித ஹஜ். இந்த ஹஜ் வாழ்நாளில் ஒரே தடவை செய்தால் போதும். நபி (ஸல்) அவர்களும் தமது வாழ்நாளில் ஒரே ஒரு ஹஜ் மட்டும் செய்து, உலக முஸ்லிம்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்துள்ளார்கள்.
புனித உம்ரா பயணமும், புனித ஹஜ் பயணமும் இறைநம்பிக்கை சார்ந்த உடல் ரீதியான பயணம் ஆகும். இந்த பயணங்களில் உடல்சார்ந்த இறைநம்பிக்கை அனைத்து வழிபாடுகளிலும் பிரகாசிக்கிறது.
இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் மூன்று விதமாக அமைந்துள்ளது. 1) உடல் சார்ந்தது, 2) பொருள் சார்ந்தது, 3) உடலும், பொருளும் சார்ந்தது.
உடல் சார்ந்த இறைவணக்கம் மற்றும் இறைநம்பிக்கையாக தொழுகை அமைந்துள்ளது. பொருள் சார்ந்த இறைவணக்கமும், இறைநம்பிக்கையும், ‘ஸதகா’ எனும் தர்மநிதியும், ‘ஸகாத்’ எனும் கடமையான ஏழைவரியும் ஆகும். மேலும், ‘ஸதகத்துல் பித்ர்’ எனும் நோன்புப் பெருநாள் தர்மமும், அழகிய கடனும், குடும்பத்தினருக்கு செய்யப்படும் செலவும், தமது சொத்துக்களை இறைவனுக்காக ‘வக்பு’ எனும் நிலையான தர்மமாக அர்ப்பணிப்பதும், கல்வி நிதியுதவியும், மருத்துவ நிதியுதவியும் பொருள் சார்ந்த இறைவணக்கம் ஆகும்.
உடலும், பொருளும் சார்ந்த இறைவணக்கமும், இறைநம்பிக்கையும் யாதெனில் புனித உம்ரா பயணமும், புனித ஹஜ் பயணமும் ஆகும். இது குறித்து இறைவன் தரும் விளக்கத்தை இறைமறையாம் திருக்குர்ஆனில் பார்ப்போம்:
‘இன்னும் இறைவனுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது அதன் பால் சென்று வர சக்தி பெற்றவர் மீது கடமையாகும்’. (திருக்குர்ஆன் 3:97)
புனித மக்கா சென்று இஸ்லாம் கூறும் சில வணக்க வழிபாடுகள் செய்வதற்கு ‘உம்ரா’ என்றும், ‘ஹஜ்’ என்றும் கூறப்படுகிறது. உடல் பலமும், பொருள் வளமும் தன்னிறைவு பெற்ற இஸ்லாமியர்கள் தங்களின் வாழ்நாளில் ஒரு தடவையாவது ஹஜ் செய்வது கட்டாயக் கடமையாகும். உம்ராவை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் நிறைவேற்றலாம்.
‘ஹஜ்ஜையும், உம்ராவையும் இறைவனுக்காக சம்பூரணமாக நிறைவேற்றுங்கள்’ என்று திருக்குர்ஆன் (2:196) குறிப்பிடுகிறது.
‘உம்ரா’
‘உம்ரா’ என்றால் ‘தரிசனம் செய்வது’ என்று பொருள். புனித கஅபாவை தரிசனம் செய்வதற்கு உம்ரா என்று கூறப்படும். இந்த தரிசனம் ஆண்டு முழுவதும் செய்யலாம். இந்த தரிசனத்திற்கு குறிப்பிட்ட மாதங்கள் என்பதெ
ுச் சென்று குறிப்பிட்ட சில வணக்கங்களை நிறைவேற்றுவது ‘ஹஜ் பயணம்’ என்று சொல்லப்படும்.
ஆண்டு முழுவதும் நினைத்த போதெல்லாம் ஹஜ் செய்ய முடியாது. அதற்கென்று குறிப்பிட்ட சில மாதங்கள் உண்டு. அந்த மாதங்களில்தான் ஹஜ் செய்ய முடியும். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிட்ட மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் புரிவதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை இறைவன் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள். திரட்டிக்கொள்ள வேண்டியவற்றில் இறையச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே, என்னை அஞ்சுங்கள்’. (திருக்குர்ஆன் 2:197)
அது என்ன மாதங்கள்? என்ற விவரம் இந்த நபிமொழியில் வருகிறது.
‘ஹஜ்ஜின் மாதங்கள் ஷவ்வால் மாதம், துல்கஅதா மாதம், துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள் என இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள்’. (நூல்: புகாரி). இவை அரபி மாதங்களில் 10 மற்றும் 11, 12-வது மாதங்களாகும்.
ஹஜ் கடமையை நிறைவேற்ற உடல் வலிமையும், உடல் ஆரோக்கியமும் அவசியம் தேவை. மேலும், தமது கடனை நிறைவேற்றி விட்டு, 70 நாட்கள் குடும்பத்தினருக்குத் தேவையான நிதி ஆதாரத்தை வைத்து விட்டு, தமது உணவிற்கும், வாகனத்திற்கும், பயணச் செலவிற்கும் தேவையான நிதியைக் கொண்டு ஹஜ் செய்ய வேண்டும்.
ஹஜ் காலத்தில் ஹஜ் செய்பவர்கள் முதலில் உம்ராவை நிறைவேற்றுவார்கள். பிறகு ‘இஹ்ராம்’ எனும் வெள்ளாடைகளை களைந்துவிடுவார்கள். பிறகு துல்ஹஜ் 7-ம் நாள் ஹஜ்ஜுக்கென்று மக்காவிலிருந்து தனியாக ‘இஹ்ராம்’ எனும் வெள்ளாடைகளை கட்ட வேண்டும். துல்ஹஜ் 8-ம் நாள் காலையில் அதிகாலை தொழுகைக்குப்பின் ‘மினா’விற்குச் சென்று அன்றைய நாளின் தொழுகைகளை தொழுது விட்டு, அன்று இரவு அங்கே தங்கிட வேண்டும். துல்ஹஜ் 9-ம் நாள் காலையில் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றிட வேண்டும். சூரியன் உதயமான பிறகு அங்கிருந்து ‘அரபா’ மைதானத்திற்குச் சென்று கூடாரங்களில் தங்கவேண்டும் அரபாவில் தங்குவது கட்டாயம். அது இல்லாமல் ஹஜ் நிறைவேறாது. துல்ஹஜ் 9-ம் நாள் மாலை சூரியன் மறைந்தவுடன் ‘முஸ்தலிபா’ எனும் இடம் நோக்கி நடந்து சென்று, அன்றைய சூரிய அஸ்தமனத் தொழுகையையும், இரவு நேரத் தொழுகையையும் சேர்த்து தொழ வேண்டும். பிறகு அங்கேயே இரவு தங்கிட வேண்டும். துல்ஹஜ் 10-ம் நாள் அதிகாலை சூரியன் உதயமாகும் முன்பாக திரும்பவும் ‘மினா’ எனும் இடத்திற்கு வந்து, ‘ஜம்ரதுல்அகபா’ எனும் பெரிய சாத்தானின் தூணை நோக்கி ஏழு சிறிய கற்களை எறிய வேண்டும்.
பிறகு ‘உள்ஹிய்யா’ எனும் குர்பானியை நிறைவேற்ற வேண்டும். பிறகு தலைமுடிகளை முழுவதும் களைய வேண்டும். பிறகு மினாவிலிருந்து மக்காவுக்கு வந்து, புனித கஅபாவை 7 தடவை வலம் வரவேண்டும். இந்த வலம் வருதல் ஹஜ்ஜின் கடமைகளில் இதுவும் ஒன்று.
பிறகு ஸபா, மர்வா ஆகிய சிறு குன்றுகளுக்குஇடையே ஏழு தடவை விரைவாக நடக்க வேண்டும். இது முடிந்த பிறகு இஹ்ராமுடைய ஆடையை களைந்துவிட வேண்டும். அன்றைய இரவில் மினா சென்று அங்கே தங்கிட வேண்டும். துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களும் மினாவில் தங்கி சிறிய சைத்தான், நடு சைத்தான், பெரிய சைத்தான் ஆகிய மூன்று சைத்தான்களின் தூண்களில் ஒரு சைத்தானுக்கு 7 கற்கள் வீதம் மூன்றுக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 21 கற்கள் எறிய வேண்டும். இவ்வாறாக மூன்று நாட்கள் 63 கற்கள் எறிய வேண்டும். இதுவரைக்கும் தான் ஹஜ்ஜின் கிரியைகள். இத்துடன் ஹஜ் நிறைவு பெற்றுவிடும்
பிறகு மக்காவிலிருந்து தாயகம் திரும்ப நாடினால் இறுதியாக ‘தவாபுல்விதா’ புனித கஅபாவுக்கு பிரியாவிடை கொடுக்கும் முகமாக ஏழு தடவை கஅபாவை வலம் வரவேண்டும். மேற்கூறப்பட்ட ஹஜ்ஜின் கிரியைகளில் அதிக வேலை உடலுக்குத்தான், உடலுறுப்புகளுக்குத்தான். இந்த உடலுழைப்பிற்கு இறைவன் கொடுக்கும் சன்மானம் அந்த உடலை நரகம் தீண்டாது; அந்த உறுப்புகள் பாவ அழுக்குகளை சுமக்காது. ஹாஜிகள் அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புகிறார்கள்.
இதுகுறித்த நபிமொழிகள் வருமாறு:
‘பாவச்செயல் கலந்திடாத ஹஜ்ஜின் கூலி சுவனம் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்)
‘ஹஜ் செய்வது முந்திய பாவங்கள் அனைத்தையும் அது அழித்து விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)
‘ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் இறைவனின் தூதுக்குழுவினர் ஆவர். இறைவனிடம் அவர்கள் பிரார்த்தித்தால் அதை அவன் ஏற்றுக்கொள்கிறான்; இறைவனிடம் அவர்கள் பாவமன்னிப்புக் கோரினால் அவன் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயீ, இப்னுமாஜா)
இத்தகைய சிறப்புகளை தன்னுள் புதையலாக புதைந்துள்ள சிறப்பான ஒரு செயல்தான் புனித ஹஜ். இந்த ஹஜ் வாழ்நாளில் ஒரே தடவை செய்தால் போதும். நபி (ஸல்) அவர்களும் தமது வாழ்நாளில் ஒரே ஒரு ஹஜ் மட்டும் செய்து, உலக முஸ்லிம்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்துள்ளார்கள்.






