என் மலர்
கிறித்தவம்
தவக்காலத்தையொட்டி விருதுநகரில் இருந்து வேளாங்கண்ணிக்கு 21 பேரை கொண்ட குழுவினர் சைக்கிளில் புனித யாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசமிருந்து ஜெபித்தார். அவ்வாறு உபவாசமிருந்த காலத்தை நினைவுகூரும் விதமாக கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது வழக்கம்.
இந்த நாட்களை தவக்காலம் என அழைக்கிறார்கள். தவக்காலம் தொடங்கும் நாள் சாம்பல் புதன் என்று அழைக்கபடுகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 17-ந் தேதியில் இருந்து தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் வேளாங்கண்ணிக்கு புனித பயணம் மேற்ெகாண்டு ஆரோக்கிய அன்னையை தரிசித்து செல்கின்றனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 21 பேர் கொண்ட குழுவினர் சைக்கிளில் வேளாங்கண்ணிக்கு புனித யாத்திரையாக வந்து, பேராலயத்தில் நேர்த்திக்கடன் செலுத்தினர். தவக்காலத்தையொட்டி தொடர்ந்து 13 ஆண்டுகளாக வேளாங்கண்ணிக்கு சைக்கிளில் புனித யாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக அந்த குழுவினர் தெரிவித்தனர்.
இந்த நாட்களை தவக்காலம் என அழைக்கிறார்கள். தவக்காலம் தொடங்கும் நாள் சாம்பல் புதன் என்று அழைக்கபடுகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 17-ந் தேதியில் இருந்து தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் வேளாங்கண்ணிக்கு புனித பயணம் மேற்ெகாண்டு ஆரோக்கிய அன்னையை தரிசித்து செல்கின்றனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 21 பேர் கொண்ட குழுவினர் சைக்கிளில் வேளாங்கண்ணிக்கு புனித யாத்திரையாக வந்து, பேராலயத்தில் நேர்த்திக்கடன் செலுத்தினர். தவக்காலத்தையொட்டி தொடர்ந்து 13 ஆண்டுகளாக வேளாங்கண்ணிக்கு சைக்கிளில் புனித யாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக அந்த குழுவினர் தெரிவித்தனர்.
பிறர் நமக்கு எதிராக எந்த வகையிலும் செய்கிற துரோகங்கள், குற்றங்களை மனதார மன்னிப்போம். அப்போது தான் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகள் ஓங்கி உயர்ந்து நிற்கும்.
இறைவன் நம் மீது காட்டும் மன்னிப்பும், இரக்கமும் நாம் அதை பிறருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கே. ஜெர்மனியில், ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் அவருடைய நாஜி படை முகாமில் கொடுமைப்படுத்தப்பட்டவர்களில் இரண்டு நண்பர்கள் இரு வேறுபட்ட மனநிலையில் இருந்தனர். அந்த இருவரும் விடுதலை செய்யப்பட்ட பிறகு பல ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்டனர்.
அப்போது முதலாமவர் மகிழ்ச்சியாக காணப்பட்டார். அதற்கு காரணம், தன்னை கொடுமைப்படுத்தியவர்களை அவர் மன்னித்து விட்டார். அதனால் அவருக்கு மகிழ்ச்சி கிடைத்தது. இரண்டாமவர், சோர்ந்து நோய்வாய்ப்பட்டு மகிழ்ச்சியில்லாமல் இருந்தார். அதற்கு காரணமும் இருந்தது. அவர், பகைவர்களை மன்னிக்கவில்லை.
‘மன்னிப்பு‘ என்ற மதிப்பீட்டிற்கு ‘உரு‘ கொடுத்தவர் இயேசு. இறைவன் நமக்குத்தரும் மன்னிப்பு அனுபவம் என்பது சுழற்சியானது. அவர் நமக்கு கொடுத்ததை நாமும் பிறருக்கு கொடுக்க வேண்டும். இந்த சுழற்சி நின்று விடும் போது மனிதநேயமும், பிறரன்பும் இல்லாமல் போய்விடும். நம்மில் பலர் உடலில், உள்ளத்தில், உறவுகளில் நோயாளிகளாக இருக்கின்றோம்.
இந்த நோய்களுக்கு காரணிகளாக இருப்பது அறியாமை, பிடிவாதம், மனக்கசப்பு, பகை, வெறுப்பு, கோபம் ஆகியவையே. இதற்கு காரணமானவர்களை நாம் மன்னிக்கும் போது மன்னித்தவர்களை ஏற்று, அன்பு செய்து, அவர்களுக்கு உதவும்போது வானக தந்தையின் மக்களாக நாம் சான்று பகரமுடியும். (மத் 5:45)
நண்பர்களையும், பகைவர்களையும் ஒரே விதமாக பார்க்கும் மனப்பக்குவம் மன்னிப்பின் முழுமையை காட்டுகிறது. மன்னிக்கும் போது மனதில் ஆற்றல் பெருகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எனவே மன்னிப்பு ஒரு அருமருந்து. நாம் ஒருவரை ஒருவர் மன்னிக்காத போது நம்மை இறைவன் மன்னிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? “பிதாவே, இவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்“ (லூக் 23:34) என்றார் இயேசு.
எனவே, பிறர் நமக்கு எதிராக எந்த வகையிலும் செய்கிற துரோகங்கள், குற்றங்களை மனதார மன்னிப்போம். நாம் மாறினால் இந்த உலகமே மாற்றமடையும். அப்போது தான் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகள் ஓங்கி உயர்ந்து நிற்கும்.
டி.செபாஸ்டின், வேதியர், புனித தோமா அருட்பணி மையம், திண்டுக்கல்.
அப்போது முதலாமவர் மகிழ்ச்சியாக காணப்பட்டார். அதற்கு காரணம், தன்னை கொடுமைப்படுத்தியவர்களை அவர் மன்னித்து விட்டார். அதனால் அவருக்கு மகிழ்ச்சி கிடைத்தது. இரண்டாமவர், சோர்ந்து நோய்வாய்ப்பட்டு மகிழ்ச்சியில்லாமல் இருந்தார். அதற்கு காரணமும் இருந்தது. அவர், பகைவர்களை மன்னிக்கவில்லை.
‘மன்னிப்பு‘ என்ற மதிப்பீட்டிற்கு ‘உரு‘ கொடுத்தவர் இயேசு. இறைவன் நமக்குத்தரும் மன்னிப்பு அனுபவம் என்பது சுழற்சியானது. அவர் நமக்கு கொடுத்ததை நாமும் பிறருக்கு கொடுக்க வேண்டும். இந்த சுழற்சி நின்று விடும் போது மனிதநேயமும், பிறரன்பும் இல்லாமல் போய்விடும். நம்மில் பலர் உடலில், உள்ளத்தில், உறவுகளில் நோயாளிகளாக இருக்கின்றோம்.
இந்த நோய்களுக்கு காரணிகளாக இருப்பது அறியாமை, பிடிவாதம், மனக்கசப்பு, பகை, வெறுப்பு, கோபம் ஆகியவையே. இதற்கு காரணமானவர்களை நாம் மன்னிக்கும் போது மன்னித்தவர்களை ஏற்று, அன்பு செய்து, அவர்களுக்கு உதவும்போது வானக தந்தையின் மக்களாக நாம் சான்று பகரமுடியும். (மத் 5:45)
நண்பர்களையும், பகைவர்களையும் ஒரே விதமாக பார்க்கும் மனப்பக்குவம் மன்னிப்பின் முழுமையை காட்டுகிறது. மன்னிக்கும் போது மனதில் ஆற்றல் பெருகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எனவே மன்னிப்பு ஒரு அருமருந்து. நாம் ஒருவரை ஒருவர் மன்னிக்காத போது நம்மை இறைவன் மன்னிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? “பிதாவே, இவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்“ (லூக் 23:34) என்றார் இயேசு.
எனவே, பிறர் நமக்கு எதிராக எந்த வகையிலும் செய்கிற துரோகங்கள், குற்றங்களை மனதார மன்னிப்போம். நாம் மாறினால் இந்த உலகமே மாற்றமடையும். அப்போது தான் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகள் ஓங்கி உயர்ந்து நிற்கும்.
டி.செபாஸ்டின், வேதியர், புனித தோமா அருட்பணி மையம், திண்டுக்கல்.
யூதர்கள் காலை, மதியம், மாலை என மூன்று முறை தேவாலயம் தேடிச் சென்று பிரார்த்தனை செய்வதை அன்றாட ஆன்மிகக் கடமையாகக் கொண்டிருந்தனர். அது கடவுளை விரைவாகச் சென்றடையும் வழி என்றும் யூதர்கள் நம்பினார்கள்.
கடவுளுக்கும் மனிதர்களுக்குமான ஒரே பாலம் பிரார்த்தனை. அதனால் யூதர்கள் காலை, மதியம், மாலை என மூன்று முறை தேவாலயம் தேடிச் சென்று பிரார்த்தனை செய்வதை அன்றாட ஆன்மிகக் கடமையாகக் கொண்டிருந்தனர். அது கடவுளை விரைவாகச் சென்றடையும் வழி என்றும் யூதர்கள் நம்பினார்கள்.
அதேபோல, விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை ‘தசம பாக’மாக ஆலயத்துக்குக் கொடுக்க வேண்டுமென்று யூதர்களின் இணைச்சட்டம் (14:22), கூறுகிறது. இதைப் பின்பற்றி வந்த யூதர்கள், இதுபோன்ற பாரம்பரிய ஆலயச் சடங்குகளை ஏழைகளும், மற்றவர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காகப் பிரார்த்தனை செய்வது, தசமபாகம் தருவது, பலிசெலுத்துவது ஆகியவற்றை ஆரவாரத்துடன் செய்து ஆலயத்தின் அமைதியைக் கெடுத்து வந்தார்கள்.
தாங்கள் நோன்பிருப்பது தெரிய வேண்டும் என்பதற்காக, தங்கள் முகத்தை வெள்ளையாக்கிக்கொண்டு சந்தைவெளிகளில் நடந்தார்கள். அதேபோல் கொடுக்கத் தேவையில்லாத விளைபொருட்களிலும் பத்திலொரு பங்கைக் கொடுத்தார்கள். கடவுள் காரியத்தில் இப்படி விளம்பரப் பிரியர்களாக இருந்த பரிசேயர்களை முன்வைத்து இயேசு கூறிய உவமை; நம் தந்தையைத் தொடர்புகொள்ளப் பிரார்த்தனை என்ற உறவுப் பாலத்தை எத்தனை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியது.
தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்குபவர்களை விமர்சிக்கும் விதமாக இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “இருவர் இறைவனிடம் வேண்ட, கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிவசூலிப்பவர். பரிசேயர் ஆலய வாசலில் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் உரத்த குரலில் வேண்டினார்: ‘கடவுளே, கொள்ளையர், நேர்மையற்றோர், பாலியல் தொழில் செய்வோர் போலவோ இல்லாதது குறித்து நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என் எல்லா வருவாயிலிருந்தும் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்’ என்று ஜெபித்தார்.
ஆனால், வரிவசூலிப்பவர் தொலைவில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்று கடவுளுக்கு மட்டுமே கேட்கும் தன் மனக்குரல் கொண்டு ஜெபித்தார். இந்த இருவரில் பரிசேயரல்ல, வரிவசூலிப்பவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில், தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் இயேசு.
பரிசேயர் ஆலய வாசலில் நின்றபடி பிரார்த்தனை என்ற பெயரால் உரத்துச் சொன்ன அனைத்தையும் உண்மையிலே அவர் கடைப்பிடித்தார். தினமும் பிரார்த்தனை செய்தார், வாரம் இருமுறை நோன்பிருந்தார், பத்தில் ஒரு பங்கை ஆலயத்துக்குக் கொடுத்தார். ஆனால், பிரார்த்தனை என்பது தான் செய்வதைச் சொல்வது அல்ல, தன்னைப் புகழுவதும் அல்ல, அல்லது தன்னை மற்றவர்களோடு ஒப்பிடுவதும் அல்ல.
மாறாக, பிரார்த்தனை என்பது கடவுளைப் புகழ்வது, கடவுளோடு நெருங்கிவர அவர் துணையை நாடுவது, நிறைவாழ்வை நோக்கிய தொடர்ச்சியான தேடல் என்பதை பரிசேயர் மறந்துவிடுகிறார். பிரார்த்தனை என்பது கடவுளுக்கும் எனக்கும் உள்ள தனிப்பட்ட உறவு. அதன் வழியே கடவுள் என் மனம் எனும் கண்ணாடியில் இருப்பது அனைத்தையும் காண்கிறார்.
இயேசு தன் பூமி வாழ்வில் கடவுளாகிய தந்தையிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை இருமுறை தன் சீடர்களுக்கும் மக்களுக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறார். பிரார்த்தனை என்பது எவ்வாறு இருக்க வேண்டும், எவ்வாறு இருக்கக் கூடாது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டிய இயேசு, சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது, “பிதாவே இவர்களை மன்னியும், ஏனெனில் இவர் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள்” என்று தன் மரணத்தை விரும்பிய எதிரிகளை மன்னிக்கும்படி தன் தந்தையிடம் கோரினார்.
இது எத்தனை உன்னதமான தாழ்ச்சி. ஒருவர் தம்மைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்னும் இயேசுவின் அழைப்பு எளிதான போதனைதான். ஆனால், அதைக் கடைப்பிடிக்கும்போதுதான் நமக்கும் இயேசுவின் மேன்மை புரியத் தொடங்குகிறது.
அதேபோல, விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை ‘தசம பாக’மாக ஆலயத்துக்குக் கொடுக்க வேண்டுமென்று யூதர்களின் இணைச்சட்டம் (14:22), கூறுகிறது. இதைப் பின்பற்றி வந்த யூதர்கள், இதுபோன்ற பாரம்பரிய ஆலயச் சடங்குகளை ஏழைகளும், மற்றவர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காகப் பிரார்த்தனை செய்வது, தசமபாகம் தருவது, பலிசெலுத்துவது ஆகியவற்றை ஆரவாரத்துடன் செய்து ஆலயத்தின் அமைதியைக் கெடுத்து வந்தார்கள்.
தாங்கள் நோன்பிருப்பது தெரிய வேண்டும் என்பதற்காக, தங்கள் முகத்தை வெள்ளையாக்கிக்கொண்டு சந்தைவெளிகளில் நடந்தார்கள். அதேபோல் கொடுக்கத் தேவையில்லாத விளைபொருட்களிலும் பத்திலொரு பங்கைக் கொடுத்தார்கள். கடவுள் காரியத்தில் இப்படி விளம்பரப் பிரியர்களாக இருந்த பரிசேயர்களை முன்வைத்து இயேசு கூறிய உவமை; நம் தந்தையைத் தொடர்புகொள்ளப் பிரார்த்தனை என்ற உறவுப் பாலத்தை எத்தனை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியது.
தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்குபவர்களை விமர்சிக்கும் விதமாக இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “இருவர் இறைவனிடம் வேண்ட, கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிவசூலிப்பவர். பரிசேயர் ஆலய வாசலில் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் உரத்த குரலில் வேண்டினார்: ‘கடவுளே, கொள்ளையர், நேர்மையற்றோர், பாலியல் தொழில் செய்வோர் போலவோ இல்லாதது குறித்து நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என் எல்லா வருவாயிலிருந்தும் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்’ என்று ஜெபித்தார்.
ஆனால், வரிவசூலிப்பவர் தொலைவில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்று கடவுளுக்கு மட்டுமே கேட்கும் தன் மனக்குரல் கொண்டு ஜெபித்தார். இந்த இருவரில் பரிசேயரல்ல, வரிவசூலிப்பவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில், தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் இயேசு.
பரிசேயர் ஆலய வாசலில் நின்றபடி பிரார்த்தனை என்ற பெயரால் உரத்துச் சொன்ன அனைத்தையும் உண்மையிலே அவர் கடைப்பிடித்தார். தினமும் பிரார்த்தனை செய்தார், வாரம் இருமுறை நோன்பிருந்தார், பத்தில் ஒரு பங்கை ஆலயத்துக்குக் கொடுத்தார். ஆனால், பிரார்த்தனை என்பது தான் செய்வதைச் சொல்வது அல்ல, தன்னைப் புகழுவதும் அல்ல, அல்லது தன்னை மற்றவர்களோடு ஒப்பிடுவதும் அல்ல.
மாறாக, பிரார்த்தனை என்பது கடவுளைப் புகழ்வது, கடவுளோடு நெருங்கிவர அவர் துணையை நாடுவது, நிறைவாழ்வை நோக்கிய தொடர்ச்சியான தேடல் என்பதை பரிசேயர் மறந்துவிடுகிறார். பிரார்த்தனை என்பது கடவுளுக்கும் எனக்கும் உள்ள தனிப்பட்ட உறவு. அதன் வழியே கடவுள் என் மனம் எனும் கண்ணாடியில் இருப்பது அனைத்தையும் காண்கிறார்.
இயேசு தன் பூமி வாழ்வில் கடவுளாகிய தந்தையிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை இருமுறை தன் சீடர்களுக்கும் மக்களுக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறார். பிரார்த்தனை என்பது எவ்வாறு இருக்க வேண்டும், எவ்வாறு இருக்கக் கூடாது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டிய இயேசு, சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது, “பிதாவே இவர்களை மன்னியும், ஏனெனில் இவர் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள்” என்று தன் மரணத்தை விரும்பிய எதிரிகளை மன்னிக்கும்படி தன் தந்தையிடம் கோரினார்.
இது எத்தனை உன்னதமான தாழ்ச்சி. ஒருவர் தம்மைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்னும் இயேசுவின் அழைப்பு எளிதான போதனைதான். ஆனால், அதைக் கடைப்பிடிக்கும்போதுதான் நமக்கும் இயேசுவின் மேன்மை புரியத் தொடங்குகிறது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இதையொட்டி பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்களின் சிலுவைப்பயணம் நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பாளையங்கோட்டையில் நேற்று கிறிஸ்தவர்களின் சிலுவைப்பயணம் நடைபெற்றது. தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலாயத்தில் இருந்து இந்த பயணம் தொடங்கியது. பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் அந்தோணி சாமி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள், அருட்சகோதரிகள் கைகளில் சிலுவைகளை ஏந்திக் கொண்டு சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்று இக்னேசியஸ் காண்வென்ட் பள்ளியை வந்தடைந்தனர்.
அங்கு சிலுவைப் பாதையும், திருப்பலியும் நடைபெற்றது. இதில் பேராலய பங்கு தந்தை ராஜேஷ், உதவி பங்கு தந்தையர் பிரகாசம், ரீகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அங்கு சிலுவைப் பாதையும், திருப்பலியும் நடைபெற்றது. இதில் பேராலய பங்கு தந்தை ராஜேஷ், உதவி பங்கு தந்தையர் பிரகாசம், ரீகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தவக்காலத்தில் ‘நானும் கடவுளும் என்ற இரட்டை பரிமாண அணுகுமுறையை கடந்து, கடவுள், சமூகம், நான்’ என்ற முப்பரிமாணத்தில் பயணம் செய்தால் இந்த வசந்தத்தின் பயனை மானுடம் அனுபவிக்க முடியும்.
இலையுதிர் காலத்தில் திடீரென்று ஒரே சாரல் மழை. பூமி நனைகிறது. மண் மணக்கிறது, தளிர்கள் அரும்புகின்றன. மரங்கள் பசுமை போர்த்துகின்றன. பூக்கள் மலர்ந்து வசந்தத்தை அறிவிக்கின்றன. மனம் குளிர்ந்து போகிறது. ஒரே ஒரு மழையால் எத்தனை நன்மைகள். அவ்வாறே, தவக்காலம் என்பது ஆன்மாவின் வசந்த காலம். மனிதர்களுக்கு பல நன்மைகள் தருகின்ற காலம்.
இக்காலத்தில் ‘நானும் கடவுளும் என்ற இரட்டை பரிமாண அணுகுமுறையை கடந்து, கடவுள், சமூகம், நான்’ என்ற முப்பரிமாணத்தில் பயணம் செய்தால் இந்த வசந்தத்தின் பயனை மானுடம் அனுபவிக்க முடியும்.
இயேசு கற்றுத்தந்த ‘விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே’ என்ற வேண்டலை (மத்தேயு 6:9-13) நினைவில் கொள்வோம். இந்த வேண்டலில், எங்கள் தந்தையே எங்களுக்கு தாரும், எங்களுக்கு எதிராக, நாங்கள் மன்னித்தது போல, எங்கள் குற்றங்களை, எங்களை சோதனைக்கு என ஆறு இடங்களில் சமூகத்தை உள்ளடக்கும் பன்மைச்சொற்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு தனி மனிதரும் சமூகத்தின் அங்கம் என்றும், அனைவரும் இறைவனின் மக்கள் என்றும் முப்பரிமாணத்தை இயேசு இந்த வேண்டலில் நினைவு படுத்துகின்றார்.
பிறருக்கு எதிராக குற்றம் இழைக்கிற போது, அது இறைவனுக்கு எதிரான குற்றம் என்பதை ‘கடவுளுக்கு எதிராகவும், உமக்கும் எதிராகவும் பாவம் செய்தேன்’ (லூக்கா 15:21) என்று இயேசுவின் ஒரு உவமை உறுதிப்படுத்துகின்றது. பிறருக்கு நன்மை செய்கிற போது, அது கடவுளுக்கு செய்வதாகும் என்பதை ‘எனக்கே செய்தீர்கள்’ (மத்தேயு 25:40) என்று சொற்கள் நினைவுபடுத்துகின்றன.
இவையனைத்தும் நமக்கு சொல்கின்ற செய்தி இதுதான்: சமூகத்தை உள்ளடக்காத மனமாற்றமும், சமூக அக்கறையற்ற நற்செயல்களும் பொருளற்றவை. எனவே, இத்தவக்காலத்தில் முப்பரிமாண ஆன்மிகத்தில் வேரூன்றி வளர்வோம். பிறருக்கு உதவிகள் செய்வோம்.
அருட்பணி. அ.ஸ்டீபன் மார்ட்டின், சே.ச. திண்டுக்கல்.
இக்காலத்தில் ‘நானும் கடவுளும் என்ற இரட்டை பரிமாண அணுகுமுறையை கடந்து, கடவுள், சமூகம், நான்’ என்ற முப்பரிமாணத்தில் பயணம் செய்தால் இந்த வசந்தத்தின் பயனை மானுடம் அனுபவிக்க முடியும்.
இயேசு கற்றுத்தந்த ‘விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே’ என்ற வேண்டலை (மத்தேயு 6:9-13) நினைவில் கொள்வோம். இந்த வேண்டலில், எங்கள் தந்தையே எங்களுக்கு தாரும், எங்களுக்கு எதிராக, நாங்கள் மன்னித்தது போல, எங்கள் குற்றங்களை, எங்களை சோதனைக்கு என ஆறு இடங்களில் சமூகத்தை உள்ளடக்கும் பன்மைச்சொற்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு தனி மனிதரும் சமூகத்தின் அங்கம் என்றும், அனைவரும் இறைவனின் மக்கள் என்றும் முப்பரிமாணத்தை இயேசு இந்த வேண்டலில் நினைவு படுத்துகின்றார்.
பிறருக்கு எதிராக குற்றம் இழைக்கிற போது, அது இறைவனுக்கு எதிரான குற்றம் என்பதை ‘கடவுளுக்கு எதிராகவும், உமக்கும் எதிராகவும் பாவம் செய்தேன்’ (லூக்கா 15:21) என்று இயேசுவின் ஒரு உவமை உறுதிப்படுத்துகின்றது. பிறருக்கு நன்மை செய்கிற போது, அது கடவுளுக்கு செய்வதாகும் என்பதை ‘எனக்கே செய்தீர்கள்’ (மத்தேயு 25:40) என்று சொற்கள் நினைவுபடுத்துகின்றன.
இவையனைத்தும் நமக்கு சொல்கின்ற செய்தி இதுதான்: சமூகத்தை உள்ளடக்காத மனமாற்றமும், சமூக அக்கறையற்ற நற்செயல்களும் பொருளற்றவை. எனவே, இத்தவக்காலத்தில் முப்பரிமாண ஆன்மிகத்தில் வேரூன்றி வளர்வோம். பிறருக்கு உதவிகள் செய்வோம்.
அருட்பணி. அ.ஸ்டீபன் மார்ட்டின், சே.ச. திண்டுக்கல்.
தேவனுடைய அன்பு நம்மீது பெரிதான அன்பாய் இருந்ததினால் நாம் இன்று நம்முடைய வாழ்க்கை மகிமையான வாழ்க்கையாக உள்ளது என்பதை நாம் இந்த தவக்காலத்தில் சிந்தித்து பார்க்க கடமைப்பட்டவர்களாய் இருக்கிறோம்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மில் அன்பு கூர்ந்து தன்னை பலியாக ஒப்புக்கொடுத்தார். 1 யோவான் 3-ம் அதிகாரம் 16-ம் வசனத்தில் அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம் என்று சொல்லப்ட்டுள்ளது. ஆம் தேவ பிள்ளைகளே தேவன் நம்மீது வைத்துள்ள அன்பின் நிமித்தமாகவே இயேசு தன்னுடைய ஜீவனையே நமக்காக கல்வாரி சிலுவையில் ஒப்பு கொடுத்தார் என்பது எவ்வளவு பெரிதான காரியம் என்று நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
ஆகவே தேவன் இவ்வளவு பெரிதான மீட்பை இரட்சிப்பை நமக்கு கொடுத்திருப்பார் என்றால், அவருடைய அன்பின் நிமித்தமாக அவர் கொடுத்திருக்கின்ற மிகப்பெரியதாக நாம் நினைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் தகுதியில்லாத எனக்கு இவ்வளவு பெரிய அன்பு இவ்வளவு பெரிய மீட்பு சமாதானம், இவ்வளவு பெரிய விடுதலை என்பதை நாம் உணர வேண்டும்.
அநேக வேளைகளில் நாம் ஆண்டவருடைய சத்தியத்தை அறிய வேண்டிய அளவில் அறிந்திருப்பது மிக அவசியம். எல்லாச்சூழ்நிலைகளிலும் கர்த்தர் மேல் வைக்கின்ற நம்பிக்கை அவருடைய சமாதானத்தின் ஆளுமை நம் இக்கட்டான வேளைகளிலும் கர்த்தம் ஆளுமை செய்கின்றார் என்ற நம்பிக்கை நமக்குள் இருக்க வேண்டும். தேவன் என்னை நேசிக்கிறார். ஆகவே இந்த அன்பை நாம் எந்தளவுக்கு நம்முடைய வாழ்க்கையில் விசுவாசித்து அதன் அடிப்படையில் ஒவ்வொரு காரியத்திலும் செயல்படுகின்றோமோ அந்தளவுக்கே மெய்யான சமாதானம் உண்டு.
இக்கட்டான காலத்திலும் பொறுமையும் நிதானமுமாக ஆண்டவருடைய கிருபையை சார்ந்து வாழுகிற வாழ்க்கை என்பது வேதம் சொல்லுகிறபடி விசுவாசிக்கிறவன் பதறான நம்பிக்கையே உங்கள் பெலனாயிருக்கும் என்பதே . இவ்விதமான ஒரு ஆழமான நம்பிக்கைக்குரிய வாழ்க்கையை அவருடைய அன்பை நாம் அறிந்து அதன் அடிப்படையில் வாழுகிற வாழ்க்கையின் மூலமாகவே பெற்றுக்கொள்ள முடியும்.
ஆகவே என்னில் அன்புகூறுகிற தேவன் இவர். அந்த அன்பு தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்த அன்பு. இவ்வளவு பெரிதான அன்பு என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே தேவனுடைய அன்பு நம்மீது பெரிதான அன்பாய் இருந்ததினால் நாம் இன்று நம்முடைய வாழ்க்கை மகிமையான வாழ்க்கையாக உள்ளது என்பதை நாம் இந்த தவக்காலத்தில் சிந்தித்து பார்க்க கடமைப்பட்டவர்களாய் இருக்கிறோம். ஆம் தேவன் மேலும் நாம் ஒவ்வொருவரையும் தம் அன்பினால் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
சகோ.ஜோசப், கோவில்வழி.
ஆகவே தேவன் இவ்வளவு பெரிதான மீட்பை இரட்சிப்பை நமக்கு கொடுத்திருப்பார் என்றால், அவருடைய அன்பின் நிமித்தமாக அவர் கொடுத்திருக்கின்ற மிகப்பெரியதாக நாம் நினைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் தகுதியில்லாத எனக்கு இவ்வளவு பெரிய அன்பு இவ்வளவு பெரிய மீட்பு சமாதானம், இவ்வளவு பெரிய விடுதலை என்பதை நாம் உணர வேண்டும்.
அநேக வேளைகளில் நாம் ஆண்டவருடைய சத்தியத்தை அறிய வேண்டிய அளவில் அறிந்திருப்பது மிக அவசியம். எல்லாச்சூழ்நிலைகளிலும் கர்த்தர் மேல் வைக்கின்ற நம்பிக்கை அவருடைய சமாதானத்தின் ஆளுமை நம் இக்கட்டான வேளைகளிலும் கர்த்தம் ஆளுமை செய்கின்றார் என்ற நம்பிக்கை நமக்குள் இருக்க வேண்டும். தேவன் என்னை நேசிக்கிறார். ஆகவே இந்த அன்பை நாம் எந்தளவுக்கு நம்முடைய வாழ்க்கையில் விசுவாசித்து அதன் அடிப்படையில் ஒவ்வொரு காரியத்திலும் செயல்படுகின்றோமோ அந்தளவுக்கே மெய்யான சமாதானம் உண்டு.
இக்கட்டான காலத்திலும் பொறுமையும் நிதானமுமாக ஆண்டவருடைய கிருபையை சார்ந்து வாழுகிற வாழ்க்கை என்பது வேதம் சொல்லுகிறபடி விசுவாசிக்கிறவன் பதறான நம்பிக்கையே உங்கள் பெலனாயிருக்கும் என்பதே . இவ்விதமான ஒரு ஆழமான நம்பிக்கைக்குரிய வாழ்க்கையை அவருடைய அன்பை நாம் அறிந்து அதன் அடிப்படையில் வாழுகிற வாழ்க்கையின் மூலமாகவே பெற்றுக்கொள்ள முடியும்.
ஆகவே என்னில் அன்புகூறுகிற தேவன் இவர். அந்த அன்பு தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்த அன்பு. இவ்வளவு பெரிதான அன்பு என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே தேவனுடைய அன்பு நம்மீது பெரிதான அன்பாய் இருந்ததினால் நாம் இன்று நம்முடைய வாழ்க்கை மகிமையான வாழ்க்கையாக உள்ளது என்பதை நாம் இந்த தவக்காலத்தில் சிந்தித்து பார்க்க கடமைப்பட்டவர்களாய் இருக்கிறோம். ஆம் தேவன் மேலும் நாம் ஒவ்வொருவரையும் தம் அன்பினால் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
சகோ.ஜோசப், கோவில்வழி.
இன்பத்திலும், துன்பத்திலும் தேவனை வெறுக்காமல் எப்போதும் தேவனுடைய பிள்ளைகளாய் வாழ்ந்து இரட்டிப்பான ஆசீர்வாத்தை நாமும் பெற்றுக்கொள்வோம் ஆமென்.
இந்த தவக்காலத்தில் யோபுவை குறித்து வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளதை சற்று தியானித்து பார்ப்போம். யோபு உத்தமனும், தேவனுக்கு பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாய் இருந்தான். அவனுக்கு 7 மகன்களும், 3 மகள்களும் இருந்தன. சொத்துக்களும் கணக்கிட முடியாத அளவுக்கு இருந்தன. மேலும் ஆடு, மாடு, ஒடடகம், கழுதைகள் என கால்நடைகளும் ஆயிரக்கணக்கில் இருந்தன. இதனால் வேலையாட்களும் அதிகமாய் வேலை செய்தனர். இப்படி இருந்ததினால் மிகவும் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்தான். ஆனால் இதில் மிக முக்கியமானது என்னவென்றால் இவ்வளவு சொத்து, சுகம் இருந்தும் அவன் தேனுக்கு மிகவும் பயபக்தியுடன் காணப்பட்டான். இதனால் இன்பமாக வாழ்ந்து வந்தான்.
இப்படி இருந்து கொண்டிருந்த யோபுக்கு திடீரென சோதனை காலம் ஆரம்பித்தது. அவன் வளர்ந்து வந்த கால்நடைகளை எல்லாம் உறவினர்கள் திருடிச்சென்று விட்டனர். பெற்ற பிள்ளைகள் எல்லாம் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இறந்து விட்டனர். யோவுக்கோ உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை பருக்கள் தோன்றி அகோரமான நோய்க்கு ஆளானான்.
இப்படி இருந்த போது அவனின் மனைவியோ யோவுவை பார்த்து தேவனை வெறுத்து உயிரை விடும் என்று வேண்டிக்கொண்டான். ஆனால் யோபுவோ, கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார் கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் என்றான். இப்படி துன்ப காலத்தை அனுபவித்த யோபு எந்த நிலையிலும் கடவுளை வெறுக்கவும் இல்லை. எந்தவித பாவமும் செய்யவில்லை. இதனால் யோபுவுக்கு இன்ப காலத்தில் இருந்த செல்வம். பிள்ளைகள் என இருமடங்காக கொடுத்து தேவன் ஆசீர்வதித்தார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஆம் தேவ பிள்ளைகளே நம்முடைய வாழ்க்கையில் எப்படி இருக்கிறோம் என்று சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த உலகத்தில் நமக்கு பல்வேறு இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவித்து வாழ வேண்டிய சூழ்நிலையில் தான் உள்ளோம். ஆனால் நமக்கு இன்பம் வரும் போது கடவுளுக்கு நன்றி சொல்வோம். ஆனால் துன்பம் வரும் போது கடவுளே இல்லை என்கிற அளவுக்கு பேசுவோம். இப்படி இருக்காமல் நாமும் யோவுவை போல இன்பத்திலும், துன்பத்திலும் தேவனை வெறுக்காமல் எப்போதும் தேவனுடைய பிள்ளைகளாய் வாழ்ந்து இரட்டிப்பான ஆசீர்வாத்தை நாமும் பெற்றுக்கொள்வோம் ஆமென்.
சகோ. கிங்ஸ்ஸி, கே.செட்டிபாளையம்.
இப்படி இருந்து கொண்டிருந்த யோபுக்கு திடீரென சோதனை காலம் ஆரம்பித்தது. அவன் வளர்ந்து வந்த கால்நடைகளை எல்லாம் உறவினர்கள் திருடிச்சென்று விட்டனர். பெற்ற பிள்ளைகள் எல்லாம் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இறந்து விட்டனர். யோவுக்கோ உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை பருக்கள் தோன்றி அகோரமான நோய்க்கு ஆளானான்.
இப்படி இருந்த போது அவனின் மனைவியோ யோவுவை பார்த்து தேவனை வெறுத்து உயிரை விடும் என்று வேண்டிக்கொண்டான். ஆனால் யோபுவோ, கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார் கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் என்றான். இப்படி துன்ப காலத்தை அனுபவித்த யோபு எந்த நிலையிலும் கடவுளை வெறுக்கவும் இல்லை. எந்தவித பாவமும் செய்யவில்லை. இதனால் யோபுவுக்கு இன்ப காலத்தில் இருந்த செல்வம். பிள்ளைகள் என இருமடங்காக கொடுத்து தேவன் ஆசீர்வதித்தார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஆம் தேவ பிள்ளைகளே நம்முடைய வாழ்க்கையில் எப்படி இருக்கிறோம் என்று சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த உலகத்தில் நமக்கு பல்வேறு இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவித்து வாழ வேண்டிய சூழ்நிலையில் தான் உள்ளோம். ஆனால் நமக்கு இன்பம் வரும் போது கடவுளுக்கு நன்றி சொல்வோம். ஆனால் துன்பம் வரும் போது கடவுளே இல்லை என்கிற அளவுக்கு பேசுவோம். இப்படி இருக்காமல் நாமும் யோவுவை போல இன்பத்திலும், துன்பத்திலும் தேவனை வெறுக்காமல் எப்போதும் தேவனுடைய பிள்ளைகளாய் வாழ்ந்து இரட்டிப்பான ஆசீர்வாத்தை நாமும் பெற்றுக்கொள்வோம் ஆமென்.
சகோ. கிங்ஸ்ஸி, கே.செட்டிபாளையம்.
ஏசுவும் தன் பிதாவின் சித்தத்தின் படியே உலகத்தின் பாவத்தை எல்லாம் சிலுவையில் சுமந்து பலியாக வேண்டும் என்று தெரிந்தும் கூட இயேசு சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார்.
மனத்தாழ்யை அணிந்து கொள்ளுங்கள். பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். (1 பேதுரு 5:5) பெருமையுடைய வன் எனக்கு எல்லாம் தெரியும். ஒருவரும் என்க்கு போதிக்க வேண்டியதில்லை என்று எல்லாவற்றலும் எதிர்த்து நிற்பான். அவனிடத்திலிருந்து கோபம்,எரிச்சல், பேராசை, பொறமை என்ற துர்குணங்கள் தோன்றும். நா செய்வது எரியென்று கூறுவான். அவர்கள் செயல்களோ கொந்தளிக்கும் கடலைபோல் காணப்படும். ராஜாவாகிய சவுல் தன்னைத்தானே உயர்த்தி பெருமை கொண்ட போது அவன் விழுந்தான். அபிஷேகத்தையும் தேவ பாதுகாப்பையும் இழந்தான். தன் ஆயுதத்தால் மரித்து போனான். பெருமைஹயுள்ளவர்களுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கின்றார் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் தாழ்மை என்பது ஓ இளைப்பாறுதலுக்கான ஜீவிதம், தாழ்மையுள்ள ஒரு மனிதன் அவமானப்படும் போதும், நிந்திக்கப்படும்போதும், துண்பறுத்தப்படும் போதும், தன் உணர்வால் அவன் மனதை புண்படுத்தமுடியாது. ஏனென்றால் அவன் தாழ்மையின் சுபாவத்தை அணிந்திருக்கிறான். தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் இரக்கமும்கிருபையும் அளிக்கிறார்.
தாழ்மையுள்ளவன் ஒருபோதும் இடறல் அடைவதில்லை. தாழ்மை இளைப்பாறுதலான ஜீவிதம். பரிசுத்தமான வாழ்க்கை, தாழ்மையுடையவர்கள் சாந்தமும், சமாதானமும் நிறைந்த வார்த்தைகளை பேசுவார்கள். அவர்கள் வாழ்க்கை முழுவதையும் தேவன் மறுரூபப்படுத்தி செழித்தோங்க செய்கிறார்.
இதே போல் தான் ஏசுவும் தன் பிதாவின் சித்தத்தின் படியே உலகத்தின் பாவத்தை எல்லாம் சிலுவையில் சுமந்து பலியாக வேண்டும் என்று தெரிந்தும் கூட இயேசு சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார். பிதா அவரை எல்லாவற்றுக்கும் மேலாக உயர்த்தினார் என்று நாம் வேதத்தில் வாகிக்கிறோம்.
எனவே தேவ பிள்ளைகளே இந்த கவக்காலத்தில் சிலுவைபாடுகளை நாம் நினைவுகூரும் வேளையில் நாம் பெருமை உள்ளவர்களாய் இல்லாமல் தாழ்மையுள்ளவர்களைய் காணப்படதேவன் தாமே நாம் ஒவ்வொருவரையும் ஆசிர்வாதிப்பாராக ஆமென்.
சகோ.அல்போன்ஸ், பல்லடம்.
ஆனால் தாழ்மை என்பது ஓ இளைப்பாறுதலுக்கான ஜீவிதம், தாழ்மையுள்ள ஒரு மனிதன் அவமானப்படும் போதும், நிந்திக்கப்படும்போதும், துண்பறுத்தப்படும் போதும், தன் உணர்வால் அவன் மனதை புண்படுத்தமுடியாது. ஏனென்றால் அவன் தாழ்மையின் சுபாவத்தை அணிந்திருக்கிறான். தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் இரக்கமும்கிருபையும் அளிக்கிறார்.
தாழ்மையுள்ளவன் ஒருபோதும் இடறல் அடைவதில்லை. தாழ்மை இளைப்பாறுதலான ஜீவிதம். பரிசுத்தமான வாழ்க்கை, தாழ்மையுடையவர்கள் சாந்தமும், சமாதானமும் நிறைந்த வார்த்தைகளை பேசுவார்கள். அவர்கள் வாழ்க்கை முழுவதையும் தேவன் மறுரூபப்படுத்தி செழித்தோங்க செய்கிறார்.
இதே போல் தான் ஏசுவும் தன் பிதாவின் சித்தத்தின் படியே உலகத்தின் பாவத்தை எல்லாம் சிலுவையில் சுமந்து பலியாக வேண்டும் என்று தெரிந்தும் கூட இயேசு சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார். பிதா அவரை எல்லாவற்றுக்கும் மேலாக உயர்த்தினார் என்று நாம் வேதத்தில் வாகிக்கிறோம்.
எனவே தேவ பிள்ளைகளே இந்த கவக்காலத்தில் சிலுவைபாடுகளை நாம் நினைவுகூரும் வேளையில் நாம் பெருமை உள்ளவர்களாய் இல்லாமல் தாழ்மையுள்ளவர்களைய் காணப்படதேவன் தாமே நாம் ஒவ்வொருவரையும் ஆசிர்வாதிப்பாராக ஆமென்.
சகோ.அல்போன்ஸ், பல்லடம்.
இறைமகன் குறித்து தீர்க்கதரிசனங்களால் நிறைந்திருந்த வேத வார்த்தைகளை வைத்து இயேசுவை மயக்க நினைத்த சாத்தான் இயேசுவின் பதிலால் வெட்கிப்போனான்.
இயேசு தனது ஆன்மிக வாழ்வைத் தொடங்கும்முன் அவரது 30-வது வயதில் யோர்தான் நதியில் யோவானிடம் ஞானஸ்தானம் பெறுகிறார். அதன் பின்னர் கடவுளுடைய சக்தி அவரை யூதேயா பாலைவனத்துக்கு வழிநடத்திச் செல்கிறது. பாலைநிலத்தில் இயேசு 40 நாட்கள் இரவும் பகலும் அலைந்து திரிகிறார். அந்த 40 நாட்களும் அவர் எதுவும் சாப்பிடவில்லை. 40-ம் நாள் முடிவில் பசி அவரை வாட்டியெடுத்தது. 40 நாட்கள் தவத்தின் இறுதிக் கட்டத்திலாவது அவரைத் தோல்வி அடையச் செய்வதற்காக சோதனைக்காரனாகிய சாத்தான் அங்கே வருகிறான். அப்போது இயேசுவிடம் வந்து, “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், இந்தக் கற்களை ரொட்டிகளாகும்படி சொல்” என்றான். அதற்கு இயேசு, உணவால் மட்டுமல்ல, கடவுளின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையாலும் மனிதன் உயிர் வாழ்வான் என எழுதப்பட்டிருக்கிறதே என்று பதில் கூறினார்.
சாத்தான் அடுத்து பரிசுத்த நகரத்துக்கு இயேசுவைக் கொண்டுபோய், ஆலயத்தின் உயரமான இடத்தில் அவரை நிற்கவைத்து, “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், கீழே குதி; ‘அவர் உன்னைக் குறித்து தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளை கொடுப்பார். உன் பாதம் கல்லில் மோதாதபடி அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் சுமந்துகொண்டு போவார்கள்’ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னான். அதற்கு இயேசு, “உன் கடவுளாகிய தந்தையைச் சோதித்துப் பார்க்கக் கூடாது’ எனவும் எழுதப்பட்டிருக்கிறதே” என்று பதில் கூறினார்.
இறைமகன் குறித்து தீர்க்கதரிசனங்களால் நிறைந்திருந்த வேத வார்த்தைகளை வைத்து இயேசுவை மயக்க நினைத்த சாத்தான் இயேசுவின் பதிலால் வெட்கிப்போனான்.
சாத்தானின் புகழ்ச்சியான வார்த்தைகளுக்கு இயேசு மயங்கவில்லை; சாகசம் செய்து பார்ப்பவர் களைப் பிரமிக்க வைக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அப்படிச் செய்து கடவுளாகிய தன் தந்தையைச் சோதிப்பது தவறு என்று வேதவசனங் களிலிருந்து எடுத்துக்காட்டுகிறார்.
ஆனால், சாத்தான் அவரை விடுவதாக இல்லை. மிக மிக உயரமான ஒரு மலைக்கு இயேசுவைக் கொண்டுபோய், இந்த உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்ஜியங்களையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காட்டி, “நீ ஒரேயொரு தடவை என்முன் விழுந்து என்னை வணங்கினால், இவை எல்லாவற்றையும் உனக்குத் தருவேன்” என்று சொன்னான்.
அதற்கு இயேசு, “அப்பாலே போ சாத்தானே! ‘உன் கடவுளாகிய பரலோகத் தந்தையை மட்டுமே வணங்க வேண்டும். அவர் ஒருவருக்குத்தான் தூய்மையான சேவை செய்ய வேண்டும்’ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னார். இப்போது சாத்தான் தோல்வியுடன் அவரைவிட்டு விலகிப் போனான்.
இயேசுவுக்குச் சாத்தான் வைத்த சோதனைகளில்இருந்தும், சோதனைக்காரனாகிய அவனுக்கு அவர் கொடுத்த பதில்களிலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியத் தருணமாக தவக் காலம் இருக்கிறது. ஒரே ஒருமுறை தன்னை வணங்கினால், உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்ஜியங்களையும் தருவதாக இயேசுவிடம் கூறி சாத்தான் ஆசை காட்டினான். அதைப் போலவே அவன் நமக்கும் ஆசை காட்டலாம். சொத்துகளை, சுகங்களை, பதவிகளை, அதிகாரத்தை, அந்தஸ்தைக் காட்டி நமக்கு அவன் வலை விரிக்கலாம்.
சாத்தான் என்னதான் ஆசை காட்டினாலும், இயேசுவைப் போல நாம் கடவுளுக்கு உண்மையானவர்களாக இருக்க வேண்டும். இதுதான் தவக்காலத்தில் நம்மைச் சீரமைத்துக்கொள்ள மீண்டும் தரப்படும் அரிய சந்தர்ப்பம்.
சாத்தான் அடுத்து பரிசுத்த நகரத்துக்கு இயேசுவைக் கொண்டுபோய், ஆலயத்தின் உயரமான இடத்தில் அவரை நிற்கவைத்து, “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், கீழே குதி; ‘அவர் உன்னைக் குறித்து தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளை கொடுப்பார். உன் பாதம் கல்லில் மோதாதபடி அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் சுமந்துகொண்டு போவார்கள்’ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னான். அதற்கு இயேசு, “உன் கடவுளாகிய தந்தையைச் சோதித்துப் பார்க்கக் கூடாது’ எனவும் எழுதப்பட்டிருக்கிறதே” என்று பதில் கூறினார்.
இறைமகன் குறித்து தீர்க்கதரிசனங்களால் நிறைந்திருந்த வேத வார்த்தைகளை வைத்து இயேசுவை மயக்க நினைத்த சாத்தான் இயேசுவின் பதிலால் வெட்கிப்போனான்.
சாத்தானின் புகழ்ச்சியான வார்த்தைகளுக்கு இயேசு மயங்கவில்லை; சாகசம் செய்து பார்ப்பவர் களைப் பிரமிக்க வைக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அப்படிச் செய்து கடவுளாகிய தன் தந்தையைச் சோதிப்பது தவறு என்று வேதவசனங் களிலிருந்து எடுத்துக்காட்டுகிறார்.
ஆனால், சாத்தான் அவரை விடுவதாக இல்லை. மிக மிக உயரமான ஒரு மலைக்கு இயேசுவைக் கொண்டுபோய், இந்த உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்ஜியங்களையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காட்டி, “நீ ஒரேயொரு தடவை என்முன் விழுந்து என்னை வணங்கினால், இவை எல்லாவற்றையும் உனக்குத் தருவேன்” என்று சொன்னான்.
அதற்கு இயேசு, “அப்பாலே போ சாத்தானே! ‘உன் கடவுளாகிய பரலோகத் தந்தையை மட்டுமே வணங்க வேண்டும். அவர் ஒருவருக்குத்தான் தூய்மையான சேவை செய்ய வேண்டும்’ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னார். இப்போது சாத்தான் தோல்வியுடன் அவரைவிட்டு விலகிப் போனான்.
இயேசுவுக்குச் சாத்தான் வைத்த சோதனைகளில்இருந்தும், சோதனைக்காரனாகிய அவனுக்கு அவர் கொடுத்த பதில்களிலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியத் தருணமாக தவக் காலம் இருக்கிறது. ஒரே ஒருமுறை தன்னை வணங்கினால், உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்ஜியங்களையும் தருவதாக இயேசுவிடம் கூறி சாத்தான் ஆசை காட்டினான். அதைப் போலவே அவன் நமக்கும் ஆசை காட்டலாம். சொத்துகளை, சுகங்களை, பதவிகளை, அதிகாரத்தை, அந்தஸ்தைக் காட்டி நமக்கு அவன் வலை விரிக்கலாம்.
சாத்தான் என்னதான் ஆசை காட்டினாலும், இயேசுவைப் போல நாம் கடவுளுக்கு உண்மையானவர்களாக இருக்க வேண்டும். இதுதான் தவக்காலத்தில் நம்மைச் சீரமைத்துக்கொள்ள மீண்டும் தரப்படும் அரிய சந்தர்ப்பம்.
இயேசு சிலுவையில் பாடுகளை அனுபவிக்கும் முன்னரே கெத்செமனே தோட்டத்தில் சிலுவை மரணத்திற்கு நிகரான மரண வேதனையை சந்தித்தார் என்று வேதாகமத்தில் நாம் பார்க்கிறோம்.
இயேசு சிலுவையில் பாடுகளை அனுபவிக்கும் முன்னரே கெத்செமனே தோட்டத்தில் சிலுவை மரணத்திற்கு நிகரான மரண வேதனையை சந்தித்தார் என்று வேதாகமத்தில் நாம் பார்க்கிறோம். இவ்வளவு ஆத்தும வேதனை மற்றும் மரண அவஸ்தைகளை அவர் அனுபவித்ததன் காரணம் என்னவென்றால் அந்த மரணத்தின் மூலம் இந்த உலகத்தின் பாவத்தை சிலுவையிலே சுமந்து தீர்த்தார் என்று நாம் பார்க்கிறோம்.
ஆதாம் மூலம் மனுக்குலத்திற்கு வந்த சாபம், நியாயப்பிரமாணத்தினால் மனுக்குலத்திற்கு வந்த ஆக்கினை என எல்லா சாபங்களிலும் இருந்து நம்மை விடுவிக்கும்படியாக இந்த வேதனையை அனுபவித்தார் என்று கூறப்படுகிறது.
வேதாகமத்தில் 2 கொரிந்தியர் 5-ம் அதிகாரம் 21-ம் வசனத்தில் நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு பாவம் அறியாத அவரை நமக்காக பாவமாக்கினார் என்று சொல்லப்படுள்ளது. 1 பேதுரு 2-ம் அதிகாரம், 24-ம் வசனத்தில் நாம் பாவங்களுக்கு செத்து, நீதிக்குபிழைத்திருக்கும் படிக்கு அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
எனவே தேவ பிள்ளைகளே நமக்காக சிலுவையை மாத்திரம் இயேசு சுமக்கவில்லை. ஆத்தும வியாகுலத்தை மாத்திரம் சுமக்க வில்லை. இயேசு முழு உலகத்தின் பாவத்தையும் சிலுவையில் சுமந்தார். நாம் நீதிக்கு பிழைத்திருக்கும்படிக்கு அவர் நம் பாவங்களை சுமந்தார் என்று வேதம் கூறும் சத்தியத்தை தியானித்து பாவம் நிறைந்த உலகத்திலே நீதியுள்ள வாழ்க்கை வாழ தேவன் நமக்கு கிருபை தருவாராக.
சகோ.கிங்ஸ்லி, கே.செட்டிபாளையம்.
ஆதாம் மூலம் மனுக்குலத்திற்கு வந்த சாபம், நியாயப்பிரமாணத்தினால் மனுக்குலத்திற்கு வந்த ஆக்கினை என எல்லா சாபங்களிலும் இருந்து நம்மை விடுவிக்கும்படியாக இந்த வேதனையை அனுபவித்தார் என்று கூறப்படுகிறது.
வேதாகமத்தில் 2 கொரிந்தியர் 5-ம் அதிகாரம் 21-ம் வசனத்தில் நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு பாவம் அறியாத அவரை நமக்காக பாவமாக்கினார் என்று சொல்லப்படுள்ளது. 1 பேதுரு 2-ம் அதிகாரம், 24-ம் வசனத்தில் நாம் பாவங்களுக்கு செத்து, நீதிக்குபிழைத்திருக்கும் படிக்கு அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
எனவே தேவ பிள்ளைகளே நமக்காக சிலுவையை மாத்திரம் இயேசு சுமக்கவில்லை. ஆத்தும வியாகுலத்தை மாத்திரம் சுமக்க வில்லை. இயேசு முழு உலகத்தின் பாவத்தையும் சிலுவையில் சுமந்தார். நாம் நீதிக்கு பிழைத்திருக்கும்படிக்கு அவர் நம் பாவங்களை சுமந்தார் என்று வேதம் கூறும் சத்தியத்தை தியானித்து பாவம் நிறைந்த உலகத்திலே நீதியுள்ள வாழ்க்கை வாழ தேவன் நமக்கு கிருபை தருவாராக.
சகோ.கிங்ஸ்லி, கே.செட்டிபாளையம்.
பூண்டி மாதா பேராலயத்தில் தவக்கால 3-ம் வெள்ளி திருப்பலி நிறைவேற்றப்பட்டது. மேலும் சிலுவைப்பாதை ஊர்வலமும் நடந்தது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருேக உள்ள பூண்டியில் பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் உள்ளது. பூண்டி மாதா பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் அன்று தொடங்கியது. இந்த ஆலயத்தில் தவக்காலத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் சிறப்பு திருப்பலியும் சிலுவை பாதையும் நடைபெற்று வருகின்றன. தவக்காலத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையான நேற்று மாலை பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கிய சாமி தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
திருப்பலியில் துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தை ராஜ், உதவி பங்குத்தந்தை அருண்சவரிராஜ், ஆன்மிக தந்தையர் அருளானந்தம், கருணைதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பலிக்கு பின்னர் மக்களின் நன்மைக்காக ஏசுநாதர் பட்ட துயரங்களை விளக்கும் சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெற்றது. ஏசுநாதரை சிலுவையில் அறைய தீர்ப்பளிக்கப்பட்ட நிகழ்விலிருந்து, சிலுவையில் அறையப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் வரையான 14 நிலைகள் பூண்டிமாதா பேராலயத்தில் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியம் மூலம் ஏசுநாதர் மக்களுக்காக பட்ட துயரங்களை 14 நிலைகளையும் அருட்தந்தையர்கள் விளக்கி கூறினர்.
திருப்பலியில் திருக்காட்டுப்பள்ளி, பூண்டி மற்றும் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதி கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
திருப்பலியில் துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தை ராஜ், உதவி பங்குத்தந்தை அருண்சவரிராஜ், ஆன்மிக தந்தையர் அருளானந்தம், கருணைதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பலிக்கு பின்னர் மக்களின் நன்மைக்காக ஏசுநாதர் பட்ட துயரங்களை விளக்கும் சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெற்றது. ஏசுநாதரை சிலுவையில் அறைய தீர்ப்பளிக்கப்பட்ட நிகழ்விலிருந்து, சிலுவையில் அறையப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் வரையான 14 நிலைகள் பூண்டிமாதா பேராலயத்தில் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியம் மூலம் ஏசுநாதர் மக்களுக்காக பட்ட துயரங்களை 14 நிலைகளையும் அருட்தந்தையர்கள் விளக்கி கூறினர்.
திருப்பலியில் திருக்காட்டுப்பள்ளி, பூண்டி மற்றும் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதி கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
பெங்களூரு கே.பி.அக்ரஹாரத்தில் உள்ள சீயோன் ஆலயத்தில் 31-வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கோலாகலமாக நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
பெங்களூரு கே.பி.அக்ரஹாரம் நேதாஜி நகரில் அமைந்து உள்ள சீயோன் ஆலயத்தில் ஆண்டுதோறும் பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சீயோன் ஆலயத்தில் 31-வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த பண்டிகையை ஆலயத்தின் ஆயர் செல்வி தாசன் அதிகாலை 5.30 மணிக்கு ஜெயம் செய்து தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக தூய லூக்கா ஆலயத்தின் ஆயர் வில்சன் தாசன் கலந்து கொண்டார். அருட்திரு அறிவர் மோகன்ராஜ் திருச்சபையில் தேவசெய்தியை வழங்கி பேசியதாவது:-
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சீயோன் ஆலயம், சிறிய ஆலயமாக இருந்தது. தற்போது இந்த ஆலயம் பிரமாண்ட வளர்ச்சி அடைந்து உள்ளது. இதற்கு ஆலயத்தின் ஆயர், பரிபாலன குழு மற்றும் சபை மக்களே காரணம். சீயோன் ஆலயம் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.
மக்களாகிய நாம் அனைவரும் தேவனுடைய கரங்களுக்குள் அடங்கி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தகுந்த நேரத்தில் தேவன் நம்மை உயர்த்துவார். இந்த உலகத்தில் என்ன நடந்தாலும் அதுகுறித்து நாம் கவலைப்பட வேண்டாம். எல்லாவற்றையும் தேவன் பார்த்து கொள்வார். மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதே நேரத்தில் விவேகத்திலும் உறுதியாக இருக்க வேண்டும். தேவன் தான் நம்மை எப்போதும் சீர்படுத்தி, சிறப்பு படுத்தி நிலை நிறுத்துகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதன்பின்னர் அவர் 31-வது ஆண்டு பிரதிஷ்டை கொண்டாடும் சீயோன் ஆலய ஆயர் செல்வி தாசன் மற்றும் திருச்சபையினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
இதனை தொடர்ந்து சீயோன் ஆலயத்தின் ஆயர் செல்வி தாசன் பேசியதாவது:-
31-வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கொண்டாடும் உங்களுக்கு எனது அன்பு வாழ்த்துகள். அசனம் என்ற வார்த்தை ஒன்று சேர்ந்து சாப்பிடுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. நமது ஆலயத்தில் நடக்கும் அசன பண்டிகை இணைந்து சாப்பிடுதல் மற்றும் அனைத்து சமூக மக்களின் ஒற்றுமைக்கு ஒரு அடையாளம். அசன விருந்து சமய வேறுபாடுகளை கடந்ததாக மாற வேண்டும்.
இந்த விருந்து திருச்சபையின் பிரிவினைகளை கலைந்து ஒரே குடும்பமாக வாழ வழிவகுக்கிறது. இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாட பணமும், பொருளும் தந்து உதவி செய்த அனைவரையும் அன்போடு வாழ்த்துகிறேன். கொரோனா காலத்திலும் நம்மை பாதுகாத்த ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து மதியம் 12 மணியளவில் சிறப்பு ஆராதனைக்கு பிறகு அசன பண்டிகை நடைபெற்றது. அசன விருந்தை ஆயர் செல்வி தாசன் தொடங்கி வைத்தார். இந்த விருந்தில் நேதாஜி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சபையில் இன்னிசையுடன் கூடிய ஆராதனை பாடல்கள் இடம்பெற்று இருந்தன.
ஆராதனையில் சீயோன் ஆலய குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர். விழாவையொட்டி ஆலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இது காண்பவர்களின் கண்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய ஆயர் செல்வி தாசன், செயலாளர் சாம்ராஜ் தேவசீலன், பொருளாளர் பீட்டர் தங்கதுரை, கமிட்டி உறுப்பினர்கள், ஆலய ஆண்கள், பெண்கள் ஐக்கியம், வாலிபர்கள் ஐக்கியம், ஞாயிறு பள்ளி, சீயோன் ஆலய குடும்பத்தினர் செய்து இருந்தனர். மேலும் பண்டிகையில் பல்வேறு தேவாலயங்களை சேர்ந்த ஆயர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அசன விருந்தை தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் யோவான் குழுவினர் செய்து இருந்தனர்.
இந்த பண்டிகையை ஆலயத்தின் ஆயர் செல்வி தாசன் அதிகாலை 5.30 மணிக்கு ஜெயம் செய்து தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக தூய லூக்கா ஆலயத்தின் ஆயர் வில்சன் தாசன் கலந்து கொண்டார். அருட்திரு அறிவர் மோகன்ராஜ் திருச்சபையில் தேவசெய்தியை வழங்கி பேசியதாவது:-
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சீயோன் ஆலயம், சிறிய ஆலயமாக இருந்தது. தற்போது இந்த ஆலயம் பிரமாண்ட வளர்ச்சி அடைந்து உள்ளது. இதற்கு ஆலயத்தின் ஆயர், பரிபாலன குழு மற்றும் சபை மக்களே காரணம். சீயோன் ஆலயம் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.
மக்களாகிய நாம் அனைவரும் தேவனுடைய கரங்களுக்குள் அடங்கி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தகுந்த நேரத்தில் தேவன் நம்மை உயர்த்துவார். இந்த உலகத்தில் என்ன நடந்தாலும் அதுகுறித்து நாம் கவலைப்பட வேண்டாம். எல்லாவற்றையும் தேவன் பார்த்து கொள்வார். மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதே நேரத்தில் விவேகத்திலும் உறுதியாக இருக்க வேண்டும். தேவன் தான் நம்மை எப்போதும் சீர்படுத்தி, சிறப்பு படுத்தி நிலை நிறுத்துகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதன்பின்னர் அவர் 31-வது ஆண்டு பிரதிஷ்டை கொண்டாடும் சீயோன் ஆலய ஆயர் செல்வி தாசன் மற்றும் திருச்சபையினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
இதனை தொடர்ந்து சீயோன் ஆலயத்தின் ஆயர் செல்வி தாசன் பேசியதாவது:-
31-வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கொண்டாடும் உங்களுக்கு எனது அன்பு வாழ்த்துகள். அசனம் என்ற வார்த்தை ஒன்று சேர்ந்து சாப்பிடுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. நமது ஆலயத்தில் நடக்கும் அசன பண்டிகை இணைந்து சாப்பிடுதல் மற்றும் அனைத்து சமூக மக்களின் ஒற்றுமைக்கு ஒரு அடையாளம். அசன விருந்து சமய வேறுபாடுகளை கடந்ததாக மாற வேண்டும்.
இந்த விருந்து திருச்சபையின் பிரிவினைகளை கலைந்து ஒரே குடும்பமாக வாழ வழிவகுக்கிறது. இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாட பணமும், பொருளும் தந்து உதவி செய்த அனைவரையும் அன்போடு வாழ்த்துகிறேன். கொரோனா காலத்திலும் நம்மை பாதுகாத்த ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து மதியம் 12 மணியளவில் சிறப்பு ஆராதனைக்கு பிறகு அசன பண்டிகை நடைபெற்றது. அசன விருந்தை ஆயர் செல்வி தாசன் தொடங்கி வைத்தார். இந்த விருந்தில் நேதாஜி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சபையில் இன்னிசையுடன் கூடிய ஆராதனை பாடல்கள் இடம்பெற்று இருந்தன.
ஆராதனையில் சீயோன் ஆலய குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர். விழாவையொட்டி ஆலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இது காண்பவர்களின் கண்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய ஆயர் செல்வி தாசன், செயலாளர் சாம்ராஜ் தேவசீலன், பொருளாளர் பீட்டர் தங்கதுரை, கமிட்டி உறுப்பினர்கள், ஆலய ஆண்கள், பெண்கள் ஐக்கியம், வாலிபர்கள் ஐக்கியம், ஞாயிறு பள்ளி, சீயோன் ஆலய குடும்பத்தினர் செய்து இருந்தனர். மேலும் பண்டிகையில் பல்வேறு தேவாலயங்களை சேர்ந்த ஆயர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அசன விருந்தை தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் யோவான் குழுவினர் செய்து இருந்தனர்.






