search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூண்டி மாதா பேராலயத்தில் சிலுவைப்பாதை ஊர்வலம்
    X
    பூண்டி மாதா பேராலயத்தில் சிலுவைப்பாதை ஊர்வலம்

    பூண்டி மாதா பேராலயத்தில் சிலுவைப்பாதை ஊர்வலம்

    பூண்டி மாதா பேராலயத்தில் தவக்கால 3-ம் வெள்ளி திருப்பலி நிறைவேற்றப்பட்டது. மேலும் சிலுவைப்பாதை ஊர்வலமும் நடந்தது.
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருேக உள்ள பூண்டியில் பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் உள்ளது. பூண்டி மாதா பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் அன்று தொடங்கியது. இந்த ஆலயத்தில் தவக்காலத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் சிறப்பு திருப்பலியும் சிலுவை பாதையும் நடைபெற்று வருகின்றன. தவக்காலத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையான நேற்று மாலை பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கிய சாமி தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    திருப்பலியில் துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தை ராஜ், உதவி பங்குத்தந்தை அருண்சவரிராஜ், ஆன்மிக தந்தையர் அருளானந்தம், கருணைதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருப்பலிக்கு பின்னர் மக்களின் நன்மைக்காக ஏசுநாதர் பட்ட துயரங்களை விளக்கும் சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெற்றது. ஏசுநாதரை சிலுவையில் அறைய தீர்ப்பளிக்கப்பட்ட நிகழ்விலிருந்து, சிலுவையில் அறையப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் வரையான 14 நிலைகள் பூண்டிமாதா பேராலயத்தில் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியம் மூலம் ஏசுநாதர் மக்களுக்காக பட்ட துயரங்களை 14 நிலைகளையும் அருட்தந்தையர்கள் விளக்கி கூறினர்.

    திருப்பலியில் திருக்காட்டுப்பள்ளி, பூண்டி மற்றும் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதி கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
    Next Story
    ×