என் மலர்
கிறித்தவம்
கொடைக்கானல் பாக்கியபுரம் பகுதியில் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடைக்கானல் பாக்கியபுரம் பகுதியில் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இதன் 33-ம் ஆண்டு திருவிழா கடந்த 31-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினசரி சிறப்பு திருப்பலிகள், மறையுரைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு திருப்பலியுடன் தங்கமகுடம் சூட்டும் விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலையில் திருவிழா திருப்பலி நிறைவடைந்தவுடன் மின்அலங்கார தேர் பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு நாயுடுபுரம் கன்னியர் இல்லத்தை அடைந்தது. திருவிழாவின் இறுதி நாளான நேற்று பகல் சப்பர பவனி கன்னியர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு மாலையில் ஆலயத்தை அடைந்தது. அங்கு நன்றித் திருப்பலியுடன் கொடி இறக்கம் நடைபெற்றது.
திருவிழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை அடைக்கலராஜா, அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர், பக்த சபையினர், அன்பியங்கள் மற்றும் பங்கு இறை மக்கள் செய்து இருந்தனர்.
விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு திருப்பலியுடன் தங்கமகுடம் சூட்டும் விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலையில் திருவிழா திருப்பலி நிறைவடைந்தவுடன் மின்அலங்கார தேர் பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு நாயுடுபுரம் கன்னியர் இல்லத்தை அடைந்தது. திருவிழாவின் இறுதி நாளான நேற்று பகல் சப்பர பவனி கன்னியர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு மாலையில் ஆலயத்தை அடைந்தது. அங்கு நன்றித் திருப்பலியுடன் கொடி இறக்கம் நடைபெற்றது.
திருவிழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை அடைக்கலராஜா, அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர், பக்த சபையினர், அன்பியங்கள் மற்றும் பங்கு இறை மக்கள் செய்து இருந்தனர்.
தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் பூண்டியில் மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புனித கன்னி மரியாள் பிறப்பு திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புனித கன்னி மரியாள் பிறப்பு நாளான நேற்றுமுன்தினம் மாலை பெரிய தேர் பவனி நடைபெற்றது. முன்னதாக கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் மறை வட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ், ஆன்மிக தந்தை அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் வண்ண விளக்குகளாலும், மல்லிகை பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் புனித கன்னி மரியாள் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து கும்பகோணம் மறை மாவட்ட ஆயர், தேரை புனிதம் செய்து பவனியை தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கன்னி மரியாளின் காலடியில் மலர் மாலைகள், சேலைகளை வைத்து வழிபட்டனர்.
தேர்பவனி நிறைவடைந்தவுடன் நேற்று காலை சிறப்பு திருப்பலி நடந்தது. பூண்டி மாதா பேராலய திருவிழாவையொட்டி தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேராலயத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருக்காட்டுப்பள்ளி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். விழா ஏற்பாடுகளை பேராலய அதிபர் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.
புனித கன்னி மரியாள் பிறப்பு நாளான நேற்றுமுன்தினம் மாலை பெரிய தேர் பவனி நடைபெற்றது. முன்னதாக கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் மறை வட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ், ஆன்மிக தந்தை அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் வண்ண விளக்குகளாலும், மல்லிகை பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் புனித கன்னி மரியாள் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து கும்பகோணம் மறை மாவட்ட ஆயர், தேரை புனிதம் செய்து பவனியை தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கன்னி மரியாளின் காலடியில் மலர் மாலைகள், சேலைகளை வைத்து வழிபட்டனர்.
தேர்பவனி நிறைவடைந்தவுடன் நேற்று காலை சிறப்பு திருப்பலி நடந்தது. பூண்டி மாதா பேராலய திருவிழாவையொட்டி தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேராலயத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருக்காட்டுப்பள்ளி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். விழா ஏற்பாடுகளை பேராலய அதிபர் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.
திருச்சி மேலப்புதூரில் உள்ள புனித மரியன்னை பேராலயத்தில் தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மேலப்புதூரில் உள்ள புனித மரியன்னை பேராலய பங்கு திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திண்டுக்கல் ஆயர் தாமஸ் பால்சாமி கொடியேற்றி வைத்தார். இதையொட்டி நவநாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு திருப்பலியும், சிறப்பு மறையுரையும் நடந்தது. 10-ம் நாளான நேற்று காலை 8 மணிக்கு, கீரனூர் அம்மாசத்திரம் மலைமாதா திருத்தல பங்கு தந்தை ஜேம்ஸ் செல்வநாதன் மணித்திருப்பலியை நடத்தினார்.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். மாலை 6.30 மணிக்கு பேராலயத்தில் அன்னையின் தேர்பவனியை புனிதப்படுத்தி, நற்கருணை ஆசீர் நடந்தது. இதை திருச்சி ஜான்பால் பல்சமய உரையாடல் மன்ற அருட்தந்தை மரியானுஸ் ஐசக் நடத்தினார். அதைத்தொடர்ந்து அருங்கொடை இல்ல இயக்குனர் ஆல்பர்ட் மறையுரை நடத்தினார். பின்னர் பேராலய வளாகத்தில் இருந்து 3 தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டது.
புனித மரியன்னை பேராலய பங்கு தந்தை த.சகாயராஜ் தலைமையில் நடந்த தேர்பவனியில் அருட்தந்தைகள் ஆ.சகாயராஜ், மரியலூயிஸ் மற்றும் அருட்சகோதரிகள் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தேர்பவனிக்கு முன்பாக கிறிஸ்தவ பாடல்களை பாடியபடி கிறிஸ்தவர்கள் சென்றனர்.
பேராலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர்பவனியானது மேலப்புதூர் கான்வென்ட் ரோடு, பீமநகர் மார்சிங்பேட்டை ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பேராலய வளாகத்தை அடைந்தது. அதன் பின்னர் நர்கருணை ஆசீர் வழங்கப்பட்டு, கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். மாலை 6.30 மணிக்கு பேராலயத்தில் அன்னையின் தேர்பவனியை புனிதப்படுத்தி, நற்கருணை ஆசீர் நடந்தது. இதை திருச்சி ஜான்பால் பல்சமய உரையாடல் மன்ற அருட்தந்தை மரியானுஸ் ஐசக் நடத்தினார். அதைத்தொடர்ந்து அருங்கொடை இல்ல இயக்குனர் ஆல்பர்ட் மறையுரை நடத்தினார். பின்னர் பேராலய வளாகத்தில் இருந்து 3 தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டது.
புனித மரியன்னை பேராலய பங்கு தந்தை த.சகாயராஜ் தலைமையில் நடந்த தேர்பவனியில் அருட்தந்தைகள் ஆ.சகாயராஜ், மரியலூயிஸ் மற்றும் அருட்சகோதரிகள் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தேர்பவனிக்கு முன்பாக கிறிஸ்தவ பாடல்களை பாடியபடி கிறிஸ்தவர்கள் சென்றனர்.
பேராலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர்பவனியானது மேலப்புதூர் கான்வென்ட் ரோடு, பீமநகர் மார்சிங்பேட்டை ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பேராலய வளாகத்தை அடைந்தது. அதன் பின்னர் நர்கருணை ஆசீர் வழங்கப்பட்டு, கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித ஆரோக்கிய மாதா பெரிய தேர்பவனி நேற்று இரவு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முக்கிய இடம் வகிக்கிறது. மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் மாதா ஆலயம் அமைந்துள்ள வேளாங்கண்ணி, கீழை நாடுகளின் “லூர்து நகர்“ என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது.
கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்க கூடிய “பசிலிக்கா“ என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும். இங்கு ஆண்டுதோறும் 11 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும்.
துன்பத்தில் துவண்டு, அமைதி தேடி மன்றாடி வருபவர்களின் மனதை ஆற்றுப்படுத்தி புது வாழ்விற்கு வழிகாட்டி வரும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 8-ந் தேதியையொட்டி இந்த விழா நடைபெறுவதாக ஐதீகம். இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாதாவை வழிபட்டு செல்வார்கள். விழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வேண்டி, விரதம் இருந்து நடைபயணமாக வேளாங்கண்ணிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவ்வாறு பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா கடந்த மாதம்(ஆகஸ்ட்) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் பேராலயத்திலும், பேராலய வளாகத்தில் உள்ள விண்மீன் ஆலயம், மேல்கோவில், கீழ்கோவில் ஆகிய இடங்களிலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதேபோல சிலுவை பாதை வழிபாடு, ஜெப மாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்றன.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் பிரதான நிகழ்ச்சியான மாதா பெரிய தேர்பவனி நேற்று இரவு நடந்தது. நிகழ்ச்சியில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப் பட்டது.
விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேர்பவனியையொட்டி வேளாங்கண்ணி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆரோக்கிய மாதா பிறந்த நாளான இன்று(சனிக்கிழமை) காலை 6 மணியளவில் சிறப்பு கூட்டு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்க கூடிய “பசிலிக்கா“ என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும். இங்கு ஆண்டுதோறும் 11 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும்.
துன்பத்தில் துவண்டு, அமைதி தேடி மன்றாடி வருபவர்களின் மனதை ஆற்றுப்படுத்தி புது வாழ்விற்கு வழிகாட்டி வரும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 8-ந் தேதியையொட்டி இந்த விழா நடைபெறுவதாக ஐதீகம். இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாதாவை வழிபட்டு செல்வார்கள். விழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வேண்டி, விரதம் இருந்து நடைபயணமாக வேளாங்கண்ணிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவ்வாறு பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா கடந்த மாதம்(ஆகஸ்ட்) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் பேராலயத்திலும், பேராலய வளாகத்தில் உள்ள விண்மீன் ஆலயம், மேல்கோவில், கீழ்கோவில் ஆகிய இடங்களிலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதேபோல சிலுவை பாதை வழிபாடு, ஜெப மாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்றன.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் பிரதான நிகழ்ச்சியான மாதா பெரிய தேர்பவனி நேற்று இரவு நடந்தது. நிகழ்ச்சியில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப் பட்டது.
விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேர்பவனியையொட்டி வேளாங்கண்ணி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆரோக்கிய மாதா பிறந்த நாளான இன்று(சனிக்கிழமை) காலை 6 மணியளவில் சிறப்பு கூட்டு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
திருச்சி கருமண்டபத்தில் உள்ள குணமளிக்கும் மாதா ஆலய பங்கு திருவிழா நேற்று தொடங்கியது. இன்று இரவு 7 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது.
திருச்சி கருமண்டபத்தில் உள்ள குணமளிக்கும் மாதா ஆலய பங்கு திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி, ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை 6 மணிக்கு ஆலய வளாகத்தில் பங்கு தந்தை சார்லஸ் கொடியேற்றி வைத்தார். அப்போது வாணவேடிக்கை நடந்தது. தொடர்ந்து 6.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது.
இதில் புனித லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை மரிவளன், பிராட்டியூர் மான்போர்ட் மாநில தலைமையக அருட்தந்தை அலெக்சாண்டர் ஜோசப், கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜேம்ஸ் விக்டர், சாந்தோம் ஆசிரம இல்ல தலைவர் அருள்ராஜ், குணமளிக்கும் மாதா ஆலய கமிட்டி செயலாளர் கரோலின் ராஜன், துணைத்தலைவர் ஜோசப், நிதிக்குழு செயலாளர் எழிலன் மற்றும் நிர்வாகிகள், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இன்று(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை உதவி பேராசிரியை சுபா தலைமையில் பெண் குழந்தைகள் தினம் கொண்டாட்டமும், மாலை 6 மணிக்கு அன்னை மரியா பிறப்பு விழா திருப்பலியும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது. தேர்பவனியை கிராப்பட்டி புனித குழந்தை தெரசாள் ஆலய வட்டார முதல்வர் ஜோசப் லாரன்ஸ் தொடங்கி வைக்கிறார். நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.
இதில் புனித லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை மரிவளன், பிராட்டியூர் மான்போர்ட் மாநில தலைமையக அருட்தந்தை அலெக்சாண்டர் ஜோசப், கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜேம்ஸ் விக்டர், சாந்தோம் ஆசிரம இல்ல தலைவர் அருள்ராஜ், குணமளிக்கும் மாதா ஆலய கமிட்டி செயலாளர் கரோலின் ராஜன், துணைத்தலைவர் ஜோசப், நிதிக்குழு செயலாளர் எழிலன் மற்றும் நிர்வாகிகள், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இன்று(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை உதவி பேராசிரியை சுபா தலைமையில் பெண் குழந்தைகள் தினம் கொண்டாட்டமும், மாலை 6 மணிக்கு அன்னை மரியா பிறப்பு விழா திருப்பலியும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது. தேர்பவனியை கிராப்பட்டி புனித குழந்தை தெரசாள் ஆலய வட்டார முதல்வர் ஜோசப் லாரன்ஸ் தொடங்கி வைக்கிறார். நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பெரிய தேர்பவனி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா பேராலயம், மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக திகழ்கிறது. அனைத்து மதத்தினரும் நம்பிக்கையுடன் ஆரோக்கியமாதாவை வழிபட்டு செல்வதால் வேளாங்கண்ணி, ஆன்மிக சுற்றுலா தலமாக திகழ்கிறது. கீழை நாடுகளின் “லூர்து நகர்” என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது வேளாங்கண்ணி.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந் தேதியையொட்டி ஆண்டுதோறும் வேளாங்கண்ணி பேராலயத்தில் 11 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வழக்கம்போல் இந்த ஆண்டு வேளாங்கண்ணி பேராலய திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவையொட்டி பேராலயம், விண்மீன் ஆலயம், பேராலய மேல்கோவில் மற்றும் கீழ்க்கோவிலில் நாள்தோறும் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன.
சிறிய தேர்பவனியும் நடைபெற்று வருகிறது. இதை காண இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்து உள்ளனர். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் சிலுவை பாதை வழிபாடு, செப மாலை, நவநாள் செபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆரோக்கியமாதாவை தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்கள் பலர் பாத யாத்திரையாகவும் வேளாங் கண்ணிக்கு வருகிறார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கியமாதாவின் பெரிய தேர் பவனி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணி அளவில் நடைபெறு கிறது. பெரிய தேர்பவனி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வேளாங்கண்ணியில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நாளை 8-ந் தேதி (சனிக்கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந் தேதியையொட்டி ஆண்டுதோறும் வேளாங்கண்ணி பேராலயத்தில் 11 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வழக்கம்போல் இந்த ஆண்டு வேளாங்கண்ணி பேராலய திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவையொட்டி பேராலயம், விண்மீன் ஆலயம், பேராலய மேல்கோவில் மற்றும் கீழ்க்கோவிலில் நாள்தோறும் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன.
சிறிய தேர்பவனியும் நடைபெற்று வருகிறது. இதை காண இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்து உள்ளனர். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் சிலுவை பாதை வழிபாடு, செப மாலை, நவநாள் செபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆரோக்கியமாதாவை தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்கள் பலர் பாத யாத்திரையாகவும் வேளாங் கண்ணிக்கு வருகிறார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கியமாதாவின் பெரிய தேர் பவனி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணி அளவில் நடைபெறு கிறது. பெரிய தேர்பவனி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வேளாங்கண்ணியில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நாளை 8-ந் தேதி (சனிக்கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
புதுவை அரியாங்குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் 328-ம் ஆண்டு பெருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
புதுவை அரியாங்குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் 328-ம் ஆண்டு பெருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சென்னை மயிலைமறை வட்ட முதன்மை குரு ஸ்டேன்லி செபாஸ்டின் நாளை காலை 6 மணி திருப்பலிக்கு பின் கொடியை ஏற்றி வைத்து பெருவிழாவை தொடங்கி வைக்கிறார். அன்று மாலை 5.30 மணிக்கு தேர் பவனி, நற்கருணை ஆசீர் இடம் பெறுகின்றன. ஆரோக்கிய அன்னை பிறந்த நாளான 8-ந் தேதி மாலை வீதிகளில் சிறப்பு தேர் பவனி நடை பெறுகிறது.
அதைத்தொடர்ந்து நவநாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு திருப்பலி, மறையுரை, சிறிய தேர்பவனி, தேவ நற்கருணை ஆசீர் ஆகியவை இடம்பெறுகின்றன. அருட் தந்தையர்கள் அந்தோணி ராஜ், அமல்ராஜ், பெரிய நாயகசாமி, அந்தோணிசாமி, மார்ட்டின் டிகுருஸ், ஜான் பிரிட்டோ, விக்டர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றி சிறப்பு மறையுரை வழங்கு கின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ் வான ஆண்டு பெருவிழா வருகிற 16-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5 மணிக்கும், 6.15 மணிக்கும் திருப்பலிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து 8 மணிக்கு புதுவை- கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறு கிறது.
மதியம் 11.30-க்கு சிறப்பு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு திருப்பலி, அதனைத்தொடர்ந்து ஆடம்பர தேர் பவனியும் நடைபெறுகிறது. மறுநாள் (17-ந்தேதி) காலை 6 மணி திருப்பலிக்குப்பின் கொடி இறக்கம் செய்யப்பட்டு பெருவிழா நிறைவு பெறு கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை தாமஸ் தலைமையில் பங்கு நிர்வாக குழுவினர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
சென்னை மயிலைமறை வட்ட முதன்மை குரு ஸ்டேன்லி செபாஸ்டின் நாளை காலை 6 மணி திருப்பலிக்கு பின் கொடியை ஏற்றி வைத்து பெருவிழாவை தொடங்கி வைக்கிறார். அன்று மாலை 5.30 மணிக்கு தேர் பவனி, நற்கருணை ஆசீர் இடம் பெறுகின்றன. ஆரோக்கிய அன்னை பிறந்த நாளான 8-ந் தேதி மாலை வீதிகளில் சிறப்பு தேர் பவனி நடை பெறுகிறது.
அதைத்தொடர்ந்து நவநாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு திருப்பலி, மறையுரை, சிறிய தேர்பவனி, தேவ நற்கருணை ஆசீர் ஆகியவை இடம்பெறுகின்றன. அருட் தந்தையர்கள் அந்தோணி ராஜ், அமல்ராஜ், பெரிய நாயகசாமி, அந்தோணிசாமி, மார்ட்டின் டிகுருஸ், ஜான் பிரிட்டோ, விக்டர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றி சிறப்பு மறையுரை வழங்கு கின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ் வான ஆண்டு பெருவிழா வருகிற 16-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5 மணிக்கும், 6.15 மணிக்கும் திருப்பலிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து 8 மணிக்கு புதுவை- கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறு கிறது.
மதியம் 11.30-க்கு சிறப்பு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு திருப்பலி, அதனைத்தொடர்ந்து ஆடம்பர தேர் பவனியும் நடைபெறுகிறது. மறுநாள் (17-ந்தேதி) காலை 6 மணி திருப்பலிக்குப்பின் கொடி இறக்கம் செய்யப்பட்டு பெருவிழா நிறைவு பெறு கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை தாமஸ் தலைமையில் பங்கு நிர்வாக குழுவினர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.40 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் யேசு ரெத்தினம் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. வேங்கோடு அருட்பணியாளர் பெர்க்மான்ஸ் மைக்கேல் கெனட் மறையுரை வழங்குகிறார். 9-ந் தேதி காலை 6 மணிக்கு அருட்பணியாளர் ஜெரால்டு ஜஸ்டின் தலைமை தாங்கி திருப்பலியும், அருட்பணியாளர் ஜோஸ் ராபின்சன் மறையுரையும் வழங்குகிறார்கள். இரவு 7 மணிக்கு அன்பின் விருந்து நடைபெறுகிறது. 12-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு சகாய அன்னையின் தேர்பவனி நடக்கிறது.
15-ந் தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியை அருட்பணி ஜெயக்குமார் தலைமை தாங்கி நிறைவேற்றுகிறார். மாடத்தட்டுவிளை அருட்பணியாளர் ஜெயக்குமார் மறையுரை வழங்குகிறார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார். பொருளாளர் அகஸ்டின் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்பவனி நடக்கிறது.
16-ந் தேதி காலை 9 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட குருகுல முதல்வர் ஹிலாரியுஸ் தலைமை தாங்கி சிறப்பு திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்குகிறார். 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்பவனி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீர், இரவு 8 மணிக்கு தூய மரியன்னை இளையோர் இயக்கம் வழங்கும் நடன நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இல்ல அருட்பணியாளர்கள் டோமினிக் எம்.கடாட்ச தாஸ், விக்டர் ஆன்றனி ராஜ், ஆன்றனி, ஆரோக்கிய தாஸ், ஜெரால்டு ஜெஸ்டின், ஜோஸ் ராபின்சன், பங்குபேரவை துணை தலைவர் வின்சென்ட்ராஜ், செயலர் விஜின் மோன் மணி, துணை செயலர் ஹலன்மேரி, பொருளர் விஜிகலா மற்றும் பங்குபேரவை நிர்வாகிகள், பங்குமக்கள், அருட்சகோதரிகள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
அதைத்தொடர்ந்து குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் யேசு ரெத்தினம் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. வேங்கோடு அருட்பணியாளர் பெர்க்மான்ஸ் மைக்கேல் கெனட் மறையுரை வழங்குகிறார். 9-ந் தேதி காலை 6 மணிக்கு அருட்பணியாளர் ஜெரால்டு ஜஸ்டின் தலைமை தாங்கி திருப்பலியும், அருட்பணியாளர் ஜோஸ் ராபின்சன் மறையுரையும் வழங்குகிறார்கள். இரவு 7 மணிக்கு அன்பின் விருந்து நடைபெறுகிறது. 12-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு சகாய அன்னையின் தேர்பவனி நடக்கிறது.
15-ந் தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியை அருட்பணி ஜெயக்குமார் தலைமை தாங்கி நிறைவேற்றுகிறார். மாடத்தட்டுவிளை அருட்பணியாளர் ஜெயக்குமார் மறையுரை வழங்குகிறார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார். பொருளாளர் அகஸ்டின் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்பவனி நடக்கிறது.
16-ந் தேதி காலை 9 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட குருகுல முதல்வர் ஹிலாரியுஸ் தலைமை தாங்கி சிறப்பு திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்குகிறார். 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்பவனி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீர், இரவு 8 மணிக்கு தூய மரியன்னை இளையோர் இயக்கம் வழங்கும் நடன நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இல்ல அருட்பணியாளர்கள் டோமினிக் எம்.கடாட்ச தாஸ், விக்டர் ஆன்றனி ராஜ், ஆன்றனி, ஆரோக்கிய தாஸ், ஜெரால்டு ஜெஸ்டின், ஜோஸ் ராபின்சன், பங்குபேரவை துணை தலைவர் வின்சென்ட்ராஜ், செயலர் விஜின் மோன் மணி, துணை செயலர் ஹலன்மேரி, பொருளர் விஜிகலா மற்றும் பங்குபேரவை நிர்வாகிகள், பங்குமக்கள், அருட்சகோதரிகள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) பெரிய தேர்பவனி நடக்கிறது. இதனையொட்டி வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்
நாகை மாவட்டத்தில் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் வேளாங்கண்ணி திகழ்கிறது.
வேளாங்கண்ணி பேராலயத்தில், மாதாவின் பிறந்தநாள் 11 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பேராலய திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருகின்றனர்.
தொடர்ந்து விழா நாட்களில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் சிறிய தேர்பவனிகள் நடைபெறும். மேலும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக விழா நாட்களில் தினந்தோறும் ஆலய கொடிமரத்தில் திருக்கொடியேற்றப்படும். அதன்படி நேற்று கொடியேற்றும் நிகழ்ச்சி பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.

நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர். மேலும் தென்னை மரக்கன்றுகளை கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தினர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய திருத்தேர்பவனி நாளை(வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் நடக்கிறது. இந்த தேர்பவனியை காண்பதற்காக சென்னை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுச்சேரி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாதா செரூபம் வைத்து அலங்கரிக்கப்பட்ட தேரை இழுத்துகொண்டு பாதையாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
நாளை மறுநாள்(சனிக்கிழமை) அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பேராலய கீழ்க்கோவிலில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
வேளாங்கண்ணி பேராலயத்தில், மாதாவின் பிறந்தநாள் 11 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பேராலய திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருகின்றனர்.
தொடர்ந்து விழா நாட்களில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் சிறிய தேர்பவனிகள் நடைபெறும். மேலும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக விழா நாட்களில் தினந்தோறும் ஆலய கொடிமரத்தில் திருக்கொடியேற்றப்படும். அதன்படி நேற்று கொடியேற்றும் நிகழ்ச்சி பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.

வேளாங்கண்ணிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வந்த பக்தர்கள் தென்னங்கன்றுகளை ஆலயத்துக்கு கொண்டு வந்தபோது எடுத்த படம்.
நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர். மேலும் தென்னை மரக்கன்றுகளை கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தினர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய திருத்தேர்பவனி நாளை(வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் நடக்கிறது. இந்த தேர்பவனியை காண்பதற்காக சென்னை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுச்சேரி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாதா செரூபம் வைத்து அலங்கரிக்கப்பட்ட தேரை இழுத்துகொண்டு பாதையாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
நாளை மறுநாள்(சனிக்கிழமை) அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பேராலய கீழ்க்கோவிலில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய சிறிய தேர்பவனி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர். விழா நாட்களில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் சிறிய தேர்பவனி நடைபெறுவது வழக்கம். நேற்று பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறிய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி 7-ந்தேதி(வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடை பெறுகிறது. 8-ந்தேதி (சனிக்கிழமை) ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர். விழா நாட்களில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் சிறிய தேர்பவனி நடைபெறுவது வழக்கம். நேற்று பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறிய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி 7-ந்தேதி(வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடை பெறுகிறது. 8-ந்தேதி (சனிக்கிழமை) ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தின் திருவிழ கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் மணப்பாடு திருச்சிலுவை ஆலயமும் ஒன்றாகும். கடற்கரையில் இயற்கையாக அமைந்த மணல் குன்றின் மீதுள்ள ஆலயத்தில் ஆண்டுதோறும் மகிமை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆலயத்தில் 439-வது ஆண்டு மகிமை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருப்பலி நடந்தது. பின்னர் காலை 6.30 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலி நடந்தது. தொடர்ந்து வீரபாண்டியன்பட்டினம் பங்குத்தந்தை ஆன்ட்ரூ டிரோஸ் ஆலய கொடிமரத்தில் கொடியேற்றினார். பின்னர் மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடந்தது. திரளானவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் அதிகாலை 5.15 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலி, தொடர்ந்து பங்கு ஆலயத்தில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.
10-ம் திருநாளான வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் மாலை ஆராதனை நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட குரு உபால்டு மறையுரையாற்றுகிறார்.
11-ம் திருநாளான 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு திருப்பலி, 5 மணிக்கு மலையாள திருப்பலி, 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடக்கிறது. பின்னர் காலை 11 மணிக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு நற்கருணை ஆசீர், மாலை 5.30 மணிக்கு கொடியிறக்க திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருப்பலி நடந்தது. பின்னர் காலை 6.30 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலி நடந்தது. தொடர்ந்து வீரபாண்டியன்பட்டினம் பங்குத்தந்தை ஆன்ட்ரூ டிரோஸ் ஆலய கொடிமரத்தில் கொடியேற்றினார். பின்னர் மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடந்தது. திரளானவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் அதிகாலை 5.15 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலி, தொடர்ந்து பங்கு ஆலயத்தில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.
10-ம் திருநாளான வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் மாலை ஆராதனை நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட குரு உபால்டு மறையுரையாற்றுகிறார்.
11-ம் திருநாளான 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு திருப்பலி, 5 மணிக்கு மலையாள திருப்பலி, 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடக்கிறது. பின்னர் காலை 11 மணிக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு நற்கருணை ஆசீர், மாலை 5.30 மணிக்கு கொடியிறக்க திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
இயேசுவைக் குறித்த போதனைகளையும், கடவுளுடைய மீட்பின் திட்டத்தில் இயேசுவின் பங்கு என்ன என்பதை பவுல் இந்த நூலில் விவரிக்கிறார்.
விவிலிய நூல்களில் முக்கியமான ஒரு நூல் பவுல் உரோமையருக்கு எழுதிய நூல். இந்த நூலில் 153 முறை, ‘தேவன்’, ‘கடவுள்’ எனும் வார்த்தை வருகிறது. மனித வரலாற்றில் கடவுளின் செயல்பாடு என்ன என்பதை இந்த நூலில் அவர் எழுதுகிறார். கடவுளுடைய அன்பு, நீதி, கோபம், மீட்பின் திட்டம் என கடவுளின் செயல்பாடுகள் இதில் விளக்கப்பட்டுள்ளன.
இயேசுவைக் குறித்த போதனைகளையும், கடவுளுடைய மீட்பின் திட்டத்தில் இயேசுவின் பங்கு என்ன என்பதை பவுல் இந்த நூலில் விவரிக்கிறார். மனித வாழ்வின் போராட்டம் என்ன என்பதை தனது வாழ்க்கையின் மூலமாக அவர் விளக்குகிறார். கடவுளுக்கு ஏற்புடையவர்களாக, நீதிமான்களாக்கும் ஒரு செயலை இயேசுவின் ரத்தம் செய்கிறது.
மனித வரலாற்றில் மனிதன் எப்படிப்பட்டவன் என்பதும், மனித நிலை என்ன என்பதும் நமக்குத் தெரியும்.
“கடவுளைவிட மனிதர் நேர்மையாளரா?, படைத்தவரைவிட மானிடர் மாசற்றவரா?” (யோபு 4:14) எனும் விவிலிய வசனம்; படைத்தவர், படைப்பு எனும் வித்தியாசத்தை இதன்மூலம் பேசுகிறது.
“அழுக்குற்றதினின்று அழுக்கற்றதைக் கொணர முடியுமா?, யாராலும் முடியவே முடியாது” (யோபு 14:4) என்கிறது விவிலியம். மனிதன் என்பவன் படைக்கப்பட்டவன். அவன் நீதியாகவோ, சுத்தமாகவோ இருக்க முடியாது. அவனை இறைவன் மட்டுமே நீதிமானாக மாற்ற முடியும்.
மனிதனின் பாவங்கள், கடவுளின் மகிமையைப் பெற முடியாத நிலையில் வைத்திருக்கிறது. சிலுவை அதை மாற்றுகிறது.
“ஆயினும் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச்செயலின் மூலம் கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர்” (ரோமர் 3:24) என விவிலியம் நம்பிக்கையளிக்கிறது.
“தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோரானோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச்செய்தார்” (ரோமர் 8:30) என்கிறது விவிலியம்.
கடவுள் முன் குறிக்கிறார், அழைக்கிறார், ஏற்புடையோராக்குகிறார், மாட்சியில் பங்குபெறச் செய்கிறார் எனும் படிப்படியான மாற்றத்தை பவுல் விளக்குகிறார்.
இதன் பின், குற்றம் சாட்டுதல் என்பது இல்லை. “கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே” (ரோமர் 8:33) எனும் வசனம் நாம் குற்றமற்றவர்களாய் மாறும் உன்னத நிலையைப் பேசுகிறது.
இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது. “ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது” (ரோமர் 5:18,19) என்கிறது விவிலியம்.
“முடியாது” எனும் நிலையில் நாம் ஆலயத்துக்கு வருகிறோம், மாற்றம் பெற்றவர்களாக திரும்புகிறோம். இறைவன் அவரது ரத்தத்தின் மூலமாக நம்மை நீதிமான்களாக, அதாவது அவருக்கு ஏற்புடையவர்களாக மாற்றுகிறார்.
இதனால் நாம் பெறுபவை என்னென்ன?
1. கடவுளின் சமாதானம்
“நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்” (ரோமர் 5:1). இது பரிசுத்த கழுவுதல். எதை நான் தொலைந்து விட்டு வருகிறேனோ அந்த சமாதானத்தை நான் பெற்றுக்கொள்கிறேன்.
2. கடவுளின் அன்பு
“அதன் மூலம் கடவுளின் அன்பு நிரப்பப்பட்டவர்களாக நாம் கடந்து செல்கிறோம். “நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால்..” என்கிறது ரோமர் 5:5. கடவுளுடைய சமாதானத்தோடு அவரது முழுமையான அன்பையும் பெற்றுக்கொள்கிறோம்.
3. கடவுளின் கோபத்திலின்று தப்பித்தல்
“இனிமேல் ஒருவரும் நம்மை குற்றம் சாட்ட முடியாது” என்கிறது விவிலியம். நாம் கடவுளின் கோபத்திலிருந்தும் நம்மைத் தப்புவிக்கிறது.
4. கடவுளோடு ஒப்புரவாதல்
“நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால்” (ரோமர் 5:10) எனும் வசனம் நாம் கடவுளோடு ஒப்புரவாதலை உறுதி செய்கிறது.
5. கடவுளின் மகிழ்ச்சி
“இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவுகொண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே” (ரோமர் 5:11) என மகிழ்ச்சியையும் நாம் பெற்றுக்கொள்கிறோம்.
இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளும் நமக்கு ஒரு பணி தரப்படுகிறது. அது கடவுளின் நாமத்தை மேன்மை பாராட்டும் பணி. அதாவது இறைவனைப் பறைசாற்றுபவர்களாக நாம் இருக்க வேண்டும்.
“கடவுளின் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன” என்கிறது சங்கீதம் 34. அவரது கண்கள் நம்மை குற்றம் சாட்டுவதற்காகப் பார்க்கவில்லை. நமக்கு ஆசீர்வாதங்களை அளிக்கவும், நமது குரலைக் கேட்கவும் நம்மை நோக்குகின்றன. நாம் இறைவனை நாடுபவர்களாக, அவரது நாமத்தை பறை சாற்றுபவர்களாக வாழ்வோம்.
அருட்பணி, வெலிங்டன் ஜேசுதாஸ்.
இயேசுவைக் குறித்த போதனைகளையும், கடவுளுடைய மீட்பின் திட்டத்தில் இயேசுவின் பங்கு என்ன என்பதை பவுல் இந்த நூலில் விவரிக்கிறார். மனித வாழ்வின் போராட்டம் என்ன என்பதை தனது வாழ்க்கையின் மூலமாக அவர் விளக்குகிறார். கடவுளுக்கு ஏற்புடையவர்களாக, நீதிமான்களாக்கும் ஒரு செயலை இயேசுவின் ரத்தம் செய்கிறது.
மனித வரலாற்றில் மனிதன் எப்படிப்பட்டவன் என்பதும், மனித நிலை என்ன என்பதும் நமக்குத் தெரியும்.
“கடவுளைவிட மனிதர் நேர்மையாளரா?, படைத்தவரைவிட மானிடர் மாசற்றவரா?” (யோபு 4:14) எனும் விவிலிய வசனம்; படைத்தவர், படைப்பு எனும் வித்தியாசத்தை இதன்மூலம் பேசுகிறது.
“அழுக்குற்றதினின்று அழுக்கற்றதைக் கொணர முடியுமா?, யாராலும் முடியவே முடியாது” (யோபு 14:4) என்கிறது விவிலியம். மனிதன் என்பவன் படைக்கப்பட்டவன். அவன் நீதியாகவோ, சுத்தமாகவோ இருக்க முடியாது. அவனை இறைவன் மட்டுமே நீதிமானாக மாற்ற முடியும்.
மனிதனின் பாவங்கள், கடவுளின் மகிமையைப் பெற முடியாத நிலையில் வைத்திருக்கிறது. சிலுவை அதை மாற்றுகிறது.
“ஆயினும் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச்செயலின் மூலம் கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர்” (ரோமர் 3:24) என விவிலியம் நம்பிக்கையளிக்கிறது.
“தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோரானோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச்செய்தார்” (ரோமர் 8:30) என்கிறது விவிலியம்.
கடவுள் முன் குறிக்கிறார், அழைக்கிறார், ஏற்புடையோராக்குகிறார், மாட்சியில் பங்குபெறச் செய்கிறார் எனும் படிப்படியான மாற்றத்தை பவுல் விளக்குகிறார்.
இதன் பின், குற்றம் சாட்டுதல் என்பது இல்லை. “கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே” (ரோமர் 8:33) எனும் வசனம் நாம் குற்றமற்றவர்களாய் மாறும் உன்னத நிலையைப் பேசுகிறது.
இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது. “ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது” (ரோமர் 5:18,19) என்கிறது விவிலியம்.
“முடியாது” எனும் நிலையில் நாம் ஆலயத்துக்கு வருகிறோம், மாற்றம் பெற்றவர்களாக திரும்புகிறோம். இறைவன் அவரது ரத்தத்தின் மூலமாக நம்மை நீதிமான்களாக, அதாவது அவருக்கு ஏற்புடையவர்களாக மாற்றுகிறார்.
இதனால் நாம் பெறுபவை என்னென்ன?
1. கடவுளின் சமாதானம்
“நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்” (ரோமர் 5:1). இது பரிசுத்த கழுவுதல். எதை நான் தொலைந்து விட்டு வருகிறேனோ அந்த சமாதானத்தை நான் பெற்றுக்கொள்கிறேன்.
2. கடவுளின் அன்பு
“அதன் மூலம் கடவுளின் அன்பு நிரப்பப்பட்டவர்களாக நாம் கடந்து செல்கிறோம். “நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால்..” என்கிறது ரோமர் 5:5. கடவுளுடைய சமாதானத்தோடு அவரது முழுமையான அன்பையும் பெற்றுக்கொள்கிறோம்.
3. கடவுளின் கோபத்திலின்று தப்பித்தல்
“இனிமேல் ஒருவரும் நம்மை குற்றம் சாட்ட முடியாது” என்கிறது விவிலியம். நாம் கடவுளின் கோபத்திலிருந்தும் நம்மைத் தப்புவிக்கிறது.
4. கடவுளோடு ஒப்புரவாதல்
“நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால்” (ரோமர் 5:10) எனும் வசனம் நாம் கடவுளோடு ஒப்புரவாதலை உறுதி செய்கிறது.
5. கடவுளின் மகிழ்ச்சி
“இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவுகொண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே” (ரோமர் 5:11) என மகிழ்ச்சியையும் நாம் பெற்றுக்கொள்கிறோம்.
இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளும் நமக்கு ஒரு பணி தரப்படுகிறது. அது கடவுளின் நாமத்தை மேன்மை பாராட்டும் பணி. அதாவது இறைவனைப் பறைசாற்றுபவர்களாக நாம் இருக்க வேண்டும்.
“கடவுளின் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன” என்கிறது சங்கீதம் 34. அவரது கண்கள் நம்மை குற்றம் சாட்டுவதற்காகப் பார்க்கவில்லை. நமக்கு ஆசீர்வாதங்களை அளிக்கவும், நமது குரலைக் கேட்கவும் நம்மை நோக்குகின்றன. நாம் இறைவனை நாடுபவர்களாக, அவரது நாமத்தை பறை சாற்றுபவர்களாக வாழ்வோம்.
அருட்பணி, வெலிங்டன் ஜேசுதாஸ்.






