search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குணமளிக்கும் மாதா ஆலய தேர்பவனி இன்று நடக்கிறது
    X

    குணமளிக்கும் மாதா ஆலய தேர்பவனி இன்று நடக்கிறது

    திருச்சி கருமண்டபத்தில் உள்ள குணமளிக்கும் மாதா ஆலய பங்கு திருவிழா நேற்று தொடங்கியது. இன்று இரவு 7 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது.
    திருச்சி கருமண்டபத்தில் உள்ள குணமளிக்கும் மாதா ஆலய பங்கு திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி, ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை 6 மணிக்கு ஆலய வளாகத்தில் பங்கு தந்தை சார்லஸ் கொடியேற்றி வைத்தார். அப்போது வாணவேடிக்கை நடந்தது. தொடர்ந்து 6.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது.

    இதில் புனித லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை மரிவளன், பிராட்டியூர் மான்போர்ட் மாநில தலைமையக அருட்தந்தை அலெக்சாண்டர் ஜோசப், கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜேம்ஸ் விக்டர், சாந்தோம் ஆசிரம இல்ல தலைவர் அருள்ராஜ், குணமளிக்கும் மாதா ஆலய கமிட்டி செயலாளர் கரோலின் ராஜன், துணைத்தலைவர் ஜோசப், நிதிக்குழு செயலாளர் எழிலன் மற்றும் நிர்வாகிகள், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை உதவி பேராசிரியை சுபா தலைமையில் பெண் குழந்தைகள் தினம் கொண்டாட்டமும், மாலை 6 மணிக்கு அன்னை மரியா பிறப்பு விழா திருப்பலியும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது. தேர்பவனியை கிராப்பட்டி புனித குழந்தை தெரசாள் ஆலய வட்டார முதல்வர் ஜோசப் லாரன்ஸ் தொடங்கி வைக்கிறார். நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.

    Next Story
    ×