என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது மாடல்களின் பேஸ்லிப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சில டொயோட்டா விற்பனையாளர்கள் புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவை அதிகாரப்பூர்வமற்ற முறையில் துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பேஸ்லிப்ட் மாடல் உற்பத்தி வெர்ஷன் லீக் ஆகி உள்ளது.

டொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் சர்வதேச சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. மேலும் இதே மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அதன்படி புதிய பேஸ்லிப்ட் மாடலில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
சர்வதேச சந்தையில் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 204 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் இதே என்ஜின் 175 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய டியோ பிஎஸ்6 ஸ்கூட்டர் விலை இந்தியாவில் மீண்டும் மாற்றப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது டியோ பிஎஸ்6 ஸ்கூட்டர் விலையை மூன்றாவது முறையாக உயர்த்தி இருக்கிறது. இம்முறை டியோ ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களின் விலையும் ரூ. 473 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா டியோ மாடல் எஸ்டிடி மற்றும் டாப் எண்ட் டிஎல்எக்ஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. விலை உயர்வின் படி டியோ பிஎஸ்6 ஸ்டான்டர்டு மாடல் விலை ரூ. 61,970 என்றும் டிஎல்எக்ஸ் வேரியண்ட் விலை ரூ. 65,320 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வெளியீட்டின் போது புதிய ஹோண்டா டியோ பிஎஸ்6 மாடல்கள் விலை முந்தைய பிஎஸ்4 வெர்ஷன்களை விட முறையே ரூ. 5749 மற்றும் ரூ. 7099 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தன.
புதிய டியோ பிஎஸ்6 மாடலில் 110சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 7.6 பிஹெச்பி பவர், 9 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் டியோ பிஎஸ்6 மாடலில் ஏசிஜி ஸ்டாட்டர் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் டிரையம்ப் நிறுவனத்தின் புதிய டிரைடென்ட் 660 மாடலுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய டிரைடென்ட் 660 ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் முன்பதிவை துவங்கி இருக்கிறது. சமீபத்தில் இதே மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் இது விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
தற்சமயம் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கும் நிலையில், டிரையம்ப் டிரைடென்ட் 660 மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் அறிமுகமானதும் இது டிரையம்ப் நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக இருக்கும்.

டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிளில் 660 சிசி இன்-லைன் மூன்று சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 80 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ரோட் மற்றும் ரெயின் என இருவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது.
இத்துடன் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் எல்இடி லைட்டிங் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதில் டிஎப்டி டிஸ்ப்ளே, ஆப்ஷனல் மை டிரையம்ப் கனெக்டிவிட்டி சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
டிரையம்ப் டிரைடென்ட் 660 மாடலில் புத்தம் புதிய டியுபுலர் ஸ்டீல் சேசிஸ், 41எம்எம் ஷோவா யுஎஸ்டி மற்றும் ஷோவா மோனோஷாக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் 310எம்எம் ட்வின் டிஸ்க் பிரேக், இரண்டு பிஸ்டன் நிசிலன் கேலிப்பர்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்தியா முழுக்க சுமார் 69 ஆயிரம் பெட்ரோல் பங்க்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
இந்தியா முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை பெருமளவு மேம்படுத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் நாடு முழுக்க சுமார் 69 ஆயிரம் பெட்ரோல் பம்ப்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்பட இருக்கிறது.
இதனை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பை அவர் 2020 மின் வாகனங்கள் பற்றிய ஆன்லைன் மாநாட்டில் வெளியிட்டார். எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

பெட்ரோல் பம்ப்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதற்கான காலக்கெடு பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார். அதன்படி சரக்கு மற்றும் சேவை வரியை 5 சதவீதமாக குறைத்தது மற்றும் பேட்டரி விலை மற்றும் வாகனத்தின் விலையை தனியாக பிரித்தது உள்ளிட்டவைகளை அவர் தெரிவித்தார்.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் புதிய இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் புதிய இன்னோவா க்ரிஸ்டா மாடல் விலை ரூ. 16.26 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய பேஸ்லிப்ட் மாடல் ஸ்பார்க்ளிங் பிளாக் மற்றும் க்ரிஸ்டல் ஷைன் என இரண்டு புதிய நிறங்கள், மூன்று ட்ரிம் மற்றும் இரண்டு வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய இன்னோவா மாடல் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. விநியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது.

இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் மாடலில் புதிய முன்புற வடிவமைப்பு கொண்டிருக்கிறது. அதன்படி புதிய 5-ஸ்லாட் முன்புற கிரில், எக்ஸ்டென்டெட் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் இன்டிகேட்டர் லைட்கள், எம்ஐடி இன்டிகேஷன் வழங்கப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை புதிய இன்னோவா க்ரிஸ்டா மாடலில் ஸ்மார்ட் பிளேகாஸ்ட் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. டாப் எண்ட் மாடல்களில் கேமல் டேன் லெதர் சீட் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் மாடலில் பிஎஸ்6 ரக 2.4 லிட்டர் டீசல் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் 150 பிஹெச்பி பவர், 360 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 166 பிஹெச்பி, 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
வால்வோ நிறுவனத்தின் புதிய எஸ்60 மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
வால்வோ நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை வால்வோ எஸ்60 மாடலை நவம்பர் 27 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வு டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது.
இந்தியாவில் மூன்றாம் தலைமுறை வால்வோ எஸ்60 மாடல் பெட்ரோல் வேரியண்ட் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இது டாப் எண்ட் ஆர் டிசைன் வேரியண்ட் ஆக இருக்கும் என தெரிகிறது. இதில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் யூனிட் வழங்கப்படுகிறது.

இதே என்ஜின் வெவ்வேறு செயல்திறன் வழங்கும் வகையில் டியூன் செய்யப்படுகிறது. இது குறைந்தபட்சம் 190 ஹெச்பி துவங்கி அதிகபட்சம் 390 ஹெச்பி வரையிலான செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட இருக்கிறது.
புதிய வால்வோ எஸ்60 மாடல் இந்திய சந்தையில் பிஎம்டபியூ 3 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ், ஜாகுவார் எக்ஸ்இ மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஆடி ஏ4 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
சுசுகி நிறுவனம் இந்தியாவில் வி ஸ்டாம் 650 எக்ஸ்டி பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
சுசுகி நிறுவனம் வி ஸ்டாம் 650 பிஎஸ்6 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மிடில் வெயிட் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 8.84 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இது பிஎஸ்4 மாடலை விட ரூ. 1.38 லட்சம் வரை அதிகம் ஆகும்.
புதிய வி ஸ்டாம் மாடலில் 645சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் யூரோ 5 விதிகளுக்கு உட்பட்டு 70 பிஹெச்பி பவர், 62 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இத்துடன் வி ஸ்டாம் 650 எக்ஸ்டி பிஎஸ்6 மாடலில் வெர்டிகல் ஹெட்லேம்ப், பீக் போன்ற பேரிங், பெரிய விண்ட்ஸ்கிரீன், எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்படுகிறது.
இத்துடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ், 3 லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டெலிஸ்கோபிக் போர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்சி40 ரீசார்ஜ் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
வால்வோ நிறுவனம் தனது எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முற்றிலும் எலெக்ட்ரிக் மாடலான எக்ஸ்சி40 ரீசார்ஜ் சர்வதேச சந்தையில் அமோக வரவேற்பு பெற்று இருக்கிறது.
அந்த வகையில் வால்வோ நிறுவனம் தனது எக்ஸ்சி40 ரீசார்ஜ் மாடலை இந்திய சந்தையில் அடுத்த ஆண்டின் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் வால்வோ படிப்படியாக கம்பஷன் என்ஜின் வாகனங்களுக்கு மாற்றாக முற்றிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் மாடல் அந்நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் மாட்யூலர் ஆர்கிடெக்ச்சர் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இது கம்பஷன் என்ஜின் மற்றும் பேட்டரியால் இயங்கும் வாகனங்களில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் பார்க்க ஸ்டான்டர்டு எக்ஸ்சி40 போன்றே காட்சியளிக்கிறது. இந்த காரில் இரண்டு 150 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 78 கிலோவாட் லித்தியம் ஐயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதனால் இந்த கார் 402 பிஹெச்பி பவர், 659 என்எம் டார்க் செயல்திறன் வங்கும் திறன் பெற்று இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.9 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் கார் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ரெனால்ட் நிறுவனம் தனது கைகர் சப்காம்பேக்ட் எஸ்யுவி மாடல் காரின் கான்செப்ட் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த கார் விற்பனை அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடல் மூலம் ரெனால்ட் நிறுவனம் சப்காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் களமிறங்க இருக்கிறது.
புதிய கைகர் கான்செப்ட் வடிவமைப்பு அதன் உற்பத்தி வெர்ஷனில் 80 சதவீதம் வரை அப்படியே இருக்கும் என ரெனால்ட் அறிவித்து இருந்தது. இந்நிலையில், ப்ரோடக்ஷன் யூனிட் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய கார் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்படுகிறது.

ஸ்பை படங்களின் படி ரெனால்ட் கைகர் காரில் புதிய அலாய் வீல், ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் யூனிட், டிரை-எல்இடி ப்ரோஜெக்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பின்புறம் ஸ்கல்ப்ட் செய்யப்பட்ட பூட், பிளாக் கிளாடிங், ஸ்டீப்பர் விண்ட்ஷீல்டு, சி வடிவ எல்இடி டெயில் லேம்ப்கள் கொண்டிருககின்றன.
இந்திய சந்தையின் சப்காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்சான் போன்ற மாடல்கள் விற்பனையில் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
நிசான் நிறுவனம் தனது மேக்னைட் மாடலை ஏற்கனவே அறிமுகம் செய்து, முன்பதிவையும் துவங்கி உள்ளது. புதிய மேக்னைட் மாடல் விநியோகம் டிசம்பர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.
இந்நிலையில், புதிய நிசான் மேக்னைட் மாடல் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகிறது. முந்தைய தகவல்களில் இந்த மாடல் டிசம்பர் 26 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 5.5 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.5 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

புதிய நிசான் மேக்னைட் மாடல் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் யூனிட் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல் விற்றுத்தீர்ந்ததை தொடர்ந்து புதிய விலை பட்டியலுடன் முன்பதிவு துவங்கி இருக்கிறது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் புதிய குளோஸ்டர் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் ஆறு மற்றும் ஏழு பேர் பயணிக்கும் இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இது சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் எம்ஜி குளோஸ்டர் மாடல் விலை அக்டோபர் 31 ஆம் தேதி அல்லது முதல் 20 ஆயிரம் முன்பதிவுகளுக்கு ரூ. 28.98 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அறிமுகமானது முதல் இந்த கார் 2020 ஆண்டுக்கான யூனிட்கள் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் எம்ஜி குளோஸ்டர் மாடல் புதிய விலையில் முன்பதிவு செய்யப்படுகிறது. இவை அறிமுக விலையை விட ரூ. 1 லட்சம் வரை அதிகம் ஆகும்.
எம்ஜி குளோஸ்டர் மிட்-லெவல் ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியண்ட்கள் விலை முறையே ரூ. 50 ஆயிரம் மற்றும் ரூ. 30 ஆயிரம் வரை அதிகமாகி இருக்கிறது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20 ஆயிரம் வரை அதிகரித்து உள்ளது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் 450எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஏத்தர் எனர்ஜின் நிறுவனம் தனது 450எக்ஸ் மற்றும் 450எக்ஸ் சீரிஸ் 1 கலெக்டர்ஸ் எடிஷன் மாடல் விநியோகத்தை துவங்கி உள்ளது. இரு மாடல்களும் முதற்கட்டமாக பெங்களூரு மற்றும் சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
விரைவில் மும்பை, ஆமதாபாத், ஐதராபாத் போன்ற நகரங்களில் விரைவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் துவங்கும் என ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. நாட்டின் மற்ற நகரங்களில் அதன்பின் விநியோகம் செய்யப்பட இருக்கிறது.

ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் சீரிஸ் 1 ஸ்பெஷல் கலெக்டர்ஸ் எடிஷன் மாடல் விரைவில் கொச்சி, கோழிக்கோடு, டெல்லி மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் விற்பனைக்கு வருகிறது. ஏத்தர் 450எக்ஸ் மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 1.59 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
ஏத்தர் எனர்ஜி வாகனங்கள் உற்பத்தி பணிகள் விரைவில் ஓசூரில் உள்ள ஆலையில் துவங்க இருக்கிறது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லடசம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.






