டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ் - சபலென்கா, ஜபேர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2023-07-12 16:37 GMT   |   Update On 2023-07-12 16:37 GMT
  • விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டி லண்டனில் நடந்தது.
  • இதில் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள ரிபாகினா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

லண்டன்:

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, 6ம் இடத்திலுள்ள துனிஷியா வீராங்கனை ஆன்ஸ் ஜபேருடன் மோதினார்.

பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் ரிபாகினா முதல் செட்டை கைப்பற்றினார். சுதாரித்துக் கொண்ட ஜபேர் 2வது, 3வது செட்களை வென்றார்.

இதன்மூலம் ஜபேர் 6-7 (5-7(ம் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை மேடிசன் கெய்சுடன் மோதினார்.

இதில் சபலென்கா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News