அறிந்து கொள்ளுங்கள்

சட்டை பாக்கெட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஸ்மார்ட்போன் - அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

Published On 2023-04-28 11:18 GMT   |   Update On 2023-04-28 11:18 GMT
  • பாக்கெட்டில் இருந்து ஸ்மார்ட்போனை எடுத்து தரையில் வைத்தார்.
  • ஸ்மார்ட்போன் சார்ஜரில் இணைக்கப்படாத நிலையிலும், தீப்பிடித்து எரிந்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன. அந்த வரிசையில் அரியானா மாநிலத்தில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாத வாக்கில் ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனினை நவீன் தஹியா என்ற நபர் வாங்கியிருக்கிறார். இந்த நிலையில், ஏப்ரல் 11 ஆம் தேதி பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் தனது ஸ்மார்ட்போனில் இருந்து புகை வெளியேறியதை நவீன் கவனித்தார். சட்டை பாக்கெட்டில் வைக்கப்பட்டு இருந்த நிலையில், நவீன் தனது உடலில் திடீரென வெப்பத்தை உணர்ந்து இருக்கிறார்.

 

பின் சுதாரித்துக் கொண்ட நவீன், தனது பாக்கெட்டில் இருந்து ஸ்மார்ட்போனை எடுத்து தரையில் வைத்திருக்கிறார். ஸ்மார்ட்போன் தீப்பிடித்து எரிவதை பார்த்து நவீன் அதிர்ச்சி அடைந்தார். ஸ்மார்ட்போன் சார்ஜரில் இணைக்கப்படாத நிலையிலும், தீப்பிடித்து எரிந்துள்ளது. தீப்பிடித்து எரிந்த ஸ்மார்ட்போன் முழுமையாக சேதமடைந்துவிட்டது.

அதிர்ஷ்டவசமாக நவீனுக்கோ அல்லது அருகில் இருந்தவர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து நவீன் ரெட்மி வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டிருக்கிறார். எனினும், நிறுவனம் தரப்பில் நவீனுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. ஸ்மார்ட்போன் எதனால் தீப்பிடித்து எரிந்தது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

Tags:    

Similar News