உலகம்

தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து விழுந்ததில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் பலி

Published On 2025-12-14 10:52 IST   |   Update On 2025-12-14 10:52:00 IST
  • கோயில் விரிவாக்க கட்டுமானப் பணிகளின்போது விபத்து ஏற்பட்டது
  • கட்டுமானத் திட்டத்தின் மேலாளருமான விக்கி ஜெய்ராஜ் பாண்டே உயிரிழந்தார்

தென் ஆப்பிரிக்காவின் குவாசுலு-நடால் மாகாணத்தில் 4 மாடி கோயில் இடிந்து விழுந்த விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

கோயில் விரிவாக்க கட்டுமானப் பணிகளின்போது, திடீரென இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

இறந்த நான்கு பேரில், ஒருவர் கோயில் அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினரும் கட்டுமானத் திட்டத்தின் மேலாளருமான விக்கி ஜெய்ராஜ் பாண்டே என அடையாளம் காணப்பட்டார்.

Tags:    

Similar News