உலகம்

நாங்கள் தொடங்கவில்லை, ஆனால்... எச்சரிக்கும் இஸ்ரேல் பிரதமர்

Published On 2023-10-10 01:53 GMT   |   Update On 2023-10-10 01:53 GMT
  • இஸ்ரேல் தரப்பில் 700 பேர் உயிரிழந்த நிலையில் 2,300 பேர் காயம்
  • காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது

ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. 3 லட்சம் வீரர்களை திரட்டியுள்ளது. 1973-ம் ஆண்டு நடைபெற்ற யோம் கிப்பர் போருக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் ராணுவ வீரர்களை முதல்முறையாக இஸ்ரேல் திரட்டியுள்ளது.

இருதரப்பிலும் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பலரை ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளை பிடித்து வைத்துள்ளனர். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

இந்த நிலையில், இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியதாவது:-

இஸ்ரேல் போரில் உள்ளது. நாங்கள் இந்த போரை விரும்பவில்லை. இது மிகவும் கொடூரமான, காட்டுமிராண்டித்தனம் வழியாக எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் போரை தொடங்காத போதிலும், இஸ்ரேல் போரை முடிக்கும்'' என்றார்.

ஏற்கனவே, இதற்கு ஹமாஸ் விலை கொடுப்பார்கள். நீண்ட நாட்களுக்கு இது நினைவில் இருக்கும் வகையில் இருக்கும் என எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News