செய்திகள்

வங்காளதேசம் - அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 17 பேர் பரிதாப பலி

Published On 2019-03-28 13:01 GMT   |   Update On 2019-03-28 14:32 GMT
வங்காளதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 17 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #DhakaFireAccident
டாக்கா:

வங்காளதேசம் நாட்டின் தலைநகரமான டாக்காவில் அமைந்துள்ளது பனானி பகுதி. இங்குள்ள 22 மாடிகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ மற்ற மாடிகளுக்கும் பரவியது. 

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிலர் மாடிகளில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 17 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீட்புப் பணியில் அந்நாட்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. 35 பேரை பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்புப்  பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

கடந்த மாதம் டாக்காவில் உள்ள ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 70 பேர் பலியானது நினைவிருக்கலாம். #DhakaFireAccident
Tags:    

Similar News