கோடநாட்டில் நின்ற போது மிஸ். ஜெயலலிதா என்று சொல்லியிருப்பீர்களா? - விஜய்க்கு சரத்குமார் கேள்வி
- பிரதமரை Mr என்றும், முதல்வரை அங்கிள் என்றும் விஜய் கூறுகிறார்.
- சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வருமாம், பின்னர் தூங்கி விடுமாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் நடைபெற்றது.
மாநாட்டில் பேசிய விஜய், "மாண்புமிகு பிரதமர் நரேந்திரடி மோடி ஜி அவர்களே, மக்களுக்கு உங்களிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் இருக்கிறது. மீனவர்களை பாதுகாப்பதற்காக கட்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்குக்கொடுங்கள். அதுபோதும்.
மொரட்டு பிடிவாதத்தால் நீட் தேர்வு. நீட் தேர்வால் இங்கே நடப்பதை சொல்லவே மனது வலிக்கிறது. அதனால் நீட் தேர்வே தேவையில்லை என அறிவித்து விடுங்கள் அது போதும். செய்வீர்களா திரு நரேந்திர பாய் தாமோதர மோடி ஜி அவர்களே?
தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவாங்க?" என்று பேசினார்.
இந்நிலையில், மாநாட்டில் பாஜகவை விமர்சித்து விஜய் பேசியதற்கு பாஜக உறுப்பினர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு சரத்குமார் கள்ளக்குறிச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "தமிழை வளர்த்துக் கொண்டிருப்பவர் மோடி; உலகின் மாபெரும் தலைவர் மோடி. 12 ஆண்டு மோடி ஆட்சியில் ஒரு மீனவர் கூட இறக்கவில்லை. கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக
பிரதமரை Mr என்றும், முதல்வரை அங்கிள் என்றும் விஜய் கூறுகிறார். கத்துக்குட்டியான ஒருவர்.. கோடநாட்டில் தெருவில் நின்ற போது மிஸ்.ஜெயலலிதா என்று சொல்லியிருப்பீர்களா?
சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வருமாம், பின்னர் தூங்கி விடுமாம். அந்த மாதிரி சிங்கமாக இருக்க கூடாது.
NEET ஏன் வேண்டாம்..? NEET-ஐ கொண்டுவந்தது யார்..? தகுதி இருப்பவர்கள் பதவிக்கு வரவேண்டும், தகுதி உள்ளவர்கள் அந்த பணிக்கு செல்ல வேண்டும்
கூட்டத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் கூட்டப்பட்டு, அதை தொலைக்காட்சியில் காட்டும் கூட்டம் அல்ல இது" என்று தெரிவித்தார்.