தமிழ்நாடு செய்திகள்

வருமானத்துக்கு அதிகமாக ரூ.5.42 கோடி சொத்து: சென்னை பெண் இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு

Published On 2026-02-19 14:21 IST   |   Update On 2026-02-19 14:21:00 IST
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள்.
  • 2017-ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு ரூ.3.64 லட்சமாக இருந்துள்ளது.

சென்னை:

சென்னை விபசார தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராஜலட்சுமி. இவர் 2017-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.5.42 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

1999-ம் ஆண்டு நேரடியாக சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்த ராஜலட்சுமி இதற்கு முன்னர் பொருளாதார குற்றப்பிரிவிலும், மது விலக்கு பிரிவிலும், போக்குவரத்து பிரிவிலும் பணியாற்றி இருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். இதன் அடிப்படையில்தான் தற்போது இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

2017-ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு ரூ.3.64 லட்சமாக இருந்துள்ளது. அது 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் ரூ.4.62 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்கள்.

Tags:    

Similar News